என்னைப் பற்றி

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

                                    நாடகம் தொழில் முறையாக வேண்டும்  நாடகவியலாளளர் க.பாலேந்திரா


ரிக்கெட்டினை பெற்றுநாடகம் பார்ப்பதாக வரவேண்டும் இவ்வாறு வந்தால் தான் நாடகத்தினை தொழில் முறையானதாக கொண்டுவரமுடியும்.சிங்கள அரங்ககளில் இப்பாரம்பரியம் காணப்படுகின்றத தமிழ் அரங்கினை பொறுத்வரையில்பயிற்ச்சியாக வரவேண்டும் மேலும் தொழில் முறையான குழுக்கள் வளரவேண்டும் என பொறியியலாளரும் நாடகவியலாளருமான க.பாலேந்திரா தெரிவித்தார்.
 நாடகமும் அரங்கியலும் கற்ப்பிக்கின்ற ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நாடக ஆசிரியர் ஜோன்சன் ராஜ்குமார் தலைமையில் இடம் பெற்றபோது ஆசிரியர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போnது மேற்க்கண்டவாறு தொரிவித்தார்.

அவர் அங்குதொடர்ந்து தொரிவிக்கும் போது;

நாடகம் இயக்கமாக வளர்த்தெடுக்கப்டவேண்டும் எனில் தொடர்ச்சியாக நாடகங்கள்'  மேடையேற்றப்படவேண்டும்.அரங்கு மனிதர்களுடன் சம்பந்தப்ட்டது. வேறு வேறு வழிவகைகளில் அவற்றினை கொண்டுவரவேண்டும்.ஒவ்வொரு நடிகனுக்கும் தனித்துவமான திறமைகள் உண்டு அவனுக்கென்ற தொணி உண்டு. நடிகர்களது ஆக்கத்திறமையினை  அவர்களிற்கூடாக கொண்டுவரவேண்டும். காரணம்யாதெனில் நடிகத்தினை பொறுத்தவரையில் நடிகர்கள் முதன்மையானவர்களாவார்.


நாங்கள் நாடகத்துறையில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் கல்வி முறையாக இருக்கவில்லலை.நாங்கள் தான் பல விடயங்களினை தேடி அறிந்து கொள்வதுண்'டு. நான் நாடகத்துறையில் ஈடுபாடு காட்டுவதங்க காரணமாக எனது தீவிர வாசிப்பு காணப்படகின்றது. ஆரமப காலத்தில் பல  சிறந்த நாடக ஆசிரியர்களது நாடகங்களினை வாசித்ததன் ஊடாக பரீட்சயம் ஏற்பபட்டு அதனூடாக நாடகத்துறையில் ஈடுபட ஆரம்பித்தோம் .
 மொழி பெயர்ப்பு நாடகங்கள் பல வற்றினை மேடையிட்டுள்ளேன். குறிப்பாக பிச்சைவேண்டாம். கண்ணாடி வார்ப்புக்கள் நடசத்திரவாசி போன்ற பல வற்றினை குறிப்பிடலாம்.
அவைக்காற்றுகைகலைக்கழகத்தின் ஊடாக பல நாடகச்செயற்பாடகள்மேற்கொள்ளப்பட்டன் 1978ம் ஆண்டு உருவாக்கப்ட்ட  இக்கழகமானது கடந்த 35 ஆண்டுகளில் பல நாடுகளிற்கு பணனம் மேற்கொண்டு நாடக செயற்பப்பாடகளினை மேற்கொண்டதுடன் 70ற்கும் மேற்ப்பட்ட நாடகங்களினை நிகழ்த்தியள்ளோம் எனக்குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாலேந்திராவின் மனைவியும் நாடக நடிகையுமான ஆணந்தராணி மற்றும் அவர்களது புதல்விகள் நாடக குழுவினர் ஈழத்து நாடகவியலாளளர் குழந்தi ம.சண்முகலிங்கம் மற்றும் நாடகத்துறை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி யாழ்.தினக்குரல் 07.08.2013