சனி, நவம்பர் 19, 2022
சனி, நவம்பர் 12, 2022
ஞாயிறு, நவம்பர் 06, 2022
வியாழன், நவம்பர் 03, 2022
அரங்கவிளையாட்டுக்களும் ஆளுமைதிறன்விருத்தியும்
புதன், நவம்பர் 02, 2022
உயர்தரப்பரீட்சையினை எதிர்கொள்ளப்போகின்ற மாணவர்களுக்கு!
ஞாயிறு, அக்டோபர் 30, 2022
காலப்பெருவெளியினுள் கலைச்செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவங்கள்.
வெள்ளி, அக்டோபர் 28, 2022
காலத்தை வசப்படுத்தியவன் வாழ்வில் வெற்றி பெற்றவனாகின்றான்
திங்கள், அக்டோபர் 24, 2022
இதயக்கோவிலில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள் ஆசிரியர்கள்
கற்பிப்பவன் ஆசிரியன் அல்ல கற்றுக்கொடுப்பவனே நல்ல ஆசிரியன்.வாழ்வை அளிப்பவன் ஆசிரியன். வாழ்வை அழிப்பவன் அல்ல.
ஆசிரியத்துவம் என்பது மகத்துவமானது.தன்னலமற்றது.தன்னிடம் கற்றவர்கள் தன்னை விட எப்போதும் உயர்வாக இருக்கவேண்டும்.சமூகத்தில் தம்மை விட மேலோங்கி வரவேண்டும் நினைக்கின்ற ஆத்மாக்கள் ஆசிரியர்கள்.
இவர்களது அர்ப்பணிப்பான இயங்குதல் இல்லையெனில் சமூகம் உயிர்ப்பு பெறுவது எங்கனம்.
தன்னிடம் கற்றவன்சித்திபெறுகின்றபோது காட்டுகின்ற மகிழ்ச்சியும் அவன் தோற்றுப்போகின்ற போது படுகின்ற துயரினையும் வார்த்தைகளினால் வடித்துவிடமுடியாதவை.
இதயக்கூட்டிற் இதயக்கோவிலில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள் ஆசிரியர்கள்குள் இருந்து உயிர் பிரிகின்ற கனங்கள் வரை அவர்களது நினைவுகள் உயிர் வாழ்ந்துகொண்டிக்கும்.
அவர்கள் எப்போதும் இதயக்கோவில்களில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள்.அவர்கள் இட்ட வழிச்சுவடுகளினை பின்பற்றியே எமது பாதைகள் தகவமைக்கப்பட்டன.
நாம் எமக்கான பாதையில் பயணித்தாலும் நாம் துவண்டு போனபோது அவர்கள் எமக்களித்த வார்த்தைகள் ஒதுங்கியிருந்தபோது முன்னுக்கு கொண்டுவருவதற்காக பொய் கலந்து சொன்ன உண்மைகள் எமக்குள்ளே விசை கொண்டு எமது வாழ்வியல் பயணத்தினை உந்தித்தள்ளிக்கொண்டிருக்கின்றது.
நாம் பெற்றுக்கொண்ட வெற்றிகள் எல்லாம் உங்களால் சாத்தியமானவை.நாம் அடைந்து கொண்ட தோல்விகள் எல்லாம் எமது அசன்டையீனங்களாய் வந்துதித்தவை .
நினைவுச்சொடுக்கினுள் வந்து செல்கின்ற ஆசிரியர்களை நினைத்துப்பார்க்கின்றபோது அத்தகைய நாட்கள் மீண்டும் வராதா என்கின்ற ஏக்கப்பெருமூச்சு இதயத்தி்னுள் இருந்து வலி மிகுந்து வெளித்தள்ளுகின்றது.
அவை வசந்த காலங்கள்.கனவுகளை உற்பத்தியாக்கிவிட்ட காலங்கள்.
தன்னம்பிக்கையுடன் நாமும் இந்த பூமிப்பந்தில் பயணிக்க முடியும் எனும் உத்வேகத்தை அளித்தபொழுதுகள்.
நீங்கள் இல்லையேல் நாம் இல்லை.எங்களது பலவீனங்களை கூட பலமாக்கி விட்ட பவித்திரமானவர்கள்.
நீங்கள் செய்த சேவைக்கு உதவிக்கு பிரதியுபகாரமாக நாம் என்ன செய்துவிட்டோம் .
ஆனாலும் உங்கள் பெயர்களை எம்மோடு அடுத்த தலைமுறை நோக்கி கொண்டு செல்கி்ன்றோம்.
இதுவே நாம் உமக்கு செய்கின்ற உதவி.
நான் எப்போதோதொலைந்து விடுவேன் அல்லது அழிந்து விடுவேன் அல்லது அழித்துவிடலாம் என்றவர்களது செயல்ப்புல வெளிக்குள்ளும் மூச்சு முட்டி வலி நிறைந்த பயணங்களை மேற்கொள்கின்ற போதெல்லாம் நீங்கள் அருகில் இருந்து என்னை வழிநடத்துவதாய் என் ஆன்மா சொல்லிக்கொள்கின்றது.
இவ்வாறு எனது கூட்டிற்குள் பசுமையாக இருக்கின்ற எனது ஆசிரியர்களது நினைவுகளை மீட்டிப்பார்க்க முயல்கின்றேன்.
(மீட்டல்கள் தொடரும்...)
ஞாயிறு, அக்டோபர் 23, 2022
(எஸ்.ரி.அருள்குமரன்)
காலம் சிலவற்றை அரங்கேற்றிவிடுகின்றது.கனவு சில விடங்களை துடைத்தெறிகின்றது.நாம்பயணப்படவேண்டிய வழி எதுவென தெரியாது சிலவேளைகளில்தடுமாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் எம்கரம் பற்றி நகர்த்திச்செல்பவர்கள்இவர்கள்.
அரங்கு சார்ந்த கற்றல் அறிமுகமாகியது கந்தவேள் சேரிடம் இருந்தே.
அவர் வகுப்பறைக்குள்ளேயும் வெளியேயும் கற்றுனர்த்திய விடயங்கள் இன்றையஇயங்கியலுக்கான ஆதார்சமான புள்ளிகள்.ஆழப்பாயும் வேர்கள்.விதைதத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை.
யூனியன்கல்லூhயில் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் எனும் பாடத்தினை கற்ற வேளையிலே அவருடைய அறிமுகமும் அதன் தொடர்ச்சியாக பல விடயங்களை கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
அந்நாடகத்தின் காட்சி இன்றும் மனக்கண் முன் விரிகின்றது முரசறைசபவனது செய்தியோடு நாடகம் ஆரம்பமாகும்.நிசாந்தராகினி அக்கா (இன்று அவர் தேசிய கல்வி நிறுவகத்தின் நடனத்துறை விரிவுரையாளராக இருக்கின்றார். கலாநிதி பட்டத்தினை நிறைவு செய்துள்ளார்.) மாதவிக்கு நடித்திருந்தார் அவரது நடிப்பு சிறப்பானதாக இருந்தது.
சேரிடம் போய் நல்ல நாடகம் என குறிப்பிடவதற்கான துணிவு இருந்ததில்லை. பின்னர் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தினை கற்றவேளை அவருடன் பழகமுடிந்ததுடன் அவரது ஆளுமைகளை அருகில் இருந்து பார்ப்பதற்கும் அவரிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ளவும் முடிந்தது.
மருதனார் மடம் இராம நாதன் கல்லூரி வளாகத்தில் யூனியன்கல்லூரி இயங்கிய வேளை அப்போதைய கல்லூரி அதிபராக இருந்த புண்ணியசீலன் சேரின் முயற்சியினால் அமைக்கப்பட்ட மண்டபத்தில் பாடசாலை நிறைவடைந்த பின்னர்களப்பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில் ஆர்வத்துடன் அப்பயிற்சிபட்டறையில் நானும் பங்கபற்றியிருந்தேன்அப்பயிற்சிபட்டறையில்.சுன்னாகம் ஸ்கந்தவரேதயாக்கல்லூரி மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
அப்பயிற்சிப்பட்டறையில் தான்;
வாசிக்கின்றபோது எவ்வாறு வாசிக்கவேண்டும் , உணர்வு வேறுபாடு எவ்வாறு வரவேண்டும் என்பதெல்லாம் அங்கு அவரிடம் கற்றுக்கொண்டோம்..
பங்குபற்றியவர் நடிப்பு செயற்பாட்டில் ஈடுபட வலியுறுத்தப்படுகின்றனர்.எல்லோரும் ஒவ்வொருவராக நடிக்கின்றனர்.என்னுடைய ரேன் வருகின்றது.நான் எழும்பி யாரையும் பாக்காமல் நடிச்சு முடிச்சிட்டு என்னுடைய இடத்தில போய் இருந்திட்டன்.கைதட்டல் சத்தம் கேட்கிது.சேரும் நல்லா இருந்ததாக பராட்டினார்.மிகச்சிறப்பாக நடிச்சனோ எனக்கு தெரியாது.ஆனால் அந்த பாராட்டு மிகப்பெறுமதியானதாக இருந்தது.நான் நடிச்சது குடிகாரன் பாத்திரம்.இது மாறுபட்ட அனுபவமாக இருந்தது.
அவரது நெறியாழ்கை அனுகுமுறை வித்தியாசம்.
எங்களை செய்யவிடுவார்.எப்படி வர வேண்டும் என்பதை சொல்லி தருவார்.நடிச்சும் காட்டுவார்.
நான் மேடையேறி நடித்தபோது கிடைத்த பாராட்டுக்கள் தொடர்ந்து நடிகனாக செயற்படுவதற்கான ஊக்கியாக இருந்ததது.
மதிப்பிற்குரிய இளையதம்பி ஆசிரியர் அவர்கள் வகுப்பறைக்கு வருகை தந்தபோது அருள்குமரன் மிக நல்லா நடிச்சிருந்தீர்.தொடந்தும் நடிக்க வேனும் சந்தோசமாக இருந்தது.என்றார்.இது எனக்கு
கிடைச்ச விருதாகவே நினைக்கின்றேன்.இதற்கு காரணம் நெறியாளர் கந்தவேள்சேர்.
உயர்தரத்தில் கற்றவேளை அவரது தனியார் கல்வி நிலையத்திலும் கற்றலுக்காக சென்றிருந்தேன்.பல்கலைக்கழக அனுமதிகிடைத்தபோது அச்செய்தியினை சொல்வதற்காக அவரது இணுவில் இல்லத்திற்கு காலை, மாலைவேளை சென்றிருந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை.
அன்றைய காலத்தில் அலைபேசிகள் இன்மையால் இத்தகைய இடர்பாடு.மறுநாள் மாலை சென்றவேளை அவர் வீட்டில் ஓய்வாக இருந்தார்.வழமைபோல் வாரும் இரும் என்றார்.
நான் அதற்கு என்ன ஏது என்பதுபோல யோசிக்கின்றேன்.
நாடகத்தில் பெரிய நடிகானாகவோ அல்லது நாடகத்தில்பெரியாக்களோ வராட்டிலும் பராவாயில்லை நாடகங்களை ரசிக்ககூடியவர்களாக வந்தாலே பெரிய விஷயம் என இவர் அடிக்கடி கூறுவதுண்டு.
நாங்கள் காசுக்குதான் படிப்பிச்சநாங்கள் அனால் நீங்கள் விசுவாசத்தோட இருக்கிறியள் சந்தோசம் என்பார்.
எங்கும் எப்போதும் அறிவுரையுடன் வழிகாட்டுகின்ற அரங்க துறை சார்ந்தவர்.
ஏறிச்சென்ற ஏனியை எட்டி உதைந்தால். ஏறிய இடத்திலேயே நிற்க வேண்டும். இது வரலாறு சொல்லும் செய்தி....
செவ்வாய், அக்டோபர் 18, 2022
(எஸ்.ரி.அருள்குமரன்)
பரீட்சார்த்த அரங்கு ஓர் அறிமுகம்
அரங்கானது சமூகத்தினி டையே வளிமையானநாகவும் தாக்க வன்மை நிறைந்ததாகவும் காணப் படுகின்றது. இவ்வரங்கானது சமூக பெறுமானத்தில்இ வாழ்வியல் மாறு தல்களில் தன்னை இணைத்துக் கொண்டு செல்கின்ற போக்கு மேற்குலகில் மட்டுமன்றி ஈழத்தி லும் உண்டு என்பது கண்கூடு.
அரங்கு என்பதினை வரைய றைக்கு உட்படுத்தி குறிப்பிடுவது கடினமான விடயமாகும். மாறாக அரங்கு பற்றி நோக்கும் போது அரங்கவியலாளர்கள் தமது அனுபவ வியலுக்கு ஏற்ப கருத்துப் பகிர்கின் றனர். அவற்றைப் பின்வருமாறு நோக்கலாம்.
'அரங்கு என்பது எப்போ துமே ஆற்றுபவர்களினதும் பார்வை யாளர்களினதும் தொடர்பு கொள்ள லாகவே இருக்கிறது'1
'அரங்கமானது பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தாமல் அவர்களை விமர்சன பூர்வமாக சிந்திக்கவைக்க வேண்டுமென்பது பிறெஃக்ற்றின் நோக்கம்'2
எனவே அரங்கானது எப் வேறுபட்டவர்களின்தொடர்பாடலில் அவர்களிடையே உணர்வு பூர்வமான ஓர் உறவுத்தளம் உருவாக்கப்பட்டு அவ் உறவுத்தளம் மூலம் சமூகப் பெறுமானத்தில் காக்கத்தினை ஏற்படுத்தும் தளமாக விளங்குகின்றது. குரங்கு மனிதன் வாழ்வில் சந்தித்த துன்பதுயரங்கள்இ வாழ்வியலில் எதிர்கொண்ட வலி கள். அவனது வாழ்வியல் முறைஇ அவனது எதிர்பார்ப்பு என்பவற் றினை வெளிப்படுத்த முனைகின்றது. இவ்வகையில் அரங்கு மக்களை மக்களுக்கு உணர்த்துதல் என்பதில் மனிதனது சுயத்தினையும்இ தனித்து வத்தினையும் வெளிப்படுத்துவதற்கு முனைப்புக் காட்டுகின்றது.
எனவே அரங்கு மனிதனது பிரச்சினைகளினைத் தீர்த்தல்இ அவர்கனை சுயமுனைப்புள்ளவராக்குதல் எனும் கருத்து நிலையில் புதிய சிந்தனைபோக்கும் மேற்குலகில் மேற்கிளம்பியது. இவ்வகையில் அரங்கின் ஓர் அம்சமாக பரீட் சார்த்தம் எனும் பண்பு முனைப்பு பெறலாயிற்று. இப்பரீட்சார்த்த அரங்க முயற்சிகள் மேற்கில் இருப் தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவானது. சான்றாக 'இருபதாம் நூற்றாண்டில் டொமினியின் அந் தஸ்து உடன்படிக்கை அரசுக்கெதி ரான நடவடிக்கைகளில் நாடகங்கள்இ எழுத்தாக்கங்கள் உருப்பெற்றன. குறிப்பாகஇ இயற்கை மாற்றமான நிகழ்வுகள் கால ஓட்டத்தில் உருப் பெற்றன. உலக அரங்கிலே மூலாதார மானதைக்கொண்டு இயற்கை மாற் றம் என்ற அடிப்படையில் பிரதான மாக பல தரவு நிகழ்வுகள் ஆக்கப்பட் டன. அவைகளின் தராதரங்கள்உயர்வோ. தாழ்வோஇ கூடவோஇ குறையவோ பெரிய அரங்கில் வர வேற்கப்பட்டன'3
அரசுக்கெதிராக இவ்வகை நாடகங்கள் இருபதாம் நூற்றாண் டின் ஆரம்பத்தில் புதிய சிந்தனை யுடனும் கருத்தியல் தளத்துடனும் மேற்குலகிலே மேற்கிளம்பினாலும் இவற்றின் உச்சக்கட்ட நகர்வு அல்லது முதன்மையான வெளிப்படு கையாக 1947 ஆம் ஆண்டு காலப் பகுதியினை கொள்ளலாம். காரணம்இ இரண்டாம் உலக யுத்தத்திலே நிறைய உயிர்களினையும்இ உடமை களினையும் இழந்து வாழ்வியல் வறுமைக்குள் தமது வாழ்வியலினை ஓட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட் டது. அப்போது வாழ்வு பற்றிய தேடல்களும்இ மனித இருப்பு தொ டர்பான பிரச்சினைகளும் அரங் கிலே பேசு பொருளாகின. அப் பேசுபொருளினை பேசுகையில் அப் பேசுபொருள்கள் உயிரோட்டமாக வெளிப்படுவதற்கான சாத்தியங் களினை முன்னைய அரங்குகள் கொண்டிருக்கவில்லை. எனவே அவ் விடயத்தினை பேசுவதற்கான சாத்தி யங்களினை உடைய அரங்குகளினை கண்டுகொள்ளவேண்டிய தேவை அரங்கவியலாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. எனவேஇ அதற் கான சிறுசிறு முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. இச் சிறு முயற்சிகள் பரீட்சித்துப் பார்த்தல் எனும் வகை யில் வெளிப்பட்டன. இவ்வெளிப்ப டுகைகள் பரீட்சார்த்த அரங்கினை மேற்குலகிற்கு தேவையான அரங் காக முகிழ்ந்தெழ வைத்தன. மக்க ளது மனதிலே எதிர்காலம் பற்றிய
கேள்வியினை விதைத்துவிட்ட அச் சூழ்நிலையின் பாதிப்பில்இ கலையா ளது மனிதளையும் அவனது பிரச் சினையினையும் பேசாது விலகி நின்று கனவுகளிலும் கற்பனைகளி லும் மிதந்த அரங்கப் போக்கிளை மறுதலித்துவிட்டு கலை வாழ்வில் இருந்து அந்நியப்பட்டு போகாது வாழ்வினை பிரதிபலிக்க முயன்றது. இவ்வகையில் உடைந்துபோன சமூ சுத்தினையும் சிதைந்துபோன மனங் களினையும் அரங்கு பேச முனைந் தது. எனவே மனிதனது வாழ்லினை யும் மனத்துயரினையும் பிரதிபலிக்க வேண்டுமெனின் பழைய வரன் முறையான அரங்கப் போக்குடைய பண்பாட்டில் இருந்து புதிய சிருஷ்டியினை உடைய பண்பாட் டினைப் படைக்க அரங்கவியலாளர் கள் முயன்றனர். இதன் வெளிப்பா டாக 'அபத்த நாடகங்கள் தோற்றம் பெற்றன. ஆயினும் இதன் பின்னணி யில் பிற்காலத்தில் ஏற்பட்ட அரங்க வடிவங்களிலே முழுமையான பரீட் சார்த்த பண்புகளினைக் கண்டு கொள்ளலாம்.
இவை புதியன புனைதலை தமது கோட்பாடாக வரித்துக் கொண்டு செயற்பட்டும்இ செயற்பட்டுக் கொண்டும் இருக்கின் றன.
பெட்டோல் பிறெஃக்ட்இறிச்சாட் செக்னர்இ குறொட்டோ வஸ்கிஇ ஆர்ட்டாவூட்இ பீற்றர்புறூக்இ ஒளகுஸ் தோ போல் என நீண்டுசெல் லும் இவ்வரங்கவியலாளர்களின் பட்டி யல். இதிலே ஒவ்வொருவரும் 1 ங் அரங் கின் அச்சாணி அம்சங்களினை பயன் படுத்தி சமூக மாறுதலுக்கான அரங்கினை பயன்படுத்துவதில்தனயா ஈடுபடுத்திக் கொண்டனர். இதில் மராத்த விடயங்கள் உள்ள டக்கப்பட்டு சமூகத்திற்கானதும் அங்கிலே பார்ப்போன் பங்காளியா கவேண்டும் எனவும்இ ஆற்றுவோன் பார்ப்போன் இடை வெளி தகர்க்கப் பட வேண்டும் என்ற கருத்து வெறி யுடனும் செயற்பட்டனர் அரங்கில்! 'வெளி பற்றிய பிரக்ஸஞபூர்வமான சிந்தனை ரீதியான சொல்லாடல் இவர்களினால் இயங்கியல் தளத்தில் செயற்படுத்தப்பட்டது
சூழலியல் அரங்கில் றிச் சாட்செக்னர் முதன் மையானவராக காணப்படுகின்றார். நாடகபாடத் தினை இவர் ஆற்றுகைக்கானதாக இருக்க வேண்டுமே தவிரஇ அதுபுனித மானது என்ற கருத்துநிலையிலிருந்து மாறுபட வேண்டும் எனக் குறிப்பிடு கின்றார்.
இப் பரீட்சார்த்த அரங்கு களில் பார்ப்போர்இ ஆற்றுவோர் என்ற பிரிப்பு வெளிகாணப்படுவ தில்லை. அவ்வரங்கில் நடைபெறு வது உண்மையானதாக கொள்ளப் படுகின்றது. பொய்மை உடைக்க பட்டு மெய்மையினை புதிய வெளி களில் உருவமைக்கப்பட்டு அரங்க நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. பழைய அரங்கில் ஆற்றுவோர் பார்ப்போர் என்ற பிரிப்பு வெளியு டன் இயங்கிய நிலையினை அவதா னிக்கக் கூடியதாக உள்ளது.
இவ் இணைவுகள் புதிய நெறிமுறைக்கு உதவுகின்றது. சான்றாக
'பரிசோதனைகள் மூலமே புதிய நெறிகளை உருவாக்கலாம். புதிய நெறிகள் சூனியத்தில் உருவாவனவல்ல''4
அக்கால சூழ்நிலைகளும் வாய்லியல் முறைகளுமே புதிய நெறிகளினை உருவாக்கும். இன் வகையிலே சமுதாயமாறுதல்கள் இம் மாற்றத்தினை வரவேற்று புதிய மாறுதல்களுக்கும் புரிய இந்தனைகளுக்கும் உரமேற்றும் போது புதிய அரங்கியல்கள் முகிழ்ந் தெழும். சான்றாக பிரெக்ஷடின் கருத்து பின்வருமாறு
'வாழ்க்கை மாற்றமடைத்து கொண்டேயிருக்கிறது. வாழ்க்கையச் இத்திரிப்பதற்கு அதன் சித்தரிப்பு முறையும் மாற்றப்பட வேண்டும்''5
சமூகம்மாறுகையில் அரங்கு தனது வடிவத்திலும் வெளிப் பாட்டுத்தளத்திலும் மாறுதல்களி னைக் கொண்டு இயங்கவேண்டிய தேவை உருவாகுகின்றது. இத்தே வையைக் கருத்திற்கொண்டு செய லாற்றுவது அரங்கினதும் அதனை இயக்குகின்ற அரங்கியலாளர்கள். தும் பொறுப்பாகும். இதற்குச் சான் றாக பேரா. சி. மௌனகுருவின் பின் வரும் கூற்று குறிப்பிடத்தக்கது
'இத்தகைய பரிசோதனை நாடகங்களை நான் நாடகம் என்று அழைப்பதை விடஇ அரங்க நிகழ் வுகள் என்றே குறிப்பிடுவேன். அரங்கு (வுhநயவசந) என்பதன் அர்த்தம் விசாலமானது.....! 6
எனவே பரீட்சார்த்த அரங் கானது தனது இயங்கியல் தளத்திலே எப்போதும் மாறுதல்களினை மேற் கொண்டு நகர்ந்து செல்வதுடன் புதிய கண்டுபிடிப்புக்களினை மேற் கொண்டு எப்போதும் புதிய சிந்த னையுடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றது இவ்வரங்கில் பார்ப்போர் முதன்மையான பங்காளராகின்றனர். இவர்கள் விமர்சன ரீதியான கருத்துறவுடன் காணப்படுகின்றனர்.
'அரங்கு பரிசோதனை முயற்சியாகக் கூர்மை அடையத் அங்கு தொடங்கும்போது நாடகம் பற்றிய கணிப்பினை பெற்றுக்கொள்வதற்கு இப்பார்வையாளர்களிலேயே தங்கி யிருந்தது. அரங்கின் பரிசோதனை முயற்சிகள் அரங்கினை ஒரு கலை வெளிப்பாடு என்ற நிலையிலும் அரங்க நடவடிக்கையாகவும் (வுhநயவசந யுஉவiஎவைநைள) இரு பரிமாணங்களில் செயற்படுத்தியது.....'7
இவ்வகையில் இப்பரீட் சார்த்த அரங்குகளின் நோக்கமாக ஏலவே அரங்கிற்கு என இருந்த வரன் முறைகளினை தகர்த்தெறிந்து வௌ;வேறு வேறு மூலகங்களினை பயன்படுத்தி அதன் தாக்கம்இ அதன் வலிமை என்பவற்றின் மூலம் புதிது புதிதான செயற்பாடுகளிற்கும் புதிய புதிய வெளிகளினை கண்டு பிடித்தும் அவ்வெளிகளிலே ஊடாடி புதிய சிந்தனையியலுடன் புதிய அரங்குக ளினை சிருஷ்டிப்பதற்கான சாத்தி யங்களினை வரித்துகொண்டு பரீட் சார்த்த அரங்குகள் இயங்கியல் தளத்திலே இயங்குகின்றன.
இவ்வகையிலே பரீட்சார்த்த அரங்குகள் எங்கு தோன்றுகின்றது என்பதற்கு பின்வரும் சான்று பொருத்தமாக அமையும்.
'கலைஞர்களும்இ பார்வை யாளர்களும் சந்திக்கும் இடத்தில் அரங்கு தோன்ற ஆரம்பிக்கும். கலைஞர்களும் பார்வையாளர்களும்
சேர்ந்து புதிதளித்தல் மூலம் இன் வரங்கை வளர்த்துச் செல்வர். சிலவே ளைகளில் பார்வையாளர்களுக்கு அங்கு நடைபெறுவது அரங்கு என்பது தெரியாமலே அதில் கலந்து கொள்வதும் உண்டு. முடிவில்தான் நடைபெற்றது அரங்கு என்பது அவர்களுக்குப் புரியும். இத்தகைய நிலை. பார்வையாளர் கள் தடையேதும் இன்றி தாமாகவே முன்வந்து அரங்க நிகழ்வில் ஈடுபட. அதை வழிநடத்த வழி வகுக்கும்.
நடத்தப்படுவது அரங்கென்று தெரிந் திருந்துஇ ஆற்றுபவர்களால் பார்வை யாளர்களைப் பங்குபற்ற வருமாறு அழைக்கப்படுகின்றபோதுஇ பார்வை யாளர்களுக்கு இருக்கக்கூடிய தயக் கம் இங்கு இருக்காது. இவ்வாறு பார் வையாளர்கள் தாமாகவே முன்வந்து அரங்க நிகழ்ச்சியில் பங்கு பற்றக் கூடியதாக நாம் அரங்க வடிவங்களை உருவாக்க முயலவேண்டும்.'8
பார்ப்போனை பங்கு கொள் ளவைத்து அதன் மூலம் சமூக மாற்றத்திற்கானதாகவும் அவன் தனது சுயத்தினை தேடிக்கண்டு கொள்வ தற்குமான முனைப்புடன் செயல்ப டச் செய்கின்றது. இவ்வகையில் கால மாறுதல்களுக்கும் சூழமைவுகளுக் கும் ஏற்ப தன்னை புடம்போட்டு புதிது புதிதாக தன்னை வெளிப் படுத்த முனைகின்றது. இவ்அரங்கில் ஒவ்வொரு ஆற்றுகையும் புதியனவா கவே வடிவமைக்கப்படுகின்றன. நடிகன் உடல்இ மனம்இ குரல் எனும் மூன்று அம்சத்தினையும் இயலுமான வரை வெளிப்படுத்தி பார்ப்போரை பங்குகொள்ள வைப்பதற்கான செயற்பாடுகளினை முன்னெடுத்துசெல்கின்றான். எழுத்துரு என்பது ஆற்றுகைக்கான ஒன்றாக தயார்ப் டுத்தப்படுகின்றது. உண்மையினை உணர்தல்இ உண்மையின் மூலம் வெளிப்படுகைகளுக்கான களங்க ரினை முகிழ்த்தெழச் செய்தல் என்பனவே இவ்வரங்கில் முக்கிய நோக்கமாக காணப்படுகின்றது... சமூக மாறுதலின் சோதனைச்சாலை யாகவும் நாடகம் விளங்கவேண்டும்' என்று மீண்டும் மீண்டும் வலியுறுத் தினார் பிரெஃக்ட்''9
சமூகத்தினை சோதித்து பார்த்து இறுகிப்போன சமூகத்தில் உள்ள ஒருவனை வெளிப்படுத்த வைக்க முயல்வதும் இவ்வரங்கின் நோக்கமாகக் காணப்படுகின்றது. 'பரிசோதனைச்சாலைஒன்றினுள் ஒரு விஞ்ஞானி . இரசாயன மூலகங்களையும் கலந்து புதிய கண்டுபிடிப்புக்களைக் காண்ட பதுபோல நாடகக் கலைஞர்களும். பல்வேறு கற்பனைகளையும் கலந்து புதுப்புது வடிவங்களைக் கண்டுபி டிக்க ஒரு நாடகப் சாலை அவசியம். மேற்கு நாடுகளில் சில அரங்கக் குழுக்கள் (வுhநயவசந பசழரிள) ஆய்வுஇ அறிவு ரீதியாக ஆற்றுகின்றன.....10
இவ்வகையில் நோக்குகின் றபோது இவ்வரங்கு சமூக மாறு தலுக்காக தன் வடிவில் மாறுதல் களோடும் புதிய கருத்தியல் தளத்து டனும் பார்ப்போர் ஆற்றுவோர் என்ற பிரிப்பினை தகர்த்தும் செயற்பட்டுச் செல்கின்றது எனலாம்.
அடிக்குறிப்புக்கள்
01. சிதம்பரநாதன்இக. (1994) சமூக மாற்றத்துக்கான அரங்குஇ சென்னைஇ தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ்இ பக்: 49
02.மே.கு. நூ. பக் 75
03. En wikipedia org wiki/ Experimental Theatre Definition
04.மௌனகுருஇசி.(1987) மௌனகுருவின் மூன்று நாடகங்கள்இ திருநெல்வேலிஇ நாடக அரங்கக் கல்லூரி (என்னுரை) பக். xv
05. பாலச்சந்திரன்இ எஸ். (1997) அரங்கின் பரிமாணங்கள் (நாடகக் கட்டுரைத் தொகுப்பு) தொகுப்பாளர் தெ. மதுசூதனன்இ ச.ஜீவாகரன், இராஜகிரிய, 'விபவி' மாற்றுக் கலாசார மையம். பக். 130.
06. மௌனகுரு. சி. (1987) மௌனகுருவின் மூன்று நாடகங்கள்இ திருநெல்வேலிஇ நாடா அரங்கக்கல்லூரி (என்னுரை) பக். xv
07. நவதர்ஷினி.ந 'ஆற்றுகை ' சிறப்பிதழ் (1997-1998)இ நாடகப் பயிலகம், திருமறைக்
கலாமன்றம், யாழ்ப்பாணம். பக். 7
08. சிதம்பரநாதன்இ க. (1994) சமூக மாற்றத்துகான அரங்கு, சென்னை, கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ். பக். 129
09. பாலச்சந்திரன்இ எஸ். (1997) அரங்கின் பரிமாணங்கள் (நாடகக் கட்டுரைத் தொகுப்பு) 14 தொகுப்பாளர் தெ. மதுசூதனன்இ ச. ஜீவாகரன், இராஜகிரிய, 'விபவி' மாற்றுக் கலாசார மையம். பக். 123
10.மௌனகுரு. சி. (1987)
புதன், ஏப்ரல் 06, 2022
மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடக விழா ஒருபார்வை.
எஸ்.ரி.அருள்குமரன்
நாடகதுறை ஆசிரியர்
யா/மானிப்பாய் இந்துக்கல்லூரி
இணைப்பாளர், நாடகவிழா.
மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடக விழா ஒருபார்வை.
கல்லூரியின் சிறப்பு
மானிப்பாய் இந்துக்கல்லூரி நீண்ட வரலாற்று பாரம்பரியம் உடைய பண்பாட்டு செழுமை உடைய கல்லூரியாகும்.சங்கரப்பிள்ளையின் சிந்தனையில் இக்கல்லூரி உதயமாகியது
மாணவர்களை நல்வழிப்படுத்துவதனை நோக்கமாக கொண்டு செயற்படுகின்ற இக்கல்லூரில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்,கூட்டுறவாளர்வீரசிங்கம் போன்ற சமூக சிந்தனையாளர்கள் அதிபர்களாக இருந்து கல்லூரியை உயர்த்தியதுடன் கற்ற மாணவர்களையும் வழிப்படுத்தி வளப்படுத்தியிருந்தனர்.
கல்வியாளலர்கள்,மருத்துர்கள்,பொறியலாளர்கள், கலைஞ்கள் என பல துறைசாhந்தவர்களை உருவாக்கிய கல்லூரி பல தனித்துவங்களை கொண்டு விளங்குகின்றது.
கற்றலுடன் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் தனது சுவடுகளை பதித்து வருகின்றதுடன் தேசியப்பாடசாலை எனும் மகுடத்தை தாங்கி நிற்கின்றவகையில் மானிப்பாய் பிரதேசம் பெருமை கொள்கின்றது.
நாடகத்தின் சிறப்பு
மாணவர்களது ஆளுமை மாற்றத்தில்கலைகளது வகிபங்கு கனதியானது.
கலைகளில் பல்வேறுகலைகள் காணப்படுகின்றன.அக்லைகள் ஒவ்வொன்றும் மாணவர்களது சுயவெளிப்பாட்டிற்கும் கற்றுக்கொள்ளலிற்கும் வழிசமைக்கின்றன.
இப்பகைப்புலத்தில் கலைகளின் அரசி என போற்றப்படுகின்ற நாடக கலை சமூக அசைவியக்கத்தில் காத்திரமான வகிபங்கினை செலுத்தி நிற்கின்றவேளையில் இக்கல்லூரி அக்கலையினது செழுமையான வளர்ச்சிக்கும் பங்குபற்றுபவ்களை ஆளுமையுள்ளவர்களாக தகவமைப்பதிலும் கவனம் செலுத்திய வகையில் நாடக விழாவினை கொண்டாடி வருகின்றது.
கல்லூரியில் கொண்டாடப்படும் நாடகவிழாவின்சிறப்பு
ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை என போற்றப்படுகின்ற கலையரசு சொர்ணலிங்கம் கற்றதுடன் தனது ஆளிக்கையின் மூலம் விழாவினை செழுமைப்படுத்திய கதையினை கற்ற மாணவர்கள் மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது.
இவ்வறாத்தொடர்ச்சியில் பல அரங்கர்களை பிரசவித்துடன்,பிரசவித்துக்கொண்டும் இருக்கின்றது.
பாடசாலை நாடகங்கள் மாணவர்களது பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றவகையிலும் அவர்களை இலக்குபார்வையாளர்களாக கொண்டவகையில் நிகழ்த்தப்படுவதுண்டு.
நாடகங்கள் பாடசாலைகளில் நிகழ்த்தப்படுகின்ற விழாக்களில் நிகழ்த்தப்படுவதுண்டு. குறிப்பாக முத்தமிழ் விழாக்களில் குறித்த நிகழ்வாகவும், பரிசில் தினம் என்பவற்றில் நிகழ்வுகளின் பகுதியாக நாடகம் நிகழ்த்தப்படுவதுண்டு.
ஆனல் இக்கல்லூரியினை பொறுத்தவரையில் ஏனைய கல்லூரிகளை விட தனித்துவமான வகையில் நீண்டகாலமாக நாடக விழாவினை கொண்டாடிவருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
இல்லங்களுக்கிடையே மெய்வல்லுனர் போட்டி நடைபெறுவதை போன்று நாடகப்போட்டியினை நீண்ட காலமாக கொண்டாடி வருகின்றது.
சம்பந்தர் ,சுந்தரர்,வாகீசர்,மாணிக்கர் ஆகிய நான்கு இல்லங்களுக்கிடையே போட்டி நடைபெற்றுவருகின்றது.
இப்போட்டிகள் ஏனையா கல்லூரிகளிற்கு முன்னுதாரனமானவகையில் கொண்டாடப்பட்டுவருகின்றது.
இந்தவகையில் பாடசாலையில் நாடகங்கள் மாணவர்களை பங்குதாரர்களாக கொண்டு ஐPலை மாதம் கல்லூரி சமூகத்தினரால் கொண்டாடப்பட்டு வருகின்றமை மகிழ்விற்குரியதாகும்.
ஐpலை மாதம் முதலாம், இரண்டாம் திகதிளில் இரு தினங்கள் முழுநீள நாடகங்களாக முன்னைய காலத்தில் நிகழ்த்தப்பட்டு வந்ததுள்ளன.
2012-2014ம் ஆண்டுகாலப்பகுதியில் 3ம் திகதி நாடகவிழாவினையும் நான்காம் திகதி நிறுவுனர் தின விழாவினையும் அப்போதைய முதல்வர் திரு.ச.சிவநேஸ்வரன் கொண்டடினார் ஆயினும் மீளவும் அவரது காலத்திலேயே 2015ம் ஆண்டு முதலாம் திகதி நிகழ்த்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக இவ் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
கல்லூரியில் கற்ற பெரும்பாலான மாணவர்கள் இந்நாடக விழாவில் பங்குபற்றியதுடன் அதனூடாக தம்மை வளப்படுத்திக்கொண்டதாக குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் இவ்விழா அவர்களுக்குகொண்டாட்டத்துக்குரியதாகவும்மகிழ்வளிப்பிற்குரியதான நிகழ்வாக நினைவுகளை சுமந்து கொண்டிருப்பதனை அவர்களது கதையாடல்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
நாடகவிழாவில் பங்குபற்றியவர்கள் பெரும் உயர் பதவிகளில் இருந்து சமூகத்திற்கு காத்திரமான சேவையினை வழங்கி வருகின்றமையினை கண்டுகொள்ளமுடிகின்றது.
நாடகத்துறைசார்ந்தவகையில் வி.எஸ்.துரைராஐh ஐசாக் இன்பராஐ; மரிக்கார்ராமதாஸ் சோக்கலோ சண்முகம் கலாநிதிகந்தையாஸ்ரீகனேசன் கந்தையா-ஸ்ரீகந்தவேள் நா.கு.மகிழ்;ச்சிகரன் சூரிஅண்ணா என சிறப்பாக அழைக்கப்படுகின்ற சூரி என இப்பட்டியல் நீளும்.
நாடக விழாவின் நோக்கம்
நாடகவிழாவானது பங்குபற்றுகின்ற மாணவர்களது ஆளுமைத்திறனில் மாற்றங்களை கொண்டுவருகின்றது.
நாடகம் பார்ப்போர் ஆற்றுவோர் நேரடித்தொடர்பினை கொண்டுவிளங்குகின்றதுடன் நாடகசெயற்பாட்டின் உயிர்ப்பினை பறைசாற்றுகின்றது
வெறுமனே நாடகங்களை மேடையிடுதல் என்பதை தாண்டி நாடகம் சார் புரிதலை அரங்களிக்கை மூலம் கண்டடைவதற்கும் பங்குபற்றுபவர்கள் சுய சிந்தனை யுள்ளவர்களாகவும் புதியன படைப்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் உருவாவதை களமாகக்கொண்டு இவ்விழாக்கள் தகவமைக்கப்படுகின்றன.
இல்லமெய்வல்லுனர்போட்டி நடைபெறுகின்றபோது குறித்த இல்லத்தை சார்ந்தவர்கள் வெற்றி பெற வேண்டும் என முனைப்புக்காட்டுவதைப்போன்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தி வளப்படுத்தி வழிப்படுத்துவதையும் வெற்றியை நோக்கி அழைத்துச்செல்கின்றனர்.
இல்லங்களுக்கிடையே போட்டிகள் நடைபெறுகின்றபோது வெற்றிபெறுதல் என்பது முதன்iமாயனதாக காணப்படுகின்றபோதிலும் பங்குபற்றுகின்றவர்களிடையே பின்வரும் திறன்கள் வளர்த்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
தலைமைத்துவம்
தொடர்பாடல்
குழுமனப்பான்மை
தொடர்பாடல் திறன்
நபர்களுக்கிடையிலான பரஸ்பர கருத்தாடல்ஃகருத்துபகிர்வு
மேடை கூச்சமின்மை
படைப்பாக்க ஆளுமை
கற்பனையாற்றல்
முடிவெடுக்கும் ஆற்றல்
அமைப்பாற்றல்
கற்றலில் நாட்டம் (நாடக உரையாடல்களை மனனம்செய்கின்றபோது)
நேரமுகாமைத்துவம்
வெற்றி தோல்விகளை சமனாக மதித்தல்
விமர்சனங்களைஏற்றுக்கொள்ளல்
போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்.
மேற்படித்திறன்கள் வளர்த்துக்கொள்கின்றபோது சமூகத்தினை வழிநடத்தக்கூடிய ஆளுமையுள்ளவர்களாக உருவாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
நாடகவிழா நிகழ்த்தப்படும் முறை
பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளிற்கு புறம்பான வகையில் பாடசாலை நிறைவடைந்தபின்னர் குறித்த நேரங்கள் பாடசாலைசமூகத்தினரால் ஒதுக்கப்படுகின்ற நேரத்திள் ஒத்திகைகள் பார்க்கப்பட்டு குறித்த தினத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவ்விழாக்கள் இரவுவேளைகளில் நிகழ்த்தப்பட்டபோதும் பகல்பொழுதுகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்றபோதும் பார்வையாளர்களாக பாடசாலை மாணவர்கள் பெற்றோர்,பழையமாணவர்கள்,என பலரது ரசனைக்குரியவகையில் நிகழ்த்தப்பட்டுவருகின்றது.
பங்குபற்றுகின்றவர்களுக்கான ஊக்குவிப்பு
சாதனைகள் உடனடியாக நிகழ்ந்துவிடுவதில்லை.பங்குபற்றுகின்றவர்களிற்கு அடையாளத்தை ஏற்படுத்துகின்றபோதுதான் அவர்களது இயங்கியலுக்கான சாத்தியங்கள் திறக்கப்பட்டு தொடர்ந்து இயங்குவதற்காக வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.
இப்பகைப்புலத்தில் போட்டியில் பங்குபற்றுகின்ற வர்களை ஊக்குவிக்கின்றவகையில் எனது முயற்சியினால்பங்குபற்றுகின்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பதுடன், சிறந்த நடிகர்,சிறந்த நடிகை,சிறந்த துணைநடிகர்,சிறந்ததுனை நடிகை,விசேடதிறன்கொண்ட நடிகர்,பாடகர் போன்ற விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.
பங்குபற்றுகின்ற மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்படுவதுடன் (ரீ.கே.எம்.பிறதோஸினால் வழங்கப்படுகின்றது) கடந்த ஆண்டு முதல் விருதுகளை பெறுகின்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் சி.இந்திரகுமார் அவர்களது முயற்சியினால் பணப்பரிசில்கள் வழங்கப்படுகின்றது.
முடிவுரை
இத்தகைய நாடக விழாவானது பாடசாலை சமூகத்தின் இனைவிற்கும் ஆற்றுகை சாhந்த செயற்பாடுகளின் மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கும் வழிசமைக்கின்ற வகையில் பயனுள்ளதாக விளங்குகின்ற இவ்விழாவில் தொடர்ச்சி பல வகைகளில் பயனுள்ளதாக அமையும்.
புதன், மார்ச் 30, 2022
சிறுவர் நாடகங்கள் உள மாற்றத்திற்கும்களம் அமைத்து கொடுக்கும்.
(எஸ்.ரி.அருள்குமரன்)
அத்தியாயம் 2
சிறுவர் நாடகங்கள் பங்குபற்றுகின்ற மாணவர்களிடையே உள மாற்றத்திற்கும், கற்பனைரீதியான தேடலுக்கும் களம் அமைத்து கொடுக்கும்.
சிறுவர்களுடன் இணைந்து அரங்க செயற்பாடுகள் மேற்கொள்வது அலாதியானது.மகிழ்ச்சிக்குரியது.பல விடயங்களை கற்றுக்கொள்வதற்கான சந்தர்பங்களினை ஏற்படுத்துகின்றன.
சிறுவர்களது மனோதிடம்,தொடர்பாடல் திறன்,ஆக்கவியல்செயற்பாடுகள் என்பவற்றினை கருத்தில் கொண்டு சிறுவர்களுடன் இணைந்து நாடகங்கள் தயாரிக்கின்றபோது கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்பின்னனியில் சிறுவர் நாடகங்கள் பல இடங்களில் தயாரித்த போது பல்வேறு மாறுபட்ட அனுபவங்களினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
இந்வகையில் கீரிமலை நகுலேஸ்வரா ம.வியில் அப்போது அதிபராக கடமையாற்றிய சு.ஸ்ரீ.குமரன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க அவரது வழிகாட்டலில் அப்பாடசாலை சிறார்களிற்கு நாடகம் பயிற்றுவிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.
அதிபர் மாணவர்களிடையே உள்ள திறன்களை வெளிக்கொனர்வதற்காக கலைத்துறை சாhந்த செயற்பாடுகள் மூலம் களங்களை திறந்திருந்தார்.அவரும் கலைத்துறையை சார்ந்;த எழுத்தாளளர் என்பதால் சாத்தியமாகியது.
கற்றலில் மாணவர்கள் முதன்மை நிலையடைவதற்கு கலைத்துறை சாhந்த செயற்பாடுகளில் விரும்புடன் ஈடுபடுவதற்கு களங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நாடகம் பழக்குவதற்கு ஆரம்பித்த வேளையில் மாணவர்கள் பலரும் ஒன்றுகூடியிருந்தார்கள்.நாடகம் பழக்கும்போது எம்போதும் மகிழ்வளிப்பிற்கு முதன்மை கொடுத்தவகையிலும்,சுயரீதியான நடிப்பிற்கு முதன்மை கொடுத்தவகையிலும் செயற்படுவது வழக்கம்.
நாடகம் சிறந்தமுறையில் வரவேண்டுமமாயின் ஒழுங்கானமுறையில் ஒத்திகைகளில் கலந்துகொள்வது வழங்கப்படுகின்றபாத்திரங்களினை உணர்ந்து நடிப்பது முக்கியம்.
சிறுவர்களிற்கு நாடகம் பழக்குகின்ற போது இவற்றினை அவர்களிற்கு எற்றமொழியில் புலப்படுத்தி வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தகின்றபோதே நாடகம் சிற்பானதாக அமையும்.
நாடகம் நடிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து விட்டால் நாடகத்தின் வெற்றி சாத்தியமாகின்றது.
பாத்திரங்கள் வழங்குகின்ற போது நடிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும.;
ஒருமாணவன் மிகவும் அமைதியாகவும்,அதிகம் கதையாதவனாவும் இருந்தான்.இவ்வாறு ஒதுங்கி இருப்பவர்களை இணங்கண்டு அவர்களிற்கான வாய்ப்பினைவழங்குகின்ற போது அவர்கள் ஆளுமையுள்ளவர்களாக மிளிர்வர்கள்
இந்தவகையில் அவனை நடிப்பதற்கு விரும்பம் உள்ளதாக எனக்கேடட்போது ஓம் என்றான். ஆனால் அவனால் உரையாடல்களை உடனே பேசமுடியாது இருந்ததது. மிகவும் சிரமப்பட்டுத்தான் உரையாடலை மேற்கொண்டிருந்தான்..ஆனால் அவனது ஆர்வம் அப்பாத்திரத்தில் காட்டிய ஈடுபாடு நான் பழக்கி விட்டு வந்தபின்னர் அதனை மெருகேற்றுவதற்காக பொறுப்பாசிரியர் காட்டிய ஆர்வம் என்பன அவன் சிறந்த முறையில் நடிப்பதை சாத்தியமாக்கியது.
இம்மாணவன் பின்னர் வாசிப்பதில் சிரமமமற்று சிறப்பாக செயற்பட்டார்.
அதீத திறமையினை வெளிக்காட்டிக்கொண்டிருப்பவர்களைவிட திறமையினை வெளிக்காட்டவாய்ப்பற்று ஒதுங்கியிருப்பவர்களிடம் அசாத்திய திறன் ஒளிந்து காணப்படும்..அவற்றை இனங்கண்டு அவர்களது திறன்களினை வெளிக்கொணர்வதற்கு இத்தகைய செயற்பாடுகiளினை மேற்கொள்ள வேண்டும்.
அரங்கு எப்போதும் கற்றலுக்குரியது
(எஸ்.ரி.அருள்குமரன்)
அத்தியாயம்1
அரங்கு சார்ந்த பயணங்கள் எப்போதும் மகிழ்வளிப்பனவாகவும்,,கற்றுக்கொள்ளலுக்கான களவெளயினை ஏற்படுத்துவனவாகவும் அமைகின்றது.
யாழ்ப்பானப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் கலாநிதி க.சிதம்பரநாதனின் வழிகாட்டலில் நிகழ்த்திய அரங்க செயற்பாடுகள் பசுiமாயனதாகும்.
அவைபல கற்றுக்கொள்ளலுக்கும்புதிய சிந்தனையுடன் பயனிப்பதற்கும் நிகழ்த்தபட்ட அரங்க செயற்பாடுகளின் ஊடாக பலம்,பலவீனங்களை உய்த்துனர்ந்துஅடுத்த கட்ட நகர்விற்கு செல்லக்கூடியதாவும் அரங்கின் ஊடாக சமூகமாற்றத்திற்கும் சமூக ஊடாட்டத்திற்கும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.
சுனாமி எனும் இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு மக்கள் முகம் கொடுத்து சொல்லொனாத்துயர்களை அனுபவித்த பொழுதுகளில் அம்மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கும், அவர்களது உளவிடுதலைக்கான திறவுகோல்களை ஏற்படுத்துவதினை நோக்கமாக கொண்ட வகையில் அரங்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இடம்பெயர்ந்த மக்கள் முகாம்வாழ்வில் இருந்து மீண்டு தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்த பின்னர் தமது தொழில் சார்ந்த செயற்பாடுகளில் மீள செயற்பட முயன்ற காலப்பகுதியில் பட்ட ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.
அவ்வாற்றுகை செயற்பாட்டில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானதாக அமைந்திருந்து.
காலை வேளையிலேயே அரங்க செயற்பாட்டிற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.
கிராமிய விளையாட்டுக்கள் சிறுவர்களுடன் இணைந்து விளையாடப்பட்டதுடன் ஊர் மக்கள்,பெரியவர்களுடன் பல விடயங்கள் கதைக்கப்பட்டன.
கதைத்து பெறப்பட்டகதைகளின் ஊடாக ஆற்றுகை மேற்கொள்வதற்கான கருத்துப்படிமங்கள் உருவாக்கப்பட்டன.
மாலை வேளை பருவரையாhன ஆற்றுகை திட்டமிடலுடன் ஆற்றுகை களத்திற்கு சென்றோம்.
மக்கள் மீளவும் பயமற்று கடலுக்கு சென்று தொழில் மேம்பாட்டினை மேற்கொள்வதற்கான நம்பிக்கையினை அளிப்பதாக ஆற்றுகை மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டன.
ஆற்றுகையின் ஆரம்பித்தில் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதாக ஆற்றுகையினை மேற்கொண்டபோது நண்பர் சுதன் 'நீ மீனா நடி. நாங்கள் மீன்பிடிப்பவர்களாக நடிக்கின்றோம் அதை வைச்சுக்கொண்டு ஆற்றுகையனை நகர்த்திச்செல்வோம்' என்றார்.
அவரது கோரிக்கையினை ஏற்று நான் மீனாக ஆற்றுகைசெய்தபோது மீனவர்கள் சுனாமி அடித்தபின்னர் கடலுக்குள் வருவதில்லை. நாம் எல்லோரும் சுதந்திரமாக திரிகின்றோம் என்பதாக ஆற்றுகையினை மேற்கொண்டபோது மீனவர்களாக நடித்தவர்கள் எங்களை பிடித்து இழுத்துவந்து மக்கள் கூடி நிற்கின்ற இடத்தில் ஆற்றுகையினை மேற்கொண்டனர்.
இவ்வாற்றுகை மக்களுடன் ஊடாடி ,மக்களது கருத்துக்களை உள்வாங்கி செயற்படுத்துகின்ற ஆற்றுகை எனும் வகையில் மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகையவகையில் நிகழ்த்தப்படவில்லைஎன்பதை இப்போது உணர்ந்துகொள்ள முடிகின்றது.
மீனவர்களாக நடிக்கின்றவர்கள் மக்களோடு ஊடாடுகின்றபோது 'என்ன நீங்கள் கடலுக்கு சென்று பிடிக்காமமையினால் மீன்கள் சுதந்திரமாக திரிகின்றன என குறிப்பிட்ட போது பங்காளிச்செயலாளிகள் (ஆற்றுகையில் பங்குபற்றியவர்கள்) தமது உணர்வுகளினை வெளிப்படுத்தியதுடன் கருத்துக்களினை குறிப்பிட்டு ,மீனாக ஆற்றுகை மேற்கொண்டவர்களை பிடித்தனர்.
.
அவ்வேளை அவர்களது பிடியில் இருந்து தப்பி ஓடுவதாகநான் பாவனை செய்தபோது ஒருவர் என்னை பிடித்தவர் தலையை பிடித்து மூன்று முறை மண்ணில் அடித்தார்.
அவரதுதாக்குதலுடன் மூச்சிறைத்துப்போன நான் அப்படியே கிடந்துவிட்டேன். என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஆற்றுகை முடிந்தபின்னர் கருத்துக்கள் பல பகிரப்பட்டபின்னர் சுதாகரித்துக்கொண்டு எழுந்த எனக்கு என்னை தாக்கியவர் கை தந்து நன்றாக நடித்தீர்கள் எனக்குறிப்பிட்டார்.
எனக்கோ அவரது பாரட்டுதலை விட அடி வாங்கிய ஞபாகம் நினைவுக்கு வருகின்றது. அவர் ஏன் என்னை இவ்வாறு தாக்கினார் என்பதற்கான காரனத்தினையும் அறிந்துகொள்ள வேண்டும் என மனம் தவித்தது.
அதற்கான காரனத்தை அவர்களிடம் கேட்டபோது குறித்த மீன் ஒன்றினது பெரினை குறிப்பிட்டு அம் மீனை வலையை விட்டு வெளியே எடுத்த பின்னர் அதை மூன்று முறை தiலைப்பகுதியில் அடித்தால் அது உயிரற்று போய் விடும் எனக்குறிப்பிட்டார். அம்மீனாக உங்களை பாவனை செய்து உங்களையும் தாக்கியதாக குறிப்பிட்டார்
இந்தவிடத்தில் இருந்து நோக்கும்போது அரங்க செயற்பாடு மக்களிற்கானது, மகிழ்வளிப்பிற்குரிது, அவர்களது சிந்தனையில் மாற்றத்தினை கொண்டுவருவதற்கான தளம் என்பது மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் அவர்களுடன் ஊடாடு கின்ற போது பல எதிர் வினைகளிற்கு முகம் கொடுக்கின்ற வகையில் எம்மை தயார்ப்படுத்திச்செயற்பட வேண்டும் எனும் பட்டறிவினை நான் உணர்ந்துகொண்டேன்.
அரங்கு என்பது எப்போதும் திட்டவட்டமான வகையில் முன் ஆயத்தங்களுடன் இயங்கவேண்டியதுடன் .மக்கள் பங்குகொள்வதற்கான வாய்ப்புக்கள் முன்திட்டமிடலுடன் வழங்கப்படவேண்டும் என்பதை எனது அரங்க செயற்பாட்டு வாழ்வில் கற்றுக்கொண்டேன்.
ஆற்றுகை தளம் மணல் என்பதால் நான் தப்பித்துக் கொண்டேன் மாறாக காயங்கள் ஏற்படக்கூடிய சூழல் உள்ள அற்றுகை தளம் எனில் பாதிப்பிற்கு முகம் கொடுக்க நோர்ந்திருக்கும்
ஆற்றுகையாளனுக்கும் பார்ப்போனுக்கும் இடையில் உணர்வு ரீதியான புரிதல் கட்டமைக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை மாறாக உணர்ச்சியுடனான ஊடாட்டம் வருகின்றபோது ஆற்றுகையாளனும் பார்ப்போனும் இடைவெளியற்ற வகையில் நெருங்குpன்றபோது அல்லது ஊடாடுகின்றபோது அசம்பாவிதங்கள் நிகழ்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதனை எவ்வாறுகையாளவேண்டும் என்பதற்கான பயிற்சிகள் இன்றி ஆற்றுகை தளத்திற்கு செல்வது மிகவும் ஆபத்தானது.
ஆற்றுகையினை தகவமைக்கும் போது அல்லது ஆற்றுகையினை மேற்கொள்கின்றபோது இத்தகைய விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அனுபவ ரீதியாக உணர்ந்துகொண்டேன். இல்லையேல் வெறும் உணர்ச்சிவசமானதாக மாறிவிடுவுதுடன் பங்குபற்றுச்செயலாளி பங்குபற்றுகின்றபோது வெளிப்படுத்துகின்ற உணர்ச்சியானது ஆற்றுகையின் மையத்தினை சிiதை;துவிடுவதுடன் ஆற்றுகையாளனையும் பாதித்து விடும் என்பது மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆற்றுகையில் மீனாக நடித்த நண்பருக்கு முழங்கால் தாக்கப்பட்டது நினைவுக்கு வருகின்றது.
அரங்க என்பது மக்களுக்கானது. மக்களுக்கான அரங்கசெயற்பாட்டை மேற்கொள்கின்ற ஆற்றுகையார்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களது பாதுகாப்பும் அவர்களிற்கான அங்கீகாரமும் அவசியம் என்பதை இச்செயற்பாட்டனுபவம் உணர்த்தியது.