என்னைப் பற்றி

ஞாயிறு, நவம்பர் 06, 2022

நூலின் பெயர்- ரோஸ் நூலாசிரியர்- ஆயிஷஇரா-நடராசன் வெளியீடு – புக்ஸ் ஃபார் சில்ரன்
ரோஸ் அதாவது றோசாப்பூ. பூக்களின் மீதான பிரியம் அலாதியானது.மரங்களை நாட்டுவதும் அவை வளர்ந்துவருகின்றபோது நாம் அடைகின்ற புளகாங்கிதமும் இபூத்துக்குளுங்குகின்றபோது அவற்றை பார்க்கின்றபோது மதில் ஏற்படுகின்ற மனமகிழ்சியும் உணர்ந்துகொண்டவர்களால் தான் அதை புரிந்துகொள்ளமுடியும். இங்கும் பூவின் மீது சிறுவன் காட்டுகின்ற பிரியமும்.அப்பூவின் ஸ்பரிசத்தினை உணரமுடியாது போகின்ற ஏக்கமுமே இக்கதை. இயந்திரமயமாகிப்போன வாழ்வியல் சூழலுக்குள் ஊடாhட முடியாமல் போன ஏக்கமும்.ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதுபோன்ற குறிப்புநிலைக் கல்வி முறைமையில் உள்ள பலவீனங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. காலைவேளை மகனை பாடசாலைக்கு அனுப்புவதற்காக வேலைக்கு செல்கின்ற பெற்றோர் படுகின்ற சிரமத்தில் ஆரம்பிக்கின்றது.அவன் எழுந்து ரோஸ் பூத்திருக்கிது அம்மா அதைபாக்கவேனும் என மகன் ஆசைப்படல்.தாய் பள்ளிக்கு நேரமாகிறது என்கிறாhட.அவ்வேளை அவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக்குறிப்பிடல். அவன் வீட்டுப்பாடம் செய்ய உதவுதல் உணவு தயாரித்தல் எனபரபரப்பானதான வீட்டுச்சூழல் காணப்படுகின்றதுஇத்தகைய படபடப்பிற்கு மத்தியில் அவனை தயார்ப்படுத்தி பள்ளிக்கு அனுப்பிவிட்டு தாம் அலுவலகம் செல்கின்றனர். பள்ளியில் ரோஸ் பற்றி ஒவ்வொரு பாட ஆசிரியரும் தமது பாடத்திற்கு ஏற்றவாறு கற்பிக்கின்றனர். அவன் எங்கட வீட்டில றோஸ் பூத்திருக்கிது மிஸ் என்கின்றான். அதற்கு அவர்கள் அந்த கதையை விட்டிட்டு படிப்பில கவனம் செலுத்து என்கின்றனர். ஒவ்வொரு நிலையிலும்அவன் முகம்கொடுக்கின்ற ஏக்கங்கள் கதையில் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளி நிறைவடைந்த பின்னர் கராத்தே வகுப்பிற்குசெல்லல்.அலுவலக கடமை நிமிர்தம்பெற்றோர் காலதாமதமாகவரல். இனி இரவு உணவுசமைத்தல் கடினம் என ஹொட்டல் ஒன்றில் உணவருந்துதல். வீட்டிற்கு வருகின்ற போது அம்மா றோஸ் வாடிச்சிது எனக்குறிப்பிடல். இந்த ஏக்கத்திலோ என்னவோ அவனுக்கு ஜீரம் (காய்ச்சல்) அடிக்கின்றது. அவன் அம்மா ரோஸ் இனியும் பூக்குமா எனக்கேட்டல்..தாய் பூக்கும் என சொல்லல். அவனுக்குமருந்து கொடுத்தல் நாளைக்கு என் ஆபீஸ் போச்சா எனக்கேட்ட்டல் என்பதாக அமைகின்றது. மிஸ்... மிஸ்...நான் சொல்லுறன்மிஸ்..எங்க வீட்டில ஒரு செடில நிஜமாகவே ரோஜாபூத்திருக்கிது மிஸ்...நான்பாhத்தேன்மிஸ்..ரெட் கலர் மிஸ்;.. செடில ரோஸை பார்க்கிறதுபெரிசில்லை.. ரோஸ்.ரோஸ்ன்னு எழுதிப்பாரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம...கரெக்டா எழுதிப்பழகு..புரியுதா..உட்காரு..உடனே ரோஜாவோட சிவப்பும் இல்லாம லில்லியோட வெள்ளையும் இல்லாம ஃப்ளோரா புதுசா ஒர பூவை உருவாக்கியதாம்...அதுதான் லோட்டஸ்..சொல்லங்க.. ஆர்...ஓ..எஸ்..இ..ரோஸ்....எல்..ஐ..எல்.ஓய்...லில்லி..(பக்23) பூக்காத தாவரம் அதுக்கு மேல வளராதா மிஸ்.. அதை வெட்டி எடுத்து வைக்க வேண்டி வரலாம்..உதாரணத்துக்கு ரோஜா ரோஜா செடியை வளர்க்க பதியம் போடுவார்கள் . அதெல்லாம் எனக்கு வேண்டாம்.. புக்குல இருக்கிறத படி..போதும். மிஸ்... என்னடா.. பூக்காத செடிய வெட்டி வைக்க வேண்டி வரும்னு சொல்றீங்க..வெட்டி வைச்ச ரோஜ பூக்குதே.. அது எதுக்கு மிஸ்... ஆமா மிஸ் ரோஜா எதுக்கு பூக்குது.. மிஸ்...மிஸ்.. எங்கவீட்ல ஓரு செடில நிஜமாவே ஒரு ரோஜா பூத்திருக்கு மிஸ்..ரொம்ப அழகா இருக்கு மிஸ்.. நான் பாத்தேன்... கொஞ்சம் விட்டா..ரொம்ப நான்சென்ஸா கேள்வி கேப்பீங்களே..எடு..புக்க..படி... ரோஸ்..ஈஸ்...எ..ஃப்ளவரிங் பிளான்ட்.(பக் 29-30) ........................................................................................... மிஸ் ரெட் சாயில்லதானே ரோஜா வெடி வளரும்... ஆ..ஆமாம்.. மிஸ்..தேவா வீட்டில இன்னிக்கு ஒரு செடில ரோஜாப்பூ பூத்திருக்கு மிஸ்... ஆமா மிஸ்..அழகா இருக்கு..நான் பாத்தேன் மண் வளம்.. சாயில் பவர்..நல்லாயிருந்தா ரோஜா பூக்கர்துக்கு என்ன?நல்லாவே பூக்கும்.. ரோஜா என்ன கலர்மிஸ்.. ஏய் சாயில் பத்தி பாரு..கண்ட கண்ட கேள்வியெல்லாம் கெட்டுக்கிட்டு..ஸோ..ரெண்டு வகையான சாயில்..அலுவியல சாயில்..ரெட் சாயில்..அலுவியல்...ஸ்.பெல்லிங் சொல்லுங்க பார்ப்போம்.(பக் 37) அம்மா நம்ம ரோஜா செடி இன்னொரு பூ பூக்குமா.. ஏம்மா அந்தப் பூ வாடிப்போச்சு.. நீஇன்னும் தூங்கலியா..மணி.. என்ன? அம்மா எனக்கு ரோஜாவ பாக்கனும்மா...நிஜரோஜா ..மிருதுவான ரோஜா..வாசனை வர்ற ரோஜா..அதை தொட்டுப்பாக்கணும்மா.. என்னங்ககொழந்தைக்கு நல்லா ஐPரம்அடிக்குது எழுந்திருங்க.. நம்ம வீட்டிலயே செடில பூத்த அழகான ரோஜாஜா..எனக்கு வேணும்ம. ஆமா..ஜீரம் அடிக்குது.. ரோஜாக்காரன் கார்த்தால வந்தான் இல்ல..ஒண்ணு வாங்கிக் கொடுத்தா என்ன? பாருங்க.. கொழந்தையை எப்படி பாதிச்சிருக்கு.. எழுந்து இந்த மாத்திரய போட்டுக்கடா..அழக்கூடாது.. நாளைக்கு என் ஆபிஸ்போச்சா.. எனக்க நிஐ ரோஜா தான் வேனும்.. நம்ம வீட்டில செடில மறுபடி ஒரு ரோஜாப்பூ பூக்குமாம்ம..சொல்லுமா.. உம்..உம்.. கட்டாயம்பூக்கும்டா..என் செல்லமே.. இப்ப தூங்கும்மா..தூங்கு..நேரு மாமா மாதிரி தினமும் ஒரு ரோஜா குத்திக்கிட்டுகோகலாம்..எல்லாம் உணக்குத்தான். தூங்கு..அழாதப்ப.. (பக்62-64) இந்நூலாசிரியர் ஆயிஷா .இரா.நடராசன் 2014ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர்.தமிழின் முன்னனி அறிவியல் வரலாற்றாளர்.இயற்பயில்இகல்விஇமேலான்மைமற்றும் உளவியல் ஆகியவற்றில் முதகலைப்பட்டம் பெற்ற இவரது நூல்களில் உள்ள எளிமையும்.அங்கதம் கலந்த நகைப்புணர்வும் முக்கிய அறிவியல் எழுத்தாளராக அறியவைத்துள்ளது. நூல் பற்றி அட்டைப்படத்தில்பின்வரும் குறிப்பு உள்ளது. 'இன்றைய கல்வி முறையும் வாழ்க்கைச்சூழலும் வளர்ச்சி குறித்த சமூக மதிப்Pடுகளும் எப்படி கேள்விகளையேவிரும்பாமலும் தேடலை முன்வைக்காததுமாக இயங்கி வருகின்றது என்பதையும்அறிவுசார் தேடல் உள்ள ஒரு குழந்தை எப்படி இந்த கல்வி முறையால் வதைபட வேண்டியிருக்கின்றது என்பதையும்ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன் தனத 'ரோஸ்'என்ற கதை மூலம் முன்வைக்கின்றார்.'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக