என்னைப் பற்றி

செவ்வாய், அக்டோபர் 18, 2022

  

(எஸ்.ரி.அருள்குமரன்)

பரீட்சார்த்த அரங்கு ஓர் அறிமுகம்


அரங்கானது சமூகத்தினி டையே வளிமையானநாகவும் தாக்க வன்மை நிறைந்ததாகவும் காணப் படுகின்றது. இவ்வரங்கானது சமூக பெறுமானத்தில்இ வாழ்வியல் மாறு தல்களில் தன்னை இணைத்துக் கொண்டு செல்கின்ற போக்கு மேற்குலகில் மட்டுமன்றி ஈழத்தி லும் உண்டு என்பது கண்கூடு.

அரங்கு என்பதினை வரைய றைக்கு உட்படுத்தி குறிப்பிடுவது கடினமான விடயமாகும். மாறாக அரங்கு பற்றி நோக்கும் போது அரங்கவியலாளர்கள் தமது அனுபவ வியலுக்கு ஏற்ப கருத்துப் பகிர்கின் றனர். அவற்றைப் பின்வருமாறு நோக்கலாம்.


'அரங்கு என்பது எப்போ துமே ஆற்றுபவர்களினதும் பார்வை யாளர்களினதும் தொடர்பு கொள்ள லாகவே இருக்கிறது'1

'அரங்கமானது பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தாமல் அவர்களை விமர்சன பூர்வமாக சிந்திக்கவைக்க வேண்டுமென்பது பிறெஃக்ற்றின் நோக்கம்'2

எனவே அரங்கானது எப் வேறுபட்டவர்களின்தொடர்பாடலில் அவர்களிடையே உணர்வு பூர்வமான ஓர் உறவுத்தளம் உருவாக்கப்பட்டு அவ் உறவுத்தளம் மூலம் சமூகப் பெறுமானத்தில் காக்கத்தினை ஏற்படுத்தும் தளமாக விளங்குகின்றது. குரங்கு மனிதன் வாழ்வில் சந்தித்த துன்பதுயரங்கள்இ வாழ்வியலில் எதிர்கொண்ட வலி கள். அவனது வாழ்வியல் முறைஇ அவனது எதிர்பார்ப்பு என்பவற் றினை வெளிப்படுத்த முனைகின்றது. இவ்வகையில் அரங்கு மக்களை மக்களுக்கு உணர்த்துதல் என்பதில் மனிதனது சுயத்தினையும்இ தனித்து வத்தினையும் வெளிப்படுத்துவதற்கு முனைப்புக் காட்டுகின்றது.


எனவே அரங்கு மனிதனது பிரச்சினைகளினைத் தீர்த்தல்இ அவர்கனை சுயமுனைப்புள்ளவராக்குதல் எனும் கருத்து நிலையில் புதிய சிந்தனைபோக்கும் மேற்குலகில் மேற்கிளம்பியது. இவ்வகையில் அரங்கின் ஓர் அம்சமாக பரீட் சார்த்தம் எனும் பண்பு முனைப்பு பெறலாயிற்று. இப்பரீட்சார்த்த அரங்க முயற்சிகள் மேற்கில் இருப் தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவானது. சான்றாக 'இருபதாம் நூற்றாண்டில் டொமினியின் அந் தஸ்து உடன்படிக்கை அரசுக்கெதி ரான நடவடிக்கைகளில் நாடகங்கள்இ எழுத்தாக்கங்கள் உருப்பெற்றன. குறிப்பாகஇ இயற்கை மாற்றமான நிகழ்வுகள் கால ஓட்டத்தில் உருப் பெற்றன. உலக அரங்கிலே மூலாதார மானதைக்கொண்டு இயற்கை மாற் றம் என்ற அடிப்படையில் பிரதான மாக பல தரவு நிகழ்வுகள் ஆக்கப்பட் டன. அவைகளின் தராதரங்கள்உயர்வோ. தாழ்வோஇ கூடவோஇ குறையவோ பெரிய அரங்கில் வர வேற்கப்பட்டன'3

அரசுக்கெதிராக இவ்வகை நாடகங்கள் இருபதாம் நூற்றாண் டின் ஆரம்பத்தில் புதிய சிந்தனை யுடனும் கருத்தியல் தளத்துடனும் மேற்குலகிலே மேற்கிளம்பினாலும் இவற்றின் உச்சக்கட்ட நகர்வு அல்லது முதன்மையான வெளிப்படு கையாக 1947 ஆம் ஆண்டு காலப் பகுதியினை கொள்ளலாம். காரணம்இ இரண்டாம் உலக யுத்தத்திலே நிறைய உயிர்களினையும்இ உடமை களினையும் இழந்து வாழ்வியல் வறுமைக்குள் தமது வாழ்வியலினை ஓட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட் டது. அப்போது வாழ்வு பற்றிய தேடல்களும்இ மனித இருப்பு தொ டர்பான பிரச்சினைகளும் அரங் கிலே பேசு பொருளாகின. அப் பேசுபொருளினை பேசுகையில் அப் பேசுபொருள்கள் உயிரோட்டமாக வெளிப்படுவதற்கான சாத்தியங் களினை முன்னைய அரங்குகள் கொண்டிருக்கவில்லை. எனவே அவ் விடயத்தினை பேசுவதற்கான சாத்தி யங்களினை உடைய அரங்குகளினை கண்டுகொள்ளவேண்டிய தேவை அரங்கவியலாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. எனவேஇ அதற் கான சிறுசிறு முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. இச் சிறு முயற்சிகள் பரீட்சித்துப் பார்த்தல் எனும் வகை யில் வெளிப்பட்டன. இவ்வெளிப்ப டுகைகள் பரீட்சார்த்த அரங்கினை மேற்குலகிற்கு தேவையான அரங் காக முகிழ்ந்தெழ வைத்தன. மக்க ளது மனதிலே எதிர்காலம் பற்றிய

கேள்வியினை விதைத்துவிட்ட அச் சூழ்நிலையின் பாதிப்பில்இ கலையா ளது மனிதளையும் அவனது பிரச் சினையினையும் பேசாது விலகி நின்று கனவுகளிலும் கற்பனைகளி லும் மிதந்த அரங்கப் போக்கிளை மறுதலித்துவிட்டு கலை வாழ்வில் இருந்து அந்நியப்பட்டு போகாது வாழ்வினை பிரதிபலிக்க முயன்றது. இவ்வகையில் உடைந்துபோன சமூ சுத்தினையும் சிதைந்துபோன மனங் களினையும் அரங்கு பேச முனைந் தது. எனவே மனிதனது வாழ்லினை யும் மனத்துயரினையும் பிரதிபலிக்க வேண்டுமெனின் பழைய வரன் முறையான அரங்கப் போக்குடைய பண்பாட்டில் இருந்து புதிய சிருஷ்டியினை உடைய பண்பாட் டினைப் படைக்க அரங்கவியலாளர் கள் முயன்றனர். இதன் வெளிப்பா டாக 'அபத்த நாடகங்கள் தோற்றம் பெற்றன. ஆயினும் இதன் பின்னணி யில் பிற்காலத்தில் ஏற்பட்ட அரங்க வடிவங்களிலே முழுமையான பரீட் சார்த்த பண்புகளினைக் கண்டு கொள்ளலாம். 

இவை புதியன புனைதலை தமது கோட்பாடாக வரித்துக் கொண்டு செயற்பட்டும்இ செயற்பட்டுக் கொண்டும் இருக்கின் றன.

பெட்டோல் பிறெஃக்ட்இறிச்சாட் செக்னர்இ குறொட்டோ வஸ்கிஇ ஆர்ட்டாவூட்இ பீற்றர்புறூக்இ ஒளகுஸ் தோ போல் என நீண்டுசெல் லும் இவ்வரங்கவியலாளர்களின் பட்டி யல். இதிலே ஒவ்வொருவரும் 1 ங் அரங் கின் அச்சாணி அம்சங்களினை பயன் படுத்தி சமூக மாறுதலுக்கான அரங்கினை பயன்படுத்துவதில்தனயா ஈடுபடுத்திக் கொண்டனர். இதில் மராத்த விடயங்கள் உள்ள டக்கப்பட்டு சமூகத்திற்கானதும் அங்கிலே பார்ப்போன் பங்காளியா கவேண்டும் எனவும்இ ஆற்றுவோன் பார்ப்போன் இடை வெளி தகர்க்கப் பட வேண்டும் என்ற கருத்து வெறி யுடனும் செயற்பட்டனர் அரங்கில்! 'வெளி பற்றிய பிரக்ஸஞபூர்வமான சிந்தனை ரீதியான சொல்லாடல் இவர்களினால் இயங்கியல் தளத்தில் செயற்படுத்தப்பட்டது

சூழலியல் அரங்கில் றிச் சாட்செக்னர் முதன் மையானவராக காணப்படுகின்றார். நாடகபாடத் தினை இவர் ஆற்றுகைக்கானதாக இருக்க வேண்டுமே தவிரஇ அதுபுனித மானது என்ற கருத்துநிலையிலிருந்து மாறுபட வேண்டும் எனக் குறிப்பிடு கின்றார்.

இப் பரீட்சார்த்த அரங்கு களில் பார்ப்போர்இ ஆற்றுவோர் என்ற பிரிப்பு வெளிகாணப்படுவ தில்லை. அவ்வரங்கில் நடைபெறு வது உண்மையானதாக கொள்ளப் படுகின்றது. பொய்மை உடைக்க பட்டு மெய்மையினை புதிய வெளி களில் உருவமைக்கப்பட்டு அரங்க நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. பழைய அரங்கில் ஆற்றுவோர் பார்ப்போர் என்ற பிரிப்பு வெளியு டன் இயங்கிய நிலையினை அவதா னிக்கக் கூடியதாக உள்ளது.


இவ் இணைவுகள் புதிய நெறிமுறைக்கு உதவுகின்றது. சான்றாக

'பரிசோதனைகள் மூலமே புதிய நெறிகளை உருவாக்கலாம். புதிய நெறிகள் சூனியத்தில் உருவாவனவல்ல''4

அக்கால சூழ்நிலைகளும் வாய்லியல் முறைகளுமே புதிய நெறிகளினை உருவாக்கும். இன் வகையிலே சமுதாயமாறுதல்கள் இம் மாற்றத்தினை வரவேற்று புதிய மாறுதல்களுக்கும் புரிய இந்தனைகளுக்கும் உரமேற்றும் போது புதிய அரங்கியல்கள் முகிழ்ந் தெழும். சான்றாக பிரெக்ஷடின் கருத்து பின்வருமாறு

'வாழ்க்கை மாற்றமடைத்து கொண்டேயிருக்கிறது. வாழ்க்கையச் இத்திரிப்பதற்கு அதன் சித்தரிப்பு முறையும் மாற்றப்பட வேண்டும்''5

 சமூகம்மாறுகையில் அரங்கு தனது வடிவத்திலும் வெளிப் பாட்டுத்தளத்திலும் மாறுதல்களி னைக் கொண்டு இயங்கவேண்டிய தேவை உருவாகுகின்றது. இத்தே வையைக் கருத்திற்கொண்டு செய லாற்றுவது அரங்கினதும் அதனை இயக்குகின்ற அரங்கியலாளர்கள். தும் பொறுப்பாகும். இதற்குச் சான் றாக பேரா. சி. மௌனகுருவின் பின் வரும் கூற்று குறிப்பிடத்தக்கது

'இத்தகைய பரிசோதனை நாடகங்களை நான் நாடகம் என்று அழைப்பதை விடஇ அரங்க நிகழ் வுகள் என்றே குறிப்பிடுவேன். அரங்கு (வுhநயவசந) என்பதன் அர்த்தம் விசாலமானது.....! 6

எனவே பரீட்சார்த்த அரங் கானது தனது இயங்கியல் தளத்திலே எப்போதும் மாறுதல்களினை மேற் கொண்டு நகர்ந்து செல்வதுடன் புதிய கண்டுபிடிப்புக்களினை மேற் கொண்டு எப்போதும் புதிய சிந்த னையுடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றது இவ்வரங்கில் பார்ப்போர் முதன்மையான பங்காளராகின்றனர். இவர்கள் விமர்சன ரீதியான கருத்துறவுடன் காணப்படுகின்றனர்.

'அரங்கு பரிசோதனை முயற்சியாகக் கூர்மை அடையத் அங்கு தொடங்கும்போது நாடகம் பற்றிய கணிப்பினை பெற்றுக்கொள்வதற்கு இப்பார்வையாளர்களிலேயே தங்கி யிருந்தது. அரங்கின் பரிசோதனை முயற்சிகள் அரங்கினை ஒரு கலை வெளிப்பாடு என்ற நிலையிலும் அரங்க நடவடிக்கையாகவும் (வுhநயவசந யுஉவiஎவைநைள) இரு பரிமாணங்களில் செயற்படுத்தியது.....'7

இவ்வகையில் இப்பரீட் சார்த்த அரங்குகளின் நோக்கமாக ஏலவே அரங்கிற்கு என இருந்த வரன் முறைகளினை தகர்த்தெறிந்து வௌ;வேறு வேறு மூலகங்களினை பயன்படுத்தி அதன் தாக்கம்இ அதன் வலிமை என்பவற்றின் மூலம் புதிது புதிதான செயற்பாடுகளிற்கும் புதிய புதிய வெளிகளினை கண்டு பிடித்தும் அவ்வெளிகளிலே ஊடாடி புதிய சிந்தனையியலுடன் புதிய அரங்குக ளினை சிருஷ்டிப்பதற்கான சாத்தி யங்களினை வரித்துகொண்டு பரீட் சார்த்த அரங்குகள் இயங்கியல் தளத்திலே இயங்குகின்றன.

இவ்வகையிலே பரீட்சார்த்த அரங்குகள் எங்கு தோன்றுகின்றது என்பதற்கு பின்வரும் சான்று பொருத்தமாக அமையும்.


'கலைஞர்களும்இ பார்வை யாளர்களும் சந்திக்கும் இடத்தில் அரங்கு தோன்ற ஆரம்பிக்கும். கலைஞர்களும் பார்வையாளர்களும்

சேர்ந்து புதிதளித்தல் மூலம் இன் வரங்கை வளர்த்துச் செல்வர். சிலவே ளைகளில் பார்வையாளர்களுக்கு அங்கு நடைபெறுவது அரங்கு என்பது தெரியாமலே அதில் கலந்து கொள்வதும் உண்டு. முடிவில்தான் நடைபெற்றது அரங்கு என்பது அவர்களுக்குப் புரியும். இத்தகைய நிலை. பார்வையாளர் கள் தடையேதும் இன்றி தாமாகவே முன்வந்து அரங்க நிகழ்வில் ஈடுபட. அதை வழிநடத்த வழி வகுக்கும்.

நடத்தப்படுவது அரங்கென்று தெரிந் திருந்துஇ ஆற்றுபவர்களால் பார்வை யாளர்களைப் பங்குபற்ற வருமாறு அழைக்கப்படுகின்றபோதுஇ பார்வை யாளர்களுக்கு இருக்கக்கூடிய தயக் கம் இங்கு இருக்காது. இவ்வாறு பார் வையாளர்கள் தாமாகவே முன்வந்து அரங்க நிகழ்ச்சியில் பங்கு பற்றக் கூடியதாக நாம் அரங்க வடிவங்களை உருவாக்க முயலவேண்டும்.'8


பார்ப்போனை பங்கு கொள் ளவைத்து அதன் மூலம் சமூக மாற்றத்திற்கானதாகவும் அவன் தனது சுயத்தினை தேடிக்கண்டு கொள்வ தற்குமான முனைப்புடன் செயல்ப டச் செய்கின்றது. இவ்வகையில் கால மாறுதல்களுக்கும் சூழமைவுகளுக் கும் ஏற்ப தன்னை புடம்போட்டு புதிது புதிதாக தன்னை வெளிப் படுத்த முனைகின்றது. இவ்அரங்கில் ஒவ்வொரு ஆற்றுகையும் புதியனவா கவே வடிவமைக்கப்படுகின்றன. நடிகன் உடல்இ மனம்இ குரல் எனும் மூன்று அம்சத்தினையும் இயலுமான வரை வெளிப்படுத்தி பார்ப்போரை பங்குகொள்ள வைப்பதற்கான செயற்பாடுகளினை முன்னெடுத்துசெல்கின்றான். எழுத்துரு என்பது ஆற்றுகைக்கான ஒன்றாக தயார்ப் டுத்தப்படுகின்றது. உண்மையினை உணர்தல்இ உண்மையின் மூலம் வெளிப்படுகைகளுக்கான களங்க ரினை முகிழ்த்தெழச் செய்தல் என்பனவே இவ்வரங்கில் முக்கிய நோக்கமாக காணப்படுகின்றது... சமூக மாறுதலின் சோதனைச்சாலை யாகவும் நாடகம் விளங்கவேண்டும்' என்று மீண்டும் மீண்டும் வலியுறுத் தினார் பிரெஃக்ட்''9

சமூகத்தினை சோதித்து பார்த்து இறுகிப்போன சமூகத்தில் உள்ள ஒருவனை வெளிப்படுத்த வைக்க முயல்வதும் இவ்வரங்கின் நோக்கமாகக் காணப்படுகின்றது. 'பரிசோதனைச்சாலைஒன்றினுள் ஒரு விஞ்ஞானி . இரசாயன மூலகங்களையும் கலந்து புதிய கண்டுபிடிப்புக்களைக் காண்ட பதுபோல நாடகக் கலைஞர்களும். பல்வேறு கற்பனைகளையும் கலந்து புதுப்புது வடிவங்களைக் கண்டுபி டிக்க ஒரு நாடகப் சாலை அவசியம். மேற்கு நாடுகளில் சில அரங்கக் குழுக்கள் (வுhநயவசந பசழரிள) ஆய்வுஇ அறிவு ரீதியாக ஆற்றுகின்றன.....10


இவ்வகையில் நோக்குகின் றபோது இவ்வரங்கு சமூக மாறு தலுக்காக தன் வடிவில் மாறுதல் களோடும் புதிய கருத்தியல் தளத்து டனும் பார்ப்போர் ஆற்றுவோர் என்ற பிரிப்பினை தகர்த்தும் செயற்பட்டுச் செல்கின்றது எனலாம்.

அடிக்குறிப்புக்கள்

01. சிதம்பரநாதன்இக. (1994) சமூக மாற்றத்துக்கான அரங்குஇ சென்னைஇ தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ்இ பக்: 49

02.மே.கு. நூ. பக் 75

03. En wikipedia org wiki/ Experimental Theatre Definition

04.மௌனகுருஇசி.(1987) மௌனகுருவின் மூன்று நாடகங்கள்இ திருநெல்வேலிஇ நாடக அரங்கக் கல்லூரி (என்னுரை) பக். xv

05. பாலச்சந்திரன்இ எஸ். (1997) அரங்கின் பரிமாணங்கள் (நாடகக் கட்டுரைத் தொகுப்பு) தொகுப்பாளர் தெ. மதுசூதனன்இ ச.ஜீவாகரன், இராஜகிரிய, 'விபவி' மாற்றுக் கலாசார மையம். பக். 130.

06. மௌனகுரு. சி. (1987) மௌனகுருவின் மூன்று நாடகங்கள்இ திருநெல்வேலிஇ நாடா அரங்கக்கல்லூரி (என்னுரை) பக். xv

07. நவதர்ஷினி.ந 'ஆற்றுகை ' சிறப்பிதழ் (1997-1998)இ நாடகப் பயிலகம், திருமறைக்

கலாமன்றம், யாழ்ப்பாணம். பக். 7 

08. சிதம்பரநாதன்இ க. (1994) சமூக மாற்றத்துகான அரங்கு, சென்னை, கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ். பக். 129

09. பாலச்சந்திரன்இ எஸ். (1997) அரங்கின் பரிமாணங்கள் (நாடகக் கட்டுரைத் தொகுப்பு) 14 தொகுப்பாளர் தெ. மதுசூதனன்இ ச. ஜீவாகரன், இராஜகிரிய, 'விபவி' மாற்றுக் கலாசார மையம். பக். 123

10.மௌனகுரு. சி. (1987)