என்னைப் பற்றி

வியாழன், ஜூலை 18, 2013

                    அஞ்சலி 


டி. எஸ். ரங்கராஜன்
என்றழைக்கப்படும் கவிஞர்
வாலி இன்று வியாழக்கிழமை காலமானார்.
திருவரங்கத்தில் 1931 ஆம்ஆண்டு ஒக்டோபர் 29 ஆம்திகதி பிறந்த வாலி தனது 82
ஆவது வயதில்சென்னையில் காலமானார்..
கடந்த ஜுன் 8 ஆம்திகதியன்று வசந்தபாலனின்
தெருக்கூத்து படத்திற்காகஏ.ஆர்.ரகுமான் இசையில்பாடல்எழுதிக்கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர்
அன்றிரவே உடல்நலக்குறைவால்சென்னை தனியார்மருத்துவமனையில்
சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட், கிருஷ்ண விஜயம்' போன்றகவிதைத்தொகுப்புகள் புகழ்
பெற்றவையாகும்.10000 க்கும் மேற்பட்டபாடல்களைதிரைப்படங்களுக்கு வாலி எழுதியுள்ளார்.

இவர் திரைப்படங்களிலும்
நடித்துள்ளார்.'ஹேராம்'
'பார்த்தாலே பரவசம்'
மற்றும் 'பொய்க்கால்
குதிரை' ஆகியவை அவர்
நடித்த திரைப்படங்களுள்
குறிப்பிடத்தக்கவை.தன் நண்பர்களின்துணையுடன் 'நேதாஜி'என்னும்கையெழுத்துப்பத்திரிக்கையைத் அவர்ஆரம்பித்தார். அதன்முதல்பிரதியை எழுத்தாளரான
'கல்கியே' வெளியிட்டார்.அன்று திருச்சி வானொலி நிலைய
அதிகாரி பார்த்தசாரதி அவர்களும்வந்திருந்ததால்
வானொலிக்கு கதைகள்நாடகங்கள் எழுதிக்கொடுக்கும்வாய்ப்பு வாலிக்குக்
கிடைத்தது.

திருவரங்கத்தில்வாலி நடத்திய அந்தக்கையெழுத்துப்பத்திரிக்கையில் பல
இளைஞர்கள் பங்கேற்றுக்கொண்டனர். அப்படிப்பங்கேற்று கொண்டவர்களில்ஒருவர் பின்னாளில்புகழ்பெற்ற எழுத்தாளரான
சுஜாதா' ஆவார்.

தமிழ் மேல் தீராதபற்று கொண்டிருந்தவாலிக்கு ஒவியத்திலும்ஆர்வம் மிகுந்திருந்தது.நன்றாகப் படம் வரையும்திறமையும் இருந்தது.அந்தக் காலகட்டத்தில்ஆனந்த விகடனில்ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த
மாலியைப் போலவே தானும்ஒரு ஓவியராக வேண்டும்என்ற எண்ணம்கொண்டிருந்தார்.

இவ்வாறான நிலையில்,அவருடைய பள்ளித் தோழன்பாபு,'மாலி'யைப்போலசிறந்த சித்திரக்காரனாகவரவேண்டும்என்று கூறி டி. எஸ்.ரங்கராஜனுக்கு 'வாலி'என்னும் பெயரைச்
சூட்டினார்.
இவர்,சிறுகதை,கவிதை,
உரைநடை என இருபதுக்கும்
மேற்பட்ட புத்தங்கள்
எழுதியுள்ளார்.
அவற்றுள்
'அம்மா',பொய்க்கால்குதிரைகள்','நிஜகோவிந்தம்', 'பாண்டவர்பூமி','கிருஷ்ண விஜயம்'மற்றும் 'அவதார புருஷன்'
ஆகியனகுறிப்பிடத்தக்கவையாகும்.
2007 ஆம் ஆண்டு பத்ம
ஸ்ரீ விருது வழங்கி கவிஞர்
வாலி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன்இ எங்கள் தங்கம்
(1970) இ இவர்கள்
வித்தியாசமானவர்கள்
(1979)இவருஷம் பதினாறு ,
அபூர்வ சகோதரர்கள் (1989),
கேளடி கண்மணி (1990) ,
தசாவதாரம் (2008) என
ஐந்து முறை சிறந்ததிரைப்படப்பாடலாசிரியருக்கான மாநில
அரசின் விருது பெற்றுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.



ஞாயிறு, ஜூலை 14, 2013

                         நாடகக்கலை பேனுகை அவசியம்.


இன்றைய பொழுதுகளில் நாடகம் என்பது வீழ்ச்சியடைந்து  செல்கின்ற கலைவடிவமாக காணப்படுகின்ற து என பலராலும் பகிரப்படுகின்ற கருத்தாக காணப்படுகின்ற து.
நபடகம் என்றால் என்ன என கருத்துநோ
 க்குவோமாயின் ஒரு சிறு குழு பெருங்குழு முன் நிகழ்த்திக்காட்டுவதாக குறிப்பிடுகின்றனர். அதாவது ஒருசெயலினைகுறிப்பிட்ட பர்வையாளர்கள் முன் நிகழ்த்திக்காட்டுவதினை குறிப்பிடுவதாகும்.

பர்ப்போர் ரசனையுள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில் நாடகப்படைப்பின் தரம் புதுமையானதாக வும் நவீனத்துவம் சார்ந்ததாகவும் வடிவமைக்கப்டக்கூடியதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

 பர்வையாளர்களினை ரசனை பூர்வமானவர்களாக தயார்ப்படுத்ததாவகையில் நல்ல படைப்புக்கள் உருவாதற்க்கான வாய்ப்பக்கள் இல்லை என்றேகூறமுடியும்.

 நவீனத்துவ சிந்தனைகளுடன் படைக்கப்படுகின்ற  படைப்புக்கள் புரிவதில்லை என ஒருசிலர்குறிப்பிடுகின்றமை ஒட்டு மொத்த படைப்புக்களினையும் பாதிக்கும். காரனம் என்ன வென்றால் புரியவில்லை அல்லது விளங்க வில்லை என க்குறிப்பிடுகின்றவர்கள் பெரும்பாலும் தம்மைபுத்திஜவீகளாக காட்டிக்கொள்பவர்களேயாகும்.


இத்கையவர்கள் இளையதலைமுறையினர் புத்தாக்க சிந்தனையுடன்கூடிய படைப்புக்களினை படைக்கின்ற போது அவற்றினை நிராகரிக்கின்ற போக்கினையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.


இதனால் பெரும்பாலான இளைய படைப்பாளிகள் தமது இயங்கியல் வெளிகளினை குறுக்கிக்கொள்வதினயும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இது நாடக கலையின் தொடரியல் செயற்ப்பாட்டிற்கான தடையாகவும் காணப்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதனால் பலரும் நாடகக்கலை வீழ்ச்சியடைந்து செல்கின்றதுஎனக்கூறத்தலைப்படுகின்றமையினையினை
நோக்கலாம்.

 பல துறைகளிலும் புத்தாக்க சிந்தனையுடனும் நவீன எண்ணக்கருத்துக்களினை உள்வாங்கியவகையில்  படைப்புக்கள் வருகின்ற போதும் நாடகத்தினை பொறுத்தவரையில் கல்வி முறையாக வளர்ந்து விட்ட போதிலும் பலர் கற்று வெளியேறி ஆக்கபூர்வமான செயற்ப்பாடுகளினை மேற்கொள்கின்றபோதும் பிற்போக்குத்தனமான சிலருடைய செயற்ப்பாடுகளினால் அற்ப்புதமான நாடகக்கலை  பாழ் நிலை நோக்கி   செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுகின்றமை தவிர்க்கவியலானதாகும்.

 தாம் நினைப்பதே சரி எனவும் மாற்றங்களினை ஏற்றுக்கொண்டு புதுமைகளினை ஏற்க்க மறுகின்றவர்களின் கைகளில் நாடகத்துறையானது சிக்கி சிரழிகின்றதோ எனும் ஜயம் எழுவதும் தவிர்கவியலானதாக காணப்படுகின்றது.

நாடகத்தினை பொறுத்தவரையில் பல உத்தி முறைகள், மேடைப்பயன்பாடு ,நடிகர்களது இயங்'கியல் பெறுமானம் ,என்பவற்றிக்கான செயல் வெளிகள் என்பன தனித்துவமானவகையிலும் ,புதுமையானதாகவும் உருவமைக்கப்ட்ட பின்னரும் இன்றும் பிற்போக்குத்தனமான செயற்ப்பாடுகளினை  அற்ப்புதமானது எனக்கொண்டாடும் சிலரினால் நாடகக்கலை வீழ்ச்சியடைகின்றது எனில் மறுக்கவியலாததும் தான்.

நாடகப்போட்டிகளில தரமான படைப்புக்களினை புறம் தள்ளி போட்டி நடத்துனர்கள் தாம் நினைத்த படைப்புக்களினை வெற்றிப்படைப்புக்களாக வெளிக்கொணர்தல் ஆரோக்கியமானதல்ல இத்தகைய நடைமுறைகள் நாடகக்கலையின்எழுநிலையின் செயற்ப்பாட்டினை ஜயம் கொள்ள வைக்கின்றது.
எது எப்படியே  நாடகக்கலையின் வீழ்சியினை தவிர்க வேண்டியதும் நாடகக்கலையின் உன்னத நிலையினை பறைசாற்றுவது;  சம்பந்தப'ப்பட்வர்களது தார்மீக பொறுப்பாகும்.

எஸ்.ரி.ஏ.கே
அரங்க பயிற்ச்சிப்பட்டறைகள் மாணவர்களிடையே ஒளிந்து கிடக்கின்ற ஆளுமைகளினை வெளிக்கொணர்வதற்கான களவெளிகளாக காணப்படுகின்றன.
அரங்க பயிற்சிபட்டறை மாணவர்களிற்கு குழு செயற்ப்பாட்டிற்கான பின் உந்துதல்களினை வெளிக்கொணர்கின்றன.
அரங்கு என்பது மக்களது வாழ்வியிலில் பிரிக்கமுடியாத ஓர் அம்சமாக விளங்குகின்றது. இது மக்களது வாழ்வியலில் மாறு பாடுகளினை ஏற்ப்படுத்தி கொள்வதில் தனக்கான செயல் தளத்தினை வெளிப்படுத்திக் கொள்கின்றது என்பது  எதார்த்தமாகும்.
களப்பயிற்ச்சிப்பட்டறையானது பங்கு பற்றுபவர்களிடையே உள மாறுபாடுகளினை ஏற்ப்படுத்துகின்றது. இதன் காரனமாக அரங்க களப்பயிற்ச்சிப்பட்டறைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமான ஓர் செயற்பாடாக கொள்ளப்படுகின்றது.

அரங்க செயற்பாடுகளில் பல் துறைச்செயற்பாடுகள் காணப்படுகின்றன.அரங்க செயற்பாடுகள் மூலம் மாணவர்களிடையே ஆளுமைசார் வெளிப்பாடுகளினை ஏற்ப்படுத்துவதுடன் அவர்களது செயற்பாட்டிற்கான பின்வெளிகள் தகவமைக்கப்படுகின்றன என்பது எதார்த்தமாகும்.

அரங்க களப்பயிற்ச்சிப்பட்டறை என்பது பங்கு பற்றபவர்களிடையே வித்தியாசமான மான உணர்வுகளினை ஏற்ப்படுத்துகின்றது.
அரங்க  களப்பயிற்ச் சிப்பட்டறை எனும் போது  அச் சொற்களின் பொதிந்துள்ள பொருள்களினை நோக்கும் போது அதன் முதன்மையினை அறியலாம். அரங்கு எனும் சொல்லானது குறித்த இடத்தினை குறித்து நிற்கின்றதுஅதாவது செயல் இயங்கியலுடன் கூடிய இடத்தினை குறிக்கின்றது.  

 களப்பயிற்ச்சிப்பட்டறை எனும் போது களம் என்பதும் இடத்தினை குறித்தாலும் அதன் பொருள் கொள்ளல் வேறாகின்றது குறிப்பாக அரங்கு எனும் சொல் குறிக்கின்ற இடம் என்பது வெளியினை குறித்து நிற்க்க  'களம்' எனும் சொல்லானது பங்கு பற்றுபவர்கள் தமது ஆளுமையினை வெளிப்படுத்துவதற்கும்  தம்மை இனங்கண்டு கொள்வதற்கும்  தமது இயலுமையினை அறிந்து கொள்வதற்கும் இயலாமையினை கண்டுனாந்து  தம்மை பலம் நோக்கிய பணனத்திற்கு தகவமைத்துக் கொள்வதற்க்குமான  செயற்பாட்டினை வெளிப்படுத்துவதாக அமைகின்'றது.


கொழும்பு றோயல் கல்லூரியில் தரம் 6 ,7 மாணவர்களிற்க்கான பயிற்ச்சிப்பட்டறை மேமாதம 4ம் 5ம் திகதிகளில் மேற்கொண்டமை வித்தியாசமான அநுபவமகவும்பல விடயங்களினை அறிந்து கொள்வதற்க்கான வாய்ப்பாகவும் அமைந்திருந்தது.


மாணவர்கள் தமது அநுபவ வெளிகளினை ஏற்ப்படுத்தி கொள்வதற்கும் தம்மை இனம்கண்டு தமது ஆளுமைகளினை மேலும் செப்பனிட்டுக்;கொள்வதற்குமான வாய்ப்பாக அமைந்திருந்தமையினை அவர்களது கருத்துக்களின் ஊடாக  அறிந்து  கொள்ளக்கூடியதாக இருந்தது.





                         நாடகவிழா             (S.T.Arul)

நாடகம் மக்களது வாழ்வியலில் வலிகளினை வெளிப்படுத்துவதுடன் அவர்களது  பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளினை தகவமைத்து கொள்வதிலும் முதன்மை பெறுகின்றது.
 நாடக  அளிக்கையானது பார்ப்போருடன் நேரடித்தொடர்புடையனவாக காணப்படுவதினால் உயிர்ப்பான கலைவடிவமாக  விளங்குகின்றது.

 நாடக செயற்பாடு மாணவர்களது ஆளுமை வெளிப்பாட்டிற்கான களவெளிளினை தகவமைக்கின்றன.இச்செயற்பாட்டில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்களிடையே தாக்கவண்மைரீதியான தொடர்பாடல் திறன் விருத்தியடைவதுடன் தலைமைத்துவப்பண்பு, குரூரம்அற்ற தன்மை ,
பிற்போக்கு அற்றமனவுனர்வு ,தன்னலமற்ற நலநோம்பல் என்பன  அதிகரிக்கும்.

இப்பகைப்புலத்தில் நோக்கும்' போது நாடகங்களுக்கான களவெளிகளினை பாடசாலைகள் வழங்கி வருவதினை காணலாம்.குறிப்பாக விழாக்கள் அவற்றிக்கான அடிப்படைகளாகின்றன.. ஆயினும் நாடகங்களிற்கென தனியொரு நாள் ஒதுக்கி விழா நடாத்தப்படுவதென்பது குறைவாக உள்ளது.

 அவற்றிக்கு மாறாக மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நாடகங்களுக்குகென தனியன வகையில் நீண்ட காலமாக விழா நடத்தப்பட்டு வருகின்றன.
பாடசாலையின் நிறுவுனர் தினத்தினை அடிப்படையாகக்கொண்ட வகையில் இருதினங்களாக விழாக்கள் முன்னைய காலத்தில் ஜீலை மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் நிகழ்த்தப்படுவதாக குறிப்பிடுகி;னறனர் ஆயினும் நாட்டில் ஏற்ப்பட்ட போர்காரணமாக தொடர்நிலையாக இயங்குவதற்கான வாய்ப்புக்கள் தவிர்க்கப்ட்ட நிலையிலும் நாடக விழாவானது செயற்ப்பட்டு வருகின்றமை சிறப்பிற்குரிதாகும்
இம்முறைஅதன் அறாத்தொடர்ச்சியாக இம்முறை 57 ஆவது நாடக விழா   நிகழ்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 நீண்ட காலத்திற்கு பின்பு நாடக விழாவானது  கடந்த ஆண்டு இரவுப்பொழுதில் நிகழ்த்ப்பட்டமை போன்று இம்முறையும் இராப்பொழுதொன்றில் இடம்பெற்றது.

இக்கல்லூரிக்கு நீண்ட கால கலைச்செழுமையுடன் கூடிய வரலாற்றுப்பாரம்பரியமும் கலைத்துறைக்கு செழுமையான பங்களிப்pபினை ஆற்றிய கலைஞர்களினை பிரசவித்த பெருமையும் உண்டு.
 அவ்வகையில் ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை எனப்போற்றப்படுகின்ற கலையரசு சொர்ணலிங்கம்  இலங்கை திரைப்படத்துறையில் சாதித்த சி.எஸ்.அருமைநாயகம்  வானொலி நாடகங்களில் சாதித்த மரிக்கார் இராமதாஸ் போன்ற பல கலைஞர்களினை வழங்கிய பெருமையுண்டு.

இப்பின்னனியில் நாடகவிழாவானது மாணவர்களின் கலைத்திறனினை வெளிக்கொணர வைப்பதினை நோக்காக கொண்டு செயற்ப்படுகின்றன. இதனடிப்படையில்  சம்பந்தர் ,சுந்தரர் ,மாணிக்கர் ,வாகீசர் எனும் நான்குஇல்லங்களுக்கிடையே போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன.

வாகீசர் இல்ல மாணவர்களது நடிப்பில்  மெல்லதமிழ் இனி  சம்பந்தர் இல்ல மாணவர்களின் நடிப்பில் பொம்மலாட்டம் மாணிக்கர் இல்ல மாணவர்களின் நடிப்பில் இழப்பதற்கல்ல சந்தரர் இல்ல மாணவர்களது நடிப்பில்  மானுடம் எங்கே? ஆகிய நான்கு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன.

போட்டியான வகையில் நாடக விழாவானது நிகழ்த்தப்படுகின்றதென்பதிற்க்கப்பால் காத்திரமான வகையிலான அரங்கப்பாரம்பரியத்தினை வளர்த்துச் செல்வதற்கான வகையில் விழா இடம் பெறுகின்றமை சிறப்பான விடயமாகும்.

    நான்கு இல்லத்தினை சேர்ந்த மாணவர்களும் ஒரே பாடசாலை சேர்ந்தவர்கள் எனினும்   அவர்களிடையே வெற்றி பெற வேண்டும் என்ற அவா மேலோங்கி காணப்படுவது தவிர்க்கவியலாது. ஆயினும் அவர்களிடையே பொறாமை உணர்வினை விடுத்து போட்டி மனோபவத்துடன் செயற்படுவதற்கு மாணவர்களினை வழிப்படுத்த வேண்டியது இல்லங்களின் பொறுப்பாசிரியர்களின் கடமையாகும்.

 நாடகப்போட்டியென்பது குதிரைப்பந்தயம் அல்ல மாறாக மாணவர்களிடையே ஒளிந்துள்ள கற்ப்பனா சக்தியி



னை வெளிக்கொணர்வதற்கும் தன்னை நம்பி இயங்குவதற்கான களவெளியினை ஏற்ப்டுத்திக் கொள்ளவதற்கான வாய்ப்பாகவும் அமையவேண்டும்.
 வெற்றி தோல்வி என்பது இயல்பானவிடயம் அவற்றினைவிட இயங்கியலுக்கூடாக கற்றுக்கொண்ட விடயத்தினை உய்த்துனர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்தி கொள்ளவதற்கான வாய்ப்பாகவும் அமையவேண்டும்.

 வெற்றி தோல்வி என்பது இயல்பானவிடயம் அவற்றினைவிட இயங்கியலுக்கூடாக கற்றுக்கொண்ட விடயத்தினை உய்த்துனர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்தி கொள்வது பொறுப்பானவர்களின் தலையாய கடமையாகும்.