என்னைப் பற்றி

சனி, செப்டம்பர் 13, 2014


(எஸ்.ரி.அருள்குமரன்)

முடிவிலியாக ஓடிக் கொண்டிருக்கும் காலம் தனக்கான ஆளுமைகளை வரலாற்றின் வழி உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.
காலத்தின் குரலாய் கலைஞனே காணப்படுகின்றான் சமூகத்திற்காய் தன்னை அர்பணிப்பதுடன் பிரதிபலன் பாராது செயல்பப்டகின்றான் தன்னுடைய படைப்புக்களின் மூலம் சமூகத்தினை பதிவு செய்து கொள்கின்றான்.
   மனிதன் மனிதனாக வாழ்வதில் பெருமிதம் கொள்கிற ஒரு அழகிய உலகமே அவன் கனவு. அந்த கனவு நனவாக அவன் தன் கலையின் மூலம் புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறான். மனிதமன இருளை, இருட்குகையினுள் அடைந்துகிடக்கும் மனவக்கிரங்களை தன் படைப்புகளில் ஆராய்ச்சி செய்கிறான். நாமே அறியாத நம் மனதின் அத்தனை மூலைமுடுக்குகளிலும் அவன் பயணிக்கிறான்.   கலையின் பொன்னொளியால் அன்பெனும் சுடரை ஏற்றுகிறான்.

இந்த பிரபஞ்சத்தை நேசிக்கும் கலைஞன் அதற்காகத் தன்னையே விலையாகக் nhகடுக்கின்றான்.
இக்தகைய கலைஞர்கள் காலத்தின் பிரசவிப்புக்களாக கொள்ள முடியும். இப்பின்னனியி; அற்ப்புதமான சினிமாக் கலைஞனான பாலு மகேந்திராவை இந்த உலகம் இழந்துவிட்டது.

ஈழத்திலே பிறந்து இந்திய சினிமாவில் சாதித்து இந்திய சினிமாவில் உலகததரம் வாய்ந்த படைப்புக்களினை படைத்து சினிமா என்பது காண்பிய ஊடகம் என்பதினை கலைத்துவமான வகையில் தனது படைப்புக்களின் மூலம் வெளிப்படுத்திய அற்புதமான கலைஞனை கலை உலகம் இழந்து விட்டது.

தமிழில் சினிமா மொழியை புரிந்து கொண்டு, அதுவரை காலம் ஒளிப்பதிவு என்பதும் சினிமா மொழியின் ஒரு முக்கியமான கூறு என்பது கவனம் செலுத்தப்படாத சூழலில் அதை பற்றி  புரிந்து தமிழ் சினிமாவின் வளர்ச்சிப் போக்கில் கேமராவால் கதை மட்டுமல்ல உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் சொல்ல முடியும் என்பதை நிருபித்த கலைஞான இவர் விளங்குகின்றார்.

இவரது இழப்பு சினிமாவுக்கு பெரும் இழப்புதான்.
பாலு மகேந்திரா    இந்தியத் திரைப்பட இயக்குனர் ,  ஒளிப்பதிவாளர், எடிட்டர், நடிகர் என்று பண்முகம் கொண்டவர்.
சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களை படைத்தவர்.

1939 மே 19 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர்.

லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தஇவர். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்று 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.

படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் ஈர்க்கப்பட்டார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. 1971ல் மலையாள படமான 'நெல்லுவில் ஒளிப்பதிவளராக பணியை துவக்கினார்.

இப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை கேரள அரசு வழங்கியது. 1976 வரை பல மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் 1977ல் கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம், இயக்குனராக உருவாகினார். இப்பஇப்படத்துக்காக, 'சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றார்.

தமிழில் இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம், முள்ளும் மலரும். 1979ல் இவர் இயக்கிய முதல் தமிழ் படம் 'அழியாத கோலங்கள் ஆகும்.
ஒளிப்பதிவு செய்யும் போது, இயற்கையில் என்ன வெளிச்சம் இருக்கிறதோ அதையே பயன்படுத்துவது இவரது சிறப்பம்சம்.இத்தகைய பாணி இவரது படங்களிற்கு பலம் சேர்ப்பாதாக அமைகின்றது.

ஐந்து முறை தேசிய விருதுகளினை தான் ஆற்றிய பணிகளுக்காக பெற்றுள்ளாh  கோகிலா,   மூன்றாம் பிறை,   வீடு,   சந்திய ராகம்,   வண்ண வண்ண பூக்கள் இயக்குனர், திரைக்கதை, ஒளிப்பதிவாளர் ஆகிய அனைத்து துறைக்கும் விருது வாங்கியவர் இவர் ஒருவரே.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன.
மூன்று முறை பிலிம்பேர் விருது, கன்னட மாநில விருது, இருமுறை கேரள மாநில விருது, இருமுறை நந்தி விருது பெற்றவர்.

 இவர்  இயக்கிய படங்களாக கோகிலா,அழியாத கோலங்கள்,மூடுபனி,மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்),ஓலங்கள் (மலையாளம்),நீரக்ஷ்னா (தெலுங்கு),சத்மா (ஹிந்தி),ஊமை குயில்,மூன்றாம் பிறை,நீங்கள் கேட்டவை,உன் கண்ணில் நீர் வழிந்தால்,யாத்ரா,ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு),இரட்டை வால் குருவி,வீடு,சந்தியாராகம்,வண்ண வண்ண பூக்கள்,பூந்தேன் அருவி சுவன்னு,சக்ர வியூகம்,மறுபடியும்,சதி லீலாவதி,அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி),ராமன் அப்துல்லா,ஜூலி கணபதி,அது ஒரு கனாக்காலம்,தலைமுறைகள் போன்ற படங்களை இயக்கியுள்ளார்
.
நன்றி யாழ்.தினக்குரல்

































சனி, ஆகஸ்ட் 23, 2014


 (எஸ்.ரி.அருள்குமரன்)

  வாழ்வியலில் முதன்மையான சடங்கு


சடங்கு மக்களது வாழ்வியலில் முதன்மையான அமிசமாக விளங்குகின்றது. ஆதிகால மனிதன் தொட்டு நாகரிகம் அடைந்த மனிதன் வரை சடங்கியல் சார் செயற்ப்பாடுகள் காத்திரமானவையாக விளங்குகின்றன.
 சடங்குகள் மனிதர்களினை ஒழங்குபடுத்துவதற்கும் மனதிலே தெளிவுநிலையினை ஏற்ப்படுத்துவதற்கும் துணைசெய்கின்றன.
சடங்குகள் மனிதர்களது வாழ்வில் மூன்று நிலைகளில் முதன்மை பெறுகின்றன. அதாவது பிறப்பு ,பாரயமடைதல், இறப்பு ஆகிய நிலைகளில் முதன்மை பெறுகின்றன.

எனினும் மனிதர்களது வாழ்வியலோடு தொடர்புடைய வகையில் இச் சடங்கு  முறைகள் செல்வாக்கு செலுத்துகின்ற அதே வேளை ஆண்மிகம் சார்ந்த வகையில் கோயில்களது வழிபாட்டுடன் சடங்குகள் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தன
.
 கோயில்களில் பூசாரிகள் வழிபாடுகளினை மேற்கொள்கின்ற போது மக்கள் பயபக்தியுடன் பங்குபற்றினர். காலப்போக்கில் சடங்கு முறைகள் வழக்கொழிந்து செல்கின்ற போதிலும் சில ஊர்களில் இன்றும் வழக்கொழிந்து போகாமல் கோயில்களில் இடம்பெற்று வருகின்றன
.
 கோயில் சடங்குகள் மக்களது உள விடுதலைக்கான வடிகாலாகவும் அவர்களை பிரச்சினைகளில் இருந்து விடுவித்து வாழ்வில் நம்பிக்கை கொள்வதற்கான வழிமுறைகளினை ஏற்ப்படுத்துவதினையும் அடிப்படையாகக்கொண்டு இச்சடங்குகள் விளங்குகின்றன.
சடங்கு நிலைகளில் உருவேறி ஆடுதல் மூலம்     மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே நெருக்கமான ஆண்மீகரீதியிலான தொடர்பு நிலை ஏற்ப்படுத்தப்படவதன் மூலம் மக்கள் தமதுபிரச்சினை களினை தீர்த்து கொள்வதற்கான வாய்ப்பாக உள்ளது
.
இப்பின்னனயில் மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தில் நிண்ட காலமாக இச்சடங்க நிகழ்வகள் இடம் பெற்ற வருகின்றன.
 இச்சடங்கு நிகழ்வானது அப்பிரதேச மக்கள் ஒண்று கூடுவதற்கும் அதே வேளை பிற பிரதேசத்தவர்கள் இணைந்து கொள்வதற்குமான வாய்பு உருவாக்கப்படுகின்றது
.
வரலாற்றுச்சிறப்பு மிக்க தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையினைக் கொண்ட பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்ற மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழா பெரிய தம்பிரான் ஆலய பிரதம பூசகர் பெரியதம்பி பூசகர் தலைமையில்  அண.மையில் இடம்பெற்றது.
 
   பொங்கல் பெருவிழா நிகழ்வினை முன்னிட்டு முதல் நாள் கோயில் வீதி மல்லாகத்தில் அமைந்துள்ள சாடி மனை ஆலயத்தில் அதிகாலை வேளை பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மதியம் விசேட பூசைகள் இடம்பெற்று அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மாலை வேளை சாடி மனையில் விசேட பூசைகள் இடம்பெற்று பொங்கல் பொருட்கள் ஊர்வலமாக  கே.கே.எஸ். வீதியூடாக மல்லாகம் சந்தியினை அடைந்து நரியிட்டான் ஊடாக பிரதான ஆலயத்தை சென்றடைந்து விசேட பூசைகள் இடம்பெற்றது. மறுநாள்     அதிகாலை பூசை வழிபாடுகளைத் தொடந்து வழுந்து பானை வைக்கப்பட்டு பொங்கல் இடம் பெறும்.

மதியம் விசேட அபிஷேக ஆராதனைகள் பூசைகள் இடம்பெற்று பொங்கல் விழா விசேட பூசைகள் இடம் பெற்று தீமிதித்தல் சடங்கும் இடம் பெற்றது.
தமிழர் தம் பாரம்பரியங்களில் ஒன்றாக விளங்குகின்ற சடங்குடன் இணைந்ததான வழிபாட்டு முறையானது இன்றும் இங்க சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன
.
மனிதர்கள் தனிமனிதாகளாக அல்லாமல் சமூக செயல் நிலை உடையவர்களாக உரவாவதற்க இது வாய்ப்பாகின்றது. சடங்கு முறைமையில் பத்ததி முறையிலான சடங்க முறை ஒவ்வொரு சமூகத்தினரும் தமக்குரிய வகையில் சிறப்பாக மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றமையினை அவதானிக்க கூடியதாக உள்ளது
.
 இச்செயற்பாடு அச்சமூகத்தினரது தனித்துவ செயற்ப்பாட்டிற்கும் சமூகத்தின் பொறி முறைச்செயற்ப்பாட்டிற்கும் அடிப்படையாக அமைகின்றது.
பத்ததிச்சடங்குகளும் அவை வெளிப்படுத்துகின்ற முறைகளும் சமூக பண்பாட்டிற்கு ஏற்ப்ப தனித்துவமானவையாக விளங்ககின்றன.
பத்ததிச்சடங்ககள் சமூகத்தில் முதன்மை பெறுவதற்கான காரனமாக நோக்குகின்றபோது உள ஆற்றுப்படுத்தலின் ஓர் அம்சமாக நோக்கலாம் காரணம் கடங்காடி தனது சன்னத நிலையில் பக்தர்களுடன் கடவுளாக தொடர்பு படுகின்ற போது அவர்களுக்கான எதிர்கால நம்பிக்கைக்கான ஆற்றுப்படுத்தலாக செயற்ப்படுவதினை சடங்கு நிலைகளில் அவதானிக்க கூடியதாக உள்ளது
.
 மேலும் சடங்கு நிலைகளின் உடாக மூத்த தலைமுறையினரிடம் இருந்து இளைய தலைமுறையினர் அறிவு பூர்வமான கருத்து நிலைகளினை உள்வாங்கி கொள்வதற்கான பயில் நிலை ரீதியிலான செயல் முறையாக காணப்படுகின்றன
.
இச்சடங்கு நிகழ்வில் முக்கியமானதாக விளங்குகின்ற தீ மிதித்தல் சடங்கானது அம்மக்ளது வாழ்வியல் முறையில் நம்பிக்கையினை கொண்டு வருவதற்கான நிகழவாக காணப்படுகின்றது. தீமிப்பதற்க முன்னர் தீயினை ஆத்துதல் எனும் செயற்பாடு காணப்படுகின்றது. அதாவது தீயினை கட்டுதல் எனக்குறிப்பிடுகின்றனர். தியினை கட்டுதல் எனும் போது சாதரனமாக கட்ட முடியாது சடங்'காடி தனது சன்னத நிலையின் உச்ச நிலையிலேயே கட்ட முடியும் அதன் பின்னர் தான் தீயிலே இறங்கிய பின்னர் பக்தர்களினை தீயிலே இறங்குவதற்கான செயற்ப்பாட்டினை மேற்க்கொள்வார். இம் முறை கூட உள ஆற்றுப்படுத்தலின் அம்சமாகவே றோக்க முடியும். இது நேர்த்pக்கடன் மற்றும் இச்செயற்பாட்டினை மேற்க்கொண்டால நன்மை கிடைக்கும் போன்ற பல விடயங்களினை குறிப்பிடலாம்
.
கலைகளின் பிறப்பியலுக்கு குறிப்பாக அரங்க கலைகளின் பிறப்பியலுக்கு காரனமாக இருந்த சடங்கு நிலைப்பயில்வுகளின் உச்ச நிலையினை இச்சடங்ககளின் ஊடாக தரிசித்து கொள்ள கூடியதாக உள்ளது. அத்தடன் பாரம்பரியங்களின உயிர்ப்பினையும் சமூக கூட்டினைப்பு சார்ந்த செயல்நிலையினையும் இச்சடங்கு வெளிகளின் ஊடாக கண்டு கொள்ள
 முடிகின்றது.


(எஸ்.ரி.அருள்குமரன்)

              


நாடகவிழா

 நாடகம் மக்களது வாழ்வில் உள்ள பிரச்சினைகளினை வெளிப்படுத்துவதுடன் பங்குபற்றுபவர்களிடையெ தள மாற்றத்தினை எற்ப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அரங்கிலே ஆற்றுகையாளர்களாக செயற்ப்படுகின்றபோது தாம் எதிர் கொள்கின்ற பிரச்சினைகளினை இனம் கண்டு அப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளினை தகவமைத்து கொள்வதிலும் முதன்மை பெறுவதுடன் அளிக்கையானது பார்ப்போருடன் நேரடித்தொடர்புடையனவாக காணப்படுவதினால் உயிர்ப்பான கலைவடிவமாகவும் விளங்குகின்றது.

இன்றும் அரங்கின் தேவை சமூகத்தில் உணரப்படவதற்கு அதன் தாக்கவன்மையான செயற்ப்பாடு இன்றியமையாதாகும்
 நாடக செயற்பாடு மாணவர்களது ஆளுமை வெளிப்பாட்டிற்கான களவெளிளினை தகவமைக்கின்றன.

அரங்காடலின் மூலம் மாணவர்களிடையே தொடர்பாடும் திறன் விருத்தியடைவதுடன் தலைமைத்துவப்பண்பு, எல்லோரையும் சமமாக ஏற்றுக்கொள்கின்ற மனநிலை குரூரம்அற்ற தன்மை,பிற்போக்கு அற்றமனவுனர்வு ,தன்னலமற்ற உணர்வு போன்ற பல விடயங்கள் இயல்பாகவே ஏற்ப்படுத்தப்படுகின்றன.

 நாடக செயற்ப்பாட்டிற்கான தளங்கள் விரிந்து காணப்படுகின்ற சூழ்நிலையில்  பாடசாலைகள் களவெளிகளினை  ஏற்ப்படுத்துகின்றன.

பாடசாலைகளில் இடம்பெறுகின்ற விழாக்கள் அவற்றிக்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்துகின்றன. ஆயினும் நாடகங்களிற்கென தனியொரு நாள் ஒதுக்கி விழா நடாத்தப்படுவதென்பது குறைவாக உள்ளது.
நாடகவிழாக்கள் மாணவர்களது பங்குபற்றலுக்கான களவெளிகளினை ஏற்ப்படுத்தி அவர்கள் சுய சிந்தனையள்ளவர்களாக புதியன படைப்பவர்களாக உருவாக்கும் நோக்கில் அவ்களிற்கான மனத்தடைகள் அகற்றப்பட்டு எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறவதற்கான புறச்சூழ்நிலைகள் உருவாக்கப்டவேண்டும் மேலும் அவர்கள் சுய படைப்பினை ஏற்ப்படுத்துவதற்கான கள வெளிகள் ஏற்ப்படுத்தப்டவேண்டும்.
  இப்பின்னயில் பாடசாலைகள் இல்லங்களிற்கு இடையே விளையாட்டு போட்டிகள் நிகழ்த்ப்படுவது போன்று நாடகப்போட்டிகள் நிகழ்த்தப்பட்டன.
 ஆயினும் காலப்போக்கில் அத்தகைய வழக்கொழிந்து போன சூழ்நிலையில் மானிப்பாய் இந்துக்கல்லூரியானது அறாத்தொடர்ச்சியுடன் இன்று வரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இக்கல்லூரிக்கு நீண்ட வரலாறு உண்டு.
கடந்த 3 ஆண்டுகளாக ஜீலை 3ம் திகதி இரவுப்பொழுதுகளில் நாடகப்போட்டிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

   மாணிக்கர் சம்பந்தர், சுந்தரார், வாகீசர் ஆகிய நான்கு இல்லங்களுக்கிடையே   போட்டிகள் நிகழ்த்படுகின்றன.
 இம்முறை அணைத்து இல்லங்களிற்கும் வசன நாடகங்கள் எனும் வகுதிக்கள் வருகின்ற அரச நாடகங்கள் நாடகங்கள் அதிபரின் எண்ணத்தின் அடிப்படையில் வல்லிபுரம் -ஏழுமலைப்பிள்ளையின் எழுத்துருவாக்கத்தில் படைக்கப்பட்ட நாடகங்கள் போட்டிக்கு கையளிக்கப்பட்டன.
 மாணிக்கர் இல்லத்திற்கு சங்கிலியன், சம்பந்தர் இல்லத்திற்கு மகுடபங்கம்,சுந்தரர் இல்லத்திற்கு அரிச்சந்திரன் கதை, வாகீசர் இல்லத்திற்கு கர்னன் ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன
.
இந்நாடக போட்டிகளில்; சங்கிலியன் நாடகம் எஸ்.ரி.குமரன், அரிச்சந்திரன் க.மணிவண்ணன்,மோகனதீபன் மகுடபங்கம் க.சந்திரகுமார், எஸ்.கே.விஜயபால கர்ணண் திருமதி தர்சிகா –ஜெயதீபன் ஆகியோர்  நெறியாழ்கையினை மேற்கொண்டிருந்தனர்.  நாடக போட்டிகளிற்க்கான  இணைப்பாளராக கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியர் த.அருள்குமரன் செயற்ப்பட்டார்
.
 இந் நான்கு நாடகங்களிலும் நூற்றிக்கு மேற்ப்ட்ட மாணவர்கள் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு விழாக்குழவினரால் எற்ப்படுத்தப்ட்டது சான்றாக ஆற்றுகையாளர்களிற்கான எண்ணிக்கை வரையறுக்கப்படாமை இதற்கான சூழ்நிலையினை ஏற்ப்படுத்தியது.
 இங்கு வெற்றி தோல்விகள் மாணவர்களிற்கு முக்கியமாக இல்லாதபோதிலும் ஆத்மிகமானதாகவும் மற்ற்றவர்கள் மீது குரூரமான  மனப்பான்மையினை வளர்க்காத வகையில் ஆற்றுகையாளர்கள் புடம் போட வேண்டியது அவசியமாகும்.

நாடகப்படைப்புக்கள் சமகாலத்தில் குறைந்து செல்கின்றது என கருத்தாடல்கள் முன்வைக்கின்ற பொழுதுகளில் இத்தகைய விழாக்களின் மூலம் நாடக செயற்ப்பாட்டிற்கான உயிப்பினை  வெளிக்கொண்டு வருதல் வரவேற்க்கத்தக்க விடயமாகும்.

புதன், ஜூன் 25, 2014


ஈழத்தமிழர்களது  நாடகவராற்றில் கூத்து

ஈழத்தமிழர்களது  நாடகவராற்றில் கூத்துக்களினது வராலாற்றிற்கும் அதன் இயங்கியல் பெறுமானத்திற்கும் கனதியான வகிபங்கு காணப்படுகின்றது.
அக்கலைப்படைப்பானது செழுமையானதாகவும் ஊர் கூடி ஆடுகின்ற வகையில் சமூகத்தின் உற்பத்தியாகவும் அம்மக்களது மண்;ணின் வாசனையாகவும் விளங்குகின்றது.

அவ்நெடியவரலாற்றின் பின் உள்ள வலிகளும் அக் கலைஞர்கள் கொண்டுள்;ள துன்ப துயரங்களும் அக்கலையினை அடுத்த தலைமுறைக்கு  கையளிப்பதில்   எதிர்நோக்ககின்ற இடர்பாடு வலியும் சொல்லிமாழாதவை.
அப்பகைப்புலத்தில் அக்கலைகளுக்கான பேனுகைகளும் அக்கலைஞர்களிற்கான கொளரவிப்புக்களும் மேற்க் கௌ;ளப்பட வேண்டியதுடன் அக்கலைகள்  அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலுடன்   பிற சமூகத்தவர்களிற்கும் வெளிப்படுத்தல் வேண்டும் என்பதில் கருசனை கொள்ளல் அவசியமனதொன்றாகும்.
 ஆயினும் அக்கருசனை வெறுமனே மையநிலைப்பட்டதாகவும்  நிறுவன ரீதியான செயல்நிலை எனும் போர்வையினுள் தனிமனித செயல் நிலைசார் செயற்பாடுகளிற்கான அங்கலாய்ப்பாகவும் கொள்ளல் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

யாழ்பான பல்கலைக்கழகமானது நாடக செயல் நிலைகளில் மிகவும் கனதியானதும் தாக்கவன்மை பொருந்தியதுமான  அரங்க செயற்ப்பாடுகளினை, தரமான நாடகங்களினை அரங்கு நிறைந்த பர்வையாளர்களிற்கு நிகழ்தி வரவேற்ப்பினை  பெற்றுக் கொண்டிருந்ததுடன் பர்வையாளர்களிற்கு மகிழ்வளிப்புடன் கருத்துக்களினை வெளிப்படுத்துவதினை நோக்கமாக கொண்டதுடன் அதற்குரிய  வெளிகளினை ஏற்ப்படுத்தியிருந்தது என்பது கடந்தகால வரலாற்று அநுபவங்களினை  நேர்பாட்டியல் சார் சிந்தனையுடன் எந்த விதமான விருப்பு  வெறுப்புக்களும் அற்ற நிலையில் அனுகுகின்ற வர்களினால் புரிந்து கொள்ள முடியும்.

இப்பின்னனியில் நோக்குகின்ற போது யாழ்பான பல்கலைக்ழகத்தில் நீண்ட நாட்களாக வெளிபார்வையாளர்களிற்கான நாடகங்களினை நாடகத்துறை வெளிப்படுத்தவில்லை என்கின்ற கருத்துநிலை காணப்படுகின்றது. அதற்கான காரனங்கள் என்ன என்பது தொடர்பான கருத்து நிலைகள் என்ன என்பது தொடர்hபாக சிந்திக்கப்டவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்ற நிலை  உள்ளது என்பது ஒருபக்கம் இருக்கும் போது அண்மையில் யாழ்பாண பல்கலைக்கழக நூன்கலைத்துறையினரின் எற்ப்பாட்டில் கைலாசபதி கலையரங்கில் மரபு வழி ஆற்றுகையான கூத்துவடிவமான  கோவலன் கண்ணகி கூத்து இடம்பெற்றது.

 நீண்டநாட்களின் பின்னர் அரங்கில் இடம்பெறப்போகும் ஆற்றுகையினை கண்டு களிக்க வேண்டும் கடந்த காலங்களில் இடமபெறுகின்ற படைப்புக்கள் போன்று கனதியானதாக அமையும்  எனும் விருப்புடன் சென்றவர்கள் மத்தியில் எஞ்சியது வெறுமையும் ஏமாற்றமும் ஆகும்.
இங்கு யாருடைய எற்ப்பாட்டில் இடம்பெற்றது என்பது கூட மிகப்பெரியவிடயமல்ல மாறாக இடம்பெற்ற வடிவத்தின் போக்கும் ஆற்றுகை தளமும் அது பார்வையாளர்களுடன் கொண்டிருந்த உறவு விரிசலும் சலிப்புத்தன்மையும் ஆற்றுகையின் தரத்தினை பார்ப்போரிற்கு கோடிட்டு காட்டியது.

பாடல்கள் ஏதோ புரியாத மொழியில் பாடுவதைப்போன்றும் ஆற்றுகையுடன் மொழிச்செழுமை ஒட்டுறவின்றி இருந்த ஒருசில பர்வையாளர்களிற்கும் தெளிவாக கேட்க முடியாதவை போன்று இருந்ததது.
பல்கலைக்கழகம் ஒழுங்கு செய்கின்ற போது ஒலி பற்றிய பிரக்ஞைஇன்றி  வெறுமனே இரண்டு ஒலிவாங்கிகளை முன் இரு மேடையில் வைக்கப்பட்டு ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது இது ஊர்களில் நாடகம் நிகழ்த்தப்படுகின்ற மனநிலைக்கு ஒப்பானதாக இருந்தது.
கூத்து என்பதே ஆடலும் பாடலும் இணைந்த வடிவமாகும்.  ஆடலும் பாடலும் நேர்த்தியான வகையில் வெளிப்படுத்தப்படுகின்றபோது தான் அவ்வாற்றுகை செழுமையானதாக தகவகை;கப்படும். மாறாக  இவ்வாற்றுகைளில் இரண்டும் வேறு வேறு தளங்களில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பண்புகள் மரபு நிலைப்படுத்தப்பட்ட ஆற்றுகையின் ஆதாரசுருதியான அமிசங்கள் ஆகும்.
மரபின் உயிர்பு அவசியம் என வலியுறுத்துகின்றவர்கள் மரபின் அழிவனை புடம் போட்டு காட்டுபவையான அற்றுகையினை வெளிப்படுத்தியவை பற்றி சிந்திக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்
எமது அடுத்த தலைமுறைக்கு எமது மரபு வழி கலைவடிவங்களினை அறிகை நிலையாக கையளிக்கப்டவேண்டியது காலத்தின் தேவையாகும் எனினும் கனதியானதும் தரமான கலைவடிவங்களினையும் கையளிக்க வேண்டியது அதைவிட அவசியமானதாகும்.
வெறுமனே தனிமனிதர்களது இருப்பிற்கும் தாம் நினைப்பதும் தாம் அறிந்ததும் தம்மோடு இணைந்தவர்களது செயற்ப்பாடுகள் மட்டுமே கலைகள் எனவும் அவை மட்டுமே கலை வரலாறுகள் எனவும் தம்பட்டம் அடிப்பதற்காக நிகழ்த்தப்படுகின்ற கலைகள் எதிர்கால தலைமுறைக்கான சுயவெளிகளினை உருவாக்குவதற்கு பதிலான சுயமுனைப்பற்ற  செயல் வெளிகளினை ஏற்ப்படுத்தும் என்பது தவிர்க்க முடியாத கசப்பான  உண்மையாகும்
அன்று நிகழ்தப்பட்ட ஆற்றுகையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள்  ஆற்றுகை ஆரம்பமாகியவுடன் வெளியேற ஆரம்பித்தவர்கள் ஆற்றுகை நிறைவடையும் நேரத்தில் கனிசமானவர்கள் வெளியேறிவிட்டார்கள்.
இது ஆற்றுகையின் தர நிர்னயத்தினை பறைசாற்றியது. அதிலும் பாடத்தினை கற்ப்பவர்களே  பெரும்பாலும் இலக்கு பார்வையாளர்களாக இருந்தபோதிலும் அப்பார்வையாளர்களது ரசனைக்கு கூட தீனி போட முடியாத ஆற்றுகைகள் தான் அற்ப்புதமான ஆற்றுகைகளாக எமது சமூகத்தில் மிளிரப்போகின்றனவா? எனும் ஐயுறு வினா எழுவது தவிர்க்கவியலாது.
 ஆற்றுகையில் பாத்திரங்களது வெளிப்பாடு ஏனைய பாத்திரங்களிற்கான ஒட்டுறவு பாத்திரங்களுடான இனைவு, முழுமைப்படுத்தப்பட்டதான அம்சங்கள் என்பன ஆற்றுகையில் போதுமானதாக இல்லை இவ்நிகழ்த்துகைகள் பார்போருக்கு சிரிப்பினை எற்ப்படுத்தியதே தவிர அவர்களினை படைப்புடன் இணைத்து செல்வதற்கான எந்தவொரு சூழமைவினையும் ஏற்ப்ப்டுத்தவில்லை இது ஆற்றுகையாளர்களது பலவீனத்தையே எடுத்து காட்டுகின்றது.
ஒரு சமூகத்தின் உயிரான வடிவம் இன்னொரு இடத்தில் நிகழ்த்தப்படுகின்றபோது அதன் உயிர்ப்பினை பார்க்கின்ற சமூகம் உய்த்துனர்ந்து கொள்ள வேண்டும் மாறாக இங்கு அதற்கு மாறாக வெறுப்பு மனநிலையே காணப்பட்டது.
கலைப்படைப்பு என்பது பார்போரிடையே கனதியான தாக்கவன்மையினை ஏற்ப்படுத்த வேண்டும் இல்லையேல் அதனை அற்ப்புதமான கலைப்படைப்பாக கொண்டாடுவதில் எந்தவிதமான அர்த்தங்களும் இல்லை. ஆனால் இன்று மிகப்பெரிய அவலம் அதிகாரத்தில் உள்ளவர்களினால் கருத்தியல் கட்டமைக்கப்படுகின்றமையாகும்.
இதன் பதிவின்  நோக்கம் கலையினையோ கலைப்படைப்பாளர்களினையோ விமர்சிப்பதல்ல மாறாக நல்லதொரு கலைப்படைப்பினை பார்ப்தற்கான சூழலினை உருவாக்கி கொள்வதற்கான வழிவகைகள் எற்ப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
அரங்க துறையில் ஈடுபடுபவர்களிற்கான அழைப்பு இருந்திருக்குமெனின் கூட அரங்கு நிறைந்த பார்வையாளரினை ஆற்றுகையில் கண்டு கொள்ள முடிந்திருக்கும்.
சமகாலத்தில் எத்தனையோ இளம் படைப்பாளிகள் நாடகத்துறையipனை கற்று வெளியேறிய மாணவர்கள் மற்றும் நிறுவனம் சார் செயற்பப்hட்டாளர்கள் என பலரும்எமது சமூகத்தில் ஆக்கபூர்வமான செயல்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். இத்தகையவர்களினையும் இணைத்துக்கொண்டு செல்வதே நாடகத்துறையின் செழுமையான அரங்க பாரம்பரியத்திற்கான வளர்ச்சிக்க வித்திடும் என்பது எதார்த்தமதாகும்.

வெள்ளி, ஜூன் 20, 2014


                                                           வேத்தியல்விருது




கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தினரால்  அகில இலங்கை ரீதியில் வருடார்ந்தம் நடத்தப்ட்டு வருகின்ற மாவட்ட மட்ட நாடப்போட்டிகளில் தனிநபர் திறன்கான்  போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவர்கள் இருபிரிவுகளிலும் முதல் இடத்தினை பெற்று வேத்தியல்விருதினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
 யாழ்ப்பாணம் மத்திய கல்லுரியின் தம்பர் மண்பத்தில்  இடம்பெற்ற போட்டியில் மத்திய பிரிவில் யே. சானுஜன் முதலாம் இடத்தினையும் மேற்ப்பிரிவில் உ.கரிஸ் முதல் இடத்தினையும் பெற்று வேத்தியல் விதினைப்பெற்றுக்கொhண்டார்கள்.இதே வேளை மத்திய பிரிவில் 3ம் இடத்தினை கலைக்சன் மேற்ப்பிரிவில் 3ம் இடத்தினை சி.சுஜீவ் ஆகியோர் பெபற்றுக்கொண்டதுடன் திறந்த பிரிவு குழுநாடகப்போட்டியில் மேடை முகாமைத்துத்திற்கான விருதினை கு.தவேன்சன் மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதினை உ.டிலக்ஸன் ஆகியோர் பெற்றுக்கொணடனர்

திங்கள், ஜூன் 09, 2014

                                       முதலாமிடம்


சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரியின் விஞ்ஞான விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட விஞ்ஞான கருப்பொருளை மையமாகக் கொண்ட நாடகப் போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் 'உயிர்வாழ' எனும் நாடகம் முதலாமிடத்தினைப்பெற்றுக்கொண்டுள்ளது..சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரியின் கந்தையா உபாத்தியர் மண்டபத்தில்  நடைபெற்ற மேற்படி போட்டியில்  மானிப்பாய் இந்துக்கல்லூரி அணி .முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டது.
இந்நாடகத்திற்கான எழத்துரு- நெறியாள்கையினை கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்க்கொண்டுள்ளார் ஆற்றுகையாளர்களாக சு.கலைக்சன்  யே.சானுஜன்  த.சதீஸ்குமார்  சி.சிவானுஜன்  த.டிபேர்டன்  தி.தனுஜன் சி.சிவானுஜன் யே.யதுசன் ஆகியோர் நடித்துள்ளார்கள். எழுத்துருவுக்கான  பாடல்களினை 
பா.ஜெயரூபன்  மேடை முகாமையாளராக  உ.கரிஸ்  ஆகியோர் செயற்பட்டுள்ளார்கள்

சனி, மே 31, 2014

 (எஸ்.ரி.அருள்குமரன்) 

  வாழ்வின் வலிகளினையும் சமூகத்தின் துயர்களினையும் வெளிப்படுத்தியது

நாடகம் மனித வாழ்வின் வலிகளினையும் சமூகத்தின் துயர்களினையும் வெளிப்படுத்துகின்ற கலைவடிவமாக காணப்படுகின்றது.
நாடகம் பல்பரிமானம் உடைய கலையாகும். மனிதர்களது உணர்வுகளினை பதிவுசெய்வதிலும்  மனிதனது வாழ்வியல் வலிகளினை வெளிப்படுத்துவதிலும் அவர்களிடையே  விழிப்புனர்வினை ஏற்ப்படுத்திசெல்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மனிதநாகரிக வளர்ச்சிக்காலகட்டம் முதல் இக்கலையின்  வகிபங்கு   காத்திரமானதாக காணப்படுகின்றது.
அரங்கு கதையாடல் வெளிகளினை சூழமைப்பதினை அடிப்படையாக்கொண்டு  இயங்கியல் வெளிகளினை தகவமைத்து கொள்கின்றன.
அரங்கின் பேசுபொருளில் சமூகத்தின் தேவை நிலை முதன்மையான்பங்காற்றுகின்றது என்பது எதார்த்தமாகும். அவ் எதார்த்தத்தினை பதிவுகளாக்க வேண்டும் எனும் தளத்தில் அரங்கவியலாளர்கள் இயங்குவதினை அவதாணிக்கலாம்
எவ் விடயத்தினையும் அவற்றில் காணப்படுகின்ற பிரச்சினைகளினையும் அறிவியல் பூர்வமகவும் யதார்த்த பூர்வமாகவும் பதிவு செய்ய முனைந்தனனர் அப்பகைப்புலத்தில் பிரச்சினைகள் என்ன அப்பிரச்சினைகளினை தீர்ப்பதற்கான வழிவகைகள் என்ன அத்தீர்வுகளின் ஊடாக சமூகவியல் பெறுமானத்தில் எத்தகைய மாறுதல்களினை  கொண்டுவரமுடியம் என்பன தொடர்பாக நாடகப்படைப்பாளிகள் சிந்தித்தனர்.அச்சிந்தனைப்பெறுமானம் சமூகவியலில் தாக்கத்தினை ஏற்படுத்தின.
சமூகம் காலம்மாற்றமடையும் பேது  அம்மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் அரங்க வடிவங்களும் தரநிர்ணயம் செய்யப்படுகின்றன. அத்தர நிர்ணயம் என்பதுஎத்தகையவற்றினை அரங்கிலே பேசமுனைகின்றோமோ அதனை அடிப்படையாகக்கொண்டே அவ்வடிவங்கள் நிர்ணயம் செய்யப்படும்.
நாடகங்களில் எவை முதன்மைப்டுத்தப்படுகி;ன்றனவோ அவற்றினை அடிப்படையாகக் கொண்டு  அவ்வடிவங்களில் நாடகங்கள் பேசப்படுவதுண்டு.
 இதனடிப்படையில் நாடகப் படைப்பொன்றினை கண்டு ரசிப்பதற்கும் மொழிகளினை தாண்டிய வகையில் உணர்வுகள் காத்திரமான வகிபங்கினi செலுத்துகின்றன.
உணர்வுகளின் ஊடாகவே கனதியான படைப்புக்கள்பிரசவிக்கப்படுகின்றன
 கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மசிற பண்டாரநாயக்காவின் நெறியாழ்கையில் உருவான தவல பீஸன நாடகம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நாடகம்இ உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான ஜீன் போல் சாத்தரின்இ 'ஆநn றiவாழரவ ளாயனழறள' என்னும் நாடகத்தின் சிங்கள மொழியாக்கமாகும்!
தர்மசிறி பண்டாரநாயக்க நாடக - திரைப்படத் துறைகளில் புகழ்பெற்ற சிங்களக் கலைஞர். அவர் நெறியாள்கைசெய்த 'ஹங்ச விலக்'இ'சுத்திலாகே கதாவ'இ துன்வெனி யாமய'இ 'பவதுக்க'இ 'பவகர்ம' ஆகிய திரைப்படங்கள் முக்கியமானவை. பலங்ஹற்றியோஇ ஹங்ச விலக் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனான அவரது நடிப்பும் மிகச் சிறப்பானது.
இவர்இ திரைப்பட விழாக்களையும் நாடகங்களையும் ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில் ஒழுங்குசெய்து நடத்தியிருக்கிறார்; அவைஇ சிறந்த கலைப் படைப்புகளை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பினை இங்குள்ள கலை ரசிகர்களுக்கு வாய்ப்பினை  ஏற்ப்படுத்தியது
இந்hடகம் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ் தோல்லவியடைந்ததன் பின்னர் ஹிட்லருடைய ஜேர்மன் ஆட்சிக்கு கீழ்பட்டதாக  இருந்த பிரான்ஸில் மார்ஷல் பிரேயின் ஆட்சியைப் பின்னியாகக் கொண்டு 1947 இல் இந்நாடகம் எழுதப்பட்டது. பிரான்ஸ் சுதந்திரமடையச்செய்யும் குறிக்கோளுடன் பிரான்ஸ் நாட்டுப்பற்றாளர்கள் குழுவொன்று பேரேயினுக்கும் ஜேர்மன்களுக்கும் எதிரான ஒரு கொரில்லாப் போராட்டத்தை மேற்கொண்டார்கள். ஷோன்போல் சாத்;றே இரண்டாம் உலகப்போர் காலகட்டத்து பிரான்ஸ் நாட்டின் சம்பவங்களையும் நிலைமைகளையும் பயன்படுத்திக் கொண்டே இந்த நாடகத்தை எழுதினார். இந்த நாடகமானது அவருடைய இருப்பியல்வாத தத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. இந்நாடகமானது அவருடைய நாடகப்பாணியில்  மிகவும் ஆழமான மனிதநேயத்தன்மையுடைய நாடகப்படைப்பாகும்.
இந்நாடகம் நான்கு காட்சிகளைக் கொண்டதாக உரவாக்கபட்டுள்ளது.  முதலாம் அங்கத்தில் ஹொன்றா கனோறிஸ் ஷோர்வியர் லூஸி மற்றும் லூஸியின்  இளம் சகோதரன் பிறாங்கொயிஸ்  ஒரு கொரில்லா இயக்கத்தின் அங்கத்தவர் என்று கைது செய்யப்படுகின்றார்கள்.  ஒவ்வொருவரும் குற்ற ஒப்புதல் செய்யப்படுகின்றார்கள் இராணுவ வீரர்களினால் விசாரனை செய்யப்படுகின்றார்கள். விசாரனைகள் சித்திரவதைகள் இந்த இயக்கத்தினன் தலைவனை தேடிக்கொள்வதாகவே இருக்கின்றது. தலைவர் ஜோன் கைது செய்யப்படுகின்றான். இவன் விவசாயி போன்ற போர்வையில் உள்ளதன் காரணத்தினால் இராணுவத்தினர் சந்தேகம்  குறைவாகவே கொள்கின்றார்கள்.
பிறாங்கொயிஸ் தன்னுடைய அச்சத்தினை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார். அவருடைய சகோதரியான லூஸி தன்னுடைய குழுவின் தலைவரான ஜோன் இன்னும் உயிரோடு இருக்கின்றார். என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். கனோரியஸ் தான் எவ்;வாறு சித்திரவதைகளுக்கு உட்பட்டு தப்பினார் என்பதைக்கூறும் போது லூஸி சித்திரவதையைப்பற்றி பேசவேண்டாம்  என்றும் தலைவரைப்பற்றிய நம்பிக்கையுடன் இருக்கும் படியும் கூறுகின்றார். சித்திரவதைக்கு உள்ளாகும் போது தான் அதனை எதிர்கொள்வதை விட ஒரு துரோகியாகக் கூடும் என்ற அச்சத்தை பிறாங்கொயிஸ் வெளிப்படுத்துகின்றான்.
நித்திரையில் இருந்து எழும்புகின்ற ஹென்றி தன்னை கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை ஏனைய கைதிகளிடம் இருந்து வினாவுகின்றார். தான் அப்பாவிகளைக் கொன்றதை அவர் கூறுகின்றார். விசாரனைக்கு ஷோபியரைக்கூட்டிக்கொண்டு போகின்றார்கள். ஹென்றி தன்னோடு நடனமாடுவதற்க்கு லூஸியை அழைக்கின்றார். ஷோபியரைச் சித்திரவதைக்குட்படுத்துவதை அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். லூஸி தன்னுடைய அச்சத்தைப் போக்கிக்கொண்டு தலைவரைப் பற்றிப்பேசுகின்றாள். புதிய கைதியாக அவர்களுடைய தலைவன் ஜோன் கொண்டு வரப்படுகின்றான்.
எல்லோரும் கொல்லப்பட்டு விட்டனர் என்று ஜோன் கூகின்றான்.  தன்னை பிடித்துக்கொண்டு வந்தவர்கள் தன்னை அடையாளம் காணவில்லை என்ற  என்ற காரணத்தினால் அவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று ஜோன் கூறுகின்றான். தன்னுடைய அடையாளத்தை மற்றவர்கள் காட்டிக்கொடுக்காத பட்சத்தில் தன்னால் தப்பித்துக்கொள்ள முடியும் என்பதை அவர் கூறுகின்றார்.
ஷோபியரை மீண்டும் கொண்டு வருகின்றார்கள். அவரிடம் ஜோன்  எங்கு என்று விசாரிக்கப்பட்டமையை அவர் ஹென்றியிடம் சுறுகின்றார். அவர் இருக்கும் இடத்தைக் தெரிவித்திருந்தால் நான் துரோகியாயிருந்திருப்பேன் என்று ஷோபியர் கூறுகிறார். ஜோன் அறையில் உள்ளமையை ஷோபியர் புரிந்து கொள்கின்றார். ஷோபியர் காட்டிக்கொடுப்பார் என்ற அச்சத்தை  ஏனைய கைதிகள் வெளிப்படுத்துகின்றார்கள். கணோலிஸை விசாரணைக்கு கொண்டு செல்கின்றார்கள். தன்னால் மற்ற எல்லோரும் துன்புறுத்தப்படுகின்றமை பற்றி ஜோன் கவலைப்படுகின்றார். சித்திரவதைக் உட்படுத்தும்போதுதான்; ஜோனை எவ்வளவு நேசிப்கின்றார்கள் என்பதனைப் புரிந்து கொள்ளலாம் என்று லூஸி கூறுகின்றார்
ஒரு சுருட்டைப் புகைத்துக்கொண்டு ஹென்றி தன்னுடைய மரணத்திற்க்கு ஒரு சாட்சியாக இருக்கின்றமை பற்றி சந்தோஷமடைவதாக கூறுகின்றார். தன்னால் பார்க்கக்கிடைக்கும் இறுதி நபராக ஜோன் உள்ளமையைப் பற்றி பெருமையை லூஸி வெளிப்படுத்துகின்றார். ஹென்றியை விசாரனைக்கு கொண்டு செல்கின்றார்கள்.
இரண்டாம் அங்கத்தில் சிறைக்கைதிகளின் செயற்பாடுகள் ஒவ்வொருவருக்கொருவர் வேறு பாடானதாக காணப்படுகின்றது. சித்திரவதை தாங்க முடியாமல் ஷோபியர் யன்னலால் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சிக்கின்றார்.  அவர்களுடைய குறிக்கோள் ஒன்றாக இருந்தாலும் தங்களுடைய கடந்த கால செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடுகின்றார்கள்.
கிளர்ச்சியாளர்களுடைய செயற்பாடுகள் பற்றிய வானொலிச் செய்திகளை செவிமடுத்துக்கொண்டு கைதிகள் தங்களுடைய மிகுதிக்காலம் பற்றிக் கலந்துரையாடுகின்றார்கள்.
விசாரனையின் போது ஹென்றி தான் ஒரு மருத்துவ மாணவன் என்பதனை வெளிப்படுத்துகின்றார். ஜோன் எங்கு இருக்கிறார் என்பதை சொல்லாத பட்சத்தில் பிறாங்கொயிஸ் உட்பட அனைவரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவார் என்று அச்சுறுத்தப்படுகின்றார்கள். ஹென்றி தான் ஒன்றுமே பேசமாட்டேன் என்று கூறுகின்றார். ஹென்றியின் மணிக்கட்டு முறியும் வரை அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார். ஹென்றி ஒன்றும் சொல்லாத காரணத்தினால் மீன்டும் ஷோபியரை விசாரிக்க படைவீரர்கள் முடிவு செய்கின்றார்கள்.
தன்னை ஒரு யூதர் என்பதனை ஏற்றுக்கொள்ளும் படியும் ஷோபியர் வற்புறுத்தப்படுகின்றார். அவர் பேசும் வரை அவருடைய கால்விரல் நகங்களை பிடுங்கி எடுப்பதாக அவருக்கு கூறுகின்றார்கள். ஷோபியர் அதனை நிராகரிக்கின்றார். சித்திரவதைகள் தொடர்கின்றன. லூஸியை விசாரிக்க கட்டளை இடுகின்றார்.
மூன்றாம் அங்கத்தில் சித்திரவதைக்குட்படுத்தும் போது எவராவது ஒலுருவர் தலைவரை யார் என்று வெளிப்படுத்துவார் என்ற அச்சம் கைதிகளிடம் நிலவுகின்றது. சித்திரவதையின் போது லூயிஸ் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றார். ஆயினும் அவள் ஒன்றும் வெளிப்படுத்தவில்லை. தங்களுக்குள் மிகவும் பலவீனமானராகிய பிரான்ஸிஸ் சித்திரதையின் போது காட்டிக்கொடுக்கக்கூடும் என்ற பயத்தில் கைதிகளால் கொல்லப்படுகிறார். தான் எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு தவறான தகவல்களை வழங்கும் படி ஜோன் கூறுகின்றார். தன்னுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்ட காணரணத்தால் ஜோன் தப்பியுள்ளார். தான் திருமணவான் என்பதையும் ஓர் இரவு பிள்ளைப்பிரசவத்தின் போது தன்னுடைய மளைவி இறந்து விட்டால் என்பதையும் ஜோன் கூறுகின்றான். சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட ஷோபியரின் சடலத்தைப்பற்றி ஜோன் கூறுகின்றான். லூஸியை சித்திவதைக்குட்படுத்தும் போது ஜோன் பதற்றமடைகின்றான்.
படைவீரர்களின் காலடிச்சத்தம் கேட்கும் போது அடுத்தாக தன்னை  விசாரனைக்கு கொண்டு செல்வார் என ஜோன் கூறுகின்றார். அவருடைய அச்சத்தைப்போக்க லூஸி முயற்ச்சிக்கும் போது லூhஸி பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை  நன்கு தெரியும்  பிரான்ஸிஸ் கூறகின்றார். அதனை மறுக்கும் லூஸி தான் ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்படாமல் இருக்க  அவரிடம் வாக்குறுதி வாங்குகின்றார்.
எல்லாம் பிரச்சனைக்கும் ஜோன் தான் காரணம் அவனைக்காட்டிக்கொடுக்கப் போவதாக பிரான்ஸிஸ் சுறுகின்றான் ஜோன் பிரான்ஸிஸ்சை பாதுகாக்க முயற்;சிக்கின்றான்.  ஆனாலும் லூஸி தன்னடைய சகோதரனை எந்த வழியிலாவது மௌனியாக்கவேண்டும் என்கிறாள். லூஸியும் ஹென்றியும் அதற்க்கு உடன்படும் போது  ஜோன் அவர்களிடம் பிரான்சிஸ் இன்னமும் 16 வயதிலுள்ளவன் என்று கூறுகின்றார். ஜோன் வாழவேண்டும் பிரான்ஸிஸ் சாகவேண்டும். என்று அவர்கள் முடிவு செய்கின்றார்கள். பிரான்ஸிஸின் சாவு அத்தியாவசியமானது என்று கனோரியஸ் கூறுகிறார்.
லூஸி தன்னுடைய சகோதரனின் சடலத்துடன் பேசுகிறார். தான் லூசியைக் காதலிப்பதாக ஜோன் கூறுகின்றார். தான் ஜோனைக் காதலித்தாகவும் ஆனாலும் அது பிரான்ஸிஸை கொலை செய்ய உத்தரவு கொடுக்க முன்பு என்றும் லூஸி கூறுகின்றார். தான் தனியாக சாகத் தயாராகிக்கொண்டு இருப்பதாக லூஸி கூறுகின்றாள்.
ஜோனை விசாரனைக்கு கொண்டு போகின்றார்கள். தன்னடைய அப்பாவின் சகோதரனின் உடலில் இன்னமும் உயிர் உள்ளது என்று லூஸி கூறுகின்றார். தன்னுடைய சகோதரன் ஒரு வீரன் என்றும் ஏனையவர்களும் ஷோபியர் போல பலமாக இருக்க வேண்டும் என்பதையும் கூறுகின்றார்.
நான்காவது அங்கத்திலே வாழவேண்டுமா அல்லது சாகவேண்டுமா என்ற நிலையில் கைதிகள் உள்ளார்கள். வாழவேண்டும் என்ற ஆசை மேலோங்கி வருகின்றது. தலைவாரின் ஆலோசனைகளின் படி அவர்கள் தப்பிக்கும் எதிர்பார்ப்புடன் தவறான தகவல்களை வழங்குகின்றார்கள்.
காட்டுக்குள்போய் தலைவனான ஜோனை பிடிக்கவேண்டும்  என்று படைவீரர்கள் கூறுகின்றார்கள்  இதற்காக பிரான்ஸிஸ் விசாரனைக்காக அழைத்து வரும்படி கூறும் போது பிரான்சிஸ் ஏனைய கைதிகளால் கொல்ப்படுகின்றமை தெரியவருகின்றது.  ஏன் பிரான்ஸிஸ் கொல்லப்பட்டதாக விசாரிக்கிறார்கள் தாங்கள் எல்லோரும் சேர்ந்து  அதனை செய்தாக கனேரியஸ் கூறுகின்றார்.
வாழ்வதற்கான விருப்பையற்றவர்களான தாங்கள் இப்போது வெற்றியாளர்கள் என்று லூஸி கூறுகின்றார். சூரியன் உதிக்கும் போது எல்லோருமே சாகக்கூடும் என்று லூஸி கூறுகின்றார்.  தான் வாழவேண்டும் என்று அவள் புரிந்து கொள்கின்றாள்.
சிறைக்கைதிகள் வெளியில் கொண்டு போகின்றார்கள் எவ்வாறெனினும் துப்பாக்கிச்சூட்டடுச் சத்தங்கள் அவர்கள் கொல்லப்பட்டமையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் நாடக ஆற்றகை நிறைவு பெறுகின்றது.
இரண்டு மணி நேரம் மொழிப்பரிதல்களினை தாண்டி உணர்வப்புரிதலின் ஊடாக இவ்வாற்றுகை நகர்திச்செல்லப்ட்டன.
நடிப்பு என்பது நடிகனின் மொழி.   மொழி   எண்ணங்களையும் உணர்வுகளையும் பிறரோடு பகிர்ந்து கொள்கின்றது.    நடிப்பு அவ்வாறு பகிர்வதோடு  மட்டுமல்லாது  ஆழ்ந்த அனுபவத்திற்குப் பிறரை அழைத்து செல்வதை நோக்கமாகக் கொண்டிருப்பது.
  நடிகனின் மொழியின்மீது அக்கறை இருக்கிறது. அந்த அக்கறையின் அடிப்படையில் மட்டுமல்லஇ அறிவுக்குப் பொருத்தமான காரண காரியத்தின் அடிப்படையில் நின்றும் சொல்கிறோம்... நடிப்பு ஓர் ஆதிகலை! மூத்தகுடி பேசிய முதல்மொழி நமது நடிகனின் மொழி. உடல்மொழி!
இவ்வகையில் நடிகன் பேசுகின்ற மொழி காத்திரமானதாக வரகின்ற வேளையிலே தான் படைப்பும் காத்திரமானதாக  அமையும் அந்தவகையில்  நடிகர்களது நடிப்பு வெளிப்பாடு சிறப்பானதாக பார்வையாளர்களினை கவரும் வகையில்  இருந்தது.
நாடகத்தின் இதர மூலகங்களினது இணைவும் அதன்பயன்பாடும் ஆற்றுகையின் வெற்றிக்கு அடிப்படையாயின.
ஆற்றகையின் நிறைவில் கருத்து பகிரும் போது பலரும் எமது வாழ்வி;ன் வலிகளினை பார்க்கக்கூடியதாக இருந்ததாக  குறிப்பிட்டனர்.
எல்லாவற்றிக்கம் மேலாக கலைத்துவமான ஆந்றுகையினை பார்பதற்கான வாய்ப்பு ஏற்ப்பட்டது எனக்குறிப்பிடலாம்

   நன்றி யாழ்.தினக்குரல்
 ( எஸ்.ரி.அருள்குமரன்) 

    நீண்டு செல்லும் பிரபஞ்ச வெளியில் மனிதர்கள் பிறப்பதும் மரணிப்பதும் இயல்பான செயல்நிலைகள் மாறாக அவர்களில் காலத்தினை விஞ்சி மரணத்தின்பின்னரும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சானையாளர்கள்.அப்பகைப்புலத்தில் கலைஞர்கள் சமூகத்தின் இயங்கியல் வெளியில் தம்மை இணைந்து அவர்களின் மகிழ்வே தம் மகிழ்வாக வாழ்வியிலினை வரித்துக்கொண்டு தமது கலைச்செயற்ப்பாடுகளினை மேற்கொள்கின்றனர். அவர்கள் இறந்த பின்னரும் அப்படைப்பக்களின் ஊடாகவும்  தமது காத்திரமான கலைச்செயற்பப்hடுகள் மூலமாகவும் எம்மிடையே வாழ்ந்துகொண்டிருப்பார்கள்
ஈழம்தனக்கான ஆளுமையாளர்களினை காலம் தோறும் பிரசவித்துக்கொண்டிருக்கின்றது அத்தகைய பிரசவிப்பே 'அண்ணை றைட்' என்ற அடைமொழியின் ஊடாக அனைவராலும் அழைக்கபட்ட கே.எஸ்.பாலச்சந்திரன்
நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது குனச்சித்திர நடிப்பிலும் சிறந்துவிளங்கியவர் கே.எஸ் பாலச்சந்திரன்.
 ஈழத்தின் நாடக>திரைப்படக் கலைஞர் >எழுத்தாளர் இலங்கை வானொலி நடிகர்களில் பெயர் சொல்லக்கூடியவர் என பல  துறை ஆளுமையாளரான இவர் 1944ம் ஆண்டு ஜூலை மாதம்  10ம்திகதி கரவெட்டியில் பிறந்து பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.

 அண்னை றைட் என்ற நாடகத்தில் மூலம் பிரபல்யமான இவர் 1973ல் இலங்கை வானொலி நிலையத்தில் ரசிகர்கள் முன் ஒலிப்பதிவாகி, 1974ல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டில் அரங்கேறி, 33 ஆண்டுகளாக உலகின் பல நகரங்களில் மேடையேறிய 'அண்ணை றைற்' இவரது புகழ்பெற்ற தனிநடிப்பு நிகழ்ச்சியாகும்.

அத்துடன் தணியாத தாகம் என்ற வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். 
இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம்>திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.

1965ல் நெல்லை க. பேரன் எழுதி> நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய 'புரோக்கர் பொன்னம்பலம்' என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக> நவீன> நகைச்சுவை> பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர். 

 வாடைக்காற்று> நாடு போற்ற வாழ்க> ஷார்மிளாவின் இதய ராகம்> அவள் ஒரு ஜீவநதி>  டீடநனெiபௌ (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்) ஆகிய திரைப்படங்களிலும்  கனடாவில் உயிரே உயிரே  தமிழிச்சி கனவுகள் மென்மையான வைரங்கள் சகா என் கண் முன்னாலே1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.

இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும் தனி நாடகங்களையும் தொடர் நாடகங்களையும் எழுதியவர்.
'மனமே மனமே' என்ற தொடர் நாடகத்தை எழுதி இயக்கி தயாரித்து வழங்கியிருக்கிறார். கனவுகளும் தீவுகளும்> தலைமுறைகள் >குரங்கு கைத்தலையணைப் பஞ்சுகளாய் காரோட்டம் கலாட்டாக்காரர்கள் முதலான 20க்கு மேற்பட்ட மேடை நாடகங்களை எழுத இயக்கிமேடையேற்றியுள்ளார்

இலங்கையில் ரூபவாகினிக்காகவும், கனடாவிலுள்ள ரிவிஐ தொலைக்காட்சிக்காகவும் இவர் பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதியிருந்தார். அவற்றில் திருப்பங்கள் குறிப்பிடத்தக்கது. 2003ல் இவர் ஒளிபரப்பிய 'றுழனெநசகரட லு.வு.டுiபெயஅ ளூழற'  இவரது படைப்பு எம்மிடையே முதலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி யாகும்.  'நாதன்>நீதன்  நேதன்' என்ற நகைச்சுவைதொடரை 2007 இலிருந்து 6 மாதங்களாக எழுதி  நெறிப்படுத்தி ஒளிபரப்புச் செய்தார்.
இலங்கையில் வாடைக்காற்று  டீடநனெiபௌ (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராகவும் கனடாவில் எங்கோ தொலைவில்  மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களின் இயக்குனராகவும் செயற்பட்டவர்.  இவர்  தாகம்  வாழ்வு எனும் வட்டம் (சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது)  உனக்கு ஒரு நீதி (சிறந்த இசைக்கான விருது பெற்றது) ஆகிய குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

 இப்பகைப்பலுத்தில் ஈழத்து கலைத்துறைப்பயனத்தில் பயனித்து தனக்காகவகையில் தனித்துவங்களினை உருவாக்கிமக்கள் மனங்களினை வென்ற கலைஞன் மரனத்தின் பின்னரும் வாழ்ந்து கொண்டிருப்பான்என்பதில் ஜயமில்லை.

 நன்றி யாழ்.தினக்குரல்  
எஸ்.ரி.அருள்குமரன்

வாசிப்பின் அவசியத்தினை உணர்த்தும் உலக புத்தக தினம்

நாம் பல்வேறு நோக்கங்களுக்காக  பல்வேறு தினங்களை கொண்டாடி வருகின்ற சூழ்நிலையில் மனித குல வளர்ச்சியின் அறிவுத்தேடலினை விருத்தி செய்கின்ற நூல்களின் சிறப்பினை உணர்ந்து அதனை பயன்படுத்தி அறிவினை வளர்த்துக் கொள்வதற்கான விழிப்புணர்விணை ஊட்டுகின்ற வகையில் உலக புத்தக தினத்தினை அறிவுலகவாதிககள்,  படைப்பாளிககள் அனைவரும் உலக புத்தக தினமாக கொண்டாடி வருகின்றனர.;

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்களைப் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குவதினால் சித்திரை 23ஆம் திகதியினை  ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவின் வேண்டுகோளின் படி
 1995ம் ஆண்டு முதல் உலக புத்தக தின நிகழ்வானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

  உலக புத்தக தின நிகழ்வானது உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற சிறப்பு நிகழ்வாக உணரப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றதிற்கு காரனமாக உலகளாவிய ரீதியில்  பல இலக்கியவாதிகள் இந்த நாளில் பிறந்தோ அல்லது இறந்தோ இருக்கிறமையும் காரனமாக அமையலாம்.
 இங்கிலாந்தினை சேர்ந்த  தலை சிறந்த இலக்கியவாதியும் நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதும் புத்தக தினம் இந்த நாளில் கொண்டாடப்படுவதற்கான விசேஷட காரணமாக அமைகிறது.

உலகமறிந்த நாடகமேதை நாடக இலக்கியத்தை கவித்துவமாக உயிரூட்டம் செய்த நாடகமேதை ஷேக்ஸ்பியர் 1564ஆம் ஆண்டு சித்திரை 23 ஆம் நாள் பிறந்து 1616ஆம் ஆண்டு சித்திரை 23 ஆம்  திகதி   இறந்தார்.

  புனைவு இலக்கியத்தில் கொடிக்கட்டிப் பறந்த உலக இலக்கியவாதிகளுக்கு ஆதர்ஷமாகவும் ஊற்றுக்கண்ணாகவும் விளங்குகின்ற 'டான் குயிக்சாட்' நாவலைப் படைத்த செர்வாண்டைஸ்  என்பவர் 1616 ஆம் ஆண்டு சித்திரை மாதம்  23ஆம் நாள் காலமானார்.

ஆங்கிலக்கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் 1770ஆம் ஆண்டு சித்திரை 23 இல் உயிர் நீத்தார்.
1915 சித்திரை 23ல் கவிஞர் ரூபர்ட் ப்ரூக் காலமானார். 1957 சித்திரை 23ல்  ராய்ஸ்டன் காம்ப்பெல் மறைந்தார்.
1992 ஏப்ரல் 23 இல் உலகப்புகழ்பெற்ற சினிமா இயக்குநர் சத்யஜித்ரே இவ் உலகைவிட்டு மறைந்தார்.

 இவ்வாறு படைப்புலகத்தோடு நெருக்கமாகிவிட்ட சித்திரை 23ஆம் நாளினை உலகப்புத்தக நாளாகப் கடைப்பிடிப்பது என்று 1995 இல் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது.

இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய இந் நாளை உலகப் புத்தகநாளாக அறிவிக்க வேண்டியதன் அவசியம்  என்ன  என்பதினை நாம் நோக்குதல் வேண்டும்.

உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமநிலை ஏற்பட அறிவுத்தகவல்களைப் பரவலாக்குவதன் ஊடாக உலக சமநிலை அடையவேண்டியதன் அவசியம் அனைவராலும் உணரப்பட்டமையாகும்.
 அறிவுத்தள சமநிலையின் நோக்கின் காரணமாக 1972ஆம் ஆண்டு அனைத்து நாடுகளின் புத்தக ஆண்டு என்று அறிவிக்கப்பட்டது.
 இதற்கு முன்னோடியாக  1971  அக்டோபர் 22ஆம் திகதி பிரசெல்ஸ் நகரில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், நூலகர்கள்  ஆவணத் தொகுப்பாளர்கள்  ,பதிப்பாளர்கள். புத்தக விற்பனையாளர்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது.

இம்மாநாட்டில் அறிவியக்கத் தகவல் பரப்பும் நோக்கில் 10 கட்டளைகள் உருவாக்கப்பட்டன.
அனைத்து நாடுகள் மட்டத்திலான வாசிப்பு இயக்கத்துக்கான தொடங்குதலாக இந்தக் கட்டளைகள் அமைந்தது. விளங்கியது.
இம் மாநாட்டில் தீர்மாணிக்கப்பட்ட 10 கட்டளைகளாக பின்வருவன விளங்குகின்றன. அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, புத்தகங்களின் இருத்தல் அவசியம், படைப்பாளியை உருவாக்கும் சமூகச்சூழல்உருவாக்குதல், பதிப்புத்தொழில் வளர்ச்சி, நூலகங்களின் வசதிகள், நூலகங்கள் நாட்டின் கருவூலம், பதிப்பாளர் வாசகர் இணைப்பு, புத்தகங்களைப்பராமரித்தல்பாதுகாத்தல்மற்றும் ஆவணப்படுத்துதல், அனைத்து நாடுகள் மொழிகளின் புத்தகங்களின் பரிமாற்றம், வாசிப்பு மூலம் உலக உறவுஎன்பன இவ் 10 கட்டளைகளுக்குள்ளும் அடங்குகின்றன.

இந்த 10 கட்டளைகளின் அடிப்படையில் அனைத்து நாடுகளின் அறிஞர்களினால் தொடர்ந்த விவாதத்தின் விளைவாக 1996 ஏப்ரல் 23 இல் உலகப்புத்தக நாள் அனைத்து நாடுகளிலும் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது.
உலகப்புத்தக நாள் அறிவிக்கப்பட்டதினை  பயன்படுத்தி   மேலைய நாடுகள் அதனை அறிவுத்துறை வளர்ச்சிக்கான சாதனமாக பயன்படுத்தத் தொடங்கினார்கள். குறிப்பாக குழந்தைகள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில்  உலக புத்தக நாளை அமெரிக்கா , இங்கிலாந்து ,பிரான்சு போண்ற ஐரோப்பிய நாடுகளின்  பதிப்பகங்கள் பயன்படுத்தத் தொடங்கின.
அறிவுலகப் பண்பாடு மேலோங்கும் வகையில் உலக புத்தக தினத்தையொட்டிய தமது வாழ்த்துக்களினை  தம்மிடையே பகிர்ந்து கொண்டார்கள். இதனுடாக அறிவுத்துறை வளர்ச்சிக்கான செயற்றிட்டங்களை மேற்கொண்டு வெற்றிகளினையும் கண்டார்கள்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்களைப் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குவதினால் சித்திரை 23ஆம் திகதியினை யுனெஸ்கோவின் வேண்டுகோளின்படி உலக புத்தக தினமாககொண்டாடப்பட்டு வருகின்றது..

அனைவருக்கும் வாசிக்கும் உரிமை  அனைத்து மக்கள் வாழ் விடங்களிலும் நூலக உரிமை  உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல்  தத்தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல்  புத்தகங்களுக்கும்  வாசகர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும்.


 ஆனால் இன்றைய பொழுதுகளில் அனைவரினாலும் குறை கூறப்படுகின்ற விடயமாக வாசிப்பு பழக்கம் அருகிவிட்டது பெரும்பாலும் யாருமே வாசிப்பதில்லலை எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற போதிலும் அதற்கான மாற்று சிந்தனையுடன் இயங்குகின்றவர்கள் வெகுவாக குறைந்து காணப்படுகின்றனர்.
வாசிப்பு என்பது ஓர் பேரியக்கமாகும்  இவ் இயக்கத்தினால் தான் ஆரோக்கிய மான சமுதாயத்தினை கட்டியெழுப்பமுடியும் எனும் யதார்த்தத்தினை உனர்ந்து கொண்டு   செயற்ப்படவேண்டும்.
வாசிப்பற்ற சமூகம்  ஊனமுற்ற சமூகமாக மாறி விடும். வாசிப்பில்லையேல் சமூகத்தில் உயிப்பினை தரிசிக்க முடியாது. புத்தகங்களுடன் உறவாடுபவர்கள் தம்மை புடம் போட்டு கொள்கின்றார்கள். மனிதர்களினை அறிந்து கொள்கின்றார்கள். அவர்களால் எதையும் எளிமையாகவும், நிதானமாகவும் அனுக்கிக் கொள்ள கூடியதாக இருக்கும்.
ஒரு தலை முறை வாசிப்பின் நுகாச்சியற்று போய் அடுத்த தலைமுறையினையும் நல்வழிப்படுத்த முடியாமல் அல்லல் உறுகின்றது எனும் கூற்றினை தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டு. ஆயினும் அத்தகையவர்களில் பிடியில் இருந்து இளையதலைமுறையினை  குறிப்பாக இளம் பராயத்தினராகிய சிறுவர்கள் சரியான பாதையில் நடை பயில்வதற்கு வழிப்படுத்த வேண்டிய தார்மீகப்பொறுப்பு புத்திஜீவிகளினது கைகளில் உள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.
தாம் வாசிக்காது விட்டாலும் இளம் தலைமுறையினரை வாசிப்பின் செயல் தளத்தில் இயங்க அனுமதியாதவர்கள் கூட சமூகத்தில் விரவிக் காணப்படுவதுடன் வெறுமனே பரீட்சை மையக்கல்வியின் பால் பற்றுதி கொண்டு செயல்படுகின்றவர்களினையும் சமகாலத்தில் தரிசிக்கவேண்டிய அவலம் உண்டு. ஆயினும் இவற்றின் மத்தியில் இருந்து சவால்களிற்கு முகம் கொடுத்து வாசிப்பின் மகத்துவத்தினை இளம் தலை முறையினர் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
இன்றைய பொழுதுகளில் வாசிப்ப அற்று போவதினால் மாணவர்கள் தொழில் வாய்ப்புக்களினை பெற்றுக்கொள்வதற்காக இடம்பெறுகின்ற போட்டி பரீட்சைகள் போன்ற வற்றில் சித்திபெற தவறுகின்றமையும் அதனால் அவர்கள் வேலை வாய்ப்பினை பெற்றுகொள் முடியாமல் இருப்பதும் கண்டு கொள்ள கூடியதாக உள்ளது.
வாசிப்பின் ஊடாகவே மொழித்தேர்ச்சியென்பது சாத்தியமாகும் தேர்ந்த வாசிப்பின்மையினால் மொழித்தேர்ச்சியில் தோற்றுப்போகின்ற இளம் தலைமுiயினரை அவர்களது கல்விப்  பெறுபேறுகளின் ஊடாக கண்டு கொள்ள முடிகின்றது.
  வாசிப்பதன் ஊடாகவே மனிதன் பூரணமடைகின்றான். வாசிப்பின் ஊடாகவே அறிவார்ந்த சமூகத்தினை கட்டியெழுப்பமுடியும். உண்மையான வாசிப்பின் ஊடாகவே அறிவுசார் உலகினை அறிந்து கொள்ளமுடிகின்றது. இத்தகைய சிறப்பும் அவசியமும் வாய்ந்த  புத்தக வாசிப்புப் பண்பாடு மேலோங்கிட உலக புத்தகதினத்தினை நாம் அனைவரும் கொண்டாடுதல் சிறப்பிற்குரியதாகும்.

எம்முடைய வாழ்வியல் நிகழ்வில் பிறந்தநாள் பரிசாகவும்  திருமணநாள் அடையாளமாகவும்  குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும்  நட்பின் பகிர்தலாகவும் புத்தகங்களை அன்பளிப்பதன் ஊடாக அறிவால் உயர்ந்த சமூதாயத்தினை எம்மால் வளர்த்தெடுக்கமுடியும் இதனுடாக வாசிப்பின் அவசியத்தினையும் எம்மவர்க்கு உணர்த்திக்கொள்ள முடியும் எனவே அறிவு நிறைந்த சமூகத்தின் உருவாக்கத்தினை கருத்தில் கொண்டு உலக புத்தக தினத்தினை நாம் அனைவரும் கொண்டாடுவதன் ஊடாக அறிவால் உயர்ந்த பூரணத்துவமான சமூகம் ஒன்றினை கட்டியெழுப்புவோம்.

 நன்றி யாழ்.தினக்குரல் 23.04.2014



              தவக்கால ஆற்றுகை

 (எஸ்.ரி.அருள்குமரன்)

நாடகம் சமூகத்தின் இனைப்பிற்கான அடிப்படைப்புள்ளி. உணர்வுகளின் வெளிப்பாடுகளில் இருந்து உற்ப்பத்தியாக்கப்படுகின்றது. அவ்வுனர்வுக்கிளர்ச்சி தான் படைப்பின் உயிர்ப்பினை நிர்ணயம் செய்கின்றது.
கலை என்பது மனித உணர்களின் வெளிப்பாடு என பொதுமையாக கருத்துபகிர்கின்றனர்.
கலைகளில் முதன்மையான கலையாக நாடகக்கலையினை குறிப்பிடும் ஆய்வாளர்கள் சமூகத்தினை ஊடு வெளியாகக்கொண்டு    சமூகத்தினை வெளிப்படுத்துகின்ற கலையாகவும் குறிப்பிடுவர்

 கால வெளியில் காலத்திற்கு காலம் புதிய கலைவடிவங்கள் வெளிக்கிளம்புகின்றபோதும் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் எல்லோரையும் ஆக்கிரரமித்துள்ள சூழ்நிலையிலும் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக்கொண்டு கலைகள் படைக்கப்படுகின்ற போதும் மனிதர்களுடன் நேரடியாக உறவாடி அவர்களது மன இறுக்கங்களினை போக்குகின்ற கலைவடிவம் எனும் வகையில் நாடகக்கலைக்கென தனித்துவம் உண்டென்பது மறுக்கவியலாக உண்மை. இதற்கு சான்றாக நல்ல நாடககலைப்படைப்பிற்கு கூடுகின்ற மக்களது எண்ணிக்கையினை கொண்டு மதிப்பிட்டு கொள்ள முடிகின்றது.

நாடகக்கலை காலம் தோறும் பல்வேறு சமூக தேவைகளினை நிவர்த்திசெய்து கொள்வதில் முனைப்பு காட்டியமையினை வரலாற்று வெளிகளின் ஊடாககண்டு கொள்ள முடியும்.
பிரச்சார ஊடகமாகவும் மக்களது பிரச்சினையினை வெளிப்படுத்துவதாகவும் மக்களிடையே நற்பண்புகளினை வளர்த்துக்கொள்வதற்கானதாகவும், பக்தியினை ஊட்டுவதற்காகவும் என பல தளங்களில்      செயற்ப்பட்டன.

அப்பின்னனியில் கிறிஸ்தவ மக்களது வாழ்வியல் புலத்தில் அவர்களது வாழ்கையில் நம்பிக்கையில் ஊடு கலந்த செயற்பாடக மதரீதியாக நோக்கு நிலையில் முதன்மைனதாகவும் புனிதமானதாகவும் நோக்கப்படுகின்ற செயற்பாடக விளங்ககின் தவக்காலத்தில் இப்புனித செயற்பாட்டினை பறை சாற்றுவதாக தவக்கால ஆற்றுகை விளங்குகின்றது.

தவக்காலம் எனும் பேது யேசுக்கிறிஸ்துவினது வாழ்வில் இடம்பெற்ற முக்கிமான காலப்பகுதியாக கொள்ளப்படுகின்றது.
மானிட விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கி  துன்பச்சிலுவை சுமந்து மரித்து,உயிர்த்தெழுந்த    மகானது வாழ்வினை பேசுவதுடன் அவ்வாழ்வினை மீட்டுப்;பார்பதுடன் அவர் தனது வாழ்வில் கடைப்பிடித்த நல்ல விடயங்களினை மக்கள் பின்பற்றுகின்ற போது ஏற்ப்படும் நன்மைக்ள பற்றிய கதையாடல்கள் இக்காலப்பகுதயில் முதன்மைப்பத்தப்படுவதுடன் புனிதப்படுத்தப்பட்ட வகையில் மக்கள் இணைத்துகொள்வதற்கான வகையில் கலைச்செயற்ப்படுகளில் மதநிறவனங்கள் முனைப்புக்காட்டுவதினை காலவோட்டத்தினூடாக அவதானிக்காலம்.

மத்திய காலத்தில் திருச்சபைகள் பஸ்கா எனப்படுகின்ற நாடகசெயற்பப்hட்டினை மேற்கொண்டன எனும் செய்தியினை அறியக்கூடியதாக உள்ளது.

அப்பின்னயில் ஈழத்தரங்கினை பொறுத்தவரையில் பல சமூக செயற்ப்பாட்டு விடயங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றவகையில் இறையியல் செயற்ப்பாட்டிற்கு முதன்மை கொடுக்கும் வகையில் நாடக செயற்ப்பாட்டினை திருமறைக்கால மன்றம் எனும் அரங்க நிறுவனம் றீண்ட காலமாகமாக மேற்கொண்டு வருகின்றது.

நீ.மாரிய சேவியர் அடிகளின் எண்ணத்தில் உதித்த இவ்வரங்க நிறுவனம் நீண்ட தனது பயனத்தில் யுத்த சூழ்நிலையிலும் கூட இக்கலைப்பணியினை மேற்கொண்டு வருவதுடன் பல நாடக செயற்ப்பாடுகளினை மேற்கொண்டு வருவதினை அவதானிக்ககூடியதாக உள்ளது.

கிறிஸ்தவ பாரம்பரியத்தில் சடங்காகவும் ,கலை ஆற்றகையாகவும் காணப்படும் 'திருப்பாடுகளின் காட்சி' பாஸ்கு நாடகம் எனும் பெயருடன் நீண்ட காலமாக பத்தியுடன் நிகழ்த்ப்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஆரம்பகாலத்தில் மரப்பொம்மைகளைக்கொண்டு நிகழ்த்ப்படும் உடக்குபாஸ்க்மரபாக காணப்பட்டு ஐம்பதுகளிற்குபின் மனிதர்கள் நடிக்கின்ற நாடகமரபாக  மாற்றமடைந்து.
 ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் றிகழ்த்தப்பட்ட வடிவம் பின்னர் தமிழ்,சிங்கள சுதேச வடிவங்களிலும் நிகழ்துகின்ற கலை வடிவமாக
 வளர்ச்சியடைந்தது.

1963ம் ஆண்டு அருள்திருகலாநிதி நீ.மரியசேவியர் அடிகள் மன்னாரில் தமிழிலே திருப்பாடுகளின் நாடகமொன்றினை எழுதி மேடையேற்றினார்.
அன்றிலிருந்து இன்றுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளாக இப்பணி அவரினால் தொடரப்படுகின்றது.
.
இப்பணியினை தொடர்வதற்காவே திருமறைக்கலாமன்றம் எனும் அரங்க நிறுவனத்தினை  1965ல் உருவாக்கிஅதற்கூடாக பிரமாண்டமான நாடகபாரம்பரியமாக இதனை கட்டியெழுப்பியுள்ளார்.
நீ.மரியசேவியஅடிகளார் தமிழ் மரபுக்குரியதாகபாடுகளின் வரலாற்றிக்கு பல்வேறு கோணங்களினை வழங்கும் வகையில் 25 ற்கு  மேற்ப்பட்ட பல்Nறு நாடகபிரதிகளினை எழுதி ஆயிரக்கணக்கான அரங்ககளில் அவை அரங்கேற வழிகோலினார்.

அதுமட்டுமன்றி இம்மரபிற்குரியதான பெருங்காட்சி மரபு இசைமரபு போன்றவற்றினையும் உருவாக்கிஅவற்றிக்கு உச்சகலைப்பெறுமானத்தினையும் ஏற்ப்படுத்தியது மட்டுமல்லாது சமகால வாழ்வியிலின் தேவைக்குரிய செய்தியை சொல்லும் படைப்பாகவும் வளர்த்தெடுத்தார்.
இவ்வளர்ச்சி நீட்சிபெற்று இலங்கையின் பல பாகங்களிலும் புலம் பெயர் தேசத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1971ம் ஆண்டு அன்பில் மலர்ந்த அமரகாவியம் எனும் ஆற்றுகை  கோட்டையின் பெருமதிலை பின்னனியாக கொண்டு பிரமண்டமான ஆற்றுகையாக மேற்கொள்ளப்பட்டது.

1973ல் இலங்கையில் இருந்து இந்தியவிற்கு கொண்டு செல்லப்பட்ட திருச்சி தேவர் மண்டபத்தில் மேடையேற்றப்பட்தாக களங்கம் எனும் ஆற்றுகை விளங்குகின்றது.

1982ல் ஈழத்தில் முதல்வீடியோ திரைப்படமக வெளிப்புற காட்சிகளுடன் பலிக்களம்எனும் ஆற்றுகை தயாரிக்கப்பட்டது.

இதனடிப்படையில் 1990முதல் மேடையிடப்பட்ட முக்கியமான படைப்புக்களாக 1990ல் 'களங்கம';1991ல் 'சிலுவைஉலா'1992ல்'கல்வாரிப்பரனி'1993ல்பலிக்களம்'1994ல் கல்வாரிக்கலம்பகம்1995ல் அன்பில்மலர்ந்த அமரகாவியம் 1996ல் கல்வாரிச்சுவடுகள் 1997ல் பலிக்களம் 1998ல் சிலுவைச்சுவடுகள் 1999ல் கருதிகழுவியகவலயம் 2000ல் பலிக்களம் 2001ல் காவியநாயகன் 2002ல் கல்வரியாகம் 2003ல் பலிக்களம் 2004ல் காவியநாயகன் 2005ல் குருதிகழுவிய குவலயம் 2006ல் பலிக்களம் 2007ல் மலையில்விழந்த துளிகள் 2008ல் காவியநாயகன் 2009ல் கல்வாரியாகம் 2010ல் வெள்ளியில் ஞாயிறு 2011ல் கடவுள்வடித்தகண்ணீர் 20012ல் வேள்வித்திருமகன் 2013ல் காவியநாயகன் போன்றவற்றினை குறிப்பிடலாம்.



இத்தொடர்ச்சியில் இவ்வாண்டு யாழ்.திருமறைக்கலாமன்றம் தயாரித்து வழங்கிய  மாபெரும் அரங்க ஆற்றுகையாக 'வேள்வித் திருமகன'; எனும் திருப்பாடுகளின் காட்சி கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை   திருமறைக்கலாமன்ற அரங்கில் இடம்பெற்றது.

இந்நாடகத்திற்கான நெறியாழ்கையினைதிருமதி வைதேகசெல்மர்எமில், எழுத்துரவாக்கம் ஆலோசனை வழிநடத்தல் அருள்திரு நீ.மரியசேவியர் அடிகளார் மேற்கொண்டுள்ளார்.

பெருவிழா அரங்கு எனும் வகுதிக்கள் உட்படுத்தக்4டியவகையில் மிகப்பிரமாண்டமானவகையிலும் மிகபெரியளவில் கூடிய ஆற்றுகையாளர்களினை கொண்டமைந்தவகையில் காத்திரமானகவைப்டைப்பாக முகிழ்ந்தெழுந்தது.

 அரங்கில் இருநூறிற்க்கும் மேற்ப்பட்ட ஆற்றுகையாளர்கள் செயற்ப்பட்டதுடன்   நூற்றிக்கும் மேற்ப்பட்ட துனைக்கலைஞர்களின் கூட்டினைப்பின் பங்களிப்புடன் இவ்வாற்றுகை தயரிக்கப்பட்டிருந்தது.
 
ஒவ்வொருவருடமும் நிகழ்த்ப்படுகி;ன்ற போதிலும் ஒவ்வொருவருடமும் வித்தியசாமான கோணத்தில் கதைநகர்வினை மேற்க்கொண்டிருந்தனர்.
கதை பழையதாகவிருந்தபோதிலும் பேசப்பட்டமுறையும் பேசுமுறையம் புதியனவாகவும் மதம்சார்ந்தவிழுமியங்களினை கலைத்துவநேர்த்தியுடன் வெளிக்கொனரப்பட்டது.

ஆற்றுகை தரம் நவீனத்துவ சிந்தனையுடனும் சமகாலப்போக்குடனும் பயனிக்ககூடியவகையில்   காணபப்பட்டது.

நாடகம் ஆரம்பிக்கும்போதே மேலெழுகின்ற உணர்வெழுச்ச்சியுடனனானவகையிலான பாடல்களும் அப்பாடல்களின் ஊடாக   குறியீடுசார்ந்தவகையிலான நடனக்கோலங்களும் அவற்றிக்க ஊடான காட்சிப்புரிதல்களுக்கூடான வகையில் கதையினை நாகர்த்திச்சென்ற முறை சிறப்பானதாக இருந்தது.

படைப்பென்பதே பார்வையாளன் பார்க்கின்றபோது அவனை நகர்திச்செல்வதாகவும் படைப்பு முடிவடைகின்ற வரையில் சலிப்பற்ற முறையில் இருப்பதே நல்ல படைப்பாக கொள்ளமுடியும் அதற்க்கு அரங்கில் பணியாற்றுகின்ற ஆற்றுகையாளன் உட்பட துணைக்கலைஞர்களின் பணி காத்திரமானதாக காணப்படவேண்டும்.இவ்வகையில் அரங்காடிகள் மற்றும் துனைக்கலைகளின் பங்க காத்திரனமாகதமாக இருந்தது.

 வேடஉடை வடிவபை;பு வித்தியாசமானதாகவும் பாடைப்பிற்கான செய்தியனை சொல்வனவாகவும் காணப்பட்துடன் இசையானது படைப்பினை இயல்பான வகையில் நகர்த்திச்செல்வதற்கும் பார்ப்போருடன் ஒன்றிப்பதற்குமானவகையில் காத்திரமனதாக இருந்தது.

கலையியலின் ஊடாக இறையியலினை பார்க்கின்ற போக்காக இந்நாடகங்கள் இடம்பெற்றமையினை  அவதானிக்க கூடியதாக உள்ளது.

 நன்றி யாழ்.தினக்குரல்

வெள்ளி, மே 30, 2014

எஸ்.ரி.அருள்குமரன்)

ஈழத்து அரங்க வரலாறானது நீண்ட வரலாற்றுப்பாரம்பரியமும் கலைச்செழுமையுடையதாகும்


ஈழத்து அரங்க வரலாறானது நீண்ட வரலாற்றுப்பாரம்பரியமும் கலைச்செழுமையுடையதாகும்.
காலவோட்டத்தில் அது தனக்கான தனித்துவத்துடனும் சமூக பண்பாட்டு செயல் தளத்திற்கு ஏற்ற வகையில் தனது செயல் வளர்ச்சியினை தகவமைத்து வந்துள்ளது.

ஈழத்து அரங்க வரலாறு பலராலும் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழத்தினை பொறுத்தவரையில் அரங்கு கல்வி முறையாக முகிழ்ந்தெழுந்தமையினால் புதிய வடிவங்கள் பிரசவிக்கப்பட்டதுடன்  அரங்கு பற்றிய ஆழமான தேடலிற்கும் வழி சமைத்திருந்தது.
அரங்கு சமூக அக்கறை பொருந்தியவடிவமாகும்.  அரங்கின் உயிர்ப்hன விடயம் பார்ப்போருடன் நேரடித்தொடர்பாடலினை கொண்டிருப்பதாகும்   இத்தகைய நேரடி உயிர்ப்பு விசையினை  உடைய நாடகங்களிற்கான விழாவாக வருடம் தோறும்   கொண்டாடப்பட்டுவருகின்றது.
 இவ்விழாவானது உலக நாடக தின விழா எனும் வகையில் பங்குனி மாதம் 27ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

இத்தினத்திற்கான முன்னோடிச்செயற்ப்பாடாக 1961ம் ஆண்டு ஜீன் மாதத்தில் சர்வதேச அரங்க கூட்டமைப்பின் ஒன்பதாவது ஒன்று கூடலாக கெல்சிங்கி ,வியன்னா ஆகிய இடங்களில் சர்வதேச அரங்கத்திட்டம் உருவாக்கப்பட்டது.
சர்வதேச அரங்க திட்டம் எனும் சொல்லிற்கு மாற்றீடாக 'அர்விகமா' என்பவரினால் உலக நாடக தினம் முன்மொழியப்பட்டது.
எனினும் 1962ல் பரிஸில் பங்குனி மாதம்  27ம் திகதி  உலக நாடக தினம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு மேற்ப்பட்ட நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவ்விழா மக்களிடையே  சமாதானத்தினையும் புரிந்துனர்வினையும் ஏற்ப்படுத்தும் ஆற்றுகைகலையின் சக்தியை மக்கள்முன்னிலையில் வெளிக்கொனர்வதற்கும் அரங்கவியலாளர்களினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்விழா தனது நோக்கமாக பின்வரும் அம்சங்களினை கொண்டுள்ளது.
ஆற்றுகை கலையின் முக்கியத்துவத்தையும் அதன் பயில்வையும் சர்வதேச ரீதியில் பரிமாறிகொள்ள ஊக்குவித்தல்
அரங்க கலைஞர்களிடையே கூட்டுனர்வை உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் ஆக்கத்திறன்மீதான அக்கறையை விருத்தி செய்தல்.
இக்கலைப்படைப்பு மீதானஅபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் விழிப்புனர்வுடன் உருவாக்குதல்
இந்நிகழ்வில் பங்கு கொள்வதன் மூலம் மக்களிடையே ஆழமான புரிந்துனர்விற்கு பங்குகொள்ளலை வலுப்பெறச்செய்வதற்கும் முனைப்பூட்டல்
மேலும் நடனம் போன்ற பிரத்தியோக முறைமைகளிற்கும் முன்னுரிமை கொடுக்கவும் மற்றும் சர்வதேச செய்திப்பரிமாற்றம் பொது விடயங்களினை கதைப்பதற்கான பேச்சுவழக்கமுறை வட்டமேசை மாநாடு போன்ற வேறுபட்ட முயற்ச்சிகளிற்காகவும் சர்வதேச விழாவாக ஒருநாள் அல்லது ஒருவாரம் அல்லது ஒருமாதம் வரை இவ்விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலகத்தில் பல்வேறு நாடுகளில்  நிகழ்த்தப்பட்டு வருகின்ற  இவ்விழாவினை கொண்டாடுவதில் ஈழத்து அரங்கவியலாளர்களும் அக்கறை காட்டிவருகின்றனர்.
இதன் ஆரம்ப முயற்ச்சியாக கிழக்கு பல்கலைக்கழகம் 1998 காலப்பகுதியில் மேற்க்கொண்டது.

பின்பு யாழ்ப்பானப்பல்கலைக்கழகம் 2007ம் ஆண்டு முதன் முதலாக நிகழ்த்தப்பட்டு அடுத்தவருடத்துடன் அந்நிகழ்வு இடம் பெறாமல் போயுள்ளது.
ஆயினும் 2008ம் ஆண்டு முதல் சுன்னாகம் பொதுநூலகம் நிகழ்த்திவருவதுடன் புத்தாக்க அரங்க இயக்கத்தினரால் கடந்த ஆண்டு முதல் இவ் உலக  நாடக திக விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
 அரங்கிற்கான வரலாறு என்பது நீண்டநெடியதாகும். அவ்வரலாற்றினை நகர்த்திவந்தவர்கள் காலத்தின் மறைவிற்குள் சென்ற போதிலும் ஒருசிலரது வாழ்வே தேசத்தின் வரலாறாகிப் போகின்ற சூழ்நிலை சகதி;க்குள் ஈழத்து அரங்க வரலாறும் புதைந்து போனமை தவிர்க்க முடியாதாகும்.

எனினும் சமூகத்தின் இயங்கியலுக்காக தம்வாழ்வியில் துயரங்களினை புதைத்து சமூகத்தின் மகிழ்வே தமது மகிழ்வாக தமது வாழ்வினை   நினைவில் மரித்துப்போனவர்களினை நினைவேந்திக்கொள்வதற்காகவும் அவர்களது பணியின் அறாத்தொடர்ச்சியின் பேனுகையாகவும் அவ்வரங்கவியலாளர்களை நினைவில் நிறுத்திக்கொள்வதற்காகவும் இத்தினம் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் காணப்படுகின்றது.
பெரும்பாலனவர்களது கதையாடலாக நாடகக்கலை வீழ்ச்சியடைந்து விட்டதுமரபுவழிக்கலைகளின் பேனுகை அவசியம் என்பதாக அமைகின்றது.
இப்பகைப்புலத்தில் வீழ்ச்சியடையும் நாடககலையினை  எழுர்ச்சியடைய செய்வதற்கான செயற்ப்பாடுகள் ஆக்கபூர்வமானதாக மேற்கொள்ளப்படுவதுடன் இளம் தலைமுறையினரது நாடக செயற்ப்பாடுகளை ஊக்குவிப்பதுடன் சமகாலத்தின் பதிவுகளாக அரங்க செயற்ப்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுஅணைவரது இணைவுடனும்சர்வதேசம் நோக்கியதான அரங்கபயனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டியது பொறுப்பு வாய்ந்த  அரங்கவியலாளர்களது தார்மீக கடமையாகும்

 நன்றி யாழ் தினக்குரல் 27.03.2014




                 ஊம ஆற்றுகை  

(எஸ்.ரி.அருள்குமரன்)
நாடகங்கள் பல பரிமானங்களினை உடையவைஆகும். வடிவங்கள் ஒவ்வொன்றும் கால மாறுதல்களிற்கும் கருப்பொருளின் பேசு பொருள்களிற்கும் ஏற்ற வகையில் வடிவங்களினை தர நிர்னயம் செய்வதுடன் புதிய  வடிவங்களாக மீள் பிரசவம் பெறுகின்றன.
அப்பின்னனியில் ஊம நாடக வடிவங்கள் ஒரு காலத்தின் உற்ப்பத்தியாகும். வர்தைகளிற்கான அர்தங்கள் மௌனித்து போகின்ற கனத்தில் பிற வடிவங்களிற்கானதேவைகள் ஏற்ப்படுகின்ற போது நாடகங்கள் இவற்றின்மையங்களினை கொண்டு வெளிப்பட்டன.

நடிகனதுஆற்றுகைத்தளத்தில் உடல்,மனம், குரல் எனும் மூன்று மூலகங்கள் இணைகின்றபோது ஆற்றுகைள் உயிர்ப்பு பெறுகின்றன என்கின்ற போதும் குரல் மொழியின் பயன்பாடு அற்றுப்போகின்ற போதிலும் ஆற்றுகைகள் தாக்கவன்மையானவையாக மிளிர முடியும்  என்பதற்கு சான்றாக  ஊமஆற்றுகைகள்(ஆiஅநீடயலள) விளங்குகின்றன.

உடல் மொழி கொண்டு உணர்வுகளின் இணைப்பின் மூலம் ஆற்றகையின் சாத்தியப்பாட்டினை ஏற்ப்படுத்தக்கூடியனவாக விளங்கும் இவ்வாற்றுகைகள் மொழியின் ஊடாக சொல்ல முடியாது போகின்ற போது அல்லது மொழியின் தேவைப்பாடு ஆற்றுகையில் தேவையற்று போகின்ற போது இவ் உடல் மொழி முதன்மையாக ஆற்றுகையாக பார்வையாளர் மத்தியில் காத்திரமானவகையில் கொண்டு செல்வதற்கு உதவுகின்றன.
 கலைப்படைப்பு என்பதே பார்வையாளர்களிற்கான வகையில் அவர்கள் புரிந்து கொணள்ளக்கூடியமொழியில் அவர்களது உணர்வுத்தளத்திற்கு எற்ற வகையில் வெளிப்படுத்துகின்ற போது தான் ஆற்றுகை தான் வெளிப்படுத்த நினைத்ததினை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும்.
 இப்பின்னனியில் திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் மாதந்தோறும் ஆங்கிலத்தில் நடாத்தப்பட்டு வருகின்ற    'கருத்தாடல்களம்' (குழசரஅ) என்னும் கருத்துப்பரிமாற்ற நிகழ்வில்  பரிணாம வளர்ச்சியும் அதன் நிறைவும் என்னும் பொருளில்  திருமறைகலாமன்றத்தினரால்  நடத்திய '13.710pஸ்ரீழ' என்ற வார்த்தைகளற்ற நாடகம்   கலைத்தூது கலையகத்தில் மேடையேற்றப் பட்டது.
நீ.மரியசேவியர் அடிகளின் எண்ணத்தில்  எழுத்துருவாக்கப்பட்டு    பி.எக்ஸ்.கலிஸின்  நெறிப்படுத்தலில் . 'ஊம ஆற்றுகையாக  'கறுப்பு அரங்கின்' நுட்பங்களும் காணொளி நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு நிகழ்த்ப்பட்டன.

பிரபஞ்சத்தின் உருவாக்கம் முதல் முடிவுவரையான விஞ்ஞானக்கொள்கையை அடிப்படையாககொண்டு இந்நாடகம் தயாரிக்கப்பட்டது.

இவ் ஆற்றுகைக்கான  நெறியாள்கையினை பி.எக்ஸ்.கலிஸ்  இசையினை ஸ்ராலின் ,வேடஉடை ஒப்பனை அன்று யூலியஸ் ,நடனவாக்கம் சுதர்சினி கரன்சன் எல்.பி.செனவரத்தின  மேற்ப்பார்வை ஒழுங்கமைப்பு மரிய சேவியர் அடிகளார் ஒழுங்கமைப்பு சதீஸ் ஜெகன்  ஒளியமைப்பு துசி ஒலியமைப்பு ஜோசப் ஆகியோர்  மேற்க்கொண்டனர்.

 இவ்வாற்றுகையில் அவிசாவளை , மொனறாகல ,வவுனியா யாழ்ப்பாணம், இளவாலை ,முழங்காவில், கிளிநொச்சி, புத்தளம்  ஆகியி பிரதேசத்தினைச் சேர்ந்த கலைஞர்கள் ஆற்றுகையினை மேற்க்கொண்டனர்.
இவ்வாற்றுகையானது  பூமியினது தோற்றம், இப்பூமிப்பந்தில் உயிரினங்கள் தோற்றம் பெற்றமையும் இவ்உயிரிகளில் முதன்மையான உயிரியாக  மதி;க்கப்படுகின்ற மனிதனது தோற்றம்  அவ் மனிதன் எவ்வாறு பரினாம ரீதியாக வளர்ச்சி பெற்றனாhன் என்பதினையும் அவ்வாறு வளர்ச்சி பெற்றவன் எப்படி தனது ஆற்றல்களினையும் அறிவினையும் பயன்படுத்தி மனிதர்களினை வெற்றி கொண்டு அவர்களினை அடிமைகளாக்கி தனது சுய தேவைகளிற்காக பயன்படுத்திக்கொண்டான் என்பதினையும் அவ்வாறு பயன்படுத்திக்கொள்கின்ற போது ஏற்படுகின்ற அழிவுகளும் அதன் பாதிப்புக்குளும் மனித குலத்திற்கு எத்தகைய தாக்கத்தினையும் ஏற்ப்படுத்துகின்றது என்பதினை வரலாற்று ரீதியான அறாத்தொடர்ச்சியுடனும் விஞ்ஞான பூர்வமான அனுகுமுறையுடனும் அழகியல் நேர்த்தியுடன் கலைத்துவ படைப்பாக அளிகை செய்யப்பட்டது.
பரீட்சார்த்த அரங்கு என்கின்ற அரங்க முறையானது 1945களில் மேலைத்தேய அரங்ககளில் அறிமுகப்படுத்தப்பட்ட அரங்க முறையாகும். அதாவது மேடை அளிக்கைகளில் நவீனத்துவ ரிதியிலான தொழில்நுட்ட அம்சங்களினையும் இணைந்து ஆற்றுகை செய்வதினை குறிக்கும் அதாவது நாடக அளிக்கையில் பார்வையாளர்களடன் நேரடியாக நடிகர்கள் தோன்றுவார்கள் நடிப்பார்கள் அவர்களுடன் நேரடியாகவே தமது உணர்வுகளினை பகிர்ந்து கொள்வார்கள். மாறாக இப்பரிட்சார்த் முறையிலான அரங்கிலே மேடையில்  தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி காட்சிகள் காண்பிக்ப்படும் அக்காட்சிகளின் ஊடாக நாடகத்திற்கான காட்சிகள் நகர்த்தப்படும் இவ் உத்திகள் பயன்படுத்தப்பட்டமைக்கான காரனமாகநோக்குகின்றபோது அக்காலப்பகுதியில் இரண்டாம் உலக மகாயுத்தம் நிவைடைந்த காலப்பகுதயில் மக்கள்யுத்த காலப்பகுதியில் அநுபவித்த துன்ப துயரங்களினை ஆற்றுகையாக நடிகன் நடித்து காட்டுவதினை விட உண்மையான காட்சிகளினை மக்கள் மத்தியில் காண்பிக்கின்றபோது அவர்களிடையே உணர்வியல் ரீதியிலான பதிவுகள் எற்ப்படுத்தப்படுவதுடன் நாடக காட்சிகளனை இலகுவாக கொண்டு செல்ல முடியும் என்பதினாலாகும். இப்பின்னனியில் வலுவான வடிவமான பரீட்சார்த்த அரங்க உத்திகள் காணப்படுகின்றன.

இப்பின்;னனியிலே இவ்வாற்றுகையிலும் பரீட்சார்த்தஅரங்க உத்திகள் ஆரம்பகாட்சிகளான  பிரப்ஞ்சத் தோற்றம் ,உயிரினது தோற்றம் மற்றும் மனிதனது தோற்றம், பரினாம வளர்ச்சி என்பன காணொளியில் காண்பிக்கப்பட்டு மனிதன் நாகரிகம் அடைந்ததன் பின்னரான காட்சிகளுடன் அளிக்கைக்குரியதாக நடிகர்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.
 ஊம அரங்கின் நடிகனது பிரதான பலம் உடல் மொழியாகும் வார்தையற்ற வகையில் உடல் மொழியினை பயன்படுத்துகின்றபோது உணர்வுரீதியான வகையில் பாத்திரங்களினை சிந்திக்கின்ற வகையிலே அதன் தாக்கவன்மையான பெறுமானம் வெளிப்பட்டு ஆற்றுகை உயிர்ப்புடையதாக மாற்றமடையும்.

இங்கு ஆற்றுகையாளர்கள் இயன்ற வரை வெளிப்படுத்தியபோதிலும் இன்னும் சிறப்பான வகையில்  வெளிப்படுத்துகின்ற போது மேலும் ஆற்றுகை சிறப்பானதாக  உருவாவதற்கான சாத்தியப்படுகள் உள்ளன.
ஆற்றுகையின் பெரும்பாலான நகர்வுகள் நடனக்கோலங்களின் ஊடாகவே நகர்த்திசெல்லப்பட்டன. இவை காட்சிகளில் உள்ள  நடிப்பிற்கான சாத்தியப்பாடுகளினை மட்டுப்படுத்திவிட்டமை போன்ற மனப்பதிவு ஏற்ப்பட்டது. காரனம் ஊம ஆற்றுகைள் வார்தையற்று போகின்ற போதிலும் காட்சிகளிள் ஊடான ஆற்றுகை வெளிப்பாட்டிற்கான வாசல்களினை திறந்து விட வேண்டும.; அப்போது தான் சவால் மிக்க நடிப்பினை ஆற்றுகையாளன் மேற்கொள்ள முடியும் அவ்வாறு மேற்கொள்கின்ற போது தான் ஆற்றுகையின் தரம் உயிர்பானதாக அமையும்.

 சிறப்பான வகையில் நடனக்கோலங்கள் இருந்தன அவை ஆற்றுகையின் போக்கிலே சலிப்பு தன்மையினை எற்ப்படுத்தவில்லை என்பது ஒருபுறம் இருக்க மாறாக பெரும்பாலும் நடனத்துடன்  நகர்த்தி செல்லல் என்பது ஆற்றுகையின் குறைபாடாகவே நோக்க வேண்டியுள்ளது.
ஆற்றுகையாளர்களர் தமது பாத்திரத்தின் தன்மை உணர்ந்து  ஆற்றுகையினை வெளிப்படுத்தியிருந்தனர்.

 பல பிரதேசத்தினை சேர்ந்த ஆற்றுகையாளர்கள் ஒன்றினைந்து இவ்வாற்றுகையில் பாகமாடியிருந்தமைசிறப்பான விடயமாகும். அத்துடன் பலமான விடயமாகவும் காணப்படுகின்றது. காரனம் ஒவ்வொரு பிரதேசத்தில் உள்ளவர்களிற்கும் தனித்துவமான உடல் மொழி மற்றும் பாத்திரப்பொருத்தம்  என்பன அவ்வாற்றுகையின் மையத்திற்கு எற்ற வகையில் வெளிப்படுத்த உதவியமை சிறப்பான விடயமாகும்.

இத்தகையவகையிலான வகையில் ஆற்றுகைள் இடம்பெறுவது வரவேற்க்ப்படவேண்டியவிடயமாகும்.
 நன்றி 
ஞாயிறு தினக்குரல் 25.05.2014