என்னைப் பற்றி

சனி, நவம்பர் 12, 2022

(எஸ்.ரி.அருள்குமரன்) ஆயிஷா ஒருவிஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை
ஆசிரியர்.இரா.நடராசன் வெளியீடு- புக்ஸ் ஃபார்சில்ரன் 21ம் அச்சு –செப்ரெம்பர் 2016 ஆயிஷா இந்தப்பெயருக்குள் புதைந்து கிடக்கின்ற துயரங்கள் ஏராளம். கேள்விகளால் உலகை ஆழ்பவர்கள் குழந்தைகள். கேள்விகளில் தான் தங்களது உலகம் எனநினைப்பவர்கள் மாணவர்கள். தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் வாழ்வில் பசியிருக்கும் என்றார் கவிஞர் வைரமுத்து தனது பாடலொன்றில். கேள்விகள் பல விடைதிறப்பிற்கான களங்கள். இல்லையேல் மேலும் வினாக்கள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்பு திறக்கும்.இதுஒரு தொடரிச்செயற்பாடு. உலகம் எப்போது உருவாகியது எப்போது முடிவுறும் என்கின்ற வினாக்களிற்கு மிக கட்சிதமாக விடைபகிரமுடியாதோ அதுபோன்று குழந்தைகள் உலகத்தினர்கேட்கின்ற கேள்விகளிற்கு விடை பகிரா முடியாதிருக்கின்றது என்பது யதார்த்தம்.ஆனால் அவர்களது கேள்வி கேட்கின்ற தாகத்தினை அதிகரிக்கவேண்டும் அத்தாகமே அவர்களை உயிர்ப்புள்ளவர்களாக வைத்திருக்க உதவும் ஆனால் வெறுமனே மனனமாக்குகின்ற கல்விப்புலச்சூழலிற்குள் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கூட எழுவினாவே. ஆயிஷாகுறுநாவலா? சிறுகதையா? எந்த வகுதிக்குள் உட்படுத்துவது? ஆனால் மாற்றத்திற்கான வாயில் திறப்பிற்கான முகவரி. ஆயிஷா இந்தப்பெயர் இன்று பலரது உதடுகளிலும் உச்சரிக்கப்படுகின்றது. இக்கதை ஏற்படுத்துகின்ற அதிர்வலைகள் ஏராளம். கதையைப்படிக்கின்றபோது ஏற்படுகின்ற நுன்துயர் வார்த்தைகளிற்கு அப்பாற்பட்டது. இதை வெறும் கதை என புறம் தள்ளிவிட்டு செல்ல முடியாத மனப்பிரமை ஏற்படுகின்றது. மாற்றத்திற்கான மடைதிறப்பினை ஏற்படுத்தவேண்டியவர்களே மாற்றமற்ற புறச்சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனர் என்கின்ற வலி நிறை மன உணர்வு மேலெழுகின்றது. இலக்கியம் மாற்றத்திற்கான செயலிஎனும் வகையில் இப்படைப்பு பல மாறுதல்களை கொண்டு வந்திருக்கும் அல்லது கொண்டு வரும்என்கின்ற நம்பிக்கையுடன்... இந்த ஆயிஷா எனும் படைப்பு அறிமுகமாகிய கணபொழுதினை நினைத்துப்பார்க்கின்றேன். பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் நன்பர் மூலம் இந்த புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஒரே மூச்சில் என்று குறிப்பிடுவார்களே அதே போன்று வாங்கிய கனத்திலே புத்கத்தை வைத்துவிடாமல் வாசித்து முடித்த புத்தகம். இதற்கு காரனம் ஆயிஷாவின் துயரா?இ எழுத்தாளரா எழுத்துவன்மையா? பேசப்பட்ட விடயமா? எது என்று அப்போது சொல்ல முடியாத நிலை. ஆனால் அக்கதை பல செய்திகளை கிளறிவிட்டிருந்தது. அதன் அதிர்வலைகள் இன்றுவரை தொடர்கின்றது. அந்த புத்தகத்தை எனது தனிப்பட்ட நூலகத்திற்குசேமிப்பதற்காக தேடியபோது அதை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆயினும் 2017ம் ஆண்டில் பெற்றுக்கொள்ள முடிந்தது. சரி அவ்விடயம் நிற்க விடயத்திற்கு வருகின்றேன். இந்நூல் பற்றி டாக்டர் ஆர்.ராமானுஐம் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'இந்தக்கதையில் வரும் ஆயிஷh அவ்வளவு சுலபமாக எதையும் நம்பிவிடமாட்டாள். கேள்விகளைக்கேட்டு பூரணமாக விளக்கம் தேடுபவள். ஆயிஷாவின் அறிவுத்தாகம் ஆசிரியர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது. தாகம் இருந்தாலும் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள் எத்தனையோ அவர்களுக்கும் இந்தக்கதையில் வரும் ஆசிரியை போன்ற உறுதுணை கிடைக்க வேண்டும். நூலாசிரியர் இவ்வாறு பதிவு செய்கின்றார். 'இத்தனை வருடத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் என்ன பெரிதாக மாறிவிட்டதுஇகாலையில் எழுந்து பல்துலக்குவதைஉற்சாகத்தோடவா செய்கிறோம்?எப்போதாவது புதிய பிரஷ;.அல்லதுபேஸ்ட்! இங்கே அதுவும் இல்லை.அதே ஓம்ஸ் விதி; ஒரோ சொல் பிரிதல் புதிதாகத்தெரிந்துகொள்ளும் ஆர்வமற்று ஓர் எந்திரமாய் கிரீச்சிட்டுக்கொண்டிருந்த என்னை என்முகத்தில் கேள்விகளால் ஓங்கி அறைந்தாள் ஆயிஷh.'( பக் 5) என குறிப்பிடுகின்றார் வகுப்பறையில் கற்றல்செயற்பாட்டினை வழமை போன்று மேற்கொண்ட ஆசிரியைக்குஆயிஷhவின் கேள்விக்கனைகள் வேறொரு பரிமானத்தை ஏற்படுகின்றது. வகுப்பறையில் வினவப்பட்ட வினாவின் தொடர்ச்சியாக கதையில் நகர்கின்ற போது... ' 'முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை ஒரே நேர்கோட்டில் வெச்சா..எதிர் துருவங்களை கவரும் அதன் இயல்பு என்ன ஆகும்.' '..........' 'ஒரு காந்தத்தின் வடக்கு மறு காந்தத்தின் தெற்கை இழுக்கும்.ஆனால் இழுபடும் காந்தத்தின் வடக்கே அடுத்துள்ள காந்தம் ஏற்கனவே இழுத்துகிட்டிருக்கும் இல்லையா..மிஸ்?' 'ஆமா அதுக்கென்னன்ற?' 'என் சந்தேகமே அங்கதான் இருக்கு.எல்லாக்காந்தங்களின் கவர்திறனும் உன்றெனக்கொண்டால் அவை ஒட்டிக்கொள்ளத்தான் வாய்பே இல்லையே..எப்புறமும் நகராமல் அப்படியே தானே இருக்கும்' '................' 'ஏன் நாம இந்தப்பிரபஞ்சம் முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை நேர்கோட்டில் வைத்ததுபோல் அமைக்கப்பட்டதா வெச்சிக்கக்கூடாது? அந்தக்கோணத்தில் பூமிங்கற காந்தத்த ஆராயலாம் இல்லையா? பதின்மூன்று வருடப்பள்ளி வாழ்கை பின் மூன்றாண்டு இயற்பியல்-பல்கலைக்கழகத்தில் இப்படியொருகேள்விளை நான் கேட்டுக்கொண்டதாக நினைவில்லை.'எங்கோ படித்ததாக ஞாபகம் என்றேன்.ஏதாவது சொல்லவேண்டுமே! 'வுhந வுசரவா ழுக ஆயபநெவள வெட்ரோட் ஸ்ரூடண்ட கிங்லீங் எழுதியது அருமையா இருக்கு.. படிக்கிறீங்களா மிஸ்..' 'இந்த புத்தகமெல்லாம் நீ படிக்கிறியா?' அவ்வளவு தான் -என் ஆயிஷh கிடைத்துவிட்டாள்.அந்த அதிர்ச்சியில் இருந்து இன்றுவரை மீள முடியவில்லை.அறை வாங்கியவளைப்போல புத்தகத்தை வாங்கிக் கொண்டு சரசரவெண ஆசிரியர் அறைக்கு நடந்தேன்.' (பக் 6-8) கல்விமுறைமையில் ஆசிரியர்களது நடத்தை முறை வன்முறையாக மாறிச்செல்வதனை வேதனையுடன் பதிவசெய்கின்றார் இவர் இதற்கு அடிப்படையாக பின்வரும் கூற்றினை குறிப்பிடலாம் 'கடவுளே எங்கள் குழந்தைகளை ஆசிரியரிடமிருந்து காப்பாற்றும்' (பக் 12) 'ஆயிஷாவின் உறவில் தான் நான் உனர ஆரம்பித்தேன்.எவ்வளவுதூரம் விஞ்ஞானமற்ற முறையில் நாம் நம் குழந்தைகளுக்கு விஞ்ஞானம் போதிக்கிறோம்என்று. நாம் எங்கே குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்டவிஷயத்தை உணர்ந்து கேள்வி கேட்க அவகாசம் தருகிறோம்? அவர்கள் கேட்கத்தொடங்கும் முன்னரே நாமாக முன்தயாரிக்கப்பட்ட கேள்விகளால் அவர்களை மூழ்கடித்து விடுகின்றோம்.அறிவும் வளருவதில்லை.பள்ளியில் ஆசிரியர் அதிகம் சொல்வது எதை? கையைக்கட்டு...வாயைப்பொத்து...' (பக் 17) '... கடவுளே ...அவரவர் அறிவைப்பயன்படுத்த அனுமதியுங்களேன்...'(பக்19) ..... ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு போவதற்குள் என் ஆயிஷh பிரிந்துவிட்டாள்.எப்பேர்பட்ட ஆயிஷh.நான் தாங்கிக்கொள்ள முடியாதவளாய் குழந்தைமீது பரண்டு அழுதேன்.இனி என்ன? உங்களுக்கு திருப்ப்தி தானே மிருகங்களே..என் ஆயிஷhவைஇஒப்பற்ற அந்த அறிவுக்கொழுந்தைக்கொன்று தீர்த்துவிட்டீர்களே.போங்கள்இஇனி உங்கள் வகுப்புக்கள் எளிமையானவை...அறிவுக்கு அங்கே வேலை இல்லை.' (பக் 22) இந்நாவல் எழுதுவதற்கான அடிப்படையாக திண்டிவனத்துக்கு அருகில் ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்துகண்டு பிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச்சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தை தழுவினான். இந்த உண்மைசம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு ஆயிஷா நாவலை இவர் எழுதியுள்ளார். 1985ம் அண்டு எழுதப்பட்டு பல வருடங்களாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்படாது இருந்த இந்நாவல் 1995 ம்ஆண்டு கனையாளிகுறுநாவல் போட்டியில்இரா.முருகன்இசுஐhத்தா ஆகியோர் நடுவர்களாக இருந்து கொண்டு தெரிவுசெய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. இன்று லட்சம்பிரதிகளை தாண்டி விற்பனையிலும் சாதனை படைத்து வருகின்றது. ஆயிஷாவை வெறுமனே கதையாகக்கொள்ளாது கற்றலில் ஆர்வம் இருந்தும் கல்விமுறைமையினாலும் சில ஆசிரியர்களது நடத்தையினாலும் கற்றலில் இருந்து தூரப்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாணவர்களது வலிநிறை வாழ்வியலில் ஆயிஷh இருப்பாள் என்பது துயர்மிகு கதை.....

ஞாயிறு, நவம்பர் 06, 2022

நூலின் பெயர்- ரோஸ் நூலாசிரியர்- ஆயிஷஇரா-நடராசன் வெளியீடு – புக்ஸ் ஃபார் சில்ரன்
ரோஸ் அதாவது றோசாப்பூ. பூக்களின் மீதான பிரியம் அலாதியானது.மரங்களை நாட்டுவதும் அவை வளர்ந்துவருகின்றபோது நாம் அடைகின்ற புளகாங்கிதமும் இபூத்துக்குளுங்குகின்றபோது அவற்றை பார்க்கின்றபோது மதில் ஏற்படுகின்ற மனமகிழ்சியும் உணர்ந்துகொண்டவர்களால் தான் அதை புரிந்துகொள்ளமுடியும். இங்கும் பூவின் மீது சிறுவன் காட்டுகின்ற பிரியமும்.அப்பூவின் ஸ்பரிசத்தினை உணரமுடியாது போகின்ற ஏக்கமுமே இக்கதை. இயந்திரமயமாகிப்போன வாழ்வியல் சூழலுக்குள் ஊடாhட முடியாமல் போன ஏக்கமும்.ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதுபோன்ற குறிப்புநிலைக் கல்வி முறைமையில் உள்ள பலவீனங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. காலைவேளை மகனை பாடசாலைக்கு அனுப்புவதற்காக வேலைக்கு செல்கின்ற பெற்றோர் படுகின்ற சிரமத்தில் ஆரம்பிக்கின்றது.அவன் எழுந்து ரோஸ் பூத்திருக்கிது அம்மா அதைபாக்கவேனும் என மகன் ஆசைப்படல்.தாய் பள்ளிக்கு நேரமாகிறது என்கிறாhட.அவ்வேளை அவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக்குறிப்பிடல். அவன் வீட்டுப்பாடம் செய்ய உதவுதல் உணவு தயாரித்தல் எனபரபரப்பானதான வீட்டுச்சூழல் காணப்படுகின்றதுஇத்தகைய படபடப்பிற்கு மத்தியில் அவனை தயார்ப்படுத்தி பள்ளிக்கு அனுப்பிவிட்டு தாம் அலுவலகம் செல்கின்றனர். பள்ளியில் ரோஸ் பற்றி ஒவ்வொரு பாட ஆசிரியரும் தமது பாடத்திற்கு ஏற்றவாறு கற்பிக்கின்றனர். அவன் எங்கட வீட்டில றோஸ் பூத்திருக்கிது மிஸ் என்கின்றான். அதற்கு அவர்கள் அந்த கதையை விட்டிட்டு படிப்பில கவனம் செலுத்து என்கின்றனர். ஒவ்வொரு நிலையிலும்அவன் முகம்கொடுக்கின்ற ஏக்கங்கள் கதையில் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளி நிறைவடைந்த பின்னர் கராத்தே வகுப்பிற்குசெல்லல்.அலுவலக கடமை நிமிர்தம்பெற்றோர் காலதாமதமாகவரல். இனி இரவு உணவுசமைத்தல் கடினம் என ஹொட்டல் ஒன்றில் உணவருந்துதல். வீட்டிற்கு வருகின்ற போது அம்மா றோஸ் வாடிச்சிது எனக்குறிப்பிடல். இந்த ஏக்கத்திலோ என்னவோ அவனுக்கு ஜீரம் (காய்ச்சல்) அடிக்கின்றது. அவன் அம்மா ரோஸ் இனியும் பூக்குமா எனக்கேட்டல்..தாய் பூக்கும் என சொல்லல். அவனுக்குமருந்து கொடுத்தல் நாளைக்கு என் ஆபீஸ் போச்சா எனக்கேட்ட்டல் என்பதாக அமைகின்றது. மிஸ்... மிஸ்...நான் சொல்லுறன்மிஸ்..எங்க வீட்டில ஒரு செடில நிஜமாகவே ரோஜாபூத்திருக்கிது மிஸ்...நான்பாhத்தேன்மிஸ்..ரெட் கலர் மிஸ்;.. செடில ரோஸை பார்க்கிறதுபெரிசில்லை.. ரோஸ்.ரோஸ்ன்னு எழுதிப்பாரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம...கரெக்டா எழுதிப்பழகு..புரியுதா..உட்காரு..உடனே ரோஜாவோட சிவப்பும் இல்லாம லில்லியோட வெள்ளையும் இல்லாம ஃப்ளோரா புதுசா ஒர பூவை உருவாக்கியதாம்...அதுதான் லோட்டஸ்..சொல்லங்க.. ஆர்...ஓ..எஸ்..இ..ரோஸ்....எல்..ஐ..எல்.ஓய்...லில்லி..(பக்23) பூக்காத தாவரம் அதுக்கு மேல வளராதா மிஸ்.. அதை வெட்டி எடுத்து வைக்க வேண்டி வரலாம்..உதாரணத்துக்கு ரோஜா ரோஜா செடியை வளர்க்க பதியம் போடுவார்கள் . அதெல்லாம் எனக்கு வேண்டாம்.. புக்குல இருக்கிறத படி..போதும். மிஸ்... என்னடா.. பூக்காத செடிய வெட்டி வைக்க வேண்டி வரும்னு சொல்றீங்க..வெட்டி வைச்ச ரோஜ பூக்குதே.. அது எதுக்கு மிஸ்... ஆமா மிஸ் ரோஜா எதுக்கு பூக்குது.. மிஸ்...மிஸ்.. எங்கவீட்ல ஓரு செடில நிஜமாவே ஒரு ரோஜா பூத்திருக்கு மிஸ்..ரொம்ப அழகா இருக்கு மிஸ்.. நான் பாத்தேன்... கொஞ்சம் விட்டா..ரொம்ப நான்சென்ஸா கேள்வி கேப்பீங்களே..எடு..புக்க..படி... ரோஸ்..ஈஸ்...எ..ஃப்ளவரிங் பிளான்ட்.(பக் 29-30) ........................................................................................... மிஸ் ரெட் சாயில்லதானே ரோஜா வெடி வளரும்... ஆ..ஆமாம்.. மிஸ்..தேவா வீட்டில இன்னிக்கு ஒரு செடில ரோஜாப்பூ பூத்திருக்கு மிஸ்... ஆமா மிஸ்..அழகா இருக்கு..நான் பாத்தேன் மண் வளம்.. சாயில் பவர்..நல்லாயிருந்தா ரோஜா பூக்கர்துக்கு என்ன?நல்லாவே பூக்கும்.. ரோஜா என்ன கலர்மிஸ்.. ஏய் சாயில் பத்தி பாரு..கண்ட கண்ட கேள்வியெல்லாம் கெட்டுக்கிட்டு..ஸோ..ரெண்டு வகையான சாயில்..அலுவியல சாயில்..ரெட் சாயில்..அலுவியல்...ஸ்.பெல்லிங் சொல்லுங்க பார்ப்போம்.(பக் 37) அம்மா நம்ம ரோஜா செடி இன்னொரு பூ பூக்குமா.. ஏம்மா அந்தப் பூ வாடிப்போச்சு.. நீஇன்னும் தூங்கலியா..மணி.. என்ன? அம்மா எனக்கு ரோஜாவ பாக்கனும்மா...நிஜரோஜா ..மிருதுவான ரோஜா..வாசனை வர்ற ரோஜா..அதை தொட்டுப்பாக்கணும்மா.. என்னங்ககொழந்தைக்கு நல்லா ஐPரம்அடிக்குது எழுந்திருங்க.. நம்ம வீட்டிலயே செடில பூத்த அழகான ரோஜாஜா..எனக்கு வேணும்ம. ஆமா..ஜீரம் அடிக்குது.. ரோஜாக்காரன் கார்த்தால வந்தான் இல்ல..ஒண்ணு வாங்கிக் கொடுத்தா என்ன? பாருங்க.. கொழந்தையை எப்படி பாதிச்சிருக்கு.. எழுந்து இந்த மாத்திரய போட்டுக்கடா..அழக்கூடாது.. நாளைக்கு என் ஆபிஸ்போச்சா.. எனக்க நிஐ ரோஜா தான் வேனும்.. நம்ம வீட்டில செடில மறுபடி ஒரு ரோஜாப்பூ பூக்குமாம்ம..சொல்லுமா.. உம்..உம்.. கட்டாயம்பூக்கும்டா..என் செல்லமே.. இப்ப தூங்கும்மா..தூங்கு..நேரு மாமா மாதிரி தினமும் ஒரு ரோஜா குத்திக்கிட்டுகோகலாம்..எல்லாம் உணக்குத்தான். தூங்கு..அழாதப்ப.. (பக்62-64) இந்நூலாசிரியர் ஆயிஷா .இரா.நடராசன் 2014ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர்.தமிழின் முன்னனி அறிவியல் வரலாற்றாளர்.இயற்பயில்இகல்விஇமேலான்மைமற்றும் உளவியல் ஆகியவற்றில் முதகலைப்பட்டம் பெற்ற இவரது நூல்களில் உள்ள எளிமையும்.அங்கதம் கலந்த நகைப்புணர்வும் முக்கிய அறிவியல் எழுத்தாளராக அறியவைத்துள்ளது. நூல் பற்றி அட்டைப்படத்தில்பின்வரும் குறிப்பு உள்ளது. 'இன்றைய கல்வி முறையும் வாழ்க்கைச்சூழலும் வளர்ச்சி குறித்த சமூக மதிப்Pடுகளும் எப்படி கேள்விகளையேவிரும்பாமலும் தேடலை முன்வைக்காததுமாக இயங்கி வருகின்றது என்பதையும்அறிவுசார் தேடல் உள்ள ஒரு குழந்தை எப்படி இந்த கல்வி முறையால் வதைபட வேண்டியிருக்கின்றது என்பதையும்ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன் தனத 'ரோஸ்'என்ற கதை மூலம் முன்வைக்கின்றார்.'
நூலின் பெயர்- செகவ் வாழ்கிறார் நூலாசிரியர்- எஸ்.ராமகிருஷனன் வெளியீடு – உயிர்மை பதிப்பகம் கலைப்படைப்பாளிகளிற்குமரணம்இல்லை.அவர்களது உயிர் உடலில் இருந்து பிரிந்தாலும் உணர்வுகளில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களது படைப்புக்களின் ஊடாக அவர்கள் எப்போதும் ஜீவிக்கப்படுவார்கள். எழுத்தாளர்களது எழுத்தின் உயிர்பு அவர்களை தலைமுறை தாண்டி இருப்புக்கொள்ளவைக்கின்றது. அவர்கள் எழுத்தாக்கத்தில் பதிவுசெய்தவிடயங்கள் ,சமூகநேசிப்பு, சமூகம் எவ்வாறு எழுர்ச்சியடைந்து மாற்றமுறவேண்டும்,சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகள் எவ்வாறு களையப்படவேண்டும் என்கின்ற ஏக்கங்கள் , தமது படைப்பில் இழையோட விட்டிருப்பதன் ஊடாக அவர்கள் காலம் ,தேசம்கடந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். இவ்வாறு காலம் கடந்து மக்கள் மனங்களில் சிம்மானம் போட்டமர்ந்திருக்கின்ற எழுத்தாளராகஅன்ரன்செகவ் விளங்குகின்றர். இவர் சிறுகதையாசிரியர்,நாவலாசியார்,நாடகஆசிரியர்,மருத்துவர், தனது எழுத்துக்களின் ஊடே சமூகமாற்றத்தை நேசித்தவர். ரஷ;யாவில் பிறந்த இவர் உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற எழுத்தாளன். இவர் எழுத்துக்களின் ஊடே மெல்லிதான துயரம் அழுத்திச்செல்வதனை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். யாழ்.பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலம் முதலே செகவ் மீது இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. .காரணம்தெரிவதில்லை.அவரது சிறுகதைகள்,நாவல்களை விரும்பி எடுத்துப்படிப்பதுண்டு. அவரது கதைகளில்இழையோடிப்போயுள்ள உளவியல் ரீதியான பார்வை ஏதோ ஒரு வகையில் ஈப்பினை ஏற்படுத்தியிருந்தது. அவர் எழுதிய செறிப்பழத்தோட்டம் நாடகம் மிக அற்புதமான படைப்பு. அவர் எழுதிய பச்சோத்தி எனும் சிறு கதையினை பல தடவை வாசித்திருக்கின்றேன். அக்கதை ஏற்படுத்திய தாக்கத்தினால் நாடகமாக்கி பலதடவைகள் மேடையேற்றியுள்ளேன். இவ்வாறு ஆதர்சனமான படைப்பாளி பற்றிய நூலினை வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்றபோது அதை எப்படி சொல்லுவது. அது ஆணந்தம்.பேரானந்தம். செகவ் வாழ்கிறார் எனும் நூலினை தேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ;னன் எழுதியுள்ளார். இவர் பற்றி அறிமுகங்களே தேவையில்லை என்கின்றளவிற்கு மிக காத்திரமான பல நூல்களை எழுதியுள்ளார். நாவல்,சிறுகதை ,நாடகம்,சினிமா என இவர் தொட்டுப்பார்க்காத துறைகளே இல்லை எனலாம். அவ்வளவு தூரம் மிக நேர்த்தியாக தனது எழுத்தின் வன்மை மூலம் இலக்கியஉலகிற்கு கனதியான பங்களிப்பினைநல்கிக்கொண்டிருப்பவர். .அவரது எழுத்தில் செகவ் வாழ்கிறார் புத்தக்தினை படிக்கின்ற போது செகவ் இன்னொரு பரினாமத்தில் தெரிகின்றார். பின் அட்டையில் இப்படியொரு குறிப்புள்ளது. 'பெண்கள் துணியில் பூவேலைகளை செய்வது போல நுட்பமான அழகுணர்ச்சியுடன், தனித்துவத்துடன் சிறுகதைகளை எழுதியவர் ஆண்டன் செகவ் என்று ரய இலக்கியத்தின் சிகரமான லியோடால்ஸ்டாய் வியந்து கூறியிருக்கிறார்.கார்க்கியும் இவன்புனினும்,குப்ரினும்,செகாவை ஷேக்ஸ்பியருக்கு நிகரான படைப்பாளியாகக் கூறுகிறார்கள்.உலகெங்கும் சிறுகதை எழுதுபவர்கள் செகாவை தங்களின் ஆசானாக கருதுகிறார்கள். இந்நூல் செகாவின் வாழ்க்கையை ,அவரது படைப்புலகை ,அவரது நண்பர்களை ,சக எழுத்தாளர்களை விரிவாக அறிமுகம் செய்கின்றது.' இந்நூலில் செகவின் வாழ்கை வரலாற்றினை மிக சுவாரசியமான முறையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். '1860 ஜனவரி 29 (பழைய கலன்டர் முறைப்படி ஜனவரி 17) அன்று தெற்கு ரஷ;யாவின் துறைமுகமான டாஹன்ராக்கில் செகவ் பிறந்தார்'.(பக் 7) 'உலகெங்கும் சிறுகதைஎழுதுபவர்கள் செகாவைத் தங்களின் ஆசானாகக்கருதுகிறார்கள்,புதிதாக சிறுகதை எழுத விரும்புபவர்களுக்கு அவர் சொல்லும்ஆலோசனைகள் முக்கியமானவை. உங்களைசுற்றிய வாழ்க்கையை உன்னிப்பாக பாருங்கள். அதில்உங்களுக்கான கதாபாத்திரம் கிடைக்கக்கூடும். அதிகப்படியான வர்னணை,தகவல்கள்,உரையாடல்கள், கதையின் இயல்பைக்கெடுத்துவிடும் நம்பும்படியான கதாபாத்திரங்கள்,எளிய,நேரடியான விவரிப்புக்கள்,உணர்வுகளை துல்லியமாக விவரிக்கும் விதம்.,தனித்துவமான கதைசொல்லும் முறை இவையே சிறந்த கதையை உருவாக்குகின்றன. கதையில் ஒரு துப்பாக்கி இடம்பெற்றால் கதை முடிவதற்குள் அதுவெடித்தாக வேண்டும் என்பது செகவ் சொன்ன அறிவுரைகளில் முக்கியமானது.அதன்பொருள் தேவையற்ற எதையும்கதையில் எழுத வேண்டாம் என்பதே' (பக்9) 13 பகுதிகளில் செகாவினுடைய வாழ்வை இந்நூலினூடாக நூலாசிரியர் பேசுகின்றார். அவ்பிரிப்பு வருமாறு. 1.என்பெயர்செகவ்.2.ஐந்துரூபில்காதலி3.தண்டனைத்தீவு,4.கலாரா காலத்தில் செகாவ், 5.செர்ரி தோட்டங்கள் அழிவதில்லை,6.டால்ஸ்டாயும் செகாவும்,7.செகாவின் காதலிகள்,8.செகாவின் தோழர்கள்,9.செகாவின் கடைசி தினங்கள்,10.செகாவின் கதையுலகம்,11.கார்வரும் செகாவும்,12.திரையில் ஒளிர்ந்த செகாவ்,13.செகாவ்சில விமர்சனங்கள் ஆகியனவே இப்பிரிப்புக்கள். 'சிறுகதைக்கலையில் தனக்கென தனித்துவமான கதை சொல்லும் முறையை கொண்டிருந்த செகாவ்,நாடககலையிலும் ஒரு புதிய போக்கினை உருவாக்கினார்.அவரது சம்பிரதாயமான நாடகங்களைப்போல மிகைஉணர்ச்சியும் திருப்பங்களுடன் கூடிய கதைகளும் கொண்டிருக்கவில்லை.செகாவின் நாடகங்களில்கதைகுறைவு என விமர்சகர்கள் கூறுமளவு அது நிகழ்வுகளை மையப்படுத்தி அங்கதச்சுவையோடு உருவாக்கப்பட்டிருந்தது. நாடகத்தில் ஒற்றை கதாநாயகன் கதாநாயகி கிடையாது.அது மாறுபட்ட கதாபாத்திரங்களின் ஊடாட்டமாக நிகழ்வெளியாக அமைக்கப்பட்டிருந்தது. ஆகவே,நாடகத்தின் எல்லா பாத்திரங்களும் சமமாகஉருவாக்கப்பட்டிருந்தன.' பக்(57-58) 'செகாவின் மரணம் 1904 இல் நிகழ்ந்தது. ரஷ;யாவை அவரைப்போல்நேசித்தவர் எவருமில்லை.ஆனால் செகாவின்மரணம் ரஷ;யாவில் நிகழவில்லை. ஜெர்மனியின்பேடன்வீலர் என்ற சுகவாசஸ்தலத்தில் அவர் இறந்து போனார் காசநோய் முற்றியநிலையில் 1904 ஆம் ஜெர்மனிக்கு சிகிச்சை செய்துகொள்வதற்காக செகவ் புறப்பட்டார். அந்த யோசனையை சகோதரி மரியா ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனாலும் செகாவ் தனது மரணத்தை தேடி புறப்பட்டார். இந்த பணயத்தில் அவரோடு உடனிருந்தவர் மணைவிஒல்கா'(பக் 99-100) அவர் கண்ட பல கனவுகளில் இதுவும் ஒன்று.. 'இந்த இடத்தில் ஒரு கல்வி நிலையம் அமைக்க விரும்புகின்றேன் அங்கே ரஷ;யா முழுவதும் உள்ள ஆசிரியர்களை அழைத்து வந்து தங்கவைத்து அவர்களுக்கு கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலையும் முக்கியத்துவத்தையும் சொல்ல ஆசைப்படுகின்றேன். இன்றுள்ள ஆசிரியர்களை ஒரு நோய்பற்றியிருக்கிறது.அது கல்வி குறித்த அலட்சியம் அதுகளைந்து எறியப்படவேண்டிய நோய்.ஆகவே ஆசிரியர்கள் இங்கு தங்கிக்கொண்டு நிறைய படிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும். அத்துடன் இசை,ஓவியம்,பாடல்,இலக்கியம் என்று தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்துநேரடி அனுபவம் பெற்றுக்கொள்ளவேண்டும். ஒருவன் ஆசிரியராக பணியாற்றுவது என்றால் சகல விஷயங்களிலும் நேரடியான அனுபவம் உள்ளவன். அது குறித்து ஆழ்ந்துசிந்திப்பவன் என்றுதான்பொருள்.ஆகவே ஆசிரியர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.அதற்கென தனியான முகாம்கள் அமைக்கப்படுவது அவசியம். ஒவ்வொரு ஆசிரியரும் தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்கவேண்டும்.எப்படி ஒரு பாடகன் தன்னுடைய பாடும் திறனைத்தினமும் வளர்த்துக்கொள்வானோ அப்படி கற்றுத்தருவதை நுட்பமாக வளர்த்தெடுக்கவேண்டும். அதுபோலவே பொதுமக்களிடம் ஆசிரியர்கள் மீது எப்போதுமே இளக்காரம்,கேலியே உள்ளது.அதுமாறவேண்டும். மக்கள் ஆசிரியர்களை மதிக்கவேண்டும்.ஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபிளுக்குக்கிடைக்கும் மரியாதை ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை.போலிஸ்காரன் குற்றவாளிகளை பிடிக்க வருகின்றான். அவனை நாம் வரவேற்று மரியாதை செய்கின்றோம்.ஆசிரியர்கள் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்த்து எடுக்கமுயற்சிக்கின்றார். அவரை நாம்மதிப்பதேயில்லை. அதுமாற வேண்டும். முதலில் ஆசிரியர்கள் மதிக்கப்படவேண்டும்குறிப்பாக ஆசிரியர்களுக்கு எதிராக யாரும் கை நீட்டி பேசவோ,பரிகாசம் செய்யவோ கூடாது.தன்னுடைய பணி இடத்தில் ஆசிரியர் சக ஆசிரியர்களுடன் இணக்கமாகப்பழகவேண்டும்.எப்படி காவல் நிலையத்தை கண்டவுடன் எவ்வளவு பெரிய ரௌடியும் அடங்கி ஒடுங்கி அமைதியாக போகிறானோ அப்படி பள்ளியை கண்டதும் அது அறிவு நிலையம் எண்று மதித்து நடக்கவேண்டும். ஒரு கிராம பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அந்த கிராமத்தின் வளர்ச்சி தன் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற பொறுப்புணர்ச்சி கொள்ளவேண்டும்.மாறாக,வகுப்பறை மட்டுமே தனது உலகம் என்று ஒதுங்கிக்கொள்ளக்கூடாது அதுபோலவே படிக்காத கிராமத்து மக்களை ஆசிரியர் ஒருபோதும் குறைவாக மதிக்கக்கூடாது. கேலி செய்யவோ,படிக்காதவர் என்று சுட்டிக்காட்டிபேதமாக நடத்தவோ கூடாது ஆசிரியர்களின் பணி என்பது ஒருவகையில்போர் வீரணை விடவும் சவால் நிறைந்தது.ஆகவே அவர்களின் அன்றாடத்தேவைகள் குறிப்பாக குடும்பத்திற்கான அடிப்படைத்தேவைகளை ,அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே வேலை செய்கின்றோம் என்று ஆசிரியர் உணரும்போது தான் கல்விநலிவடையத்துவங்குகின்றது.அது மாற்றப்படவேண்டும்.பள்ளியில் சேர்ந்துபடிக்க இயலாத குழந்தைகளுக்குப் பள்ளிக்கு வெளியில் கற்றுத்தருவதற்கு ஆசிரியர்கள் முன்வரவேண்டும். அலங்காரமான ஆடைகளை அணிந்து பகட்டுத்தனமாக ஆசிரியர்கள் நடந்துகொள்ளக்கூடாது.முறையான வெளிச்சம்,நல்ல குடிநீர்,காற்றோட்டம் உள்ள வகுப்பறை அடிப்படையானபுத்தகங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம்.ஆசிரியர்கள்நல்ல உடல்ஆரோக்கியத்துடன்இருக்க வேண்டும் கிராமப்பள்ளி ஆசிரியர்களை நகரப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் வந்து பார்வையிடுவது கிடையாது.இது மாற்றப்படவேண்டும்.கிராமத்து ஆசிரியர்கள் நகரத்திற்கும் மாநகரில் உள்ள ஆசிரியர் சிறிய கிராம பள்ளிக்கும் வருகை தந்து கற்றுத்தரும் முறைமைகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்' என்று மாபெரும்கனவுத்திட்டங்களை அடுக்கிக்கொண்டு போனார் செகவ் இதை எல்வாம் கேட்ட கார்க்கிஇவை எல்லாம் எப்படி சாத்தியமாகும் என்பது போல சிரிக்க செகவ் அதை புரிந்து கொண்டு 'இவை எல்லாம் என்னுடைய கனவுகள்.வெறும் கனவுகள். இவை நடந்தால் அன்றி ரஷ;யா முன்னேற முடியாது.முறையான ஆசிரியர்கள் இல்லாத சமூகம் மேம்படவேமுடியாது.ஒருவேளை என்காலத்திற்குள் இதில் சில மாற்றங்களாவது நடந்தால்சந்தேஷப்படுவேன்.இல்லாவிட்டால் ஏங்கி ஏங்கியே சாக வேண்டியதுதான்.வழியில் தென்படும் ஆசிரியர்களைக்கானும்போது நான் மிகுந்தவெட்கப்படுகின்றேன்.காரணம் அவர்களில் எவரும் உரிய முறையில் பேசவோ ,எழுதவோ அறிந்திருக்கவில்லை. ஆசிரியர்என்ற தோற்றத்திற்குகூட அவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை ,அதை விடவும் மக்களின் மேம்பாடு குறித்து ஒருபோதும்சிந்திப்பதேயில்லை. தன்னை சுற்றிய மனிதர்களின் மீது அக்கறை கொள்ளாதவன் எப்படி ஆசிரியராகப்பணியாற்றி முடியும்? ரஷயா மிகவும் பின்தங்கிப்போயிருக்கிறது.இங்கே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கவேயில்லை.பிரெஞ்சுதேசம்உலகம் முழுவதும்பெயர்பெற்றிருப்பதற்கு காரணம் அங்குள்ள கல்வி முறையும் அதனால்உருவான கலாச்சார சூழலும்தான்.அதை நாம் பெற்றாக வேண்டும்இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போலஇந்த சமூகம் நொறுங்கி விழுந்துவிடும்' என்று சொல்லிவிட்டுசெகவ்'இப்படியாக நான் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.இதையார் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்.வாருங்கள் தேநீர் அருந்தலாம்' என்று சொல்லி கார்க்கியை தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றார் செகவ். கல்வி குறித்த செகாவின் ஆதங்கம் அவரது சகோதரி பள்ளியைத்துவங்கிய போது சற்று தணிந்தது.தன்னால் முடிந்த பொருளுதவிகளை அதற்காகத்திரட்டிதந்தார் செகவ்' (பக்84-86) இந்நூலின் ஊடாக செகவ்வினுடைய வாழ்வை புரிந்துகொள்ளமுடிகின்றது.