என்னைப் பற்றி

செவ்வாய், ஜூலை 21, 2015

  எஸ்.ரி.அருள்குமரன்   BA(Hons) M A (Merit)

            நாட்டார் கலைகள் ஓர் நோக்கு

மனிதன் நகரிகமடைய ஆரம்பிப்பதற்கு முன்னரே கலைச்செயற்ப்பாடுகளில் ஈடுபட்டான் என்பதினை வரலாற்று தடங்களில் இருந்தும் ஆய்வாளர்களது ஆய்வுகளில் இருந்தும் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது.
மனிதர்கள் தம்மிடையே உணர்வியல் ரீதியிலான கருத்துக்களினை பகிர்ந்து கொள்வதற்கும் தமது செய்திகளினை வெளிப்படுத்தி;க்கொள்வதற்குமாக பயன்படுத்திக்கொண்ட ஊடகங்கள் கலைகள் எனக்குறிப்பிடலாம்.

இதனடிப்படையில் ஆதிகால மனிதன் தனது உணர்வுகளினை ஆரம்பத்தில் ஓவியங்களின் வாயிலாக வெளிப்படுத்தியாக குறிப்பிடப்படுகின்றது. அதாவது வேட்டையாடச்சென்றபோது கொடிய விலங்குகளிடம் அகப்பட்டுகொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்ட போது  அவற்றில் இருந்து தப்பி வந்த மனிதர்கள் தாம் பட்ட துன்பங்களினையும் தாம் எதிர்கொண்ட இடர்பாடுகளினையும் தமது சக குழுக்களிற்கு தெரிவிப்பதற்கும் தமது உணர்வினை வெளிப்படுத்துவதற்கும்  குறிப்பாக தமது பய உணர்வினை வெளிப்படுத்திக்கொள்வதற்கும் ஓவியங்களினை வடிகாலகக்கொண்டிருந்தனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில்  இன்று ஆய்வுகள் மூலம்  பெறப்பட்ட குகை ஓவியங்கள் சான்றாகின்றன.
இவ்கையில் ஒவ்வொரு கலைகளும் தமது உணர்வுர்பகிர்தலிற்கும் தமது நம்பிக்கைமுறைமைக்கும் வாழ்வியல் எத்தனங்களிற்கும் ஏற்ற வகையிலும்  கலைகள் தகவமைக்கப்பட்டதுடன் புதிய புதிய வடிவங்களும் பிரசவிக்கப்ட்டன.

கலைகளின் அரசி எனக்குறிப்பிடப்படுகின்ற நாடகக்கலையின் தோற்றம் பற்றி பல்வேறு அறிஞர்களும் பல்வேறு பட்ட கருத்து நிலைகளினை குறிப்பிடுப்படுகின்றனர். அவற்;றில் ஒரு கருத்து நிலையாக  வேட்டை சடங்கில் இருந்து தோற்றம் பெற்றது எனும் கருத்து காணப்படுகின்றது.
அச்சடங்கினை பின்வருமாறு குறிப்பிட்டு கொள்ள முடியும்.
வேட்டைக்கு செல்லும் போது கொடிய விலங்குகளிடம்  தமது சக பாடிகள் அகப்பட்டுக்கொண்டமையினால்  கொடிய விலங்குளிடம் இருந்து எவ்வவாறு தப்பித்து கொள்வதெனவும் வேட்டையின் போது பல விலங்குகளினை எவ்வாறு வேட்டையாடி கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் முன் ஆயத்தமான சில செயற்ப்பாடுகளினை மேற்க்கொண்டனர்.
அவற்றில் குறிப்பாக கொடிய விலங்ககள் தம்மை தாக்க வருகின்ற போது அவற்றினை எவ்வாறு எதிர்கொண்டு அவற்றில் இருந்து தப்பித்து கொள்வதுடன் வேட்டையில் பல விலங்குகளினை வேட்டையாடிக்கொள்வதற்கான முன் ஆயத்தமான செயற்ப்பாடாக இது அமைந்தமையினால்  வேட்டையில் பல விலங்குகளினை பெற்றுக்கொண்டதுடன்  கொடிய விலங்குகளின் தாக்கத்தில் இருந்தும் தம்மை இயன்றவழரயில் பாதுகாத்துக்கொண்டனர்.இத்தகைய  செயற்பபாட்டிற்கு தாம் மேற்கொண்ட செயற்பாடு என்பதினை நம்பிய மனிதர்கள்  வேட்டையின் பின்னரும் இச்செயற்ப்பாட்டினை மேற்க்கொண்டனர். இது தொடர் செயற்பபாடக மக்களிடையே பரவலாக ஆரம்பித்தது.இத்தகைய நம்பிக்கைகளில் இருந்து நாடக செயற்பாடுகள் உருவானதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தகைய நம்pகையான விடயங்கள் கலைகளின் பிறப்பியலுக்கான அடிப்படையாக அமைந்தன.
கலைகள் என்பது பொழுது போக்கிற்காகமட்டுமன்றி சமூகத்தின், வாழ்வியல் கூறுகளினை வெளிக்கொணர்கையிலும் பாரம்பரியம,; விழுமியம்,  போன்றவற்றினை வெளிப்படுத்துவதிலும் முனைப்புக்காட்டுகின்றன.
ஒருவர் முன்பு அநுபவித்த ஓர் உணர்வைத் தன் உள்ளத்தில் மீண்டும் எழுப்பி அசைவுகள் , கோடகள், வர்ணங்கள் ,ஒலிகள், அல்லது சொல் வடிவத்pன் மூலம்  அந்த உணர்வை உணரும் படி  செய்ய வேண்டும் இதுவே கலையின் செயலாகும் என டால்ராய் எனும் அறிஞர் குறிப்பிடகின்றார்.
எமது முன்னோர்கள்  தமது நம்பிக்கைகள் எண்ணங்கள் , சிந்தனைகள் , பழக்கவழக்கங்கள் ஆகிய வற்றினை கலைகளின மூலம் வெளிப்படுத்தினர்.
இதனடிப்படையில் நோக்கும் போது ஒவ்வொரு இனத்திற்கும் தமது தனித்துவமான அடையாளங்கள் என பலவற்றினை கொண்டியங்கும். அடிப்படையில் அவ் இனங்கள் தனித்துவமாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன.
தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும் இயந்திரமயமான வாழ்வு முறையும் மனிதர்களது வாழ்வு முறையில் மாற்றங்களினையம் கலையியல் மாற்றங்களினை கொண்ட உள்ளபோதிலும் ஆரம்பகால கலைகள் முதன்மை பெறுகின்றன.
நாட்டார் கலைகள் என பழங்காலத்து கலைகள் அழைக்கப்ட்டன. பங்காலத்து கலைகள் என அழைக்கப்ட்டமைக்கான காரணங்களாக பழைமையான கலைகளாக காணப்பட்மையினால் குறிப்பிடடிருக்கலாம்
நாட்டார் கலைகள் பற்றி ஜோனஸ் பாலிஸ் எனும் அறிஞர் குறிப்பிடும் போது
உலகில் மனித இனம் தோற்றிய நாளையே  நாட்டார் வழக்கியிலி;ன் துவக்க நாளாக குறிப்பிடலாம் இதன் nhளிவான காலம் பற்றி அறிந்து கொள்ள முடியாமையினாலே பழங்காலத்து படைப்பக்கள் என குறிப்பிடுகின்றனர் என்கின்றார்.
நாட்புற மக்கள் தமது உணர்வுகளினை  நகை ,காதல், வீரம் ,சோகம், அச்சம்,விருப்பு வெறுப்பு  போன்ற உணர்வகளினை வெளிப்படுத்தினர்.
 இவ் நாட்டுப்புற மக்கள் குழு நிலைப்பாரம்பரியங்களினை கொண்டிருந்தனர்.
, காவடியாட்டம் ,ஒயிலாட்டம் , கரகாட்டம் , கோலாட்டம், கும்மி  போன்ற பல வற்றினை குறிப்பிடலாம்.
  மக்கள் தமது வேண்டுதல்களினையும்  தமது உள்ளத்து உணர்வகளினையும் மதரீதியலான வெளிப்படுத்தல்களின் மூலம் கடவுளர்களிடையே பக்தி பூர்வமாக வெளிப்படுத்த தலைப்பட்டனர் அவ்வெளிப்படுத்தல்கள்  மேற்ப்படி கலைகளுக்கான பிறப்பியலாக காணப்படுகின்ற ன என்பதினை அறயிக்கூடியதாக உள்ள வகையில் காவடியாட்டம் எனும் கலை வடிவம் தொடர்பாக பிக்வருமாறு நோக்க முடியும்.

காவடியாட்டம்
இக்கலைவடிவமானது  முரகக்கடவளருடன் தொடர்புடையதாக காணப்படுகி;ன்றது. தமது நேர்த்திக்கடனை தீர்த்துக்கொள்ளும் முகமாக  காவடியாட்டத்தினை மேற்க்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது. முருக பக்தர்கள்  யாத்திi செல்லும் போது பல மைல் துரங்க்ள நடக்க வேண்டியிருக்கும்  அவ் வேளை முகைப்பெருமானது புகழினை பாடிய வண்ணம்  செல்வர்

முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதற்கான ஜதீகக்கதை யொன்று காணப்படுகின்றது. அவற்றினை பின்வருமாறு நோக்கலாம்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு செய்யப்படுகின்றமுக்கியமான வேண்டுதல்களில் ஒன்றாக இது விள்றகுகின்றது. இக்காவடி எடுப்பதற்கான காரணமாக அகஸ்திய முனிவர் சீடர்களில் ஒருவனான இடும்பனை அழைத்து தனது வழி;பாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கு  கந்த மலையில் உள்ள சிவசக்தி கொருபனாhன சிவகிரி, சக்தி கிரி எனும் சிகரங்களையம் கொண்டுவரும்படி கூறியதாகவும்அகஸ்தியரின் கட்டளைக்கமைய  கயிலை சென்று அவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க காவடியாக  கட்டி கொண்டுவந்ததாகவும் அவ்வேளை  முருகன் இவ்விருகிரிகளையும் நிலைபெறச்செய்யவும் இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை  நிகழ்த்pயதாகவும் இடும்பன வழி தெரியாமல்  திகைத்த போது முருகன்  குதிரை மேல் செல்லும் அரசனைப்போன்று தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து சென்று அங்குஓய்வு எடுக்கும் படி குறிப்ப்pட்டதாகவும் அதற்கேற்ப்ப  இடும்பன் காவடியை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்துவிட்டு புறப்படும்போது காவடியினை தூக்க முடியாமல் திண்டாடியதாகவும் அவ்வேளை ஏன் தூக்க முடியாமல் உள்ளது எனசிந்தித்து பார்த்த  போது  சிவகிரியின் மேல் சிறுவன் ஒருவன் கோவணாண்டியாக கையில் தடியுடன் நிற்ப்பதை கண்டான்.இடும்பனும் சிறுவனை மலையில் இருந்து இறங்கும் படி வேண்டினனான். ஆனால் அச்சிறுவனோ  இந்த மலை எனக்கே சொந்தம் எனக்குறிப்ப்pட்டதாகவும் அவ் வேளை கோபம் கொண்ட இடும்பன் அச்சிறுவனை தாக்க முயன்ற போது இடும்பன் வேரற்ற மரம் போல சரிந்து கீழேவிழுந்ததாகவும் இதை கண்ட  அகஸ்தியர் இடும்பன் மனைவியடன் சென்று முருகப்பெருமானிடம் வேண்டஇடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனை  தனது காவல் தெய்வமாக நியமித்ததாகவும் அன்றுமுதல் காவடி எடுக்கும் வழக்கம் ஆரம்பித்து விட்டதாகவும் ஜதீக ரீதியான கருத்தினை கூறுகின்றனர்.

இவற்றினை தாண்டி நோக்குகின்ற போது யாத்திiயாக செல்லுகின்ற துரம் சுமக்கின்ற பாரம் என்பன ஆண்மீகம் எனும் தளத்திலும் பக்திபூர்வமாக செயற்ப்படும் போது எளிமையாக காணப்படுவதுடன் இத்தகைய நேர்த்திக்கடன்களினை ஆற்றுகின்ற போது அம்மக்கள் வாழ்வில் தமது பிரச்சினைகளினை எளிதாக அனுகிக் கொள்ள முடியும் என்பதினை உளவியல் ரீதியான அனுகுதுறையின்பால் குறிப்பிட்டு கொள் முடியும்
இத்தகைய நம்பிக்கையின்பால் இக் காவடியாட்டம் எனும் கலை வடிவத்தின் தேற்றத்தினை குறிப்பிட்டாலும் காலப்போக்கில் அதன் தன்மையிலும் வெளிப்hட்டு வடிவங்களிலும்  மாற்றங்களினை அச்சமூகங்களே ஏற்ப்டுத்திக் கொண்டன.

இக்காவடியாட்டத்pனை அண்கள் மட்டுமல்லாது பெண்களுடன் காலப்போக்கில் ஆடியதுடன் வெறுமனே கோவில்களில் நேத்திக்காக ஆடுகின்ற முறைமையாக மட்டு மன்றி பழகி கலைத்துவத்துடன் நிகழ்வுகளிற்காக ஆடுகின்ற சூழ்நிலைகளும் பிற்காலத்தில் ஏற்ப்படுத்தப்பட்டு  இக் கலை வளர்சியடைந்ததது ஆயினும் இன்றும்குறிப்பாக  முருகன் கோவில்களிலும் பிற கோவில்களிலும் மிகவும் பக்தி பூர்வமான வகையில் இடம் பெற்று வருகின்றன.
காவடி எனும் சொல்லானது அதன் பொருள் கொள்கையில் காவு ூதடி என வகுத்து கொள்கின்றனர். காவு என்பதினை சுமத்தல் என பொருள்கொள்கின்றனர். சமத்தல் என்பது தோற்சுமையினை குறித்தாலும் நேர்திக்காக மேற்கொள்ப்படுவதினையே குறித்து நிற்கின்றது.
சமயத்தோடும் நம்பிக்கையுடனும் தொடர்புடையதான இக்கலை வடிவமானது பல்வேறு வகைப்பாட்டினை உடையதாக விளங்குகின்றது.
 இப்பின்னனியில் கவடியாட்டத்தினை அதன் நோக்கம்; ,  ஆடப்படுகின்ற முறைமை என்பவற்றின் அடிப்படையில் பல் வேறு பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

 அவற்றினை பின்வருமாறு நோக்க முடியும். அன்னக்காவடி ,பறவைக்காவடி,பன்னீர்க்காவடிஃ பால்காவடி , செடில்காவடி, ஆட்டக்காவடி, துக்குக்காவடி,பறவைக்காவடி என்பனவாக  விளங்குகின்றன.
பாற்காவடி பெரும்பாலும் சிறுவர் அல்;லது சிறமியர்கள் எடுப்;பர்.இக்காவடி ஆடப்படுவதில்லை மாறாக தோளிலே சுமந்த படி சென்;று நேர்;த்திக்கடனை முடித்துக்கொள்வதாக அமையும்
செடிற் காவடி என்பது வெள்ளியாற் செய்யப்பட்ட செடில்களை பக்தர்களின் முதுகில் குத்தி கொக்ககளின் அடியில் உள்ள நூல்களினை ஒன்றாக சேர்த்து ஒருவர் பிடித்திழுக்க காவடி எடுக்கும் பக்;தர் காவடியினை தோளில் சுமந்த படி ஆடுவார்.

தூக்குக்காவடி என்பது தூக்குத்தண்டனை பெற்ற ஒருவர் மேல் முறையீடு செய்து விடுதரல பெற்ற போது நேர்த்திக்கடனுக்காக ஆடப்பட்டதாக குறிப்pடப்படுகின்றது.
பறவைக்காவடி காவடி எடுப்பவரை படுக்க வைத்து தோள் ,தொடை ,கால் ஆகிய ஆறு இடங்களில் முட்களை கெழுவி முள்ளின் அடியில் உள்ள கயிறுகளை ஒன்றாக இணைத்து கட்டித் தொங்க விடுவர். இவர் தொங்கும் போது பறவை பறப்பதினைப் போன்றுகாணப்படுவதினால் இதனை பறவைக்காவடி என அழைக்கப்டுவதாக குறிப்பிடுகின்றனா.;
கூத்துக்காவடி என்பது பிற்காலத்தில் வந்து சேர்ந்த வடிவமாக கொள்ளப்படுகின்றது.இது ஆட்டக்காவடி முறைமையில் இருந்து  வேறுபாடு உடையதாக காணப்படுகின்றது.இது பல தாளக்கட்டுகளிற்க ஏற்ப்ப ஆடப்படுகின்றன..

இவ்வகையில் தனித்துவமானவையாக இக்கலைகள் விளங்குவதினையும் நம்பிக்கையும் சமயத்தோடினைந்த செயற்ப்பாடாகவும் காணப்படுகின்றமையினால் எத்தகைய தளங்களிலும், சூழ்நிலையிலும் இவை அழியாது காணப்படுகின்றன.




எஸ்.ரி.அருள்குமரன்   BA(Hons) M A (Merit)

         நாட்டார் கலைகள் ஓர் நோக்கு

காவடி எனும் கலைவடிவம் எத்துனை செல்வாக்கினை நாட்டார் கலைகளில் முதன்மையானதாக விளங்ககின்றதோ அவ்வகையில் கரகாட்டம் எனும் கலைவடிவமும் முதன்மையானதாக காணப்படுகின்றது.
அக்கலைவடிம் சமூகவியில் பெறுமானத்தில் ஏற்படுத்திய தாக்கம் தற்க்காலத்தில் அது கொண்டுள்ள தாக்கம் என்பனவற்றினை நோக்கும் போது  அக்கலைவடிவங்களின் உயிர்ப்பினை  கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பது  எதார்த்தமாகும்.
நம்பிக்கைகளின் அடிப்படையில் வெயற்ப்படுத்தப்பட்ட கலைவடிவங்கள் பெரும்பாலும் மதவிழுமியங்களினையும் கடவுளருக்காக மேற்கொள்ளப்படுகின்ற நேர்த்திகளின் அடிப்படையிலும்  அம்மக்களது உளநிவர்த்தியினையும் அடிப்படையாக கொண்ட வகையில் இக்கலைவடிவத்தின் எழுச்சியினையும் உயிர்ப்புடன் கூடிய வெளிப்பாட்டினையும் அறிந்து கொள்ள முடியும் என்பது எதார்த்தமாகும்.
மக்களது வாழ்வியல் கடவுள் நம்பிக்கை என்பது பிரிக்க முடியதா கூறாகஇருந்தன. அக்கடவுளருக்கு தம் வாழ்வு சிறக்கவேண்டும் தாம் எத்தகைய துன்பங்களில் இருந்தும்  தம்மை  காப்பாற்றி  கொள்வதற்காகவும் பல்வேறு செயற்ப்பாடுகளினை மேற்க்கொண்டனர். அத்தகைய செயற்ப்பாடுகள் இக்கலைகளில் உயிர்பிக்கான வாய்ய்பினை எற்ப்படுத்தியது.
இப்பின்னனியில் மாரியம்மன் எனும் பெண்தெய்வத்திற்கான நேர்த்திக்கடன்களும் அவற்றிக்கான செயற்ப்பாடுகளும் கரகாட்டம் எனும் கலைவடிவத்தில் முதன்மை பெறுகின்றது.தொற்று நோய்,பஞ்சம்போன்றவற்றினை நீக்கும் பொருட்டு மேற்க்கொள்ளப்பட்ட செயற்ப்பாடுகள் ஆடல் முறைகள் பிற்க்காலத்தில் தொழில் முறைக்கலைகளாக  மாற்றமடைந்தன.
கரகத்தில் புனிதநீர் எடுத்தவரப்பட்டு உழவர்கள் ஏர்மங்கல விழாவின்  போது எடுத்து செல்லப்பட்டு
ஒண்ணகரகமடி எங்கமுத்துமாரி
ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி
எனத்தொடங்கி
ஒன்பதாங்கரகமடி எங்க முத்தமாரி
ஒலகம் செழிக்க வேனும் எங்க முத்துமாரி என பாடல்கள் பாடப்படும்.
கரகாட்ட முறையில் பின்வருமாறு நோக்கப்படுகின்றது
சக்திக்கரகம்
ஆடுகரம்
சக்திக்கரகம் பக்தியுடன் எடுக்கப்படும்  கரகமாகும் ஆடவர்மட்டுமே இக்கரகத்தினை எடுப்பபர்.அதே வேளை ஆடுகரகமானது  தொழில்முறைக்கலைஞர்களினால்  நிகழ்த்திக் கொள்வதாக காணப்படுகின்றது.
ஆடுகரகமானதுசடங்குத்தன்மைகளிலிருந்து  விடுவித்து அபிநயங்களில் முதன்மைப்படுத்தி தாம் மகிழவும் பிறர் மகிழவும் கூடியவகையில் ஆடு கரகம் உருவாக்கப்பட்டது.
கரகவடிவமைப்பானது நடுத்தர அளவுள்ள செம்பு அல்லது மட்குடம் தெரிவு செய்யப்பட்டு அக்குடம் அலங்கரிக்கப்பட்டு   குடத்தின் மேற்புறத்தில்  பூவேலைப்பாட்டுடன் கூடியவகையிலான மூடி போன்ற அமைப்பு அமைக்கப்படும்.உச்சியில் பொம்மை கிளியை செருகி வைப்பார்கள். அம்மன் வழிபாட்டுடன் இக்கரகம் தொடர்புடையதாக காணப்படுகின்றமையினால் அம்மன் கிளி எனவும் அழைக்கப்படுவதுண்டு. சக்திக்கரகம் எடுப்போர் குடத்தினுள் அரிசியனையும் ஆடுகரகம்  எடுப்போர் குடத்தினுள்  மணலினையும் நிரப்புவார்கள்.
கரகாட்டம்  மூவகை ஆட்ட நிலைமைகளினை உடையதாக காணப்படுகின்றது.
தொடக்க நிலை
வேக நிலை
அதிவேக நிலை
தொடக்க நிலை என்பது  ஆயத்த நிலையும் ஆரம்ப நிலையுமாகும் நையாண்டி மேள இசையோடு ஏனைய தாள வாத்தியக்காரர்கள் தத்தம் இசை பொருந்தகின்றதா என வாசித்து பார்க்க கரகக்காரரும் மெல்ல ஆடி கரகத்தை தலையில் சீராக வைத்துக்கொள்வர். இதன்பின் படிப்படியாக இசை வளர்ந்து கொண்டு செல்ல ஆட்டத்தின் வேகமும் வளர்ந்து கொண்டே செல்லும்.
வேக நிலையில் தாள, சுருதிக்கும் வாசிக்கும் இசைக்கும் எற்ப்ப  எவ்வித வேறுபாடுகளும் தெரியாமல் கலைஞர்கள் ஆடுவர் இதனை சமநிலை எனக்குறிப்பிடுவர்.
அதி வேக நிலை என்பது பாம்பின் சிற்றத்தினை போன்று ஜதி முறியாமல் தாளம் முறியாமல் பம்பரம் போல சூழன்று ஆடுவதினை குறிக்கும்
இவ்வாட்டத்தில் கலைஞர்கள் ஓய்வெடுத்துக்கொள்ளும் முகமாக கோமாளி எனும் பாத்திரம் வந்து உரையாடல்களினை மேற்க்கொள்வான் இவ்வேளையினை பயன்படுத்தி நடிகர்கள் ஒய்வெடுத்துக்கொள்வார்கள்.
இவ்வகையில் கரகாட்டமானது முதன்மைப்படுத்தப்படுவனவாக காணப்படுகின்றது.

திங்கள், ஜூலை 20, 2015

(எஸ்.ரி.அருள்குமரன்)

 அளவையூர் பெற்ரெடுத்த  கல்விச் சேவகர் 

முடிவிலியாக ஓடிக் கொண்டிருக்கும் காலம் தனக்கான ஆளுமைகளை வரலாற்றின் வழி உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.
   மனிதன் மனிதனாக வாழ்வதிலும் சமூகமாற்றத்தினை ஏற்ப்படுத்துவதிலும் சிந்தனையாளர்களும் கல்வியலாளர்களும் தமது பெரும்பாலன காலத்தினை செலவிடுகின்றனர்
புதியதை படைப்பதிலும் சமூக மாற்றத்தினை ஏற்ப்படுத்தவதிலும் பெருமிதம் கொள்கிற ஒரு அழகிய உலகமே அவர்களது கனவு. அந்த கனவு நனவாக அவர் தம்  செயற்ப்பாட்டின்  மூலம் புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.
இந்த பிரபஞ்சத்தை நேசிக்கும் அவர்கள் மாற்றத்திற்காக    தம்மையே விலையாகக் கொடுக்கின்றான்.
இக்தகையவர்கள்  காலத்தின் பிரசவிப்புக்களாக கொள்ள முடியும்.
ஈழத்தாய் காலம் தோறும் இத்தகையவர்களினை பிரசவித்துக்கொண்டிருக்கின்றாள் என்பதினை காலவோட்டத்தில் நாம் தரிசனம் கொள்ளக்கூடியதாக உள்ளது.
 யாழ்.மாவட்டத்தினை பொறுத்தவரையில் கல்வியானது மக்களது சொத்தாகவும் இச்சொத்தினை பாதுகாப்பதில் கல்விப்புலம் சார்ந்தவர்கள் ஆற்றுகின்ற பணி காத்திரமானது.மறக் முடியாததுமாகும்.
பாடசாலையொன்றினை வளப்படுத்துவதிலும் புதிதாய் கட்டமைப்பதிலும் அதிபரது எண்ணங்களும் செயல்களும் கனதியானவை. இவர்களிற்கு உறுதுனையான நல் ஆசிரியர்களும் நல் மாணவர்களும் பக்கபலமாக காணப்படுகின்றனர்.
யாழ்.மாவட்டத்தினை பொறுத்தவரையி;ல் எமது சமகாலத்தில் வாழ்ந்த ஆளுமை  மிக்க அதிபர்களில் யூனியன்கல்லூரியின் ஒய்வுநிலைஅதிபர்எஸ்.புண்ணியசீலன்,சுழிபுரம்விக்ரோறியாக்கல்லூரி  ஓய்வு நிலை அதிபர்வ.ஸ்ரீகாந்தன் என நீண்டு செல்லும் ஓய்வு பெற்ற அதிபர்களின் பட்டியலில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்த எஸ்.சிவநேஸ்ரனும் இடம்பெறகின்றார்.
 இவர்களது ஓய்வு கல்விப்புலத்தினை பொறுத்தவரையில் வெற்றிடத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது.
அளவெட்டி மண்ணிலே சம்பந்தசரணாலயம்-சரஸ்வதி தம்பதியினருக்கு1955.07.05 ல் மகணா பிறந்த இவர் தனது ஆரம்ப கல்வியினை அளவெட்டி சதானாந்த வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியினை அருணோதயாக்கல்லூரியிலும், உயர்நிலைக்கல்வியினை ஸ்கந்தவரோதயாக்கல்லுரியிலும் கல்விபயின்றதுடன் யாழ்ப்பானப்பலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டத்தினையும் கல்வியியல் பட்டபின்படிப்பினையும், முதுகல்விமானிப்பட்டத்தினையும் ஆயுயுவு பட்டத்தினை பெற்றதுடன் அதிபர் சேவைதரம்  ளுடுPளு ஐ, இலங்கை கல்வியயிலாளர் சேவை  ளுடுநுயுளு iii தேசிய மாணவர்படையனியின் கப்டன்தர கட்டளை அதிகாரியாகவும் காணப்படுகின்றார்.
வடமாகான அதிபர் சங்கத்தின் தலைவராகவும்,யாழ்.மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் தலைவராகவும்,யாழ்ப்பான பல்கலைக்கழக முகாமைத்துவ பீட உறுப்பினராகவும் சண்டிலிப்பாய் கல்விக்கோட்டத்தின் அதிபர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து காத்திரமான கல்விப்பணியினை ஆற்றியுள்ளளார்.
இவர்  1984 ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் புத்தளம் அல் அக்ஷா மகாவித்தியாலத்தில் ஆசிரியராக முதற்கடமையேற்று பின்னர் புத்தளம் தேத்தாப்பளை தமிழ் மகாவித்தியாலயம் ,சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி  ஆகிய பாடசாலைகளில்  ஆசிரியராகப்பணியாற்றி சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியில் அதிபராக பொறுப்பேற்று அப்பாடசாலையினை பல துறைகளிலும் வளர்சியடைய வைத்ததுடன்  மானிப்பாய் இந்துக்கல்லூரியினை பொறுப்பேற்று  கல்லூரியினை வளர்சிப்பாதைக்கு இட்டுச்சென்றவர்.
குறைந்த வளப்பற்றாக்குறையுடன் குறைந்த மாணவர் எண்ணிக்கையுடன் காணப்பட்ட சண்டிலிப்பாய் ராஜா ஸ்கூல் என்று பரலாலும் அறியப்பட்ட பின்தங்கிய நிலையில் காணப்பட்ட பாடசாலை யினை  அதிபராக பொறுப்பேற்று பாடசாலை வளங்களினை அதிகரித்து  மாணவர் எண்ணிக்கையினை அதிகரித்து  தேசியம் வரை வெற்றிகள் பெறவைத்து  சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி என்ற பெயர் மாற்றத்துடன் கல்லூரியினை தரமுயற்த்திய பெருமைக்குரியவர்.
அக்கல்லூரிக்கான முகவரியினை கொடுத்ததன் மூலம் இவரது ஆளுமை வெளிச்சமிடப்பட்டதுடன்  கல்விஅதிகாரிகளது அன்பிற்கம் மதிப்பிற்கும் உரியவராக விளங்கினார்.இதனால் இவர் செயற்பப்டுத்த நினைக்கின்ற கல்விப்புலம் சார்ந்த மாறுதல்களிற்கு பக்கபலமாக இருந்தனர்.
  வடமாகான கல்விஅமைச்சின் ஓய்வு பெற்ற பிரதிச்செயலர் வே.தி.வெல்வரட்னம் குறிப்பிடும்போது “ எங்கட பேச்சுமொழியில் சொல்வதானால் சேடம் இழுத்துக்கொண்டிருந்த இருபாடசாலைகளிற்கு உயிர்கொடுத்து அதனை வளப்படுத்தியவர்” என்றார். இக்கூற்று நிதர்சனமான உண்மையாகும்.
 மானிப்பாய் இந்துக்கல்லூரி பல்வேறு பின்னடைவுகளினையும் சந்தித்திருந்த வேளை கல்வியாளரின் வேண்டு கோளிற்கினங்க தான் அதிகம் நேசித்து கட்டிவளர்த்த சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியினை விட்டு வந்து மானிப்பாய் இந்துக்கல்லாரியினை பெறுப்பேற்றுகொண்டார்.
 இக்கல்லூரியினையும்  கவின்கலையுடன் இணைந்த வகையில் பாடசாலை பௌதீக வளத்தினை அபிவிருத்தி செய்து பாடசாலையை  புதுப்பொலிவு பெறச்செய்தததுடன் கல்வி ,இணைப்பாடவிதானச் செயற்ப்பாடுகளில் தேசியம் வரை மாணவர்களினை வெற்றி பெறச்செய்தததுடன்   இக் கல்லூரியினை வலிகாமம் கல்லி வலயத்தின் முதலாவது தேசியப்பாடசாலையாக தரமுயர்தியவர்.
இவர் கல்லூரியினை பெறுப்பேற்றபோது   மாணவர் தொகை 300 ஆக காணப்ட்டது இண்று ஆயிரம் மாவர்களினை தாண்டிய வகையிலும் க.பொ.த)சாதாரனதரம்) 36 வீதமாக காணப்பட்டது இன்று 80 வீதமாக உயர்வடைந்தமை மருத்துவபீடம் ,பொறியியல்பீடம், கலைத்துறை ,முகாமைத்துபீடம் என்பவற்றிற்க மாணவர்கள் அனுமதி பெறுகின்றமை கல்லூரியின் வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகின்றது.
கல்லூரியின் பௌதீக வள அபிவிருத்தியில் கவின்கலையுடையதாக கட்டங்களினை அமைத்ததுடன் இவரது காலத்தில் தொழில்நுட்பபிடம்,தொழில்நுட்ப ஆய்வுகூடம், மித்திரன்பவிலியன்,சிவதாசனபவிலியன், விகோனந்தராஜா கட்டடம், நடராஜ க ட்டடம், மாணவர்விடுதி,ஆறுமுகம் விளையாட்டரங்கு,கல்லூரிக்கான நூழைவாயில் போன்ற பல கட்டங்கள் இவரது காலத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப பீடத்தினை வளர்த்தெடுக்கவேண்டும் எனும் வகையில் காத்திரமான செயற்திட்டத்தினை மேற்கொண்டு தொழில்நுட்ப பிரிவில் மாணவியர்களினையும் இணைத்து அவர்களும் கல்வி கற்ப்பதற்கான வாய்ப்பினை ஏற்ப்படுத்தி கொடுத்தார்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியானது அனைத்து துறைகளிலும் சாதிக்கவேண்டும் எனும் இவரது எண்ணத்திற்கு முத்தாய்ப்ப வைத்தாற்போல உதைபந்தாட்டத்தில் தேசியச்சாதனைகளினை பதிவு செய்ததினை போன்று  தேசியரீதியில் பேச்சப்போட்டி, தனிஇசை, நாடகத்தில் தனி நடிப்பு போட்டி, சித்திரப்போட்டி என்பவற்றிலும் இவரது காலத்தில் மாணவர்கள் சாதனை படைக்க ஆரம்பிக்கின்றமை  பலருக்கு புதிய செய்தியாகும்.
இவரது சாதனைக்கு பின்னால் உள்ள இரகசியம் புன்முறுவல் பூத்த முகத்துடன் இளையவர்கள் மூத்தவர்கள் என்ற வேறுபாடு இன்றி பணியாற்றக்கூடியவர்களினை  இனம் கண்டு அவர்களிற்கு பொருத்தமான பணியினை கொடுத்து அப்பணி வெற்றி பெறும் வரை இயங்ககின்ற மன வலிமை, யாரையும் வஞ்சிக்கவேண்டும் என்கின்ற மனப்பாங்கு இல்லாமை, முகஸ்தி அற்ற போக்கு தான் எடுத்த இலக்கினை வெற்றிபெறும் வரை அயராது சலிப்பற்றவகையில் செயற்படல் போன்ற பலபண்புகளினை   இவரது சாதனைகளிற்கான அடிப்படையாக கொள்ளலாம்.
இவர் ஆற்றிய கல்விப்பணியினை கௌரவிக்கும் முகமாக இவருக்கு மேற்க்கொள்ளப்ட்ட மணிவிழா நிகழ்வில்  கல்விப்புலம் சாhந்தவர்கள்,பழைய மாணவர்கள், புலம் பெயர்பழைய மாணவர்கள்,அவரிடம் கல்வி கற்றவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் இவரது அதிபர் சேவையினை பராட்டி அதிபர் திலகம் எனும்  உயரிய விருது  இனுவில் சமூகத்தினரால் வழங்கிக்கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் ஆற்றிய கல்விப்புலச் சேவைகள் காலத்தால் மறுக்கவே மறக்கவோ முடியாதவை. பாடசாலையின் எழுர்ச்சியினை மூழுமூச்சாக கொண்டு கொண்டு இயங்கியல் தளத்தில் செயற்ப்ட்டு பலருக்கு ஆச்சரியத்தினை எற்ப்படுத்திய மகத்தான சாதனையாளன் ஓய்வுகாலத்தில் நலமோடு வாழ்வதோடு எமது கல்விப்புலத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளினை களைவதற்கு சேவையாற்றவேண்டும்.
 நன்றி யாழ்.தினக்குரல்