என்னைப் பற்றி

புதன், ஏப்ரல் 06, 2022

மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடக விழா ஒருபார்வை.

 எஸ்.ரி.அருள்குமரன் 

நாடகதுறை ஆசிரியர்

யா/மானிப்பாய் இந்துக்கல்லூரி

இணைப்பாளர், நாடகவிழா.


 மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடக விழா ஒருபார்வை.

கல்லூரியின் சிறப்பு

மானிப்பாய் இந்துக்கல்லூரி நீண்ட வரலாற்று பாரம்பரியம் உடைய பண்பாட்டு செழுமை உடைய கல்லூரியாகும்.

 சங்கரப்பிள்ளையின் சிந்தனையில் இக்கல்லூரி உதயமாகியது 





மாணவர்களை நல்வழிப்படுத்துவதனை நோக்கமாக கொண்டு செயற்படுகின்ற இக்கல்லூரில் முத்தமிழ் வித்தகர்  சுவாமி விபுலானந்தர்,கூட்டுறவாளர்வீரசிங்கம் போன்ற  சமூக சிந்தனையாளர்கள் அதிபர்களாக இருந்து கல்லூரியை உயர்த்தியதுடன் கற்ற மாணவர்களையும் வழிப்படுத்தி வளப்படுத்தியிருந்தனர். 

கல்வியாளலர்கள்,மருத்துர்கள்,பொறியலாளர்கள், கலைஞ்கள் என பல துறைசாhந்தவர்களை  உருவாக்கிய கல்லூரி  பல தனித்துவங்களை கொண்டு விளங்குகின்றது.

கற்றலுடன் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் தனது சுவடுகளை பதித்து வருகின்றதுடன் தேசியப்பாடசாலை எனும் மகுடத்தை தாங்கி நிற்கின்றவகையில் மானிப்பாய் பிரதேசம் பெருமை கொள்கின்றது.

நாடகத்தின் சிறப்பு

மாணவர்களது ஆளுமை மாற்றத்தில்கலைகளது வகிபங்கு கனதியானது.

கலைகளில் பல்வேறுகலைகள் காணப்படுகின்றன.அக்லைகள் ஒவ்வொன்றும் மாணவர்களது சுயவெளிப்பாட்டிற்கும் கற்றுக்கொள்ளலிற்கும் வழிசமைக்கின்றன.

இப்பகைப்புலத்தில்  கலைகளின் அரசி  என போற்றப்படுகின்ற நாடக கலை சமூக அசைவியக்கத்தில் காத்திரமான வகிபங்கினை செலுத்தி நிற்கின்றவேளையில் இக்கல்லூரி அக்கலையினது செழுமையான வளர்ச்சிக்கும் பங்குபற்றுபவ்களை ஆளுமையுள்ளவர்களாக தகவமைப்பதிலும் கவனம் செலுத்திய வகையில் நாடக விழாவினை கொண்டாடி வருகின்றது.

கல்லூரியில் கொண்டாடப்படும் நாடகவிழாவின்சிறப்பு

ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை என போற்றப்படுகின்ற கலையரசு சொர்ணலிங்கம்  கற்றதுடன்   தனது ஆளிக்கையின் மூலம்  விழாவினை செழுமைப்படுத்திய கதையினை கற்ற மாணவர்கள் மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது.

இவ்வறாத்தொடர்ச்சியில் பல அரங்கர்களை பிரசவித்துடன்,பிரசவித்துக்கொண்டும் இருக்கின்றது.

பாடசாலை நாடகங்கள் மாணவர்களது பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றவகையிலும் அவர்களை இலக்குபார்வையாளர்களாக கொண்டவகையில் நிகழ்த்தப்படுவதுண்டு.

நாடகங்கள் பாடசாலைகளில் நிகழ்த்தப்படுகின்ற விழாக்களில் நிகழ்த்தப்படுவதுண்டு. குறிப்பாக முத்தமிழ் விழாக்களில் குறித்த நிகழ்வாகவும், பரிசில்  தினம் என்பவற்றில் நிகழ்வுகளின் பகுதியாக நாடகம் நிகழ்த்தப்படுவதுண்டு.

ஆனல் இக்கல்லூரியினை   பொறுத்தவரையில்  ஏனைய கல்லூரிகளை விட  தனித்துவமான வகையில் நீண்டகாலமாக நாடக விழாவினை கொண்டாடிவருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

இல்லங்களுக்கிடையே மெய்வல்லுனர் போட்டி நடைபெறுவதை போன்று நாடகப்போட்டியினை நீண்ட காலமாக கொண்டாடி வருகின்றது.

சம்பந்தர் ,சுந்தரர்,வாகீசர்,மாணிக்கர் ஆகிய நான்கு  இல்லங்களுக்கிடையே போட்டி நடைபெற்றுவருகின்றது.

இப்போட்டிகள்  ஏனையா கல்லூரிகளிற்கு முன்னுதாரனமானவகையில் கொண்டாடப்பட்டுவருகின்றது.

இந்தவகையில் பாடசாலையில் நாடகங்கள்  மாணவர்களை பங்குதாரர்களாக கொண்டு ஐPலை மாதம் கல்லூரி சமூகத்தினரால் கொண்டாடப்பட்டு வருகின்றமை மகிழ்விற்குரியதாகும்.

ஐpலை மாதம் முதலாம், இரண்டாம் திகதிளில் இரு தினங்கள் முழுநீள நாடகங்களாக முன்னைய காலத்தில் நிகழ்த்தப்பட்டு வந்ததுள்ளன.

2012-2014ம் ஆண்டுகாலப்பகுதியில்  3ம் திகதி நாடகவிழாவினையும் நான்காம் திகதி நிறுவுனர் தின விழாவினையும் அப்போதைய முதல்வர் திரு.ச.சிவநேஸ்வரன் கொண்டடினார் ஆயினும் மீளவும் அவரது காலத்திலேயே 2015ம் ஆண்டு முதலாம் திகதி  நிகழ்த்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக   இவ் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

கல்லூரியில் கற்ற பெரும்பாலான மாணவர்கள் இந்நாடக விழாவில் பங்குபற்றியதுடன் அதனூடாக தம்மை வளப்படுத்திக்கொண்டதாக குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் இவ்விழா அவர்களுக்குகொண்டாட்டத்துக்குரியதாகவும்மகிழ்வளிப்பிற்குரியதான நிகழ்வாக நினைவுகளை சுமந்து கொண்டிருப்பதனை அவர்களது கதையாடல்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.

நாடகவிழாவில் பங்குபற்றியவர்கள் பெரும் உயர் பதவிகளில் இருந்து சமூகத்திற்கு காத்திரமான சேவையினை வழங்கி வருகின்றமையினை கண்டுகொள்ளமுடிகின்றது.

நாடகத்துறைசார்ந்தவகையில் வி.எஸ்.துரைராஐh ஐசாக் இன்பராஐ; மரிக்கார்ராமதாஸ் சோக்கலோ சண்முகம் கலாநிதிகந்தையாஸ்ரீகனேசன் கந்தையா-ஸ்ரீகந்தவேள் நா.கு.மகிழ்;ச்சிகரன் சூரிஅண்ணா என சிறப்பாக அழைக்கப்படுகின்ற சூரி என இப்பட்டியல் நீளும்.

நாடக விழாவின் நோக்கம்

நாடகவிழாவானது பங்குபற்றுகின்ற மாணவர்களது ஆளுமைத்திறனில் மாற்றங்களை கொண்டுவருகின்றது.

நாடகம் பார்ப்போர் ஆற்றுவோர் நேரடித்தொடர்பினை கொண்டுவிளங்குகின்றதுடன் நாடகசெயற்பாட்டின் உயிர்ப்பினை பறைசாற்றுகின்றது

வெறுமனே நாடகங்களை மேடையிடுதல் என்பதை தாண்டி நாடகம் சார்  புரிதலை அரங்களிக்கை மூலம் கண்டடைவதற்கும் பங்குபற்றுபவர்கள் சுய சிந்தனை யுள்ளவர்களாகவும் புதியன படைப்பதில்  ஆர்வம் உள்ளவர்களாகவும் உருவாவதை களமாகக்கொண்டு இவ்விழாக்கள் தகவமைக்கப்படுகின்றன.

இல்லமெய்வல்லுனர்போட்டி நடைபெறுகின்றபோது குறித்த இல்லத்தை சார்ந்தவர்கள் வெற்றி பெற வேண்டும் என முனைப்புக்காட்டுவதைப்போன்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தி வளப்படுத்தி வழிப்படுத்துவதையும் வெற்றியை நோக்கி அழைத்துச்செல்கின்றனர்.

இல்லங்களுக்கிடையே போட்டிகள் நடைபெறுகின்றபோது வெற்றிபெறுதல் என்பது முதன்iமாயனதாக காணப்படுகின்றபோதிலும் பங்குபற்றுகின்றவர்களிடையே பின்வரும் திறன்கள் வளர்த்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

தலைமைத்துவம்

தொடர்பாடல்

குழுமனப்பான்மை

தொடர்பாடல் திறன்

நபர்களுக்கிடையிலான பரஸ்பர கருத்தாடல்ஃகருத்துபகிர்வு

மேடை கூச்சமின்மை

படைப்பாக்க ஆளுமை

கற்பனையாற்றல்

முடிவெடுக்கும் ஆற்றல்

அமைப்பாற்றல்

கற்றலில் நாட்டம் (நாடக உரையாடல்களை மனனம்செய்கின்றபோது)

நேரமுகாமைத்துவம்

வெற்றி தோல்விகளை சமனாக மதித்தல்

விமர்சனங்களைஏற்றுக்கொள்ளல்

போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்.

மேற்படித்திறன்கள் வளர்த்துக்கொள்கின்றபோது சமூகத்தினை வழிநடத்தக்கூடிய ஆளுமையுள்ளவர்களாக உருவாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.


நாடகவிழா நிகழ்த்தப்படும் முறை

பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளிற்கு புறம்பான வகையில் பாடசாலை நிறைவடைந்தபின்னர் குறித்த நேரங்கள் பாடசாலைசமூகத்தினரால் ஒதுக்கப்படுகின்ற நேரத்திள் ஒத்திகைகள் பார்க்கப்பட்டு குறித்த தினத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

 இவ்விழாக்கள் இரவுவேளைகளில் நிகழ்த்தப்பட்டபோதும் பகல்பொழுதுகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்றபோதும்  பார்வையாளர்களாக பாடசாலை மாணவர்கள் பெற்றோர்,பழையமாணவர்கள்,என பலரது ரசனைக்குரியவகையில் நிகழ்த்தப்பட்டுவருகின்றது.

பங்குபற்றுகின்றவர்களுக்கான ஊக்குவிப்பு

சாதனைகள் உடனடியாக நிகழ்ந்துவிடுவதில்லை.பங்குபற்றுகின்றவர்களிற்கு அடையாளத்தை ஏற்படுத்துகின்றபோதுதான் அவர்களது இயங்கியலுக்கான சாத்தியங்கள் திறக்கப்பட்டு தொடர்ந்து இயங்குவதற்காக வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.

இப்பகைப்புலத்தில் போட்டியில் பங்குபற்றுகின்ற வர்களை  ஊக்குவிக்கின்றவகையில்  எனது முயற்சியினால்பங்குபற்றுகின்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பதுடன், சிறந்த நடிகர்,சிறந்த நடிகை,சிறந்த துணைநடிகர்,சிறந்ததுனை நடிகை,விசேடதிறன்கொண்ட நடிகர்,பாடகர் போன்ற விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.

பங்குபற்றுகின்ற மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்படுவதுடன் (ரீ.கே.எம்.பிறதோஸினால் வழங்கப்படுகின்றது) கடந்த ஆண்டு முதல் விருதுகளை பெறுகின்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் சி.இந்திரகுமார் அவர்களது முயற்சியினால் பணப்பரிசில்கள் வழங்கப்படுகின்றது.


முடிவுரை

இத்தகைய நாடக விழாவானது பாடசாலை சமூகத்தின் இனைவிற்கும் ஆற்றுகை சாhந்த செயற்பாடுகளின் மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கும் வழிசமைக்கின்ற வகையில் பயனுள்ளதாக விளங்குகின்ற இவ்விழாவில் தொடர்ச்சி பல வகைகளில் பயனுள்ளதாக அமையும்.