என்னைப் பற்றி

சனி, ஆகஸ்ட் 23, 2014


 (எஸ்.ரி.அருள்குமரன்)

  வாழ்வியலில் முதன்மையான சடங்கு


சடங்கு மக்களது வாழ்வியலில் முதன்மையான அமிசமாக விளங்குகின்றது. ஆதிகால மனிதன் தொட்டு நாகரிகம் அடைந்த மனிதன் வரை சடங்கியல் சார் செயற்ப்பாடுகள் காத்திரமானவையாக விளங்குகின்றன.
 சடங்குகள் மனிதர்களினை ஒழங்குபடுத்துவதற்கும் மனதிலே தெளிவுநிலையினை ஏற்ப்படுத்துவதற்கும் துணைசெய்கின்றன.
சடங்குகள் மனிதர்களது வாழ்வில் மூன்று நிலைகளில் முதன்மை பெறுகின்றன. அதாவது பிறப்பு ,பாரயமடைதல், இறப்பு ஆகிய நிலைகளில் முதன்மை பெறுகின்றன.

எனினும் மனிதர்களது வாழ்வியலோடு தொடர்புடைய வகையில் இச் சடங்கு  முறைகள் செல்வாக்கு செலுத்துகின்ற அதே வேளை ஆண்மிகம் சார்ந்த வகையில் கோயில்களது வழிபாட்டுடன் சடங்குகள் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தன
.
 கோயில்களில் பூசாரிகள் வழிபாடுகளினை மேற்கொள்கின்ற போது மக்கள் பயபக்தியுடன் பங்குபற்றினர். காலப்போக்கில் சடங்கு முறைகள் வழக்கொழிந்து செல்கின்ற போதிலும் சில ஊர்களில் இன்றும் வழக்கொழிந்து போகாமல் கோயில்களில் இடம்பெற்று வருகின்றன
.
 கோயில் சடங்குகள் மக்களது உள விடுதலைக்கான வடிகாலாகவும் அவர்களை பிரச்சினைகளில் இருந்து விடுவித்து வாழ்வில் நம்பிக்கை கொள்வதற்கான வழிமுறைகளினை ஏற்ப்படுத்துவதினையும் அடிப்படையாகக்கொண்டு இச்சடங்குகள் விளங்குகின்றன.
சடங்கு நிலைகளில் உருவேறி ஆடுதல் மூலம்     மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே நெருக்கமான ஆண்மீகரீதியிலான தொடர்பு நிலை ஏற்ப்படுத்தப்படவதன் மூலம் மக்கள் தமதுபிரச்சினை களினை தீர்த்து கொள்வதற்கான வாய்ப்பாக உள்ளது
.
இப்பின்னனயில் மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தில் நிண்ட காலமாக இச்சடங்க நிகழ்வகள் இடம் பெற்ற வருகின்றன.
 இச்சடங்கு நிகழ்வானது அப்பிரதேச மக்கள் ஒண்று கூடுவதற்கும் அதே வேளை பிற பிரதேசத்தவர்கள் இணைந்து கொள்வதற்குமான வாய்பு உருவாக்கப்படுகின்றது
.
வரலாற்றுச்சிறப்பு மிக்க தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையினைக் கொண்ட பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்ற மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழா பெரிய தம்பிரான் ஆலய பிரதம பூசகர் பெரியதம்பி பூசகர் தலைமையில்  அண.மையில் இடம்பெற்றது.
 
   பொங்கல் பெருவிழா நிகழ்வினை முன்னிட்டு முதல் நாள் கோயில் வீதி மல்லாகத்தில் அமைந்துள்ள சாடி மனை ஆலயத்தில் அதிகாலை வேளை பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மதியம் விசேட பூசைகள் இடம்பெற்று அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மாலை வேளை சாடி மனையில் விசேட பூசைகள் இடம்பெற்று பொங்கல் பொருட்கள் ஊர்வலமாக  கே.கே.எஸ். வீதியூடாக மல்லாகம் சந்தியினை அடைந்து நரியிட்டான் ஊடாக பிரதான ஆலயத்தை சென்றடைந்து விசேட பூசைகள் இடம்பெற்றது. மறுநாள்     அதிகாலை பூசை வழிபாடுகளைத் தொடந்து வழுந்து பானை வைக்கப்பட்டு பொங்கல் இடம் பெறும்.

மதியம் விசேட அபிஷேக ஆராதனைகள் பூசைகள் இடம்பெற்று பொங்கல் விழா விசேட பூசைகள் இடம் பெற்று தீமிதித்தல் சடங்கும் இடம் பெற்றது.
தமிழர் தம் பாரம்பரியங்களில் ஒன்றாக விளங்குகின்ற சடங்குடன் இணைந்ததான வழிபாட்டு முறையானது இன்றும் இங்க சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன
.
மனிதர்கள் தனிமனிதாகளாக அல்லாமல் சமூக செயல் நிலை உடையவர்களாக உரவாவதற்க இது வாய்ப்பாகின்றது. சடங்கு முறைமையில் பத்ததி முறையிலான சடங்க முறை ஒவ்வொரு சமூகத்தினரும் தமக்குரிய வகையில் சிறப்பாக மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றமையினை அவதானிக்க கூடியதாக உள்ளது
.
 இச்செயற்பாடு அச்சமூகத்தினரது தனித்துவ செயற்ப்பாட்டிற்கும் சமூகத்தின் பொறி முறைச்செயற்ப்பாட்டிற்கும் அடிப்படையாக அமைகின்றது.
பத்ததிச்சடங்குகளும் அவை வெளிப்படுத்துகின்ற முறைகளும் சமூக பண்பாட்டிற்கு ஏற்ப்ப தனித்துவமானவையாக விளங்ககின்றன.
பத்ததிச்சடங்ககள் சமூகத்தில் முதன்மை பெறுவதற்கான காரனமாக நோக்குகின்றபோது உள ஆற்றுப்படுத்தலின் ஓர் அம்சமாக நோக்கலாம் காரணம் கடங்காடி தனது சன்னத நிலையில் பக்தர்களுடன் கடவுளாக தொடர்பு படுகின்ற போது அவர்களுக்கான எதிர்கால நம்பிக்கைக்கான ஆற்றுப்படுத்தலாக செயற்ப்படுவதினை சடங்கு நிலைகளில் அவதானிக்க கூடியதாக உள்ளது
.
 மேலும் சடங்கு நிலைகளின் உடாக மூத்த தலைமுறையினரிடம் இருந்து இளைய தலைமுறையினர் அறிவு பூர்வமான கருத்து நிலைகளினை உள்வாங்கி கொள்வதற்கான பயில் நிலை ரீதியிலான செயல் முறையாக காணப்படுகின்றன
.
இச்சடங்கு நிகழ்வில் முக்கியமானதாக விளங்குகின்ற தீ மிதித்தல் சடங்கானது அம்மக்ளது வாழ்வியல் முறையில் நம்பிக்கையினை கொண்டு வருவதற்கான நிகழவாக காணப்படுகின்றது. தீமிப்பதற்க முன்னர் தீயினை ஆத்துதல் எனும் செயற்பாடு காணப்படுகின்றது. அதாவது தீயினை கட்டுதல் எனக்குறிப்பிடுகின்றனர். தியினை கட்டுதல் எனும் போது சாதரனமாக கட்ட முடியாது சடங்'காடி தனது சன்னத நிலையின் உச்ச நிலையிலேயே கட்ட முடியும் அதன் பின்னர் தான் தீயிலே இறங்கிய பின்னர் பக்தர்களினை தீயிலே இறங்குவதற்கான செயற்ப்பாட்டினை மேற்க்கொள்வார். இம் முறை கூட உள ஆற்றுப்படுத்தலின் அம்சமாகவே றோக்க முடியும். இது நேர்த்pக்கடன் மற்றும் இச்செயற்பாட்டினை மேற்க்கொண்டால நன்மை கிடைக்கும் போன்ற பல விடயங்களினை குறிப்பிடலாம்
.
கலைகளின் பிறப்பியலுக்கு குறிப்பாக அரங்க கலைகளின் பிறப்பியலுக்கு காரனமாக இருந்த சடங்கு நிலைப்பயில்வுகளின் உச்ச நிலையினை இச்சடங்ககளின் ஊடாக தரிசித்து கொள்ள கூடியதாக உள்ளது. அத்தடன் பாரம்பரியங்களின உயிர்ப்பினையும் சமூக கூட்டினைப்பு சார்ந்த செயல்நிலையினையும் இச்சடங்கு வெளிகளின் ஊடாக கண்டு கொள்ள
 முடிகின்றது.


(எஸ்.ரி.அருள்குமரன்)

              


நாடகவிழா

 நாடகம் மக்களது வாழ்வில் உள்ள பிரச்சினைகளினை வெளிப்படுத்துவதுடன் பங்குபற்றுபவர்களிடையெ தள மாற்றத்தினை எற்ப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அரங்கிலே ஆற்றுகையாளர்களாக செயற்ப்படுகின்றபோது தாம் எதிர் கொள்கின்ற பிரச்சினைகளினை இனம் கண்டு அப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளினை தகவமைத்து கொள்வதிலும் முதன்மை பெறுவதுடன் அளிக்கையானது பார்ப்போருடன் நேரடித்தொடர்புடையனவாக காணப்படுவதினால் உயிர்ப்பான கலைவடிவமாகவும் விளங்குகின்றது.

இன்றும் அரங்கின் தேவை சமூகத்தில் உணரப்படவதற்கு அதன் தாக்கவன்மையான செயற்ப்பாடு இன்றியமையாதாகும்
 நாடக செயற்பாடு மாணவர்களது ஆளுமை வெளிப்பாட்டிற்கான களவெளிளினை தகவமைக்கின்றன.

அரங்காடலின் மூலம் மாணவர்களிடையே தொடர்பாடும் திறன் விருத்தியடைவதுடன் தலைமைத்துவப்பண்பு, எல்லோரையும் சமமாக ஏற்றுக்கொள்கின்ற மனநிலை குரூரம்அற்ற தன்மை,பிற்போக்கு அற்றமனவுனர்வு ,தன்னலமற்ற உணர்வு போன்ற பல விடயங்கள் இயல்பாகவே ஏற்ப்படுத்தப்படுகின்றன.

 நாடக செயற்ப்பாட்டிற்கான தளங்கள் விரிந்து காணப்படுகின்ற சூழ்நிலையில்  பாடசாலைகள் களவெளிகளினை  ஏற்ப்படுத்துகின்றன.

பாடசாலைகளில் இடம்பெறுகின்ற விழாக்கள் அவற்றிக்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்துகின்றன. ஆயினும் நாடகங்களிற்கென தனியொரு நாள் ஒதுக்கி விழா நடாத்தப்படுவதென்பது குறைவாக உள்ளது.
நாடகவிழாக்கள் மாணவர்களது பங்குபற்றலுக்கான களவெளிகளினை ஏற்ப்படுத்தி அவர்கள் சுய சிந்தனையள்ளவர்களாக புதியன படைப்பவர்களாக உருவாக்கும் நோக்கில் அவ்களிற்கான மனத்தடைகள் அகற்றப்பட்டு எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறவதற்கான புறச்சூழ்நிலைகள் உருவாக்கப்டவேண்டும் மேலும் அவர்கள் சுய படைப்பினை ஏற்ப்படுத்துவதற்கான கள வெளிகள் ஏற்ப்படுத்தப்டவேண்டும்.
  இப்பின்னயில் பாடசாலைகள் இல்லங்களிற்கு இடையே விளையாட்டு போட்டிகள் நிகழ்த்ப்படுவது போன்று நாடகப்போட்டிகள் நிகழ்த்தப்பட்டன.
 ஆயினும் காலப்போக்கில் அத்தகைய வழக்கொழிந்து போன சூழ்நிலையில் மானிப்பாய் இந்துக்கல்லூரியானது அறாத்தொடர்ச்சியுடன் இன்று வரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இக்கல்லூரிக்கு நீண்ட வரலாறு உண்டு.
கடந்த 3 ஆண்டுகளாக ஜீலை 3ம் திகதி இரவுப்பொழுதுகளில் நாடகப்போட்டிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

   மாணிக்கர் சம்பந்தர், சுந்தரார், வாகீசர் ஆகிய நான்கு இல்லங்களுக்கிடையே   போட்டிகள் நிகழ்த்படுகின்றன.
 இம்முறை அணைத்து இல்லங்களிற்கும் வசன நாடகங்கள் எனும் வகுதிக்கள் வருகின்ற அரச நாடகங்கள் நாடகங்கள் அதிபரின் எண்ணத்தின் அடிப்படையில் வல்லிபுரம் -ஏழுமலைப்பிள்ளையின் எழுத்துருவாக்கத்தில் படைக்கப்பட்ட நாடகங்கள் போட்டிக்கு கையளிக்கப்பட்டன.
 மாணிக்கர் இல்லத்திற்கு சங்கிலியன், சம்பந்தர் இல்லத்திற்கு மகுடபங்கம்,சுந்தரர் இல்லத்திற்கு அரிச்சந்திரன் கதை, வாகீசர் இல்லத்திற்கு கர்னன் ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன
.
இந்நாடக போட்டிகளில்; சங்கிலியன் நாடகம் எஸ்.ரி.குமரன், அரிச்சந்திரன் க.மணிவண்ணன்,மோகனதீபன் மகுடபங்கம் க.சந்திரகுமார், எஸ்.கே.விஜயபால கர்ணண் திருமதி தர்சிகா –ஜெயதீபன் ஆகியோர்  நெறியாழ்கையினை மேற்கொண்டிருந்தனர்.  நாடக போட்டிகளிற்க்கான  இணைப்பாளராக கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியர் த.அருள்குமரன் செயற்ப்பட்டார்
.
 இந் நான்கு நாடகங்களிலும் நூற்றிக்கு மேற்ப்ட்ட மாணவர்கள் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு விழாக்குழவினரால் எற்ப்படுத்தப்ட்டது சான்றாக ஆற்றுகையாளர்களிற்கான எண்ணிக்கை வரையறுக்கப்படாமை இதற்கான சூழ்நிலையினை ஏற்ப்படுத்தியது.
 இங்கு வெற்றி தோல்விகள் மாணவர்களிற்கு முக்கியமாக இல்லாதபோதிலும் ஆத்மிகமானதாகவும் மற்ற்றவர்கள் மீது குரூரமான  மனப்பான்மையினை வளர்க்காத வகையில் ஆற்றுகையாளர்கள் புடம் போட வேண்டியது அவசியமாகும்.

நாடகப்படைப்புக்கள் சமகாலத்தில் குறைந்து செல்கின்றது என கருத்தாடல்கள் முன்வைக்கின்ற பொழுதுகளில் இத்தகைய விழாக்களின் மூலம் நாடக செயற்ப்பாட்டிற்கான உயிப்பினை  வெளிக்கொண்டு வருதல் வரவேற்க்கத்தக்க விடயமாகும்.