என்னைப் பற்றி

சனி, நவம்பர் 19, 2022

ஈழத்து நாடக உலகில் தவிர்க முடியாத ஆளுமை!
நெறியாளர், அரங்கு சார்ந்த தனது ஆற்றலினால் கற்றலில் ஈடுபடுகின்றவர்களது திறன்கள் வெளிவருவதற்கு ஆதார புள்ளியானர்கள்! அரங்கினை வலிமை மிக்க சாதனமாக சமூகமாற்றத்திற்கான கருவியாக பயன்படுத்த முடியும் என குறிப்பிடுகின்றவர்! நாம் அரங்கில் செயற்படுவதற்கு அரங்கு தொடர்பாககற்ற காலத்தில் நம்பிக்கை தந்தவர்களில் ஒருவரான கலாநிதி க. சிதம்பரநாதன் சேர் அண்மையில்இடம்பெற்ற செ.விந்தனின் கண்டாவளையான் வயது அறுபது எனும் பணிநயப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுஉரையாற்றிய ஒளிப்பதவு ஆவணம் ஊடகவியலாளரும் அரங்கில் ஊடக பிரிவில் செயற்பட்டவருமான யாழ்.தர்மினி பத்மநாதன்[தர்மினி அக்காவின்] முகநூலினூடாக அவ் ஒளி ஆவணத்தை பார்க்ககூடியதாக இருந்தது. அவ் ஒளி ஆவணத்தில் கலாநிதி க.சிதம்பரநாதன் சேர் குறிப்பிடுகின்ற அரங்கு வலிமையான சாதனம் எனும் கருத்து சிறப்பான கருத்தாகும். ஆயினும் அவர் குறிப்பிடுகின்ற பலர் கருத்துக்கள் கலந்துரையாடல்களிற்கு உரியன. அப்பகைப்புலத்தில்அவ் ஒளி ஆவணத்தை முதல் நிலை தரவாக கொண்டு சில கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன. இவை கருத்துக்களை கருத்துக்களால் முறியடித்து கருத்து சமர் புரிவதற்கான களமாக இல்லாது ஆக்க பூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான களவெளியாக கொள்ளப்படுவதே ஆரோக்கியமாணதாகும். அவரது கருத்துக்களை முன்னிறுத்தி சில கருத்துக்கள் பதியப்படுகின்றன. இவைஎதிர்க்கருத்துக்கள் அல்ல புரிந்து கொள்ள முனைவதற்கான சந்தேகங்களாக கொள்ளமுடியும். நாடகம் சீரழிந்து விட்டது என எதை வைத்து சேர்குறிப்பிடுகின்றார். சீரழிந்து போனது எனின் அதற்கு யார் எல்லாம் பொறுப்பு? என்ன காரணங்களால் சீரழிந்து போனது? சீரழிந்து போகும் வரை தடுக்கமுடியாமல் போனதுக்கான காரணம் என்ன ? ஏன் அதை உங்களால்தடுக்கமுடியாமல் போனது என்பதற்கான நியாமான காரணங்கள் பற்றி கலந் துரையாடுவதே நாடகதுறையின் எழுச்சிக்கான அடிப்படையாகும். அரங்கு வலிமையான சாதனம் அதை ஏற்க நாடக துறை சார்ந்வர்கள் தயாரில்லை என்றால் அந்த நாடக காரர் யார்? நாடக துறை சார்ந்து கற்றவர்கள் தயார் இல்லையா? யார் அந்த நாடககாரர்? நாடக துறை சார்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உங்களது நெறியாழ்கையில் நாடகம் நடித்திருப்பார்கள் அல்லது உங்களது வழிகாட்டலில் அரங்க செயற்பாடு சார்ந்நு ஏதோவெருவிடயத்தில் பங்கெடுத்திருப்பார்கள். நாடகத்தை கற்று வெளியேறியவர்கள் நாடக துறை சார்ந்து செயற்படவில்லையா? அவர்களது செயற்பாடு நாடக துறையின் அழிவிற்கு காரனமா? எது என்பதை தெளிவு படுத்தப்பட வேண்டியது நீண்ட நெடிய நாடக செயற்பாட்டாளர் என்கின்ற வகையில் உங்களது கடமையாகின்றது. "நாடகம் படிக்கிற ஆட்களுக்கு அரங்கின்ர வலிமை தெரியாது." என குறிப்பிட்டால் அந்த வலிமைய உணரும் வகையில் பாடசாலை கலைத்திட்டத்தில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படவில்லையா? அவ்வாறு வடிவமைக்கப்படவில்லை எனில் அப்பாடத்திட்டத்தினை வடிவமைத்தவர்களது தவறாக கொள்ளமுடியுமா? அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர் யார்? பரீட்சை மையமாக வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் பரீட்சை மைய செயற்பாட்டில் இருந்து வெளிவராத வகையில் நீங்கள் குறிப்பிடுகின்ற வலிமையினை எவ்வாறு உணர முடியும்? "நாடக ஆசிரியர்கள்கூடுகிற இடங்களில டிஸ்கசன் நடக்கிறேலை. அவர்களுக்கு இங்கு நடக்கிற மாற்றத்தை படிக்க ஆசை இல்லை." எதை வைச்சுக்கொண்டு நீங்கள் இந்த முடிவுக்கு வந்தீர்கள்? டிஸ்கசன் நடக்கிற இடங்களை தீர்மாணிப்பவர்கள் யார்? யார் நடத்துவதை டிஸ்கசனாக ஏற்றுக்கொள்கின்றீர்கள்? எந்தவகையில் டிஸ்கசன் நடந்தப்படவேண்டும் என நினைக்கின்றீர்கள்? ஏன் இத்தகைய ஓப்பின் போறத்தை உருவாக்க முடியாதா? "நாடகம் சிரழிஞ்சு போச்சுது." எண்டால் அந்த சீரழிவுகளில் இருந்து தப்பிப்பதற்கு வலிமையான சாதனமான அரங்கினை அரங்கிற்கே முதலில் பயன்படுத்தி வெற்றிகொள்வோம். இங்கே டிஸ்கசனங்களை ஏற்படுத்தலாம். நாடக ஆசிரியர்களை உருவாக்கிவர்கள் யார்? சீரழிச்சு போச்சு தெண்டால் அச்சீரழிவிகளுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்? அது சார்ந்த உரையாடல்களுக்கு தயார் நிலையில் எத்தனை பேர் உள்ளனர்? இத்தகைய நிலை க்கு காரணமாணவர்கள் யார்? நாடகம் இருவழி கலை வடிவம் எனில் தோல்விகளுக்கும் வெற்றிகளுக்கும் இரு வழி சார்ந்த வகையில் பொருள் கொள்ளப்படுவதே பொருத்தமான தாக இருக்க வேண்டும். குற்றம் சாட்டுதல்களினால் எதை சாதிக்க முடியும். ஏனைய துறைசார்ந்தவர்களுக்கும் இத்துறை சார்ந்தவர்களுக்கும் இடையிலான வேறு பாடு என்னவாக இருக்கும்? என பல வினாக்கள் எழுவது தவிர்க இயலாது. உரையாடல்களுக்கு நாம் தயார். புத்தாக்க அரங்க இயக்கம் இணையவெளியில் கதையாடப்படுகின்ற கதையாடல்களில் பல விடயங்கள்பேசப்படுகின்றது. வேடதாரியில் எழுதப்படுகின்றன. உரையாடல்கள் நடத்தப்பட்ட போது திறந்த மனநிலையுடன் எத்தனை பேர் பங்கு பற்றினார்கள் என்பதையும் உணர்ந்து செயற்படுதல் அவசியமானதாகும்..
எஸ்.ரி.அருள்குமரன்) நூல் -ஒளவை (நாடகபனுவல்) நாடக ஆசிரியர் இன்குலாப்.
இலக்கியங்கள் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றபோது வேறு பரிணாமம் கொள்ளப்படுகின்றன. புரானிய காலப்படைப்புக்களை தற்காலத்தின் நோக்குநிலையில் மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட வகையில் பல படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. நாடக பனுவல்களில் பல மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட வகையில் எழுதப்பட்டுள்ளன. பிரளயனது உபகதை ஏகலைவனை வேறு கோணத்தில் பதிவு செய்கின்றது. இன்குலாப்பின்ஒளவை நாடகப்பிரதி ஒளவையினை முற்போக்கு ரீதியான பாத்திரமாக படைத்துள் ளார் . சங்ககாலத்தில் இருந்து பல காலங்களில் ஒளவை எனும் பெண் கவிஞர்கள் பாடல்களை யார்த்தபோதும் எல்லோரையும் ஒன்றாக்கி பாடல்களையும் யாரே ஒளவை எழுதிதை யாரோ ஒளவைக்குரியதாக பிற்கால சினிமாக்காரர் ஒன்றாக்கி குழப்பநிலையினை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டும் நாடகஆசிரியர் தனித்துவமாக ஒளவையினை வேறொரு கோணத்தில் பதிவு செய்கின்றார். இவ்விடயம் பற்றி பின்வருமாறு பதிவு செய்கின்றார். 'ஒளவையைப்பற்றித் தமிழ்ச் சிந்தனையில் திணிக்கப்பட்ட பிரமையை உடைக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே நாடகம் எழுதுவது பற்றி சொன்னேன்.வெவ்வேறு கலங்களில் வாழ்ந்ததாக சொல்லப்படும் ஒளவைகளைக்கலவையாக்கி ஒரே ஒளவையாக்கித்தந்தார்கள்.அல்லது வேறுபட்டகாலங்களில் வாழ்ந்த பெண்புலவர்கள் இஒளவைஎன்ற பெயரில் தங்களை அழைத்துக்கொண்டதாகவும் ஆய்வாளர் சுட்டுவர்.இந்தக்கலவையில் சங்ககால ஒளவை தொலைந்து போய்விட்டாள்.ஆடவரின் ஆதிக்கங்களை அறநெறிகளாக ஏற்றுக்கொண்ட பிற்கால ஒளவைகள் முன்னிறுத்தப்பட்டனர். ஒளவை இஒளவையாராக மாற்றப்பட்டாள்.இந்த மாயைகளை உடைத்துத் தொல் ஒளவையை மீட்கப்படவேண்டும் '....... (பக்7) இந்நாடக பனுவலில் உள்ள சில உரையாடல்கள் 1-சிறுமி:உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு ஏனையோர்: உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு 2-சிறுமி : உண்டி சுருங்குதல் ஆண்களுக்கு அழகோ சட்டாம் பிள்ளை:பாடம் படிக்கும் போது கேள்வ எல்லாம் கேட்டக்கூடாது 2-சிறுமி:பெண்களுக்கு ஏன் உண்டி சுருங்கவேனும்? ................................................ சட்டாம்பிள்ளை :எங்களை எதுத்துபேசக்கூடாது.மத்தபடி நாங்கள் சொல்லுறதை திரும்ப சொல்லனும். 2-சிறுமி: கிளிப்பிள்ளை மாதரி (பக்14) ஒளவை : இந்த வீரன் உனக்கு ஒரே மகனா? மூதாட்டி : ஆமாம்...அவன் நான் பெற்ற பிள்ளை...இதோ இவர்கள் அனைவரும் (நடுகற்களை காட்டி) நான்பெறாத பிள்ளைகள்..இவர்களை கருவுற்ற காலத்தில் மண் திண்றோம். இப்பொழுது இவர்களை மண் திண்று கொண்டிருக்கிறது. ஒளவை : அம்மா..உன் ஒரே மகனைக்களப்பலி கொடுத்ததில் உனக்கு வருத்தமில்லையா? மூதாட்டி : மக்களுடைய களச்சாவு எங்களை வருத்தப்படுத்துமோ? (பக் 50) பாணர் 1- என்ன ஒளவை...இந்த வம்பனிடம் என்ன பூசல்? ஒளவை : ஒன்றுமில்லை அதியனைப்பற்றி நான் எப்பொழுதும் பேசுவதால் அதியனை நான் காதலிக்கிறேனாம். பாணர் 1-அப்படி காதலித்தால் தான் என்ன தவறு ஒளவை :காதலிப்பது ஆண் பெண் இயல்புஇஆனால் ஆணிடம் பெண்ணும் இபெண்ணிடம் ஆனும் அன்பு காட்டுவது காதலாகிவிடுமா? (பக் 73) அதியனுக்காய் தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையினது ஆளுமையினை புலப்படுத்துவதாக உள்ளது. ஒளவை :நாடு கவரவேண்டும் என்பது ஒன்று தான் அரசுகளுக்கிடையில் ஏற்படும் பகைக்குக் காரணம் இல்லையா? அதியன் : சரியாகச்சொன்னாய் ஒளவை ! தகடூர் குறித்துத் தொண்டைமானுக்கும் புதுபசி ஏற்பட்டிருக்கிறது ஒளவை போரில் மடிவதை மன்னனாகிய பெருமைக்குரியதாக கருதுகின்றேன்.என் மக்கள் இந்த பொருட்டு சாவது என்னை வருத்துகிறது.தொண்டைமானின் பகையால் என் மக்களுக்கு நேரும் கேடு கூடுவது குறித்து கவலைப்படுகின்றேன்...அத்துடன் தொண்டை நாட்டு மக்களுக்கு நேரிடும் துன்பத்தையும் நினைத்துப்பார்க்கின்றேன்.இதைத்தவிர்க நீதான் உதவ வேண்டும். ஒளவை : நான் என்ன செய்யவேண்டும்? அதியன்: தொண்டைமானும் பாட்டிலும் கூத்திலும் விருப்பமுடையவனாம்.அதிலும் உன் பாடல்களில் அளவற்ற ஈடுபாடு உடையவனாம்.அதனால்..அமைதிக்கான என் பொருட்டு அவனிடம் தூது செல்ல வேண்டும். (பக் 85) ஒளவை : பகைவரை குத்துதால் கங்கும் நுனியும் முறிந்து விட்டன....... (பக்89) பெண்ணிய நோக்கில் நாடக ஆசிரியரால் படைக்கப்பட்ட இப்பனுவல் நல்ல பனுவலாக காணப்படுகின்றது.