வெள்ளி, அக்டோபர் 28, 2022
காலத்தை வசப்படுத்தியவன் வாழ்வில் வெற்றி பெற்றவனாகின்றான்
திங்கள், அக்டோபர் 24, 2022
இதயக்கோவிலில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள் ஆசிரியர்கள்
கற்பிப்பவன் ஆசிரியன் அல்ல கற்றுக்கொடுப்பவனே நல்ல ஆசிரியன்.வாழ்வை அளிப்பவன் ஆசிரியன். வாழ்வை அழிப்பவன் அல்ல.
ஆசிரியத்துவம் என்பது மகத்துவமானது.தன்னலமற்றது.தன்னிடம் கற்றவர்கள் தன்னை விட எப்போதும் உயர்வாக இருக்கவேண்டும்.சமூகத்தில் தம்மை விட மேலோங்கி வரவேண்டும் நினைக்கின்ற ஆத்மாக்கள் ஆசிரியர்கள்.
இவர்களது அர்ப்பணிப்பான இயங்குதல் இல்லையெனில் சமூகம் உயிர்ப்பு பெறுவது எங்கனம்.
தன்னிடம் கற்றவன்சித்திபெறுகின்றபோது காட்டுகின்ற மகிழ்ச்சியும் அவன் தோற்றுப்போகின்ற போது படுகின்ற துயரினையும் வார்த்தைகளினால் வடித்துவிடமுடியாதவை.
இதயக்கூட்டிற் இதயக்கோவிலில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள் ஆசிரியர்கள்குள் இருந்து உயிர் பிரிகின்ற கனங்கள் வரை அவர்களது நினைவுகள் உயிர் வாழ்ந்துகொண்டிக்கும்.
அவர்கள் எப்போதும் இதயக்கோவில்களில் வைத்து பூஜிக்கப்படவேண்டியவர்கள்.அவர்கள் இட்ட வழிச்சுவடுகளினை பின்பற்றியே எமது பாதைகள் தகவமைக்கப்பட்டன.
நாம் எமக்கான பாதையில் பயணித்தாலும் நாம் துவண்டு போனபோது அவர்கள் எமக்களித்த வார்த்தைகள் ஒதுங்கியிருந்தபோது முன்னுக்கு கொண்டுவருவதற்காக பொய் கலந்து சொன்ன உண்மைகள் எமக்குள்ளே விசை கொண்டு எமது வாழ்வியல் பயணத்தினை உந்தித்தள்ளிக்கொண்டிருக்கின்றது.
நாம் பெற்றுக்கொண்ட வெற்றிகள் எல்லாம் உங்களால் சாத்தியமானவை.நாம் அடைந்து கொண்ட தோல்விகள் எல்லாம் எமது அசன்டையீனங்களாய் வந்துதித்தவை .
நினைவுச்சொடுக்கினுள் வந்து செல்கின்ற ஆசிரியர்களை நினைத்துப்பார்க்கின்றபோது அத்தகைய நாட்கள் மீண்டும் வராதா என்கின்ற ஏக்கப்பெருமூச்சு இதயத்தி்னுள் இருந்து வலி மிகுந்து வெளித்தள்ளுகின்றது.
அவை வசந்த காலங்கள்.கனவுகளை உற்பத்தியாக்கிவிட்ட காலங்கள்.
தன்னம்பிக்கையுடன் நாமும் இந்த பூமிப்பந்தில் பயணிக்க முடியும் எனும் உத்வேகத்தை அளித்தபொழுதுகள்.
நீங்கள் இல்லையேல் நாம் இல்லை.எங்களது பலவீனங்களை கூட பலமாக்கி விட்ட பவித்திரமானவர்கள்.
நீங்கள் செய்த சேவைக்கு உதவிக்கு பிரதியுபகாரமாக நாம் என்ன செய்துவிட்டோம் .
ஆனாலும் உங்கள் பெயர்களை எம்மோடு அடுத்த தலைமுறை நோக்கி கொண்டு செல்கி்ன்றோம்.
இதுவே நாம் உமக்கு செய்கின்ற உதவி.
நான் எப்போதோதொலைந்து விடுவேன் அல்லது அழிந்து விடுவேன் அல்லது அழித்துவிடலாம் என்றவர்களது செயல்ப்புல வெளிக்குள்ளும் மூச்சு முட்டி வலி நிறைந்த பயணங்களை மேற்கொள்கின்ற போதெல்லாம் நீங்கள் அருகில் இருந்து என்னை வழிநடத்துவதாய் என் ஆன்மா சொல்லிக்கொள்கின்றது.
இவ்வாறு எனது கூட்டிற்குள் பசுமையாக இருக்கின்ற எனது ஆசிரியர்களது நினைவுகளை மீட்டிப்பார்க்க முயல்கின்றேன்.
(மீட்டல்கள் தொடரும்...)
ஞாயிறு, அக்டோபர் 23, 2022
(எஸ்.ரி.அருள்குமரன்)
காலம் சிலவற்றை அரங்கேற்றிவிடுகின்றது.கனவு சில விடங்களை துடைத்தெறிகின்றது.நாம்பயணப்படவேண்டிய வழி எதுவென தெரியாது சிலவேளைகளில்தடுமாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் எம்கரம் பற்றி நகர்த்திச்செல்பவர்கள்இவர்கள்.
அரங்கு சார்ந்த கற்றல் அறிமுகமாகியது கந்தவேள் சேரிடம் இருந்தே.
அவர் வகுப்பறைக்குள்ளேயும் வெளியேயும் கற்றுனர்த்திய விடயங்கள் இன்றையஇயங்கியலுக்கான ஆதார்சமான புள்ளிகள்.ஆழப்பாயும் வேர்கள்.விதைதத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை.
யூனியன்கல்லூhயில் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் எனும் பாடத்தினை கற்ற வேளையிலே அவருடைய அறிமுகமும் அதன் தொடர்ச்சியாக பல விடயங்களை கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
அந்நாடகத்தின் காட்சி இன்றும் மனக்கண் முன் விரிகின்றது முரசறைசபவனது செய்தியோடு நாடகம் ஆரம்பமாகும்.நிசாந்தராகினி அக்கா (இன்று அவர் தேசிய கல்வி நிறுவகத்தின் நடனத்துறை விரிவுரையாளராக இருக்கின்றார். கலாநிதி பட்டத்தினை நிறைவு செய்துள்ளார்.) மாதவிக்கு நடித்திருந்தார் அவரது நடிப்பு சிறப்பானதாக இருந்தது.
சேரிடம் போய் நல்ல நாடகம் என குறிப்பிடவதற்கான துணிவு இருந்ததில்லை. பின்னர் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தினை கற்றவேளை அவருடன் பழகமுடிந்ததுடன் அவரது ஆளுமைகளை அருகில் இருந்து பார்ப்பதற்கும் அவரிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ளவும் முடிந்தது.
மருதனார் மடம் இராம நாதன் கல்லூரி வளாகத்தில் யூனியன்கல்லூரி இயங்கிய வேளை அப்போதைய கல்லூரி அதிபராக இருந்த புண்ணியசீலன் சேரின் முயற்சியினால் அமைக்கப்பட்ட மண்டபத்தில் பாடசாலை நிறைவடைந்த பின்னர்களப்பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில் ஆர்வத்துடன் அப்பயிற்சிபட்டறையில் நானும் பங்கபற்றியிருந்தேன்அப்பயிற்சிபட்டறையில்.சுன்னாகம் ஸ்கந்தவரேதயாக்கல்லூரி மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
அப்பயிற்சிப்பட்டறையில் தான்;
வாசிக்கின்றபோது எவ்வாறு வாசிக்கவேண்டும் , உணர்வு வேறுபாடு எவ்வாறு வரவேண்டும் என்பதெல்லாம் அங்கு அவரிடம் கற்றுக்கொண்டோம்..
பங்குபற்றியவர் நடிப்பு செயற்பாட்டில் ஈடுபட வலியுறுத்தப்படுகின்றனர்.எல்லோரும் ஒவ்வொருவராக நடிக்கின்றனர்.என்னுடைய ரேன் வருகின்றது.நான் எழும்பி யாரையும் பாக்காமல் நடிச்சு முடிச்சிட்டு என்னுடைய இடத்தில போய் இருந்திட்டன்.கைதட்டல் சத்தம் கேட்கிது.சேரும் நல்லா இருந்ததாக பராட்டினார்.மிகச்சிறப்பாக நடிச்சனோ எனக்கு தெரியாது.ஆனால் அந்த பாராட்டு மிகப்பெறுமதியானதாக இருந்தது.நான் நடிச்சது குடிகாரன் பாத்திரம்.இது மாறுபட்ட அனுபவமாக இருந்தது.
அவரது நெறியாழ்கை அனுகுமுறை வித்தியாசம்.
எங்களை செய்யவிடுவார்.எப்படி வர வேண்டும் என்பதை சொல்லி தருவார்.நடிச்சும் காட்டுவார்.
நான் மேடையேறி நடித்தபோது கிடைத்த பாராட்டுக்கள் தொடர்ந்து நடிகனாக செயற்படுவதற்கான ஊக்கியாக இருந்ததது.
மதிப்பிற்குரிய இளையதம்பி ஆசிரியர் அவர்கள் வகுப்பறைக்கு வருகை தந்தபோது அருள்குமரன் மிக நல்லா நடிச்சிருந்தீர்.தொடந்தும் நடிக்க வேனும் சந்தோசமாக இருந்தது.என்றார்.இது எனக்கு
கிடைச்ச விருதாகவே நினைக்கின்றேன்.இதற்கு காரணம் நெறியாளர் கந்தவேள்சேர்.
உயர்தரத்தில் கற்றவேளை அவரது தனியார் கல்வி நிலையத்திலும் கற்றலுக்காக சென்றிருந்தேன்.பல்கலைக்கழக அனுமதிகிடைத்தபோது அச்செய்தியினை சொல்வதற்காக அவரது இணுவில் இல்லத்திற்கு காலை, மாலைவேளை சென்றிருந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை.
அன்றைய காலத்தில் அலைபேசிகள் இன்மையால் இத்தகைய இடர்பாடு.மறுநாள் மாலை சென்றவேளை அவர் வீட்டில் ஓய்வாக இருந்தார்.வழமைபோல் வாரும் இரும் என்றார்.
நான் அதற்கு என்ன ஏது என்பதுபோல யோசிக்கின்றேன்.
நாடகத்தில் பெரிய நடிகானாகவோ அல்லது நாடகத்தில்பெரியாக்களோ வராட்டிலும் பராவாயில்லை நாடகங்களை ரசிக்ககூடியவர்களாக வந்தாலே பெரிய விஷயம் என இவர் அடிக்கடி கூறுவதுண்டு.
நாங்கள் காசுக்குதான் படிப்பிச்சநாங்கள் அனால் நீங்கள் விசுவாசத்தோட இருக்கிறியள் சந்தோசம் என்பார்.
எங்கும் எப்போதும் அறிவுரையுடன் வழிகாட்டுகின்ற அரங்க துறை சார்ந்தவர்.
ஏறிச்சென்ற ஏனியை எட்டி உதைந்தால். ஏறிய இடத்திலேயே நிற்க வேண்டும். இது வரலாறு சொல்லும் செய்தி....