வெள்ளி, அக்டோபர் 28, 2022
காலத்தை வசப்படுத்தியவன் வாழ்வில் வெற்றி பெற்றவனாகின்றான்
காலம் யாரையும் தூக்கி வைத்துக்கொண்டாடுவதும் இல்லைவீழ்த்திவிட நினைப்பதும் இல்லை.
அவர் அவர் நடந்து கொள்கின்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் காலத்தால் கொண்டாடப்படுவதாகவும் நிராகரிக்கப்படுவதாகவும் அமைகின்றது.
எதிரிகளும் துரோகிகளும் தோற்றுவிட்டதாக எக்களாம் கொட்டுகின்ற போது காலம் வெற்றி பெற்றதாக புன்னகைக்கின்றது.
நேரம் என்பது ஓடிக்கொண்டிருக்கின்ற பொறிமுறை.
நேரத்தை கையகப்படுத்தி நேரத்தின் கரம் பிடித்து நாமும் ஓடிச்செல்வதன்மூலம் காலத்தை வெல்ல முடியும்.
நேரத்தை நாம் தவற விடுகின்ற போது காலத்தால் தோற்கடிக்கப்படுகின்றோம்.
ஆனால் நேரத்தை கையகப்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுகின்றவர்களை சக மணிதன் கொண்டாடுவதில்லை.
ஆனால் அரங்கில் இருந்து அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றது.
காலம் யாருக்கும் வாய்ப்புக்கொடுப்பதற்காக கங்கனம் கட்டிக்கொண்டிருப்பதில்லை.
மாறாக ஒவ்வொருவரும் தமது முயற்சியினால் தம்மை அர்ப்பணித்து தமக்கென இடத்தை தகவமைத்து அச்சூழலை பெரும் போராட்டங்களின் மத்தியில் தக்கவைத்துக்கொண்டிருக்கின்ற வேளையில் முயற்சியே அற்றவர்கள் முன்னுக்கு வர பின்நிற்பவர்களை மேடையேற்றி பார்க்கவேண்டும் எனும் பொய்வழிகாட்டலின் மத்தியில் திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்களை ஓரம்கட்டி செயல் முனைப்பற்றவர்களிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கின்ற மனோபாவம் எத்தகையது என்பது சிந்திக்கவேண்டியது.
எல்லாவற்றிற்கும் காலம் தன் சிறகசைப்பில் பதில் பகரும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக