என்னைப் பற்றி

வெள்ளி, நவம்பர் 29, 2013


                                                   நேர்காணல்( எஸ்.ரி.அருள்)

நாடகச்செயற்பாட்டில் ஈடுபட்டதினால் தலைமைத்துவப்பண்பகளினை வளர்த்தக்கொள்ளக்கூடியதாக உள்ளது.



நாடகச்செயற்பாட்டில் ஈடுபட்டதினால் தலைமைத்துவப்பண்பகளினை வளர்த்தக்கொள்ளக்கூடியதாக உள்ளது.இத்துறையில் தொடர்ந்தும் ஈடுபட்டு நிறைய சாதிக்கவேண்டும் என்பது எனது ஆசை என தேசிய ரீதியில் நடைபெற்ற தனிநடிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மானிப்பாய் இந்தக்கல்லூரியில் கல்வி பயிலும் யே.சானுஜன் தொரிவித்தர்.
அகில இலங்கை பாடசாலை மாணவர்களிடையே காணப்படுகின்ற தனிநபர் திநன்களினை வெளிக்கொனரும் வகையில் கொழும்பு றோயல் கல்லூரியினால் நடத்தப்படுகின்ற தனி நடிப்பு போட்டியில்  வடமாகாணத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய  ரீதியில் 3ம் இடத்தினை பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்தள்ளார்.
இவர் வெற்றிக்கான செயற்ப்பாடுகளினையும் தனது அநுபவத்தினையும்   பகிர்ந்துகொண்ட போது

அறிமுகம்-நான் சில்லாலையில் பிறந்தேன் எனது அப்பா பெயர் யேசுதாசன் அம்மா அஜந்திமாலா ஆழம்ப கல்வியினை பண்டத்தரிப்பு  பெண்கள் உயர்தரப்பாடசாலையில் பயின்றதுடன் தற்போது மானிப்பாய் இந்தக்கல்லூரியில் தரம் 7ல் பயின்று வருகின்றேன்
நாடக செயற்ப்பாட்டில் ஈடுபட்டதற்கான காரனம்- அத்துறையில் உள்ள விருப்பமும் அத்துறையில் வளர வேண்டும் என்பதாகும்

நிங்கள் பங்கு பற்றி வெற்றி பெற்ற போட்டி தொடர்பாக குறிப்பிடுங்கள்?
கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றம் தேசிய ரீதியில் நடத்திய போட்டியில் மாவட்ட நிலையில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டென்.இவ் வெற்றி மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றது இன்னும் பல வெற்றிகளிளை பெற்றக்கொள்ள வேண்டும் என்பது ஆசையாகும்

நீங்கள் பங்குபற்றிய நாடக  போட்டிகள் தொடர்பாக குறிப்பிடுங்கள்?

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப்பாடசாலையில் தரம் 4,5 ல் கல்வி பயின்ற போது நாடக போட்டியில் மாவட்ட மட்டம் வழர பங்குபற்றியுள்ளேன்.
மானிப்பாய்  இந்துக்கல்லூரியில் பல நாடகங்களில் ஈடுபட்டுள்ளேன். மன்றங்களில் பல்வேறு நாடகங்;களில் மேடையிட்டுள்ளோம். தரம் 6ல் கல்வி பயின்ற போது இடம்பெற்ற வலயமட்ட கணித நாடகப்போட்டியில்  அறிவு எனும் நாடகம் 3ம்  இடத்தினையும் கொழும்பு றோயல் கல்லூரி நடத்திய  மாவட்ட மட்ட நாடகப்போட்டியில் பங்குபற்றியமை.தரம் 7ல் வலய மட்ட கணித நாடகப்போட்டியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டோம் அதே போன்று கொழும்பு றோயல் கல்லூரி நடத்திய மாவட்ட போட்டியில் 2ம் இடத்தினையும் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி நடத்திய விஞ்ஞான நாடகப்போட்டியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டோம்.

பங்கபற்றிய பிற போட்டிகள்? 

பண்டத்தரிப்ணப பெண்கள் உயர்தரப்பாடசாலையில் பயிலும் போது பேச்சுப்போட்டியில் வலய மட்டத்தில் முதலிடத்தினையும்  இம்முறை தமிழ்தினப்போட்டியில் கோட்டமட்டத்தில் முதலிடத்தினை பெற்று வலயமட்டத்தில் பங்குபற்றினேன்.

பாடசாலைக்க வெளியே ஏதாவது நாடக நிறுவனங்களுடன் பங்குபற்றிய அநுபவம்?

புத்தாக்க அரங்க இயக்கம் எனும் நிறுவனத்துடன் இணைந்து நடித்து வருகின்றோம். புத்தாக்க அரங்க இயக்கத்தினர் சங்கானை பிரதேச கலாசார பேரவையடன் இணைந்து கலாசார விழிப்பனர்வினை ஏற்ப்படுத்தும் எங்களின் கதைகள் எனும் தெருவெளி நாடகத்திலும் அதே போன்று தெல்லிப்பழை பிரதேச செயலக கலாசாரப் பேரவையினரின் அனுசரனையில் இடம்பெற்ற பண்படு எனும் தெருவெளி நாடகத்திலும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாசாரப்ரேவையினர் பாடசாலைகளில் நிகழ்த்திய விழிப்பனர்வு செயற்பாட்டில் விடிவு எனும் நாடகத்திலும் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தேன்.இந்நாடகத்திற்கான நெறியாழ்கையினை எஸ்.ரி.குமரன்,எஸ்.ரி.அருள்குமரன் சேர் ஆகியோர் ஆகியோர்  மேற் கொண்டிருந்தனர்.

 இச்செயற்பாடுகளில் ஈடுபட்டமையினால் ஏற்ப்பட்ட மாற்றம்?

எதையம் சிறப்பாக செய்யக்கூடியளவிற்கு தன்னம்பிக்கை ஏற்ப்பட்டது. நாம் புதிதாக சுயமாக செய்வதற்குரிய வகையில் வளர்ந்தள்ளோம் குழு ஒற்றமை தலைமைத்துவம் எவ்வவாற நடந்து கொள்வது என்பவற்றினை அறிந்து கொள்ள கூடியதாக உள்ளது.

இச்செயற்ப்பாட்டிற்கு ஆதரவாக உள்ளவர்கள்?

பெற்றோர் ,அருள் சேர் மற்றும் எமது நாடக குழு நண்பர்கள்.