என்னைப் பற்றி

சனி, ஜூலை 06, 2013


 முத்தமிழ்விழா 


பாடசாலைகள் பல்வேறு வகையான விழாக்களினை நடாத்திவருவதன்ஊடாக கலைவெளிப்பாட்டிற்கான உந்துதல்வெளிகளை உருவாக்கிகொள்வதுடன் எமக்கு முன்னுதாரனமாகவிளங்கிய பெரியவர்களினை  அவர்களது வாழ்வியலினை நினைவுறுத்திக்'கொள்வதற்கான இயங்கியல் வெளிகள் காணப்படுகின்றன.

 இந்தவகையில் மானிப்பாய் இந்துக்கல்லூhயில் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் முத்தமிழ் விழாவும் இடமபெற்றது.
மாணவர்களது அக்கபூர்வமான நிழ்வுகள் பல பல காணப்பட்ன. அவற்றில் காத்திரமான நிகழ்வாக மாணவர்களினால் கொண்டாhடப்பட் நிகழ்வாக  நாடக மன்ற மாணவர்கள் வழங்கி மாயவலைகனும் நாடகமும தளலயம் ஆற்றுகையும் விளங்குகின்றது.

       நாடகக்கலையின் வீழ்ச்சி

 நாடகக்கலையானது வீழ்ச்சியடைந்து செல்கின்றது எனும் கருத்துநிலையானது வலுவாககாணப்ப டுகின்றதுஆயினும் அக்கலை ஏன்? வீழ்ச்சியடைந்து செல்கின்றதுஅதற்க்கான காரனங்கள் என்ன என்பது தொடர்பான கருத்துப்பகிர்வுகள் ,விவாதங்கள் என்பன யாராலும் மேற்க்கொள்ளப்படுவதில்லை.

மாறாக அக்கலையின் தரநிர்னயத்தில் புத்திஜீவிகளது அர்ப்பனிப்பான சேவைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமானதாகும். ஆயினும் இளையததலைமுறையில் கற்றவர்களதும் புதிய சிந்தனையுடனும் ஆழமான கருத்துப்பகிர்வுடன் கூடியவர்களது செயற்ப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் புறம்தள்ளப்படுகின்ற மிக துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
இவை நாடகத்துறையின் வளர்ச்சியினை ஈழத்தினை பொறுத்தவரையில் கேள்விக்குரியதாக கொள்கின்றமையினை அவதானிக்ககூடியதாக உள்ளது.

நாடகத்தினை பட்டமாகவும், சிறப்பு நிலைக்கல்வியாகவும் கற்று வெளியேறிவர்கள் தமது புதிய சிந்தனைகளினை சமூகத்தில் பயன்படுத்தி கொள்வதற்கு அரைகுறை கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் பழமை வாத சிந்தனை யுடைய பிற்ப்போக்கி வாதிகள் நடந்து கொள்கின்றமை மிகவும்கண்டிக்கப்படவேண்டியவிடயமாகும்.
 புதிய சிந்தனையினை ஏற்றுக்கொள்ளாத சுயநலவாதிகள் மத்தியில் நாடகத்தின் புதியசி ந்தனையினையும் அதன் கருத்து நிலையினை பரப்பி ஆரோக்கியமான புதிய சிந்தனையுடைய சமூகத்தினை உருவாக்கி கொள்வது மிகவும் சவாலானவிடயமாகும்.


ஞாயிறு, ஜூன் 30, 2013

தமிழ் நாடக மரபினை புதுப்பித்து வந்தாலே அதனை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்--மூத்த நாடகக்கலைஞர் வேலாயுதம்பிள்ளை –சரவனபவானந்தன்

                         

                                                                       நேர்காணல்- எஸ்.ரி.அருள்குமரன்

 எங்களுடையதமிழ் மரபு அழியாமல் இருப்பதற்கு மரபினை
புதுப்பிக்கவேண்டும்.ஒவ்வொருவிழாக்களிலும்,கிராமங்களிலும் வழங்கினால் கலை ஒரு போதும் அழியாது  என மூத்த நாடகக்கலைஞர் வேலாயுதம்பிள்ளை –சரவனபவானந்தன் தெரிவித்தார்.

தனது நாடகத்துறை தொடர்பான அநுபவங்களினை தினக்குரலுக்கு வழங்கிய போதே   மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.அவரது நேர்காணல் வடிவத்தினை இங்கு தருகின்றோம்.

கேள்வி -உங்களை பற்றி குறிப்பிடுங்கள்?

பதில்- யாழ்ப்பானத்தில் உள்ள பருத்துறைப்பிரதேசத்தில் கற்கோவளம் எனும் பகுதியில் 1956ம் ஆண்டு பிறந்த நான் ஆரம்ப கல்வியினை கற்கோவளம் மெதடிஸ்ஸ மிஷனிலும் இடை நிலைக்கல்வியினை தும்பளை சைவ பிரகாசத்திலும் கற்றேன். அக்காலப்பகுதியிலேயே இசை நாடகத்துறையில் ஈடுபாடு ஏற்ப்பட்டது.அன்று முதல் அத்துறையில் ஈடுபட்டு வருகின்றேன்.

 கேள்வி -இசை நாடக துறையில் ஆரம்ப கால ஈடுபாடு தொடர்பாக குறிப்பிடுங்கள்?

பதில்- 70; ஆண்டு காலப்பகுதியில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மாதனை சிவசுப்பிரமணியம் அவருடைய அறிமுகம் ஏற்ப்பட்டது. (இவர் ஈழத்து இசை நாடகத்துறையில் பிரபலமான கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.)
பாடல் பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும்  திறமை உடையவனாக இருந்த காரணத்தினால் பெண் வேடங்களினை தாங்கி நடிப்பதற்கான வாய்ப்பு ஏற்ப்ப்டது.குறிப்பாக நல்லதங்காள், சந்திரமதி, வள்ளி,பவளக்கொடி, போன்ற பாத்ரிரங்களிளை ஏற்று நடித்ததுடன் பலரது பாராட்டுக்களினையும் பெற்றுக்கொண்டேன்.

பின்பு 80 களின் காலப்குதியில் கற்கோவளத்தில் 'வேனுகானசபா' எனும் நபடக கம்பனியை நிறுவி அதன் ஊடக 91ம் ஆண்டு காலப்பகுp வரைக்கும் ஆழியவளை,உடுத்துறை, பளை, மயிலிட்டி போன்ற பல இடங்களில் நாடகங்கள் மேடையிட்டு வந்துள்ளேன் ஆயினும் நாட்டில் ஏற்ப்பட்ட அசாதாரன சூழ்நிலை காரனமாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்க வேண்டி எற்ப்பட்டது ஆயினும் இந்தியாவிலும் இசை நாடகத்துறையில் தனித்துவமான நடிகனான செயற்ப்ப்பட்டமை பெருமையான விடயமாக கருதுகின்றேன்.

 கேள்வி-இந்தியாவில் இருந்த காலப்பகுதியில்  மேற்கொண்ட நாடக செயற்ப்பாடுகள் தொடர்பாக குறிப்பிடுங்கள்?

பதில்- 91ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை இந்தியவாவில் தங்கியிருந்தேன்.மதுரை நடிகர் சங்கம் என்ற அமைப்புஅங்கு உள்ளது.அங்கே நடிகர்கள் தமது பெயர்களினை பதிவு செய்து வைக்கும் போது பொருத்தமான வேடம்வருகின்ற போது அழைப்பார்கள். அந்த வகையில் பல நாடகங்களினை நடித்துள்ளேன் அங்கு பெரும்பாலும் ஆண் பாத்திரங்களினையே ஏற்று நடித்திருந்தேன்.குறிப்பாகசத்தியவான் சாவித்திரி,அதிச்சந்திரா மயான காண்டம், பக்த நந்தனார் போன்ற நாடகங்களில் நடித்துள்ளேன். அங்கே நாடகங்கள் நடிப்பது வித்தியாசமானதாக இருந்தது.500 பேருக்கு மேற் நான் குறிப்பிட்ட சங்கத்தில் பதிந்திருப்பார்கள் ஆயினும் இன்றைய நாடகத்தில் யார் யாருடன் நடிக்கப்போவது என்று  மேடையில் ஏறும் வரை தெரியாது.

 கேள்வி- இந்தியாவில் இசை நாடகம் எவ்வாறு உள்ளது?

 பதில்- இலங்கையில் உள்ளது போல இப்ப அங்க இல்லை எங்களிடம் தான் தனித்துவமானதாக உள்ளது. அங்கே சினிமாப்பாணி கலந்துள்ளது.ஆனால் இலங்கையில் சங்கரதாஸ் சுவாமிகளது  நாடகம் போன்று தனிமரபுடன் கூடியவகையில் நாடகம் உள்ளது.இது சிறப்பான விடயம் ஆகும்.

கேள்வி-ஈழத்தின் பிரபலமான இசை நாடக கலைஞரான வி.வி.வைரமுத்துவுடன் நீங்கள் இனைந்து நடித்ததாக அறியப்படகின்றது அது தொடர்பாக குறிப்பிடமுடியுமா?
பதில்- வி.வி.வைரமுத்துவுடன் மட்டு மல்லாது நற்குனம், வி.எம். செல்வராஜா உட்பட்ட கலைஞர்களுடனும் இணைந்து நடித்துள்ளேன். வைரமுத்துவுடன் சந்திரமதியாகவும் நல்ல தங்களாகவும் பின் சந்திர மதியாகவும் 20 ற்கு மேற்ப்பட்ட மேடைகளில் இணைந்து நடித்துள்ளேன்.

கேள்வி- நீங்கள் ஈடுபட்டதில் பிடித்த பாத்திரங்கள்?

பதில்-நல்ல தங்காள்,காரனம் என்னவென்றால் அப்பர்திரத்திரத்தினை என்னனை போன்ற யாரும் செய்ய முடியாது என்பது எனது கருத்து

கேள்வி-நாடகத்தில் ஒப்பனையின் முக்கியத்துவம் யாது?
பதில்-பாத்திரமாக வருவதற்கு ஒப்பனை மிக முக்கியம் நடிகனென்றால் பாத்திரமாக மாறிவிடவேனும் நடிகனுக்கு இன்பமும் அது தான் கஷ்டம் என்பது என்னவென்று தெரியாது இத்தகைய நிலைக்கு பாத்திரமாக மாறுவதற்கு ஒப்பனை முக்கியம் ஆகும்

கேள்வி-இத்துறையில் உங்களது ஆசை என்ன?
  பதில்- பல மூத்த அண்ணாவிமார் இறந்து போய்விட்டார்கள் அவ்வெற்றிடத்தினை நிரப்பவதற்கு இளம் அண்ணாவி மார்களை உருவாக்கவேண்டும்

கேள்வி- இதற்கான முயற்ச்சிகள் எதுவும் மேற்கொள்கின்றீர்களா?

பதில்- நான் இப்பொழுது கிளநொச்சியில் வசித்து வருகின்றமையினால் கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார பேரவையினரின் முயற்ச்சியினால் இளம் தலைமுறையினருக்கு இசை நாடக கலையினை  பயிற்றுவித்துவருகின்றேன். இத்தகைய முயற்ச்சிக்கு ஆதரவாக கலசார உத்தியோகத்தர் கு.ரஜீவன் காணப்படுகின்றார். எனக்கு தெரிந்த இந்த இசை நாடக கலையை  பிறருக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

கேள்வி- இன்று இசை நாடகத்தின் முக்கியத்துவம் யாது?
பதில்-தொலைக்காட்சிகளின் வரவால்இசை நாடகம் மங்கிப்போய்விட்டது என்று பலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் முறையாக இசை நாடகங்களினை பழக்கி, முன்னின்ற செய்தால் பலரும் ரசிப்பார்கள் இசைக்குழுக்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தினை இசைநாடகங்களிற்கும் கொடுத்தால் கலை வளரும்
கேள்வி- இத்துறையினை வளர்க்க உங்களது ஆலோசனையினை குறிப்பிடுங்கள்?
பதில்-  ஆர்வத்தினை கொண்டு வர வேண்டும் எனில் ஒவ்வொரு ஊர்களிலும் கொண் வர வேண்டும் கிராமத்து பிள்ளைகளிற்கு பழக்கினால் எல்லோரும் பார்க்கக்கூடியதாக இருக்கும்

 நன்றி -தினக்குரல் வாரமஞ்சரி