என்னைப் பற்றி

சனி, ஜூலை 06, 2013

       நாடகக்கலையின் வீழ்ச்சி

 நாடகக்கலையானது வீழ்ச்சியடைந்து செல்கின்றது எனும் கருத்துநிலையானது வலுவாககாணப்ப டுகின்றதுஆயினும் அக்கலை ஏன்? வீழ்ச்சியடைந்து செல்கின்றதுஅதற்க்கான காரனங்கள் என்ன என்பது தொடர்பான கருத்துப்பகிர்வுகள் ,விவாதங்கள் என்பன யாராலும் மேற்க்கொள்ளப்படுவதில்லை.

மாறாக அக்கலையின் தரநிர்னயத்தில் புத்திஜீவிகளது அர்ப்பனிப்பான சேவைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமானதாகும். ஆயினும் இளையததலைமுறையில் கற்றவர்களதும் புதிய சிந்தனையுடனும் ஆழமான கருத்துப்பகிர்வுடன் கூடியவர்களது செயற்ப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் புறம்தள்ளப்படுகின்ற மிக துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
இவை நாடகத்துறையின் வளர்ச்சியினை ஈழத்தினை பொறுத்தவரையில் கேள்விக்குரியதாக கொள்கின்றமையினை அவதானிக்ககூடியதாக உள்ளது.

நாடகத்தினை பட்டமாகவும், சிறப்பு நிலைக்கல்வியாகவும் கற்று வெளியேறிவர்கள் தமது புதிய சிந்தனைகளினை சமூகத்தில் பயன்படுத்தி கொள்வதற்கு அரைகுறை கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் பழமை வாத சிந்தனை யுடைய பிற்ப்போக்கி வாதிகள் நடந்து கொள்கின்றமை மிகவும்கண்டிக்கப்படவேண்டியவிடயமாகும்.
 புதிய சிந்தனையினை ஏற்றுக்கொள்ளாத சுயநலவாதிகள் மத்தியில் நாடகத்தின் புதியசி ந்தனையினையும் அதன் கருத்து நிலையினை பரப்பி ஆரோக்கியமான புதிய சிந்தனையுடைய சமூகத்தினை உருவாக்கி கொள்வது மிகவும் சவாலானவிடயமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக