என்னைப் பற்றி

ஞாயிறு, ஜூலை 14, 2013

அரங்க பயிற்ச்சிப்பட்டறைகள் மாணவர்களிடையே ஒளிந்து கிடக்கின்ற ஆளுமைகளினை வெளிக்கொணர்வதற்கான களவெளிகளாக காணப்படுகின்றன.
அரங்க பயிற்சிபட்டறை மாணவர்களிற்கு குழு செயற்ப்பாட்டிற்கான பின் உந்துதல்களினை வெளிக்கொணர்கின்றன.
அரங்கு என்பது மக்களது வாழ்வியிலில் பிரிக்கமுடியாத ஓர் அம்சமாக விளங்குகின்றது. இது மக்களது வாழ்வியலில் மாறு பாடுகளினை ஏற்ப்படுத்தி கொள்வதில் தனக்கான செயல் தளத்தினை வெளிப்படுத்திக் கொள்கின்றது என்பது  எதார்த்தமாகும்.
களப்பயிற்ச்சிப்பட்டறையானது பங்கு பற்றுபவர்களிடையே உள மாறுபாடுகளினை ஏற்ப்படுத்துகின்றது. இதன் காரனமாக அரங்க களப்பயிற்ச்சிப்பட்டறைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமான ஓர் செயற்பாடாக கொள்ளப்படுகின்றது.

அரங்க செயற்பாடுகளில் பல் துறைச்செயற்பாடுகள் காணப்படுகின்றன.அரங்க செயற்பாடுகள் மூலம் மாணவர்களிடையே ஆளுமைசார் வெளிப்பாடுகளினை ஏற்ப்படுத்துவதுடன் அவர்களது செயற்பாட்டிற்கான பின்வெளிகள் தகவமைக்கப்படுகின்றன என்பது எதார்த்தமாகும்.

அரங்க களப்பயிற்ச்சிப்பட்டறை என்பது பங்கு பற்றபவர்களிடையே வித்தியாசமான மான உணர்வுகளினை ஏற்ப்படுத்துகின்றது.
அரங்க  களப்பயிற்ச் சிப்பட்டறை எனும் போது  அச் சொற்களின் பொதிந்துள்ள பொருள்களினை நோக்கும் போது அதன் முதன்மையினை அறியலாம். அரங்கு எனும் சொல்லானது குறித்த இடத்தினை குறித்து நிற்கின்றதுஅதாவது செயல் இயங்கியலுடன் கூடிய இடத்தினை குறிக்கின்றது.  

 களப்பயிற்ச்சிப்பட்டறை எனும் போது களம் என்பதும் இடத்தினை குறித்தாலும் அதன் பொருள் கொள்ளல் வேறாகின்றது குறிப்பாக அரங்கு எனும் சொல் குறிக்கின்ற இடம் என்பது வெளியினை குறித்து நிற்க்க  'களம்' எனும் சொல்லானது பங்கு பற்றுபவர்கள் தமது ஆளுமையினை வெளிப்படுத்துவதற்கும்  தம்மை இனங்கண்டு கொள்வதற்கும்  தமது இயலுமையினை அறிந்து கொள்வதற்கும் இயலாமையினை கண்டுனாந்து  தம்மை பலம் நோக்கிய பணனத்திற்கு தகவமைத்துக் கொள்வதற்க்குமான  செயற்பாட்டினை வெளிப்படுத்துவதாக அமைகின்'றது.


கொழும்பு றோயல் கல்லூரியில் தரம் 6 ,7 மாணவர்களிற்க்கான பயிற்ச்சிப்பட்டறை மேமாதம 4ம் 5ம் திகதிகளில் மேற்கொண்டமை வித்தியாசமான அநுபவமகவும்பல விடயங்களினை அறிந்து கொள்வதற்க்கான வாய்ப்பாகவும் அமைந்திருந்தது.


மாணவர்கள் தமது அநுபவ வெளிகளினை ஏற்ப்படுத்தி கொள்வதற்கும் தம்மை இனம்கண்டு தமது ஆளுமைகளினை மேலும் செப்பனிட்டுக்;கொள்வதற்குமான வாய்ப்பாக அமைந்திருந்தமையினை அவர்களது கருத்துக்களின் ஊடாக  அறிந்து  கொள்ளக்கூடியதாக இருந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக