என்னைப் பற்றி

ஞாயிறு, ஜூலை 14, 2013

                         நாடகக்கலை பேனுகை அவசியம்.


இன்றைய பொழுதுகளில் நாடகம் என்பது வீழ்ச்சியடைந்து  செல்கின்ற கலைவடிவமாக காணப்படுகின்ற து என பலராலும் பகிரப்படுகின்ற கருத்தாக காணப்படுகின்ற து.
நபடகம் என்றால் என்ன என கருத்துநோ
 க்குவோமாயின் ஒரு சிறு குழு பெருங்குழு முன் நிகழ்த்திக்காட்டுவதாக குறிப்பிடுகின்றனர். அதாவது ஒருசெயலினைகுறிப்பிட்ட பர்வையாளர்கள் முன் நிகழ்த்திக்காட்டுவதினை குறிப்பிடுவதாகும்.

பர்ப்போர் ரசனையுள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில் நாடகப்படைப்பின் தரம் புதுமையானதாக வும் நவீனத்துவம் சார்ந்ததாகவும் வடிவமைக்கப்டக்கூடியதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

 பர்வையாளர்களினை ரசனை பூர்வமானவர்களாக தயார்ப்படுத்ததாவகையில் நல்ல படைப்புக்கள் உருவாதற்க்கான வாய்ப்பக்கள் இல்லை என்றேகூறமுடியும்.

 நவீனத்துவ சிந்தனைகளுடன் படைக்கப்படுகின்ற  படைப்புக்கள் புரிவதில்லை என ஒருசிலர்குறிப்பிடுகின்றமை ஒட்டு மொத்த படைப்புக்களினையும் பாதிக்கும். காரனம் என்ன வென்றால் புரியவில்லை அல்லது விளங்க வில்லை என க்குறிப்பிடுகின்றவர்கள் பெரும்பாலும் தம்மைபுத்திஜவீகளாக காட்டிக்கொள்பவர்களேயாகும்.


இத்கையவர்கள் இளையதலைமுறையினர் புத்தாக்க சிந்தனையுடன்கூடிய படைப்புக்களினை படைக்கின்ற போது அவற்றினை நிராகரிக்கின்ற போக்கினையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.


இதனால் பெரும்பாலான இளைய படைப்பாளிகள் தமது இயங்கியல் வெளிகளினை குறுக்கிக்கொள்வதினயும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இது நாடக கலையின் தொடரியல் செயற்ப்பாட்டிற்கான தடையாகவும் காணப்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதனால் பலரும் நாடகக்கலை வீழ்ச்சியடைந்து செல்கின்றதுஎனக்கூறத்தலைப்படுகின்றமையினையினை
நோக்கலாம்.

 பல துறைகளிலும் புத்தாக்க சிந்தனையுடனும் நவீன எண்ணக்கருத்துக்களினை உள்வாங்கியவகையில்  படைப்புக்கள் வருகின்ற போதும் நாடகத்தினை பொறுத்தவரையில் கல்வி முறையாக வளர்ந்து விட்ட போதிலும் பலர் கற்று வெளியேறி ஆக்கபூர்வமான செயற்ப்பாடுகளினை மேற்கொள்கின்றபோதும் பிற்போக்குத்தனமான சிலருடைய செயற்ப்பாடுகளினால் அற்ப்புதமான நாடகக்கலை  பாழ் நிலை நோக்கி   செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுகின்றமை தவிர்க்கவியலானதாகும்.

 தாம் நினைப்பதே சரி எனவும் மாற்றங்களினை ஏற்றுக்கொண்டு புதுமைகளினை ஏற்க்க மறுகின்றவர்களின் கைகளில் நாடகத்துறையானது சிக்கி சிரழிகின்றதோ எனும் ஜயம் எழுவதும் தவிர்கவியலானதாக காணப்படுகின்றது.

நாடகத்தினை பொறுத்தவரையில் பல உத்தி முறைகள், மேடைப்பயன்பாடு ,நடிகர்களது இயங்'கியல் பெறுமானம் ,என்பவற்றிக்கான செயல் வெளிகள் என்பன தனித்துவமானவகையிலும் ,புதுமையானதாகவும் உருவமைக்கப்ட்ட பின்னரும் இன்றும் பிற்போக்குத்தனமான செயற்ப்பாடுகளினை  அற்ப்புதமானது எனக்கொண்டாடும் சிலரினால் நாடகக்கலை வீழ்ச்சியடைகின்றது எனில் மறுக்கவியலாததும் தான்.

நாடகப்போட்டிகளில தரமான படைப்புக்களினை புறம் தள்ளி போட்டி நடத்துனர்கள் தாம் நினைத்த படைப்புக்களினை வெற்றிப்படைப்புக்களாக வெளிக்கொணர்தல் ஆரோக்கியமானதல்ல இத்தகைய நடைமுறைகள் நாடகக்கலையின்எழுநிலையின் செயற்ப்பாட்டினை ஜயம் கொள்ள வைக்கின்றது.
எது எப்படியே  நாடகக்கலையின் வீழ்சியினை தவிர்க வேண்டியதும் நாடகக்கலையின் உன்னத நிலையினை பறைசாற்றுவது;  சம்பந்தப'ப்பட்வர்களது தார்மீக பொறுப்பாகும்.

எஸ்.ரி.ஏ.கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக