என்னைப் பற்றி

ஞாயிறு, மார்ச் 27, 2022

#இன்றுஉலகநாடகதினம்#


அரங்கர்கள் ஒன்று கூடுவதற்கும், அரங்களிக்கைகளின் ஊடாக சமூகம் சார் சிந்தனைகளை விரிவு படுத்திக்கொள்வதற்கும் அதற்கூடாக சமூக அசைவியக்கத்தில் காத்திரமான புல மாற்றத்தினை கொணர்வதற்கான களவெளிகளை ஏற்படுத்துவதற்கான நன்நாள்.
உலக நாடக தின விழாஉருக்கொண்டததற்கான பின்புலமாக அரங்கப் படைப்பாளிகளிடையே புரிந்துணர்வு , சமாதாணம் , அன்பினை பரிமாறிக்கொள்ளுதல் போன்றவற்றை வளர்த்துக்கொள்வதற்காகும்.
ஈழத்தமிழங்கிற்கு நீண்ட வரலாற்றுச்செழுமையும், இயங்கியல் புலமும் உண்டு.
அவ்வரங்கப்புலவெளியில் காலம் தோறும் கனதிமிகு அரங்க படைப்பாளிகள் முகிழ்ந்தெழுந்து வருகின்றமையினை காலம் பறை சாற்றிக்கொண்டிருக்கின்றது.
செயற்படுபவர்களது செயற்பாட்டினை முடக்குவதற்கும் இணைந்து பணியாற்றமுணைபவர்களுக்கிடையில் அதிகார நிலையில் பிரிகோட்டினை இடுவதிலும் முனைப்புக்காட்ட எத்தனிக்கின்றவர்கள் தம்மை இயங்கியலாளர்களாக காட்ட முனைகின்றனர்.
அரங்கதுறைசார்ந்த கல்விபெருவளர்ச்சி கண்டநிலையில் அரங்கின் இயங்கியல் பெரு வெளியினை ஆற்றுகை நிலை சார்ந்த வகையில் மாற்றமுறு சக்தியாக கொண்டுவருவதில் அத்துறை சார்ந்தவர்கள் கரிசணை காட்டாமை விவாதத்திற்குரியது.
வெறுமனே ஒப்புவிப்புப்பண்பாட்டு புலத்தில் இருந்து அளிக்கை சார்ந்த நிலைக்கு அரங்கைகொண்டு நகர்த்தவேண்டிய பணி அரங்க செயலாளிகளிற்கு தடைகளைத்தாண்டி இன்றுள்ள பிரதான பணியாகின்றது.
இயங்குபவர்களை இல்லாமலாக்குவதும் இயங்கியலற்றிருப்பவர்களை இயங்கிலாளர்களாக காட்டமுனைவதை அதிகார வெளி சார்ந்தவர்கள் அசை போடுகின்றனர்.
அரங்க நிலை சார்ந்தஆலேசகர்களே ஆலோசணை வழங்க திறனியற்றிருக்கின்ற இன்றை நிலையில் அரங்க செயற்பாட்டாளர்கள் இளைய தலைமுறையினரை அரங்கின் பால் திசை திருப்பவேண்டிய தார்மீகப்பணி காணப்படுகின்றது.
கடந்த இருவருட காலமாக உலகை அச்சுறுத்திய கொறோனா தொற்று அபாயத்தில் இருந்து படிபடிப்பாக விடுவிக்கப்படுகின்ற இன்றைய சூழல் மகிழ்வைத்தருகின்றது.
இடர்காலத்தில் இணைய வழியில் நேர்த்தளத்தில் பார்ப்போரை படைப்பாளிகள்சந்நித்துக்கொண்டபோதிலும் இன்றைய சூழல் நேரடியாக சந்தித்துக்கொள்ள வாய்ப்பேற்படுத்தியுள்ளது.
இதுவேறுபட்ட அனுபவமாகும்.
அவ் அனுபவ நிலையினை உணர்ந்து கொள்வதற்கான சூழல் கனித்து வருகின்றமை மனமகிழ்விற்குரியதாகும்.
இச்சூழலினை சாதமாக்கி அணைவரும் தத்தமது இயங்கியல் பயணத்தில் சோர்வின்றி சுயாதீனமாக அரங்க செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியது அனைவரது காலப்பணியாகும்.
அனைவருக்கும் உலக நாடக தின நல்
வாழ்த்துகள்
.
அரங்க பணியாற்றுவோம்.
அனைவருக்கும் புத்தாக்க அரங்க இயக்கத்தினரின் நல்
வாழ்த்துகள்
பணிப்பாளர் எஸ்.ரிகுமரன்
நிர்வாக பணிப்பாளர் எஸ்.ரி.குமரன்
ஆற்றுகையாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக