என்னைப் பற்றி

வியாழன், நவம்பர் 03, 2022

அரங்கவிளையாட்டுக்களும் ஆளுமைதிறன்விருத்தியும்

(எஸ்.ரி.அருள்குமரன்) அரங்கவிளையாட்டுக்கள்அரங்கசெயற்பாடுகளில்மிகமுக்கியமான இடத்தினைபெறுகின்றன. விளையாட்டுக்கள் உடல்திறனிற்கான அடிப்படையாகவிளங்குகின்றன. விளையாட்டுக்களில்ஈடுபடுதல்உடல்பயிற்சிக்குமுதன்மையானதாகவும்,அப்பயிற்சியின்ஊடாக உடலினை தகவமைத்தக்கொள்வதிற்குஏற்புடையதாகவும்கொள்ளப்படுவதனைப் போன்று அரங்கவிளையாட்டுக்கள் நடிகனை தயார்ப்படுத்துவனை நோக்கமாகக்கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.
அரங்கவிளையாட்டுக்கள் என்றால் என்ன என நோக்குவோமாயின் நடிகனதுதிறன்விருத்தியினை இலக்காகக்கொண்டு உடல்,உளம்,குரல்ஆகியவற்றிற்கானபயிற்சியாக மேற்கொள்ளப்படுகின்ற விளையாட்டுக்கள் அரங்கவிளையாட்டுக்கள் ஆகும். இவ்விளையாட்டுக்கள் பல்வேறுதேவைகளை அடிப்படையாகக்கொண்டவகையில் பயிற்சியியாக நிகழ்த்தப்படுகின்றன. நடிகன் நடிப்பினை சிறந்தமுறையில்வெளிப்டுத்துவதற்கு,மேடையில் ஏனைய நடிகனுடன்சிறந்ததொடர்பாடல் திறனை விருத்திசெய்துகொள்வதற்கு என தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதற்காக அரங்கவிளையாட்டுக்களில் ஈடுபடுகின்றான். நடிகனைபொறுத்தவரையில் நடிப்பினை வெளிப்படுத்துவதில் மூலகங்கள் முதன்மைபெறுகின்றன. இந்தவகையில் முதற்தரமூலங்கள்,இரண்டாம்தரமூலகங்கள் முக்கியம்பெறுகின்றன. முதற்தரமூலகம்என்பதுஉடல்,குரல்,உளம் என்பனவாகும்..இரண்டாம்தரமூலகங்கள்என்பது துணைக்கலைகளான வேடஉடை,ஒப்பனை,இசை போன்ற மூலக்கூறுகள். இவ்விருவிடயங்களிலும்நடிகனை தன்னை சுயாதீனமாகவெளிப்படுத்திக்கொள்வதற்கும்,பார்ப்போருடன் தனதுஆளுமையினைவெளிப்படுத்திக்கொள்வதற்குமான களமாக முதல்தரமூலகங்களை நடிகன் பயன்படுத்திக்கொள்கின்றான். அரங்கவிளையாட்டுக்கள் உடல்,உளம்,குரல்சார்ந்த பயிற்சியாக விளையாடப்படுகின்றன. உடல்சார்ந்த பயிற்சிக்குரிய அரங்கவிளையாட்டுக்களாக ஆடும்வீடும், நண்டு,றால்,மீன் ,தலைவரைகண்டுபிடித்தல்,எலியும்வளையும் போன்ற சில விளையாட்டுக்களை குறிப்பிடமுடியும். இவ்விளையாட்டுகளில் ஈடுபடுவதன்மூலம் உடல்சார்ந்தவலிமையினைபெற்றுக்கொள்ளஉதவுகின்றது. நடிகன்அரங்கில் நீண்டநேரம்இயங்குவதற்கும்,பாத்திரத்தினை சிறந்தமுறையில் வெளிப்படுத்துவதற்கும்உடற்திறனை வளர்த்துக்கொள்வதற்கு இவ்விளையாட்டுப்பயிற்சி உறுதுணையாக அமைகின்றது. குரல்சார்ந்த பயிற்சிக்குமுதன்மைகொடுக்கம்வகையில்விளையாடப்படுகின்ற அரங்க விளையாட்டுக்களிற்கு உதாரனமாக பசுவும்புலியும்,குலைகுலையாhய்முந்திரிக்காய்,சங்குவெத்திலை சருகுவெத்திலை,நாராய்நாராய்,போன்றவிளையாட்டுக்களை குறிப்பிடலாம். நடிகன்அரங்கில்தன்னைவெளிப்படுத்திக்கொள்வதற்கு குரல்சார்ந்தவெளிப்பாடு இன்றியமையாததாகும்.காரணம் சொல்லாடல்களை வெளிப்படுத்துகின்றபோதுதெளிவாகவும்,சிறந்தஉச்சரிப்புடனும்,இறுதியில் இருக்கின்றபார்வையாளருக்கு தெளிவாகவிளங்கக்கூடியவகையிலும் வெளிப்படுத்தவேண்டும்.எனவேகுரலை சரியானமுறையில்பயன்படுத்திக்கொள்வதற்கும்,உணர்வுநிலையினை வெளிப்படுத்திக்கொள்வதற்கும் குரல்சார்ந்த அரங்க விளையாட்டுக்கள் துணையாகின்றன. உளம்சார்ந்த அரங்கவிளையாட்டிற்கு கரடியும்கிராமமக்களும், பஸ், ,குருவானவர்வீட்டில் கள்ளன்எனும் அரங்கவிளையாட்டுக்களைகுறிப்பிடலாம்.
இவ்விளையாட்டுக்களின்நோக்கம் உளம் சார்ந்தவகையில் அதாவது மனதிற்கான பயிற்சியாக ; கொள்ளப்படுகின்றன. நடிகன் உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள்வைத்திருந்துபொருத்தமான நேரத்தில்வெளிப்படுத்துவதற்கு மனம்சார்ந்த பயிற்சிஅவிசயமாகின்றது.உதாரனமாக சோக உணர்வினை வெளிப்படுத்துகின்றபோது பாத்திரத்தினது சூழ்நிலைக்கு எற்பவெளிப்படுத்தவேண்டும்.தேவையற்றவகையில்வெளிப்படுத்தப்படுகின்ற போதுபார்வையாளருக்கு சலிப்பினை ஏற்படுத்தும். மனதை தனது கட்டுப்பாட்டிற்குள்வைத்திருப்பதற்கும்,நினைவாற்றலினை வளர்த்தக்கொள்வதற்கும்நினைவாற்றலை வளர்த்துக்கொள்வதன்மூலம் நீண்டவசனங்களைஞபகப்படுத்திக்கொள்வதற்கும் இவ்வகையான அரங்க விளையாட்டுக்கள்நடிகனுக்கு பெரும்துணையாகின்றன. அரங்க விளையாட்டுக்கள் விளையாடுவதன் மூலம் பல்வேறு திறன்கள் விருத்தியாக்கப்படுகின்றன.அந்தவகையில் அரங்கவிளையாட்டுக்களில் ஈடுபடுகின்றவர்களிடையே அவர்களது அனுபவத்திற்கு ஏற்றவகையில் பல்வேறு திறன்களைபெற்றுக்கொள்கின்றனர். அற்தவகையில்பொதுவாகபின்வரும் திறன்களை குறிப்பிடமுடியும். கற்பனைத்திறன்,மனதைஒருநிலைப்படுத்தல்,தொடர்படல்,தலைமைத்துவம், கனப்பொழுதில் தீர்மானம் எடுக்கும் திறன்,மனனம், போன்ற திறன்கள் விருத்தியாக்கப்படுகின்றன். மேலும் இவ் விளையாட்டுக்களில் ஈடுபடுவதினால் ஏற்படும் நன்மைகளாக மனமகிழ்வு ஏற்படும், உடல்,உளதளர்வுநிலை,கூட்டாக இயங்கும்பண்பு,வெட்கம்பயம்நீங்கிஇயல்பாகநடிக்கஉதவுதல்,விட்டுக்கொடுக்கும்மனப்பாங்குவளரும், போன்ற பண்புகள் வளர்சியடைகின்றன. நடிகன் தான் ஏற்கின்றபாத்திரத்தினை சிறந்தமுறையில் வெளிப்படுத்துவதற்கு பயம்,வெட்கம் அற்றவனாகஇருக்கவேண்டும். பயம்,வெட்கம் காணப்படுகின்றபோதுஅவனால்சுயாதீனமாக செயற்படமுடியாது .பயம்,வெட்கம் நீக்கப்படுகின்றபோதுகற்பனைத்திறன்விருத்தியாக்கப்படுகின்றது.கற்பனைத் திறன்விருத்தியாகின்றபோது படைப்பாகக் மனநிலை ஏற்படுகின்றது. இப்படைப்பாக்கமனநிலையே அவனை சிறந்த நடிகானாக்குகின்றது. இப்பின்னனியில் நடிகன் தனது பல்வேறு ஆற்றல்களை வளர்த்துக்கொள்வதற்கு அரங்கவிளையாட்டுக்கள் துணைசெய்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக