செவ்வாய், மார்ச் 11, 2025
(எஸ்.ரி.அருள்குமரன்)
அரங்க புரிதல்கள்
அத்தியாயம்1
அரங்கு சார்ந்த பயணங்கள் எப்போதும் மகிழ்வளிப்பனவாகவும்இஇகற்றுக்கொள்ளலுக்கான களவெளியினை ஏற்படுத்துவனவாகவும் அமைகின்றது.
இப்பின்னனியில் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் கலாநிதி க.சிதம்பரநாதனின் வழிகாட்டலில் நிகழ்த்திய அரங்க செயற்பாடுகள் பசுiமாயனதாகவும்இபல கற்றுக்கொள்ளலுக்கும்புதிய சிந்தனையுடன் பயனிப்பதற்கும் நிகழ்த்தபட்ட அரங்க செயற்பாடுகளின் பலம்இபலவீனங்களை உய்த்துனர்ந்துஅடுத்த கட்ட நகர்விற்கு செல்லக்கூடியதாவும் அரங்கின் ஊடாக சமூகமாற்றத்திற்கும் சமூக ஊடாட்டத்திற்கும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.
சுனாமி எனும் இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு மக்கள் முகம் கொடுத்து சொல்லொனாத்துயர் அநுபவித்த பொழுதுகளில் அம்மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கும்இ அவர்களது உளவிடுதலைக்கான திறவுகோல்களை ஏற்படுத்துவதினை நோக்கமாக கொண்ட வகையில் அரங்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அந்த வகையில் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்வாழ்வில் இருந்து மீண்டு தமது இடங்களில் மீளக்குடியமர்ந்ததன் பின்னர் தமது தொழில் முயற்சிகளில் மீளவும் ஈடுபட முயன்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆற்றுகையொன்றினது நினைவு பின்வருமாறு
காலை வேளை ஆரம்பித்த அரங்க செயற்பாடு சிறுவர்களுடன் கிராமிய விளையாட்டுக்கள் விளையாடுதல்இ அவ் ஊர் மக்கள்இபெரியவர்களுடன் கதைத்தல் இஅக்கதைகளின் ஊடாக ஆற்றுகை மேற்கொள்வதற்கான கருத்துப்படிமங்களை கண்டுணர்ந்துகொள்ளுதல் என அன்றைய மாலை வரையான பொழுதுகள் நகர்ந்தன.
மாலை வேளை ஆற்றுகைக்கான திட்டவரையான பருவரையுடன் ஆற்றுகை மேற்கொள்வதற்கான நிலையில் எமது பல்கலைக்கழக நண்பர்களுடன் நானும் ஓர் ஆற்றுகையானாக களமிறங்கியிருந்தேன்.
அவ்வேளை மக்கள் மீளவும் பயமற்ற வகையில் கடலுக்கு செல்லவேண்டும்இஅத்தொழில் மூலம் மீளவும் தமது வாழ்வியல் கட்டுமானத்தை மேற்கொள்வதற்கான நம்பிக்கை கொடுக்கும் வகையில் ஆற்றுகை தகவமைக்கப்பட்டிருந்தது.
இந்த வகையில் மீனவர்களாக ஆற்றுகையின் ஆரம்பித்தில் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதாக ஆற்றுகையினை ஆரம்பித்தபோதும். நண்பர் சுதன் குறிப்பிடடார் 'நீ மீனா நடி. நாங்கள் மீன்பிடிப்பவர்களாக நடிக்கின்றோம் அதை வைச்சுக்கொண்டு ஆற்றுகையினை நகர்த்திச்செல்வோம்' எனக்குறிப்பட்டிருந்தார்.
அந்தவகையில் நான் மீனாக நடித்துக்கொண்டிருக்கின்றவேளை, மீனவர்கள் சுனாமி அடித்தபின்னர் கடலுக்குள் வருவதில்லை. நாம் எல்லோரும் சுதந்திரமாக திரிகின்றோம் எனும் வகையில் ஆற்றுகையினை மேற்கொள்கின்றபோது மீனவர்களாக நடித்தவர்கள் எங்களை பிடித்து இழுத்துவந்து மக்கள் கூடி நிற்கின்ற இடத்தில் ஆற்றுகையினை நகர்த்திச்சென்றனர்.
இவ்வாற்றுகை மக்களுடன் ஊடாடி இமக்களது கருத்துக்களை உள்வாங்கி செயற்படுத்துகின்ற ஆற்றுகை எனும் வகையில் மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும் எனும் செய்தியை ஆற்றுகை எனக்கு உர்த்தியது.
மீனவர்களாக நடிக்கின்றவர்கள் மக்களோடு ஊடாடுகின்றபோது 'என்ன நீங்கள் கடலுக்கு சென்று பிடிக்காமமையினால் மீன்கள் சுதந்திரமாக திரிவதாக குறிப்பிட்ட போது தமது உணர்வுகளினை வெளிப்படுத்தியவர்கள் கருத்துக்களினை குறிப்பிட்டதுடன்இமீனாக நடித்தவர்களை பிடிப்பது போன்று அவர்களும் செயற்பட்டனர்.
அவ்வேளை அவர்களது பிடியில் இருந்து தப்பி ஓடுவதாகநான் பாவனை செய்தபோது ஒருவர் என்னைதலையில் பிடித்து மூன்று முறை மண்ணில் அடித்தார் அவ்வேளை மூச்சிறைத்துப்போன நான் அப்படியே கிடந்துவிட்டேன் என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஆற்றுகை முடிந்தபின்னர் கருத்துக்கள் பல பகிரப்பட்டபின்னர் சுதாகரித்துக்கொண்டு எழுந்த எனக்கு என்னை தாக்கியவர் கை தந்து நன்றாக நடித்தீர்கள் எனக்குறிப்பிட்டார்.எனக்கோ அவரது பாரட்டுதலை விட அடி வாங்கிய ஞபாகவும். அவர் ஏன் என்னை இவ்வாறு தாக்கினார் என்பதற்கான காரனத்தினையும் அறிந்துகொள்ள வேண்டும் என மனம் தவித்தது.
அதற்கான காரனத்தை அவர்களிடம் கேட்டபோது குறித்த மீன் ஒன்றினது பெரினை குறிப்பிட்டு அம் மீனை வலையை விட்டு வெளியே எடுத்த பின்னர் அதை மூன்று முறை தiலைப்பகுதியில் அடித்தால் அது உயிரற்று போய் விடும் எனக்குறிப்பிட்டார். அம்மீனாக உங்களை பாவனை செய்து உங்களையும் தாக்கியதாக குறிப்பிட்டார்.
இந்தவிடத்தில் இருந்து நோக்கும்போது அரங்க செயற்பாடு மக்களிற்கானதுஇ மகிழ்வளிப்பிற்குரிதுஇ அவர்களது சிந்தனையில் மாற்றத்தினை கொண்டுவருவதற்கான தளம் என்பது மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் அவர்களுடன் ஊடாடு கின்ற போது பல எதிர் வினைகளிற்கு முகம் கொடுக்கின்ற வகையில் எம்மை தயார்ப்படுத்திச்செயற்பட வேண்டும் எனும் பட்டறிவினை நான் உணர்ந்துகொண்டேன்.
இந்தவகையில் அரங்கு என்பது எப்போதும் திட்டவட்டமான வகையில் முன் ஆயத்தங்களுடன் இயங்கவேண்டியதுடன் .மக்கள் பங்குகொள்வதற்கான வாய்ப்புக்கள் முன்திட்டமிடலுடன் வழங்கப்படவேண்டும் என்பதை எனது அரங்க செயற்பாட்டு வாழ்வில் கற்றுக்கொண்டேன்.
ஆற்றுகை தளம் மணல் என்பதால் நான் தப்பித்துக் கொண்டேன் மாறாக காயங்கள் ஏற்படக்கூடிய சூழல் உள்ள அற்றுகை தளம் எனில் பாதிப்பிற்கு முகம் கொடுக்க நோர்ந்திருக்கும்
ஆற்றுகையாளனுக்கும் பார்ப்போனுக்கும் இடையில் உணர்வு ரீதியான புரிதல் கட்டமைக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை மாறாக உணர்ச்சியுடனான ஊடாட்டம் வருகின்றபோது ஆற்றுகையாளனும் பார்ப்போனும் இடைவெளியற்ற வகையில் நெருங்குpன்றபோது அல்லது ஊடாடுகின்றபோது அசம்பாவிதங்கள் நிகழ்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும்.
ஆற்றுகையினை தகவமைக்கும் போது அல்லது ஆற்றுகையினை மேற்கொள்கின்றபோது இவ்விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அநுபவ ரீதியாக உணர்ந்துகொண்டேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக