என்னைப் பற்றி

திங்கள், டிசம்பர் 24, 2012


                                                                                                             (எஸ்.ரி.அருள்குமரன்)


நல்லக விளக்கு

நாடகம் மக்களது வாழ்வியலில் வலிகளினை வெளிப்படுத்துவதுடன் அவர்களது  பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளினை தகவமைத்து கொள்வதிலும் முதன்மை பெறுவதுடன் அளிக்கையானது பார்ப்போருடன் நேரடித்தொடர்படையனவாக காணப்படுவதினால் உயிர்ப்பான கலைவடிவமாகவும் விளங்குகின்றது.
 நாடக செயற்பாடு மாணவர்களது ஆளுமை வெளிப்பாட்டிற்கான களவெளிளினை தகவமைக்கின்றன.இச்செயற்பாட்டில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்களிடையே தாக்கவண்மைரீதியான தொடர்பாடல் திறன் விருத்தியடைவதுடன் தலைமைத்துவப்பண்பு,  குரூரம்அற்ற தன்மை,
பிற்போக்கு அற்றமனவுனர்வு ,தன்னலமற்ற நலநோம்பல் என்பன  அதிகரிக்கும்.
இப்பகைப்புலத்தில் நோக்கும்' போது நாடகங்களுக்கான களவெளிகளினை பாடசாலைகள் வழங்கி வருவதினை காணலாம்.குறிப்பாக விழாக்கள் அவற்றிக்கான அடிப்படைகளாகின்றன.. ஆயினும் நாடகங்களிற்கென தனியொரு நாள் ஒதுக்கி விழா நடாத்தப்படுவதென்பது குறைவாக உள்ளது.
ஆயினும் அவற்றிக்கு மாறாக மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நாடகங்களுக்குகென தனியன வகையில் நீண்ட காலமாக விழா நடத்தப்பட்டு வருகின்றன. பாடசாலையின் நிறுவுனர் தினத்தினை அடிப்படையாகக்கொண்ட வகையில் இருதினங்களாக விழாக்கள் முன்னைய காலத்தில் நிகழ்த்தப்படுவதாக குறிப்பிடுகி;னறனர் ஆயினும் நாட்டில் ஏற்ப்பட்ட போர்காரணமாக தொடர்நிலையாக இயங்குவதற்கான வாய்ப்புக்கள் தவிர்க்கப்ட்ட நி லையில் இம்முறை
 56 ஆவது விழா வாக நிகழ்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 நீண்ட காலத்திற்கு பின்பு நாடக விழாவானது இரவுப்பொழுதில் நிகழ்த்ப்பட்டமையானது சிறப்பான விடயமாகும்  
இக்கல்லூரிக்கு நீண்ட கால கலைச்செழுமையுடன் கூடிய வரலாற்றுப்பாரம்பரியமும் கலைத்துறைக்கு செழுமையான பங்களிப்pபினை ஆற்றிய கலைஞர்களினை பிரசவித்த பெருமையும் உண்டு.
 அவ்வகையில் ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை எனப்போற்றப்படுகின்ற கலையரசு சொர்ணலிங்கம்  இலங்கை திரப்படத்துறையில் சாதித்த சி.எஸ்.அருமைநாயகம்  போன்ற கலைஞர்களினை வழங்கிய பெருமையுண்டு.
நாடகவிழாவானது மாணவர்களின் கலைத்திறனினை வெளிக்கொணர வைப்பதினை நோக்காக கொண்டு செயற்ப்படுகின்றன. இதனடிப்படையில்  சம்பந்தர் சுந்தரர் மாணிக்கர் வாகீசர் எனும் நான்குஇல்லங்களுக்கிடையே போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன. 
வாகீசர் இல்ல மாணவர்களது நடிப்பில் சாகாதமனிதம்  சம்பந்தர் இல்ல மாணவர்களின் நடிப்பில் ஆளவந்தான் மாணிக்கர் இல்ல மாணவர்களின் நடிப்பில் நல்லக விளக்கு சந்தரர் இல்ல மாணவர்களது நடிப்பில்  முதுமையிலும் ஆகிய நான்கு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன.
இவ் நான்கு நாடகங்களில் மாணிக்கர் இல்ல மாணவர்களது நடிப்பில் உருவான நல்லக விளக்கு எனும் நாடகமானது சிறந்த நாடகமாகவும் சிறந்த நடிகர் சிறந்த நடிகை ஆகிய விருதினையும் பெற்றுக் கொண்டன.
சிவகுரு எனும் பாத்திரத்தினை ஏற்று நடித்த டில்ஸான் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டாhர். இவர் சுனாமித்தாக்கத்தினால் தனது குடும்பத்தினை இழந்து மனநிலை குழப்பமடைந்தவராகவும் தனிமையின் கொடுமையில் தவிப்பவராகவும் உள்ள சூழ்நிலையினை மிகவும் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தார். அதே போன்று பேரவலத்தின் போது தனது மகனை இழந்து தவிக்கும் தாயின் மன உணர்வினை உயிரோட்டமாக வெளிப்படுத்திய நல்லம்மா பாத்திரமேற்று பாகமாடிய பவன் சிறந்த நடிகையாக தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாற்றுகையின் ஏiனைய பாகமாடிகளாக தர்ஸன் மோகனராஜன் குயிலகாந் ஜெயரூபன்  சாதுசன் சன்ராஜ் சாரூசன் டனிஸ்ரன் ஒலெக்ஸன்  விதுஸன் யோகசாந்  ஆகியோர் செயற்ப்பட்டனர்.
பாடகர்களாக கபில்ராஜ் டிலக்ஸன் தர்மேந்திரன் ஆகியோரும் காட்சிமைப்பாளர்களாக தர்ஸன் சன்ராஜ் டில்ஸான் மோகனராஜன் ஆகியோர் செயற்ப்பட்டனர். இசையில் டொல்கியினை டிலக்ஸன் வழங்கினார்.   
கந்தையா ஸ்ரீகந்தவேளின் எழுத்துருவாக்கத்திலும் எஸ்.ரி.குமரனின் நெறியாழ்கையிலும் இந்நாடகம் நிகழ்த்தப்பட்டது.
இந்நாடகம் இன நல்லுறவினை வலுப்படுத்துவதாகவும் சுனாமி பேரவலத்தின் பின்பு மீnளுழுகையில் உள்ள மக்களது வாழ்வியலினை பேசியது.
போட்டியான வகையில் நாடக விழாவானது நிகழ்த்தப்படுகின்றதென்பதிற்க்கப்பால் காத்திரமான வகையிலான அரங்கப்பாரம்பரியத்தினை வளர்த்துச் செல்வதற்கான வகையில் விழா இடம் பெறுகின்றமை சிறப்பான விடயமாகும்.
    நான்கு இல்லத்தினை சேர்ந்த மாணவர்களும் ஒரே பாடசாலை சேர்ந்தவர்கள் எனினும்   அவர்களிடையே வெற்றி பெற வேண்டும் என்ற அவா மேலோங்கி காணப்படுவது தவிர்க்கவியலாது. ஆயினும் அவர்களிடையே பொறாமை உணர்வினை விடுத்து போட்டி மனோபவத்துடன் செயற்படுவதற்கு மாணவர்களினை வழிப்படுத்த வேண்டியது இல்லங்களின் பொறுப்பாசிரியர்களின் கடமையாகும்.


 நாடகப்போட்டியென்புது குதிரைப்பந்தயம் அல்ல மாறாக மாணவர்களிடையே ஒளிந்துள்ள கற்ப்பனா சக்தியனை வெளிக்கொணர்வதற்கும் தன்னை நம்பி இயங்குவதற்கான களவெளியினை ஏற்ப்டுத்திக் கொள்ளவதற்கான வாய்ப்பாகவும் அமையவேண்டும்.
 வெற்றி தோல்வி என்பது இயல்பானவிடயம் அவற்றினைவிட இயங்கியலுக்கூடாக கற்றுக்கொண்ட விடயத்தினை உய்த்துனர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்தி கொள்ளவதற்கான வாய்ப்பாகவும் அமையவேண்டும்.
 வெற்றி தோல்வி என்பது இயல்பானவிடயம் அவற்றினைவிட இயங்கியலுக்கூடாக கற்றுக்கொண்ட விடயத்தினை உய்த்துனர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்தி கொள்வது பொறுப்பானவர்களின் தலையாய கடமையாகும்.கொள்வது பொறுப்பானவர்களின் தலையாய கடமையாகும்.
தலைய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக