என்னைப் பற்றி

வெள்ளி, ஜூன் 28, 2013

உலகநாடகதினவிழா கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம்


                                                                                                           
                                                                                                           (எஸ்.ரி.அருள்குமரன்)
ஈழத்து அரங்க வரலாறானது நீண்ட வரலாற்றப்பாரம்பரியமும் கலைச்செழுமையுடையதாகும்.

காலவோட்டத்தில் அது தனக்கான தனித்துவத்துடனும் சமூக பண்பாட்டு செயல் தளத்திற்கு ஏற்ற வகையில் தனது செயல் வளர்ச்சியினை தகவமைத்து வந்துள்ளது.

ஈழத்து அரங்க வரலாறு பலராலும் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.ஈழத்தினை பொறுத்தவரையில் அரங்கு கல்வி முறையாக முகிழ்ந்தெழுந்தமையினால் புதிய வடிவங்களினை பிரசவிப்பதற்கும் அரங்கு பற்றிய ஆழமான தேடலிற்கும் வழி சமைத்திருந்தது.

சமூக அக்கறை பொருந்திய அரங்கின் உயிர்ப்hன விடயம்பார்ப்போருடன் நேரடி உயிர்ப்பு விசையினை கொண்டிருப்தாகும்.இத்கைய நேரடி உயிர்ப்பு விசையினை  உடைய நாடகங்களிற்கான விழாவாக வருடம் தோறும் உலக நாடக தினம் கொண்டாடப்பட்டுவருகின்றது.

1961ம் ஆண்டு ஜீன் மாதத்தில் சர்வதேச அரங்க கூட்டமைப்பின் ஒன்பதாவது ஒன்று கூடலாக கெல்சிங்கி , வியன்னா ஆகிய இடங்களில் சர்வதேச அரங்கத்திட்டம் உருவாக்கப்பட்டது.

சர்வதேச அரங்க திட்டம் எனும் சொல்லிற்கு மாற்றீடாக 'அர்விகமா' என்பவரினால் உலக நாடக தினம் முன்மொழியப்பட்டது.எனினும் 1962ல் பரிஸில் மார்ச் 27ம் திகதி  நடைமுறைப்படுத்தப்பட்டது.அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு மேற்ப்பட்ட நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்விழா மக்களிடையே  சமாதானத்தினையும் புரிந்துனர்வினையும் ஏற்ப்படுத்தும் ஆற்றுகைகலையின் சக்தியை மக்கள்முன்னிலையில் வெளிக்கொனர்வதற்கும் அரங்கவியலாளர்களினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்விழா தனது நோக்கமாக பின்வரும் அம்சங்களினை கொண்டுள்ளது.
ஆற்றுகை கலையின் முக்கியத்துவத்தையும் அதன் பயில்வையும் சர்வதேச ரீதியில் பரிமாறிகொள்ள ஊக்குவித்தல்

அரங்க கலைஞர்களிடையே கூட்டுனர்வை உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் ஆக்கத்திறன்மீதான அக்கறையை விருத்தி செய்தல்.
இக்கலைப்படைப்பு மீதானஅபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் விழிப்புனர்வுடன் உருவாக்குதல்
இந்நிகழ்வில் பங்கு கொள்வதன் மூலம் மக்களிடையே ஆழமான புரிந்துனர்விற்கு பங்குகொள்ளலை வலுப்பெறச்செய்வதற்கும் முனைப்பூட்டல்

மேலும் நடனம் போன்ற பிரத்தியோக முறைமைகளிற்கும் முன்னுரிமை கொடுக்கவும் மற்றும் சர்வதேச செய்திப்பரிமாற்றம் பொது விடயங்களினை கதைப்பதற்கான பேச்சுவழக்கமுறை வட்டமேசை மாநாடு போன்ற வேறுபட்ட முயற்ச்சிகளிற்காகவும் சர்வதேச விழாவாக ஒருநாள் அல்லது ஒருவாரம் அல்லது ஒருமாதம் வரை இவ்விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலகத்தில் அரங்கேறி வருகின்ற இவ்விழாவினை னொண்டாடுவதில் ஈழத்து அரங்கவியலாளர்களும் அக்கறை காட்டிவருகின்றனர்.
இதன் ஆரம்ப முயற்ச்சியாக கிழக்கு பல்கலைக்கழகம் தனக்கான களவெளியினை சிருஷ்டித்து உலக அரங்கதினவிழாவினை அரங்கேற்றியது.
அதன் நீட்ச்சியாக யாழ்ப்பானப்பல்கலைக்கழகம் 2007ம் ஆண்டு முதன் முதலாக நிகழ்த்தப்பட்டு அடுத்தவருடத்துடன் அந்நிகழ்வு இடம் பெறாமல் போயுள்ளது.

ஆயினும் 2008ம் ஆண்டு முதல் சுன்னாகம் பொதுநூலகம் நிகழ்த்திவருவதினை அவதானிக்கலாம்.
 அரங்கிற்கான வரலாறு என்பது நீண்டநெடியதாகும். அவ்வரலாற்றினை நகர்த்திவந்தவர்கள் காலத்தின் மறைவிற்குள் சென்ற போதிலும் ஒருசிலரது வாழ்வே தேசத்தின் வரலாறாகிப் போகின்ற சூழ்நிலை சகதி;க்குள் ஈழத்து அரங்க வரலாறும் புதைந்து போனமை தவிர்க்க முடியாதாகும்.

எனினும் சமூகத்தின் இயங்கியலுக்காக தம்வாழ்வியில் துயரங்களினை புதைத்து சமூகத்தின் மகிழ்வே தமது மகிழ்வாகதமது வாழ்வினை வரித்துக்கொண்டு நினைவில் மரித்துப்போனவர்களினை நினைவேந்திக்கொள்வதற்காகவும் அவர்களது பணியின் அறாத்தொடர்ச்சியின் பேனுகையாகவும் அவ்வரங்கவியலாளர்களை நினைவில் நிறுத்திக்கொள்வதற்காகவும் இத்தினம் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் காணப்படுகின்றது.

பெரும்பாலனவர்களது கதையாடலாக நாடகக்கலை வீழ்ச்சியடைந்து விட்டதுமரபுவழிக்கலைகளின் பேனுகை அவசியம் என்பதாக அமைகின்றது.

இப்பகைப்புலத்தில் வீழ்ச்சியடையும் நாடககலையினை  எழுர்ச்சியடைய செய்வதற்கான செயற்ப்பாடுகள் ஆக்கபூர்வமானதாக மேற்கொள்ளப்படுவதுடன் இளம் தலைமுறையினரது நாடக செயற்ப்பாடுகளை ஊக்குவிப்பதுடன் சமகாலத்தின் பதிவுகளாக அரங்க செயற்ப்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுஅணைவரது இணைவுடனும்சர்வதேசம் நோக்கியதான அரங்கபயனத்திற்கு கொண்டுசெல்வது மூத்த அரங்கவியலாளர்களது தார்மீக பொறுப்பாகும்
 
 31.03.2013 ஞாயிறு  தினக்குரல்  வாரமஞ்சரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக