(S.T.Arul)
நாடகவிழா
மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடகவிழாவானது எதிர்வரும் யூலை மாதம் 3ம் திகதி இடம்பெறவுள்ளது. மாணவர்களிடையே மறைந்துள்ள ஆற்றல்களினை வெளிக்கொனரும் முகமாக பல்வேறு செயற்ப்பாடுகள் பாடசாலையில் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் முதன்மையாக மாணவர்களது நடிப்புத்திறனை வெளிக்கொனரும் வகையில் இல்லங்களுக்கிடையே நாடகப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன.நீண்ட காலமாக இவ் நாடக போட்டிகள் மானிப்பாய் இந்துக்கல்லுரியில் நடத்தப்படகின்றது இவ்வருடம் நடை பெறுகின்ற போட்டியானது 57 ஆவது போட்டியாக பாடசாலையில் நாடகவிழாக்களில் பங்கெடுத்தவர்கள் கருத்து பகிர்கின்றனர்.
நான்கு இல்லங்களில் இருந்தும் 100 மாணவர்னளாவது நாடக செயற்ப்பாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப் போட்டிகளின் பிரதான நோக்கம் மாணவர்களினை ஆற்றல் உள்ளவர்களாக மாற்றுவதினை நோக்கமாகக்கொண்டதாகும். மேலும் போட்டியெனும் வகையில் இல்லாதது ஆக்கபூர்வமான வகையில் கனதியான நாடக படைப்புக்களினை வெளிக்கொணர்வதன் மூலம் ஆளுமையுள்ள புதிய இளம் நாடக தலைமுறையினை உருவாக்க முடியும் என்பது எதார்ர்மாகும் ஆயினும் நாடக போட்டிகளினை தனிநபர் போட்டிகளாக பொறுப்பாசிரியர்கள் மாற்ற முனையும்ட பட்சத்தில் ஆரோக்கியமான இளம் தலைமுறையானது எவ்வாறு உருவாகும் என்பது பெரும் வினாவாக எழுகின்றது.
S.T.Arul
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக