என்னைப் பற்றி

புதன், ஜூன் 19, 2013

இரண்டாம் இடம்



ஸ்கந்தரோதயாக்கலலூரியின் விஞ்ஞான விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி இரண்டாமிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது. 
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற மேற்படி நாடகப்போட்டியில்   விஞ்ஞான கருப்பொருளினை மையமாகக்கொண்ட 'வாழ்வதற்கு' என்னும்  நாடகம் இரண்டாமிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது. 
இந்நாடகத்திற்கான எழுத்துருவாக்கம் நெறியாள்கையினை மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்கொண்டுள்ளார். நாடகத்தின் நடிகர்களாக கலக்ஸன், சானுஜன் ,தனுசன் சிவானுஜன் ,குபேரன் ,சதீஸ்குமார், யதுசன் ஆகியோர் நடித்துள்ளனர்.  
மேடைமுகாமைத்துவத்தினை திலக்ஸன் ,சுபிதன் ஆகியோரும் இசையினை றோய்ராஜ்குமார் ,அகிலன் ஆகியோரும்  மேற்கொன்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக