என்னைப் பற்றி

வெள்ளி, ஜூன் 21, 2013

அரங்கினூடாக சிறுவர்களுக்கான உளரன்(மனோதிடம்) மேம்பாடு

எஸ்.ரி.அருள்குமரன்   BA (Hons) MA(M
erit)

ஆசிரியர் 

மானிப்பாய் இந்துக்கல்லூரி

அரங்கினூடாக சிறுவர்களுக்கான  உளரன்(மனோதிடம்) மேம்பாடு
நாடகக் கலை தனக்கென தனித்துவமான பண்புகளினை கொண்டுள்ளது.மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப புள்ளி முதல் இக்கலையின் வகிபங்கு முதன்மை பெறுகின்றது. மனிதர்கள் தமது உணர்வியலினை பிறரிடம் காவுவதற்கும் தமது கருத்தினை பகிர்ந்து கொள்வதற்கும் உறவினை தகவமைத்துக்கொள்வதற்கும் இக்கலை உதவின.
இக்கலையின் தொடர்நிலை இயங்குதல் காலமாறுதலுக்கு ஏற்ற வகையில் வடிவங்களினை தரநிர்ணயம் செய்தன. அவ்வடிவங்கள் தமக்கான தனித்துவத்துடனும் சமூகத்தில் பல் பரிமாண பிரச்சினைகளினையும் ஊடு பொருளாக கொண்டு வெளிப்படுத்தின.

இதன் முக்கியத்துவம் காலமாறுதலில் வெறுமனே உணர்ச்சிக்குரியது என்பதினை தாண்டி அறிவு பூர்வமான விடயமாக பார்க்கப்படலாயிற்று.
ஏவ் விடயத்தினையும் அவற்றில் காணப்படுகின்ற பிரச்சினைகளினையும் அறிவியல் பூர்வமகவும் யதார்த்த பூர்வமாகவும் பதிவு செய்ய முனைந்தன அப்பகைப்புலத்தில் பிரச்சினைகள் என்ன அப்பிரச்சினைகளினை தீர்ப்பதற்கான வழிவகைகள் என்ன அத்தீர்வுகளின் ஊடாக சமூகவியல் பெறுமானத்தில் எத்தகைய மாறுதல்களினை  கொண்டுவரமுடியம் என்பன தொடர்பாக நாடகப்படைப்பாளிகள் சிந்தித்தனர்.

அச்சிந்தனைப்பெறுமானம் சமூகவியலில் தாக்கத்தினை ஏற்படுத்தின
சமூகம் காலம்மாற்றமடையும் பேது பதிய புதிய பிரச்சினைகள் முகிழ்ந்தெழும் போது அவற்றினை வெளிப்படுத்துவதற்கும் தீர்த்து கொள்வதற்கும் நாடகங்கள் துணை செய்கின்றன.

பிரச்சினைகள் எனும் போது பல்வேறு பிரச்சினைகளினை குறிப்பிடுவார்கள். பெண்களது பிரச்சினைகள்இ முதியவர்களது பிரச்சினைகள் இ சிறுவர்களது பிரச்சினைகள் இ பண்பாட்டு பிறழ்வுகள் என பிரச்சினைகள் சமூகவியல் சூழமைவுகளுக்கு ஏற்ப்ப மாறுபடுகின்றன.

கலைகள் மனித வாழ்வியலில் பிரிக்க  முடியாத கூறுகளாக விளங்குகின்றன. கலைப்படைப்புக்கள் காலத்தினை பிரதிபலித்து நிற்கும் கண்ணாடி ஆகும். சமூகத்தில் மனிதர்களது வாழ்வியல்கள் பதிவுகள் மனிதர்களது வலிகள் ,என்வற்றினை வெளிப்படுத்தும் வல்லமை பொருந்தியவை ஆகும். இத்தகைய பணியினை நாடகீய படைப்புக்கள் மூலம் செயற்படுத்த முடியும்.

    இன்றைய சூழ்நிலையில் சம காலத்தில் எமது வாழ்வியல் நீரோட்டத்தில் பலரது கதையாடல் வெளிகளில் சிறுவர்துஷ்பியோகம் அதனூடான பண்பாட்டு பிறழ்வுகள் பற்றிய பார்வை முதன்மை பெறுகின்றன.

சிறுவர்கள் நாட்டின் சொத்துக்கள் , எதிர்காலத்தின் தலைவர்கள் அவர்கள் இக்காலத்தில் பெற்றுக்கொள்கின்ற அறிவபு;புலமையானது அவர்களது எதிர்கால வாழ்வியலுக்கான அடிப்படைகளாகின்றன எனும் கருத்து நிலைகள் முதன்மைபெறுகின்றன.ஆனால் அவர்களது சுதந்திரமான வாழ்வியல் தகவமைப்பிற்கான செயற்பாடுகள்   முழுமையாக இடம்பெறுகின்றனவா எனும் வினாவெழுகின்றன. காரணம் யாதெனில் ஊடகங்களிலும்  பல் வேறு நிலைகளிலும் சிலாகிக்கப்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமுறைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்ற உரிமைகள் எனப்பலவற்றினைகுறிப்பிட முடியும்.

  சிறுவர்களுக்கான சுயமுனைப்பு செயற்பபாடுகளும் அவர்களுக்கான கருத்தாடல் வெளிகளும் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வெளிகளும் உருசமைக்கப்படுகின்ற போதே ஆரோக்கியமான சமூகம் மேற்கிளம்பும்.

சிறுவர்களது உளரன்(மனோதிடம்) மேம்பாட்டிற்கானதும் வாழ்வியல் மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின்தேவையாகும். காரணம் யாதெனில் அவர்களது மனப்பதிவுகளில் உயரிய சிந்தனைகளினையும் அச் சிந்தனையின் ஊடாக தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்துவது அவசியமானதாகும் அத்தகைய சிந்தனை சார் மாற்றத்தினை வெளிக்கொணர்வதற்கு கலையியல் சார் செயற்பாடுகள் துனைசெய்யும்.

பதினெட்டு வயதிற்க்குட்பட்டவர்களினை சிறுவர்கள் எனும்  வகுதிக்குள் உட்படுத்துகின்றனர்கள். அவ்வகையில் பாடசாலைப்பருத்தினை உடையவார்கள் இவ்வகுதிக்குள் வருகின்றனர். எனவே அவர்களுக்கான வரியான வழிகாட்டுதல்களும் நல்லன தீயனவற்றை பகுத்தாராய்வதற்கான வழவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானதாகும்.
சிறுவர்களுக்கான அரங்க செயற்பாடு எனும் போது அவர்களுக்கான கற்பனையை தூண்டும் வகையில் ஆடல் ,பாடல் , விநோதம் ,நிறைந்ததாகவும்  அப்படைப்பின் பேசு பொருள் அவர்களது உளவியல் சார் அனுகுமுறையுடனும் அவர்களது கற்பனையை தூண்டக்கூடியவகையிலுமே உருசமைக்கப்படுகின்றன.

சிறுவர்கள் அரங்க செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களிடையே ஆளுமைவெளிப்படுத்தல்கள் , தலைமைத்துவப்பண்பு ,கற்பனாசக்திவிருத்தியடைதல் எதையும் கூர்ந்து நோக்கும் திறன் விருத்தியடைதல் இ விட்டுக்கொடுப்பகள் இ சகோதரத்துவம் இ சுயதேடல் , சுயமுனைப்பு ,போன்ற பண்புகளினை மாணவர்கள் உள்ளீர்த்து கொள்வதற்கு இவ் அரங்க செயற்பாடுகள் துணை செய்கின்றன
.
சிறுவர் தலை முறை உளவியல் ரீதியாக  பாதிக்கப்பட்டால் அதன் எதிர்கால தலை முறையானது செயல்முனைப்பற்ற வகையிலும் சுயதேடல் அற்;ற தலைமுறையாகவுமே முகிழ்ந்தெழும். ஆத்தகைய சூழ்நிலை உருவாகும் போது ஆரோக்கியமாற்ற சமூகம் உருவாவதினை தவிர்கமுடியாது போகும்.
 எனவே அவர்களது கணவுகளினை உருவாக்குவதற்கும்  அவர்களது சுய முனப்பிற்கானதானவகையில் அவர்களுக்கு விழிப்பூட்டல் சர்ந்த செயற்பாடுகளுடன் அவர்களினை படைப்பில் ஈடுபடுத்துவதன் மூலம் ஆளுமை நோக்கிய சமூக உருவாக்கத்திற்கு வித்திட முடியும்.

நன்றி வெள்ளிமலை
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக