என்னைப் பற்றி

வெள்ளி, ஜூலை 26, 2013


                            பாலேந்திராவின் நாடகங்கள் மேடையேற்றம்.


தமிழ் அவைக்காற்றுக்கலைக்கழக பாலேந்திரா குழுவினரின் மாபெரும் நாடகவிழா நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்  3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நாடக விழாவில் கண்ணாடி வார்ப்புக்கள் ,பாடம் ,சம்பந்தம் ஆகிய நாடகங்கள் ஆற்றுகை செய்யப்படவுள்ளது. 

இலங்கைத்தமிழ் அரங்க வரலாற்றில்  1970 களில் நவீன  மொழிபெயர்ப்பு நாடகங்களின் முன்னோடிகளாகத் திகழ்ந்த முன்னனி நெறியாளர் பாலேந்திரா குழுவினரின் அவைக்காற்றுக் கலைக்கழகத்தினர் நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடு யாழ்மண்ணில்  நாடக ஆற்றுகையினை நிகழ்த்தவுள்ளனர். .

இந்நாடக விழாவிற்கான அனுசரனையினை திருமறைக்கலாமன்றம் சப்தமி ஒலிப்பதிவு  கூடம் கலை இலக்கியப்பேரவை ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.  இந்நாடக விழாவிற்கு நாடக ஆர்வலர்களை கலந்து கொள்ளமாறு விழா ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக