என்னைப் பற்றி

வெள்ளி, ஜூலை 26, 2013

 அரங்க செயற்ப்பாடு  

சுழிபுரம் விக்டோறியாக்கல்லூரி மாணவர்களுக்கான அரங்கத்திறன் விருத்திநாடகப் பயிற்ச்சிபட்டறை நிகழ்வு சுழிபுரம் விக்டோறியாக்கல்லூரிஅழகியல்துறை மண்டபத்தில் சுழிபுரம் விக்டோறியாக்கல்லூரி நாடகமும்
அரங்கியலும் ஆசிரியர்   தலைமையில் நடைபெற்றது.
புத்தாக்க அரங்க இயக்கத்தினால்(ஐ.ரி.எம்) நடாத்தப்பட்ட இப்பயிற்சி பட்டறை
நிகழ்வின் வளவாளர்களாக புத்தாக்க அரங்க இயக்கப்பணிப்பாளரும் யாழ்ப்பாணம்
மத்திய கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ்.ரி.குமரன் புத்தாக்க அரங்க
இயக்கத்தின் நிர்வாகப்பணிப்பாளரரும் மானிப்பாய் இந்துக்கல்லூரி
நாடகத்துறை ஆசிரியருமான எஸ்.ரி.அருள்குமரன் ஆற்றுகையாளர் த.தயானிஷன்
பா.கவிராஜ் இ.பகிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்ச்சி பட்டறையை திறம்பட
வழிநடாத்தினார்கள் .
இப்பயிற்சி பட்டறையில் தரம் 10.தரம்11 நாடகத்துறை மாணவர்களுக்கான நாடகத்
தயாரிப்பு படிமுறை நடிப்புசார்பயிற்ச்சிகள் அரங்கத்திறன் விருத்தி ஆளுமை
வளர்ச்சிசார் பயிற்சிகள் மாணர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்ச்சி
பட்டறையில் தரம் 10 தரம் 11 ஐச்சேர்ந்த 50 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்
பெற்றனர். பயிற்சி பட்டறை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இப்பயிற்ச்சி
பட்டறை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது மிகவும் பயனுள்ள முறையில்
இப்பயிற்ச்சிப்பட்டறையானது அமைந்திருந்தததுடன் புதிய அனுபவங்களையும்
அரங்கியல் சார் நுட்பங்களையும் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக மாணவர்கள்
தெரிவித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக