என்னைப் பற்றி

வியாழன், ஏப்ரல் 03, 2025

(எஸ்.ரி.அருள்குமரன்) கலை என்பது மனித உணர்வுகளின் வெளிப்பாடு. கலைசார்ந்த செயற்ப்பாடுகள் மனிதர்களை புடம் போடுவதற்கும் அவர்களில் இயங்கியலுக்குமான வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்துகின்றன. கலைச்செயற்ப்பாடுகளிற்கான களவெளிகள் தானாக உருவாவதில்லை மாறாக கலைஞர்கள்தமது செயல்தளத்திற்கும் கலைகளினது பெறுமானத்திற்கும் ஏற்றவகையில் கலை வெளிகளினை சிருஸ்டிக்கின்றனர் கலைகளில் அரங்க கலைகளிற்கான வகிபங்குகள் காத்திரமானவை. சமூகப்பிரச்சினைகளினை பேசுவதிலும் மக்களுடன் இனைந்தவகையில் நேரிடையாக பகிர்ந்து கொள்வதிலும் முதன்மை பெறுகின்றன. நாடகக் கலை தனித்துவமான பண்புகளினை கொண்டதாகும்.மனிதநாகரிக வளர்ச்சியின் ஆரம்ப புள்ளி முதல் இக்கலையின் வகிபங்கு காத்திரமானதாக விளங்குகின்றது. மனிதர்கள் தமது உணர்வியலினை பகிர்தலுக்கும் அதனூடான கருத்து பகிர்விற்கும் உறவுகளின் தகவமைப்பிற்கும் இக்கலைகள் பங்காற்றின. இக்கலையின் தொடர்நிலை இயங்குதல் காலமாறுதலுக்கு ஏற்ற வகையில் புதிய வடிவங்களினை தரநிர்ணயம் செய்தன. அவ்வடிவங்கள் தமக்கான தனித்துவத்துடனும் சமூகத்தில் பல் பரிமாணத்துடன் வெளிக்கிளம்பின. இதன் முக்கியத்துவம் காலமாறுதலில் அரங்கு என்பது வெறுமனே உணர்ச்சிக்குரியது என்பதினை தாண்டி அறிவு பூர்வமான விடயமாக பார்க்கப்படலாயிற்று. அரங்கின் பேசுபொருளில் சமூகத்தின் தேவை நிலை முதன்மையானபங்காற்றுகின்றது என்பது எதார்த்தமாகும். அவற்றினை பதிவுகளாக்க வேண்டும் எனும் தளத்தில் அரங்கவியலாளர்கள் இயங்குகின்றனர். சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளினை அறிவியல் பூர்வமகவும் யதார்த்த பூர்வமாகவும் பதிவு செய்ய முனைந்தனர். அப்பகைப்புலத்தில் பிரச்சினைகள் என்ன அப்பிரச்சினைகளினை தீர்ப்பதற்கான வழிவகைகள் என்ன அத்தீர்வுகளின் ஊடாக சமூகவியல் பெறுமானத்தில் எத்தகைய மாறுதல்களினை கொண்டுவரமுடியும். என்பன தொடர்பாக நாடகப்படைப்பாளிகள் சிந்தித்தனர். அச்சிந்தனைப்பெறுமானம் சமூகவியலில் தாக்கத்தினை ஏற்படுத்தின. சமூகம் காலம்மாற்றமடையும் பேது அம்மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் அரங்க வடிவங்களும் தரநிர்ணயம் செய்யப்படுகின்றன. அத்தர நிர்ணயம் என்பது எத்தகையவற்றினை அரங்கிலே பேசமுனைகின்றோமோ அதனை அடிப்படையாகக்கொண்டே அவ்வடிவங்கள் நிர்ணயம் செய்யப்படும். நாடகங்களில் எவை முதன்மைப்டுத்தப்படுகி;ன்றனவோ அவற்றினை அடிப்படையாகக் கொண்டு அவ்வடிவங்களில் நாடகங்கள் பேசப்படுவதுண்டு. அரங்க வடிவங்களில் சிறுவர்களிற்கான அரங்குகள் முதன்மை பெற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இன்றைய சிறுவர்களே எதிர்காலத்தின் தலைவர்கள் அவர்கள் இளவயதில் பெற்றுக்கொள்கின்ற அறிவோடு இணைந்த அனுபவமே அவர்களது எதிர்கால வாழ்வியலுக்கான அடித்தளமாகின்றன. அவ்அடித்தளம் சரியானதாக இடப்படலுக்கு கலைகளது துணைமுதன்மையானதாக விளங்குகின்றது. அவற்றிலும் இயங்கு கலைகளுடனான ஊடாட்டம் அவர்களது ஆளுமைவெளிப்பாட்டிற்கான களவெளிகளினை சிருஷ்டித்துவிடுகின்றன. அத்தகைய சுதந்திர வெளிகள் அவர்களது சுதந்திரமான வாழ்வியல் தகவமைப்பிற்கான செயற்பாடுகளாகின்றன. சிறுவர்களுக்கான சுயமுனைப்பு செயற்பபாடுகளும் அவர்களுக்கான கருத்தாடல் வெளிகளும் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வெளிகளும் உருசமைக்கப்படுகின்ற போதே ஆரோக்கியமான சமூகம் மேற்கிளம்பும். சிறுவர்களது மனோதிடம் மேம்பாட்டிற்கானதும் வாழ்வியல் மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின்தேவையாகும். காரணம் யாதெனில் அவர்களது மனப்பதிவுகளில் உயரிய சிந்தனைகளினையும் அச் சிந்தனையின் ஊடாக தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்துவது அவசியமானதாகும் அத்தகைய சிந்தனை சார் மாற்றத்தினை வெளிக்கொணர்வதற்கு கலையியல் சார் செயற்பாடுகள் துனைசெய்யவேண்டும். இவ்வடிவங்களின் ஊடுபொருள்கள் பேசு பொருளின் ஊடாக சமூகவியல் மாற்றத்தினையும் ஏற்படுத்துவது ஆகும். இவ்வகையில் சிறுவர்கள் எதிர்கொள்கின்ற துஸ்பிரயோகங்கள்,அவர்களிற்கு இழைக்கப்படுகின்ற கொடுவன்முறைகள், கல்வியெனும் போர்வையில் அடைகின்ற துயரங்கள் என்பவற்றினை காட்சிப்படிமங்களாக புரிதல்களும் வெளிப்படுத்தப்படவேண்டும். பதினெட்டு வயதிற்க்குட்பட்டவர்களினை சிறுவர்கள் எனும் வகுதிக்குள் உட்படுத்துகின்றனர்கள். அவ்வகையில் பாடசாலைப்பருத்தினை உடையவார்கள் இவ்வகுதிக்குள் வருகின்றனர். அவர்களுக்கான சரியான வழிகாட்டுதல்களும் நல்லன தீயனவற்றை பகுத்தாராய்வதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் சிறுவர்களுக்கான அரங்க செயற்பாடு எனும் போது அவர்களுக்கான கற்பனையை தூண்டும் வகையில் உளவியல் சார் அனுகுமுறையுடன் அவர்களது கற்பனையை தூண்டக்கூடியவகையிலும் உருசமைக்கப்படவேண்டும். நாடகத்தின் கருப்பொருள் முதன்மையானதாக விளங்குகின்றது. கருப்பொருளானது அவர்களிடம் காவிச்செல்லவுள்ள செய்தியாகும்.இச்செய்தியே அவர்களது மனதில் பதிகைகளாக மாறப்போகின்றன. உளவியல்சார்ந்த அனுகுமுறையுடனும் அவர்களது தன்னம்பிக்கையினை வளர்த்துக்கொள்வதினை அடிப்படையாகக்கொண்டதாகவும். அமையவேண்டும். பெரும்பாலான நாடகங்கள் சிறுவர்களினை கவரக்கூடியவகையில் விலங்குகள்இ பறவைகள் என்பனவற்றினை பாத்திரங்களாக்கி அவர்களுக்குரிய வகையில் விநோதப்பண்புகளினை கொண்டு வெளிப்படுத்தப்படுவதினை அவதாணிக்கலாம். ஆயினும் விலங்குகள் பறவைகள் எனும் பாத்திரங்களினை தாண்டிய வகையிலும் சமூகத்தின் பெரியார்கள் அவர்களது நற்பண்புகளினை வெளிப்படுத்தும் வகையிலும் மாணவர்களது சிந்தனைக்கிளறல்களுக்காணவகையிலும் கதைக்கருக்கள் சிருஷ்டிக்கப்படவேண்டும் ஆற்றுகைகள் எனும் போது குரூரம்இவன்முறை இபழிவாங்கல் போன்ற எண்ணக்கருவினைஉடையதாக காட்சிகள் அமைக்கப்படுவதில்லை காரணம் அவர்களது சிறுவயதில் ஏற்ப்படும் மனவியல்பாதிப்புக்களே அவர்களது நடத்தைகளினை நிர்ணயம்செய்யும் என்பதினாலாகும். இத்தகைய சிறுர் அரங்குகளில் சிறுவர்களினை ஈடுபடுத்துவதின் மூலம் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதினை அவதாணிக்கலாம். அரங்க செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களிடையே ஆளுமைவெளிப்படுத்தல்கள் இ தலைமைத்துவப்பண்பு இ கற்பனாசக்திவிருத்தியடைதல் எதையும் கூர்ந்து நோக்கும் திறன் விருத்தியடைதல் இ விட்டுக்கொடுப்புக்கள் இ சகோதரத்துவம் இ சுயதேடல் இ சுயமுனைப்பு இ போன்ற பண்புகளினை மாணவர்கள் உள்ளீர்த்து கொள்வதற்கு இவ் அரங்க செயற்பாடுகள் துணை செய்கின்றன. சிறுவர் தலை முறை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் அதன் எதிர்கால தலை முறையானது செயல்முனைப்பற்ற வகையிலும் சுயதேடல் அற்;ற தலைமுறையாகவுமே முகிழ்ந்தெழும். அத்தகைய சூழ்நிலை உருவாகும் போது ஆரோக்கியமாற்ற சமூகம் உருவாவதினை தவிர்கமுடியாது போகும். அவர்களது கனவுகளினை உருவாக்குவதற்கும் அவர்களது சுய முனைப்பிற்கானவகையில் அவர்களுக்கு விழிப்பூட்டல் சர்ந்த செயற்பாடுகளுடன் அவர்களினை படைப்பில் ஈடுபடுத்துவதன் மூலம் ஆளுமை நோக்கிய சமூக உருவாக்கத்திற்கு வித்திட முடியும் இதற்கு சிறுவர் அரங்க செயற்பாடுகள் துணைசெய்யும்.

செவ்வாய், மார்ச் 11, 2025

(எஸ்.ரி.அருள்குமரன்) அரங்க புரிதல்கள் அத்தியாயம்1 அரங்கு சார்ந்த பயணங்கள் எப்போதும் மகிழ்வளிப்பனவாகவும்இஇகற்றுக்கொள்ளலுக்கான களவெளியினை ஏற்படுத்துவனவாகவும் அமைகின்றது. இப்பின்னனியில் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் கலாநிதி க.சிதம்பரநாதனின் வழிகாட்டலில் நிகழ்த்திய அரங்க செயற்பாடுகள் பசுiமாயனதாகவும்இபல கற்றுக்கொள்ளலுக்கும்புதிய சிந்தனையுடன் பயனிப்பதற்கும் நிகழ்த்தபட்ட அரங்க செயற்பாடுகளின் பலம்இபலவீனங்களை உய்த்துனர்ந்துஅடுத்த கட்ட நகர்விற்கு செல்லக்கூடியதாவும் அரங்கின் ஊடாக சமூகமாற்றத்திற்கும் சமூக ஊடாட்டத்திற்கும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. சுனாமி எனும் இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு மக்கள் முகம் கொடுத்து சொல்லொனாத்துயர் அநுபவித்த பொழுதுகளில் அம்மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கும்இ அவர்களது உளவிடுதலைக்கான திறவுகோல்களை ஏற்படுத்துவதினை நோக்கமாக கொண்ட வகையில் அரங்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த வகையில் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்வாழ்வில் இருந்து மீண்டு தமது இடங்களில் மீளக்குடியமர்ந்ததன் பின்னர் தமது தொழில் முயற்சிகளில் மீளவும் ஈடுபட முயன்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆற்றுகையொன்றினது நினைவு பின்வருமாறு காலை வேளை ஆரம்பித்த அரங்க செயற்பாடு சிறுவர்களுடன் கிராமிய விளையாட்டுக்கள் விளையாடுதல்இ அவ் ஊர் மக்கள்இபெரியவர்களுடன் கதைத்தல் இஅக்கதைகளின் ஊடாக ஆற்றுகை மேற்கொள்வதற்கான கருத்துப்படிமங்களை கண்டுணர்ந்துகொள்ளுதல் என அன்றைய மாலை வரையான பொழுதுகள் நகர்ந்தன. மாலை வேளை ஆற்றுகைக்கான திட்டவரையான பருவரையுடன் ஆற்றுகை மேற்கொள்வதற்கான நிலையில் எமது பல்கலைக்கழக நண்பர்களுடன் நானும் ஓர் ஆற்றுகையானாக களமிறங்கியிருந்தேன். அவ்வேளை மக்கள் மீளவும் பயமற்ற வகையில் கடலுக்கு செல்லவேண்டும்இஅத்தொழில் மூலம் மீளவும் தமது வாழ்வியல் கட்டுமானத்தை மேற்கொள்வதற்கான நம்பிக்கை கொடுக்கும் வகையில் ஆற்றுகை தகவமைக்கப்பட்டிருந்தது. இந்த வகையில் மீனவர்களாக ஆற்றுகையின் ஆரம்பித்தில் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதாக ஆற்றுகையினை ஆரம்பித்தபோதும். நண்பர் சுதன் குறிப்பிடடார் 'நீ மீனா நடி. நாங்கள் மீன்பிடிப்பவர்களாக நடிக்கின்றோம் அதை வைச்சுக்கொண்டு ஆற்றுகையினை நகர்த்திச்செல்வோம்' எனக்குறிப்பட்டிருந்தார். அந்தவகையில் நான் மீனாக நடித்துக்கொண்டிருக்கின்றவேளை, மீனவர்கள் சுனாமி அடித்தபின்னர் கடலுக்குள் வருவதில்லை. நாம் எல்லோரும் சுதந்திரமாக திரிகின்றோம் எனும் வகையில் ஆற்றுகையினை மேற்கொள்கின்றபோது மீனவர்களாக நடித்தவர்கள் எங்களை பிடித்து இழுத்துவந்து மக்கள் கூடி நிற்கின்ற இடத்தில் ஆற்றுகையினை நகர்த்திச்சென்றனர். இவ்வாற்றுகை மக்களுடன் ஊடாடி இமக்களது கருத்துக்களை உள்வாங்கி செயற்படுத்துகின்ற ஆற்றுகை எனும் வகையில் மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும் எனும் செய்தியை ஆற்றுகை எனக்கு உர்த்தியது. மீனவர்களாக நடிக்கின்றவர்கள் மக்களோடு ஊடாடுகின்றபோது 'என்ன நீங்கள் கடலுக்கு சென்று பிடிக்காமமையினால் மீன்கள் சுதந்திரமாக திரிவதாக குறிப்பிட்ட போது தமது உணர்வுகளினை வெளிப்படுத்தியவர்கள் கருத்துக்களினை குறிப்பிட்டதுடன்இமீனாக நடித்தவர்களை பிடிப்பது போன்று அவர்களும் செயற்பட்டனர். அவ்வேளை அவர்களது பிடியில் இருந்து தப்பி ஓடுவதாகநான் பாவனை செய்தபோது ஒருவர் என்னைதலையில் பிடித்து மூன்று முறை மண்ணில் அடித்தார் அவ்வேளை மூச்சிறைத்துப்போன நான் அப்படியே கிடந்துவிட்டேன் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆற்றுகை முடிந்தபின்னர் கருத்துக்கள் பல பகிரப்பட்டபின்னர் சுதாகரித்துக்கொண்டு எழுந்த எனக்கு என்னை தாக்கியவர் கை தந்து நன்றாக நடித்தீர்கள் எனக்குறிப்பிட்டார்.எனக்கோ அவரது பாரட்டுதலை விட அடி வாங்கிய ஞபாகவும். அவர் ஏன் என்னை இவ்வாறு தாக்கினார் என்பதற்கான காரனத்தினையும் அறிந்துகொள்ள வேண்டும் என மனம் தவித்தது. அதற்கான காரனத்தை அவர்களிடம் கேட்டபோது குறித்த மீன் ஒன்றினது பெரினை குறிப்பிட்டு அம் மீனை வலையை விட்டு வெளியே எடுத்த பின்னர் அதை மூன்று முறை தiலைப்பகுதியில் அடித்தால் அது உயிரற்று போய் விடும் எனக்குறிப்பிட்டார். அம்மீனாக உங்களை பாவனை செய்து உங்களையும் தாக்கியதாக குறிப்பிட்டார். இந்தவிடத்தில் இருந்து நோக்கும்போது அரங்க செயற்பாடு மக்களிற்கானதுஇ மகிழ்வளிப்பிற்குரிதுஇ அவர்களது சிந்தனையில் மாற்றத்தினை கொண்டுவருவதற்கான தளம் என்பது மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் அவர்களுடன் ஊடாடு கின்ற போது பல எதிர் வினைகளிற்கு முகம் கொடுக்கின்ற வகையில் எம்மை தயார்ப்படுத்திச்செயற்பட வேண்டும் எனும் பட்டறிவினை நான் உணர்ந்துகொண்டேன். இந்தவகையில் அரங்கு என்பது எப்போதும் திட்டவட்டமான வகையில் முன் ஆயத்தங்களுடன் இயங்கவேண்டியதுடன் .மக்கள் பங்குகொள்வதற்கான வாய்ப்புக்கள் முன்திட்டமிடலுடன் வழங்கப்படவேண்டும் என்பதை எனது அரங்க செயற்பாட்டு வாழ்வில் கற்றுக்கொண்டேன். ஆற்றுகை தளம் மணல் என்பதால் நான் தப்பித்துக் கொண்டேன் மாறாக காயங்கள் ஏற்படக்கூடிய சூழல் உள்ள அற்றுகை தளம் எனில் பாதிப்பிற்கு முகம் கொடுக்க நோர்ந்திருக்கும் ஆற்றுகையாளனுக்கும் பார்ப்போனுக்கும் இடையில் உணர்வு ரீதியான புரிதல் கட்டமைக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை மாறாக உணர்ச்சியுடனான ஊடாட்டம் வருகின்றபோது ஆற்றுகையாளனும் பார்ப்போனும் இடைவெளியற்ற வகையில் நெருங்குpன்றபோது அல்லது ஊடாடுகின்றபோது அசம்பாவிதங்கள் நிகழ்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். ஆற்றுகையினை தகவமைக்கும் போது அல்லது ஆற்றுகையினை மேற்கொள்கின்றபோது இவ்விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அநுபவ ரீதியாக உணர்ந்துகொண்டேன்.

ஞாயிறு, ஜனவரி 26, 2025

குழந்தை ம.சண்முகலிங்கத்திற்கு தாஸிஸியஸ் அவர்களின் அஞ்சலி

(ஈழக்கூத்தன் ஏ ஸீ தாசீசியஸ்) நாடக அரங்கக் கல்லூரி நினைவுகள் அலை அலையாக வர, புரண்டு புரண்டு படுத்தேன். வெம்மூச்சு தவிர, வேறெதுவும் சுரக்கவில்லை. கொழும்பில் ஒரு தமிழ் நாடகனாக புறக்கணிக்கப்பட்டிருந்த என்னை - யாழ்ப்பாணம் வரவழைத்து, நாடக அரங்கக் கல்லூரியில் தொண்டாற்ற எனக்கு அந்தப் பெரியவன் வாய்ப்புத் தந்ததால், எத்தனை பென்னம் பெரிய யாழ்ப்பாண நாடக ஆளுமைகளுடன் கூடிப் பழகி உங்கள் அனைவரிடம் இருந்தும் வளம் திரட்டி, ஐரோப்பா வந்த பின் , ஒரு இலங்கை நாடகனாக என்னை நிறுவ முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்கும்போது, நாடக முனி குழந்தை சண்முகலிங்கம் என்ற அந்தப் பெரியனுக்கு, நன்றி கூற, இந்தத் தருணத்தில் அங்கு போக முடியவில்லையே என்ற தவிப்பு என்னை இன்னமும் அழுத்திக் கொண்டே இருக்கிறது. அவனிடம் இருந்து நான் பெற்றவை வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவு பிரமாண்டம் பெற்றவை. ஒரு துரும்பாக ஒதுக்கப்பட்டுக் கிடந்தவனை, ஒரு நாடகத் தூணாக நிமிர்த்தி நிறுத்தியவன் குழந்தை மாஸ்ரர் என்ற அந்த நாடகமுனி. என்னுடைய ஒப்பாரியை ஒ வென்று குரலெடுத்து வெள்ளப் பெருக்காக்க முடியாமல் எனது லண்டன் குடிலில் இருந்து வெதும்பி விசும்பிக் கொண்டிருக்கிறேன். காலையில் எழுந்ததும் கீழே வந்து, சண்ணையும் என்னையும் நாடக ஆத்மாவில் புரிந்து கொண்ட உமது முன்னிலையில் கொட்டித் தீர்க்கிறேன். எனது இன்றைய மனத் தவிப்பைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக மண்ணிலும் புலத்திலும் இருக்கும் நாடகர்களிடம் எனது மனத் துயரத் தவிப்பை, அன்ரன், நீரே தெரிவித்துவிடும் ஈழக்கூத்தன் ஏ ஸீ தாசீசியஸ்

வெள்ளி, ஜனவரி 24, 2025

கலைமாமணி யமன் மார்க்கண்டு

(எஸ்.ரி.அருள்குமரன்) கலை வாழ்வு மகிழ்வானது.கலைச்செயற்பாட்டாளர்கள் தமது துயரினை புதைத்து பார்ப்போரை மகிழ்வளிப்பதை நோக்கமாக கொண்டு கலைச்செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். வலி.வடக்கு கலைகளுக்கான ஊற்றுக்காலாக விளங்குகின்ற மண். இம்மண்ணில் இருந்து முகிழ்ந்தெழுந்த ஆளுமையான கலைஞர்கள் ஏராளம். மரபு வழிக்கலைகளாக குறிப்பிடப்படுகின்ற இசைநாடகத்தின் வளர்ச்சியில் அரும்பணியாற்றிய கலைஞர்கள் காலத்தால் கொண்டாடப்படவேண்டியவர்கள். இப்பகைப்புலத்தில் வசாவிளானை பிறப்புத்தளமாக கொண்டு யமன் மார்க்கண்டு என கொண்டாடப்படுகின்ற இசை நாடக கலைஞராக வசாவிளான் வே.மார்க்கண்டு விளங்குகின்றார். கலைமாமணி வே.மார்க்கண்டு 1916 ஆம் ஆண்டுபிறந்தார்.இவரது தந்தையார் பெயர் வேலு தயார் பெயர் சீதா. இவர்களுக்கு மகனாக விவசாயச்சூழலினை கொண்ட வசாவிளான்; மண்ணில் பிறந்தார். இசை நாடகங்களை பொறுத்தவரையில் ஆண்கள் ஆண்பாத்திரங்களை ஏற்று நடிப்பதை ராஜபாட் எனவும், ஆண்கள் பெண்பாத்திரங்களை ஏற்று நடிப்பதை ஸ்திரிபாட் எனவும் சிறப்பித்து கூறுவார். இவற்றை விட வேறு பர்திரங்களில் நடித்து புகழ்பெறுகின்ற போது அப்பாத்திரத்தினை அடை மொழியாகக்கொண்டு அக்கலைஞர்களை அழைப்பதுண்டு. பபூன் பார்திரத்தில் பெயர் பெற்றவர்நடிகர்கள் பபூன் எனும் சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்டனா. நுடிகர்கள் தாம் பாகமாடுகின்ற பாத்திரத்தினை கனகச்சிதமாக தமது அளிக்கை திறன் மூலம் வெளிப்படுத்துகின்ற போது அப்பாத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுவதுண்டு. இந்தவகையில் பல நாடகங்களில் பல பாத்திரங்களை ஏற்று நடித்து தமது திறமையினால் பார்வையாhள்களை கவர்ந்திழுத்த வேளையிலும் வே.மார்க்கண்டு ஏற்று நடித்த யமன் பாத்திரம் அவருக்கான அடையாளமாகியது. அவர்அப் பாத்திரத்தினை ஏற்று நடித்போது அதன் அழத்தினை உணர்ந்து பாத்திரத்தினூடாக வெளிக்கொனர்ந்த உணர்சி வெளிப்பாடு பாத்திரவார்ப்புத்தன்மை, என்பன அவரை யமன் மார்க்கண்டாக தனித்துவப்படுத்தியது. நடிகமணி வி.வி. வைரமுத்துவினால் ஸ்தாபிக்கப்பட்ட வசந்தகான சபாவின் மூத்த உறுப்பினரும், நடிகமணி வி.வி வைரமுத்து ஸ்திரிபாட் (பெண் வேடம் ) இட்டு நடித்த போது ராஜபாட் (ஆண்வேடம்) இட்டு நடித்தவர். குறிப்பாக அரிச்சந்திரமயான காண்டம் நாடகம் ஆரம்ப காலத்தில் மேடையிடப்பட்டபோது நடிகமணி வி.வி.வைரமுத்து சந்திரமதியாக நடித்த போது அரிச்சந்திரனாக நடித்தவர் மார்க்கண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாடகத்தில் லோகிதாசனாக நாவலப்பிட்டி அலுவலக ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தரும் நடிகமணியின் மைத்துனருமான கலாபூசனம் பிள்ளைநாயகம் திருநாவுக்கரசு நடித்திருந்தார். சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் நடிகமணி வி.வி. வைரமுத்து சத்தியவானாக பாகமாடியபோது யமனாக மார்க்கண்டு பாகமாடியிருந்தார். யமனாக மார்க்கண்டு அரங்கி;ல் பிரவேசித்து 'மண்டலமும் விண்டலமும்' எனும் பாடலை பாடியபடி அரங்கிலே ஆற்றுகையாளனாக களமாடுகின்றபோது யமன் எனும் பாத்திரத்தின் பயங்கர உணர்வினை பார்ப்போர் உணரும் படி அவரது நடிப்பு இருக்கும் என நாடகத்தை பார்த்த பார்வையாளர் குறிப்பிடுகின்றனர். நாட்டியசாஸ்திரம் பார்வையாளரை சகிர்தயர் எனக்குறிப்பிடுகின்றது. இதன் அர்த்தம் சக இருதயம் படைத்தவர்கள் என்பதாகும். அதாவது நடிகன் தான் ஏற்று நடிக்கின்ற பாத்திரத்தின் உணர்வினை பார்வையாளர்களும் உணர்ந்து கொள்ளுதல் என்பதாகும். இக்கருத்தினை வலுப்படுத்துகின்றதை இசை நாடகவுலகின் ஜம்பவான் நடிகமணி அரிச்சந்திரனாக தோன்றுகின்ற போது அந்நாடகம் ஏற்படுத்துகின்ற அதிர்வலைகளை வார்த்தைகளால் குறிப்பிடமுடியாது பார்த்தவர்களால் மட்டுமே உணாந்து கொள்ள முடியும் என பார்த்து ரசித்த பலரும் குறிப்பிடுவர். மார்க்கண்டு யமனாக தோன்றுகின்ற காட்சி பார்வையாளர்களிடையே பயஉணர்வினை ஏற்படுத்தி அவர் ஏற்ற பாhத்திரத்திற்கு வலிமை சேர்த்ததுடன் அவரது நடிப்பினை பார்வையாhள்கள் கொண்டாடுவதற்குரிய களத்தினை ஏற்படுத்தியிருந்தது. இவரது இயல்பான பௌதீகத்தோற்றம் வெள்ளை நிறமேனியாகும். ஆனால் யமனாக தோன்றுகின்றபோது தனது பௌதீகத்தோற்றத்தை ஒப்பனையால் மாற்றி தனது சுய அடையாளத்தை பாத்திரத்திற்குள் புதைத்து அப்பாத்திரமாகவே பார்ப்போர் முன்னிலையில் வெளிப்படுவதே அவரது தனித்துவமானதாக விளங்கியது. தாளம் இசைநாடகம், நாட்டுக்கூத்து,பரத நாட்டியம், போன்ற கலைவடிவங்களில் முதன்மைபெறுகின்றது. இiசைநாடகத்தினை பொறுத்தவரையில் ஹார்மோனிய இசை பாடல்களிற்கு உயிர்ப்பினை கொடுப்பதை போன்று பாடல்கள் பாடுகின்ற போது தாளம் பிசகாது இருக்கின்றபோது பாடி நடிப்பவர்களுக்கு இடையூறு இல்லாதிருக்கவேண்டும். அந்தவகையில் தாளம் மிக முக்கியமானதாகும். பக்க வாத்திய கலைஞர்களுக்கும் மேடையில் பாடி நடிக்கின்ற நடிகர்களுக்கும் ஊக்கம் தருகின்ற கலையாக தாளக்கலை விளங்குகின்றது. மிகத்திறமையாக மார்கண்டு தாளம் போடுவார்(லயவிந்யாசத்துடன்) இறுதியில் மிருதங்க மேசையில் தாளத்தை தட்டி அறுதியை போட்டு முடிப்பார். ஏழுபிள்ளை நல்லதங்காள்,ஞான சௌந்தரி,பவளக்கொடி,அல்லிஅர்ச்சுனா,பூதத்தம்பி,கோவலன் கண்ணகி,சம்பூர்ன அரிச்சந்திரா,பக்த நந்தனார்,வள்ளி திருமணம் போன்ற நாடகங்களில் இலங்கையின் பல பாகங்களிலும் நடித்துப்பெயர் பெற்றிருந்தார். நாரதாராக , வேதியராக, அட்மிரல் துரையாக என பல பாத்திரங்களிற்கு தனது தனது நடிப்பின் மூலம் உயிர்ப்பினையும் செழுமையினையும் ஏற்படுத்தியிருந்தார். பக்த நந்தனாரில் நந்தனாக நடிகமணியும்,வேதியராக மார்க்கண்டும் நடித்திருந்தனர்.சிதம்பர தரிசனம் காணத்துடித்த நந்தனிடம் 'சதம்பர தரிசனமோ' என்ற பாடலை மிகவும் ஆணவத்தோடு நடித்த காலத்தை மறக்கமுடியாது ஜயோ மெத்தக்கடினம் என்று நந்தனாகிய வைரமுத்து பாட்டில் கெஞ்சிக்கேட்பதும் வேதியர் மறுத்து உராத்த குரலில் வசனங்கள் பேசுவதும் நெஞ்சை விட்டு அகலாமல் உள்ளன. என்கின்றார் வி.வி.வைரமுத்துவின் மகளும் லோகிதாசன் பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவருமான திருமதி ஜெயந்தி தவராசா. வுசந்தகானசபாவின் வெள்ளிவிழாக்கொண்டாட்டம் கொழும்பில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்ற போது இவரது சேவையினை கௌரவிக்கின்ற வகையில் கலைமாமணி விருது வழங்கிக்கௌரவிக்கப்பட்டது. சக கலைஞர்களை ஒற்றுமைக்குள் வைத்து கலையை வளர்ப்பதில் நடிகமணிக்கு உறுதுணையாக இருந்தார். 1989 ஆம் ஆண்டு நடிகமணியின் இறுதி நிகழ்ச்சியான சங்கீத கோவலன் நாடகமும் நாடக மேடைப்பாடல் நிகழ்வாக பக்த நந்தனாரும் மேடை நிகழ்வாக இடம்பெற்றபோது அந் நிகழ்விலும் நடித்திருந்தார். வசந்தகானா சாபாவின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் நடிகமணி வி.வி.வைரமுத்து மரணிக்கும் வரை சபாவுடனும் வைரமுத்துவுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்..நடிகமணி வி.வி.வைரமுத்து இறந்த பின்;னர் அவரது இழப்பின் துயரினை தாங்க முடியாது தினமும் அவரது இல்லம் சென்று அவரது உறவுகளுடன் தனது துயரினை வெளிப்படுத்தி செல்வராம்.நான் துன்னபப்ட்ட போதெல்லாம் என்னை ஆறுதல் படுத்திய வைரமுத்து இல்லை எனக்குறிப்பிடுவராம். நுடிகமணியை விட வயதில் மூத்தவராக இருந்தபோதும் தம்பி எனும் உறவுடன் தனது பாசத்தை வெளிப்படுத்திய கலைஞராக விளங்கியிருந்தார். வசந்த கானசபாவின் பட்டறையில் முகிழ்ந்தெழுந்த கலைஞர்களில் யமன் மார்க்கண்டுவும் ஒருவர். ஆவர் தான் சாhந்த கலையை நேசித்துடன், தன்னை நேசித்த நடிக மணி வி.வி வைரமுத்து,தன்னை தேசம் அறியச்செய்த வசந்த கான சபாவினை அந்திம காலம் வரை நேசித்திருந்தார். இவரது இச்செயற்பாடுகள் இளைய தலைமுறையினருக்கு பாடங்களாகின்றன. இவரது இரண்டாவது புதல்வாரன சிறிரங்கநாதன் சங்கீத வித்துவானாகவும்,இளைய புதல்வன் நடாறிந்த வீதி நாடக கலைஞராக வீ.எம். குகராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடகமும் அரங்கியலும் எனும் பாடம் கற்றலுக்குரிய துறையாக பரிமளித்திருக்கின்ற நிலையில் இசை நாடகத்தின் செழுமையிலும் அதன் அறாத்தொடர்ச்சியிலும் வி.வி. வைரமுத்து, யமன் மார்க்ண்டு போன்ற வர்களது பங்களிப்பு காலத்தால் மறக்கமுடியாதவை. ஆனால் அவர்கள் பற்றிய முழுமையான வரலாற்று பதிவுகளளை கற்றலுக்குரியதாக கொள்ளமை ஏன் என்பது வினாவிற்குரியது. இவர் பங்குபற்றிய நாடகங்களும் தாங்கிய பாத்திரங்களும் பின்வருமாறு சத்தியவான் சாவித்திரி- யமன் அரச்சந்திர மயாணகர்ணடம்- வேதியர் பக்தநந்தனார் -வேதியர் சம்பூர்ன அரிச்சந்திரா-விசுவாமித்திரர் சத்தியவான் சாவித்திரி-நாரதர் வள்ளி திருமணம்-நாரதர் இவர் 1994 ஆம் ஆண்டு இவ்வுலகை நீத்த போதும் கலைகளை நேசித்து ,கலையினை கொண்டாடி பாதுகாக்கின்ற மனிதர்களது நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது ஜயமில்லை. கட்டுரையாக்கத்திற்கான தகவல் மற்றும் ஒளிப்படங்கள் தந்துதவியவர் திருமதி ஜெயந்தா தவராசா (வி.வி.வைரமுததுவின் மகள்)

செவ்வாய், டிசம்பர் 31, 2024

மூடிய மண்டபங்களுக்குள் போட்டிகள்

-நிவேதிகன்- கலை மனித உணர்வுகளின் உற்பத்தி.மனிதர்கள் கூடுவதற்கும் கதையாடுவதற்கும் களங்கள் திறக்கப்பட்டபோது கலைகள் பிறப்புக்கொண்டன. கலைகள் மனிதர்களது இயங்கியலுக்கு களம் ஏற்படுத்திக்கொடுத்ததுடன்.உளவிடுதலைக்குமான வாய்ப்புக்களை ஏற்படுத்தின. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கலைச்செயற்பாடுகள் போட்டிகளும் பொறாமைகளும் மிளிர்ந்த வகையில் ஒவ்வொரு கலைச்செயற்பாட்டாளர்களும் தாம் மேற்கொள்வது மட்டுமே தரமான கலைச்செயற்பாடுகள் எனும் வகையில் இயங்குகின்றனர். கலைகளில் ஈடுபடுகின்றபோது தலைமைத்துவம்,விட்டுக்கொடுப்பு,கற்பனையாற்றல் போன்ற பல்வேறு பண்புகள் வளர்த்தெடுக்கப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.ஆனால் போட்டிகளிற்காக கலைச்செயற்பாடுகள் மேற்கொள்கின்றபோது மாணவர்களிடையே தாம் மேற்கொள்கின்ற செயற்பாடுகள் மட்டும் சிறப்பானவை ஏனையவர்களது செயற்பாடுகள் மோசமானவை என்கின்ற சிந்தனை கலைச்செயற்பாடுகளை பயிற்றுவிக்கின்றவர்கள் மூலம் கலைச்செயற்பாட்டாளர்களாகிய மாணவர்களது மனங்களில் விதைக்கப்படுகின்றது. தாமே போட்டியில் வெற்றிபெறுவோம் தம்மை வெல்ல முடியாது எனும் தற்பெருமை மனப்பாங்கு வளர்த்தெடுக்கப்படுகின்றன. இவை அவர்களிடையே இயல்பாக உள்ள கற்பனை ஆற்றலினையும்,கூட்டுனர்வு மனப்பாங்கினையும் இல்லாதொழித்து குறுகிய மனப்பாங்குடையமனிதர்களாக வளர்த்தெடுக்கப்படுவதற்கு துனைசெய்கின்றன. ஆனால் அவர்களை பொறுத்தவரையில் இதுவே விசாலமான மனமாக கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. கலைத்திறன் போட்டிகள் ஏன் நடத்தப்படுகின்றது எனும் மனப்பாங்கு தகர்க்கப்பட்ட நிலையில் வெறுமனே போட்டிகள் நடத்தப்பட்டால் போதும் என்கின்ற நிலையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. கலைச்செயற்பாடுகளை தரநிர்னயம் செய்கின்றவர்களாக பார்வையாளர்கள் இருக்கின்றவேளையில் பார்வையாளர்கள் இன்றியே போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளை மதிப்ப்Pடு செய்வதற்காக அழைக்கப்படுகின்றவர்கள் யார் வெற்றி பெற வேண்டும் என நினைக்கின்றார்களோ அவர்களது அனுசரனையிலே அழைக்கப்படுவதும் அழைக்கப்பட்டவர்கள் தமது விசுவாசத்திற்கு ஏற்றவகையில் செயற்படுவதையும் போட்டிகளில் பங்குபற்றி தோல்வியடையப்பட்டவர்கள் தமது உள்ளக்கிடக்கைகளின் ஊடாக வெளிப்படுத்துகின்றனர். இங்கு வெற்றி பெற்றவன் திறன் படைத்தவனாகவும் வெற்றிபெறுவதில் இருந்து தவறிப்போனவன் திறன் அற்றவனாகவும் சித்தரிக்கப்படுகின்ற மனவியலை உணர்ந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. இங்கு கலைச்செயற்பாடுகளுக்காக போட்டிகளில் பங்குபற்றுகின்றவர்கள் மாணவர்கள் என்கின்ற மனநிலைகூட அற்றவர்களாக போட்டிகளை நடத்துகின்றவர்களும் ஏனையவர்களும் நடந்துகொள்கின்ற சூழ்நிலை காணப்படுகின்றது. வசதிபடைத்தவர்கள் சாதனையாளர்களாகவும்,வசதியற்றவர்கள் சோதனையாளர்களாகவும்,வேதனையை அநுபவிப்பவர்களாகவும் மாற்றமுறுகின்றனர். கலைச்செயற்பாடுகளது பிரதான நோக்கம் தள மாற்றம் ஆகும். தளமாற்றம் எனும் போது ஏற்கனவே இருக்கின்ற நிலையில் இருந்து கலைச்செயற்பாடுகளில் ஈடுபடுகின்றபோது பெற்றுக்கொள்கின்ற அநுபவ திரட்சியின் அடிப்படையில் நல்ல பண்புகளை உள்வாங்கிக்கொண்டு புதிய சிந்தனையையும்,கருத்துத்தளமாற்றம் உடையவர்களாகவும் மாற்றமுறுகின்ற பண்பினை தளமாற்றம் என மாணிடவியலாளர்கள் கருத்துப்பகிர்கின்றனர். ஆனால் சிலரது பயன்தரு செயற்பாடுகளிற்காக எதிர்மறையான மாற்றங்கள் கலைச்;செயற்பாட்டாளர்கள் மனங்களில் ஏற்படுகின்ற வகையில் போட்டிகளிற்கான மனப்பாங்குகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுவர்களிற்கான போட்டிகள் இடம்பெறுகின்றபோது அவர்களது உளரன் மேம்பாட்டினை அடிப்படையாகக்கொண்டவகையில் போட்டிகள் என்றல்லாது குதூகலமான மனப்பாங்குடையதாக போட்டிகள் வடிவமைக்கப்படவேண்டும் என குறிப்பிடப்படுகின்றபோதும் பெரும்பாலான போட்டிகள்அவர்களிடையே போட்டி மனப்பாங்கினையும் பொறமை மனப்பாங்கினையும் வளர்த்தெடுக்கின்ற வகையில் போட்டிகளது கள நிலவரங்கள் அமைந்துவிடுகின்றன. கலைச்செயற்பாடுகள் மூலம் வெற்றிதோல்விகளை சமமாக மதித்து நடக்கப்பழகவேண்டும்.போட்டிகளின் மூலம் நற்பண்புகளை வளர்த்தெடுக்கவேண்டும்,சமூக நலச்சிந்தனையுடையவர்களாக மாற்றமடையவேண்டும். என பல விடயங்களை குறிப்பிடுகின்றனர். மாறாக நடத்தப்படுகின்ற நோக்கங்களிற்கு மாற்றீடாக போட்டிகள் முடிவடைந்து போகின்றமை பற்றி நுண்னுனர்வுடன் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். போட்டிகளில் பங்குபற்றுகின்ற போது எந்தவகை போட்டியாக இருந்தாலும், போட்டியாளர்களிடம் உள்ள சாதகமான விடயங்கள்,அல்லது அவர்களிடையே உள்ள நல்ல விடயங்கள் சுட்டிக்காட்டப்பாடாமலேயே மழுங்கடிக்கப்பட்ட மனநிலையில் மனங்கள் மரத்துப்போன சமூகங்களை உருவாக்குவதாக போட்டிகளின் செயற்பாடுகள் முடிவடைந்து போகின்றமை துர்பாக்கியமானதாகும். ஆனால் இவ்விடயங்கள் எவற்றினையும் உணர்ந்துகொள்பவர்களாக போட்டி நடத்துனர்கள் காணப்படுவதில்லை என்பது உய்த்துனர்ந்துகொள்ள வேண்டும். அவர்களது நோக்கம் போட்டியை நடத்தி முடிந்தால் போதும் என்கின்ற மனப்பக்குவமே காணப்படுகின்றது.போட்டியில் பங்குபற்றுகின்ற கலைச்செயற்பாட்டாளர்களை ஏனைய போட்டிகளினை கண்டு கொள்ளக்கூடியவகையில் வாய்ப்புக்களை ஏற்படுத்தப்படுகின்றபோது தமது தரத்தினையும் மற்றவர்களது தரத்தினையும்,தமது பலத்தினையும் பலவீனங்களையும், மற்றவர்களது பலத்தினையும், பலவீனங்களையும், கற்றுனர்ந்துகொள்ளும்போது தம்மை தாமே சுயவிசாரனை செய்து கொள்வதன் மூலம் ஒரளவுக்கேனும் கலை சார்ந்த புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ளமுடியும். இத்தகைய களவெளிகள் ஏற்படுத்தப்படுகின்றபோது பங்குபற்றுபவர்களுக்கிடையே பரஸ்பர புரிந்துனர்வு ஏற்படுத்தப்படுவதற்கும் கலைசார்ந்த புரிந்துனர்வுச்செயற்பாடு உருவாகுவதற்கும் களம் ஏற்படுத்தப்படும். இல்லையேல் குத்துவெட்டு மனப்பாங்கும், வன்முறைசார்ந்த உணர்வெழுச்சிகளும், ஏற்படுத்தப்பட்டு மனங்களில் வக்கிர உணர்வுகளும், எதிர் மனப்பாங்கும் ஏற்படுவது தவிர்க்கவியலாததாகும். மேலும் போட்டிகள் மாணவர்களுக்கானவையே தவிர பயிற்றுனர்களுக்குரியதல்ல எனும் மனப்பக்குவத்தை நடத்துனர் குழுமம் புரிந்து கொள்ள வேண்டும். கலைத்திறன்போட்டிகள் மீளுருவாக்க முடியாதவை ஆகும். குறித்த கனத்தில் செயற்பாட்டாளர்களது மனநிலைக்கு ஏற்ப முகிழ்தெழுபவை. .பங்குபற்றுகின்றவர்கள் எல்லோரும் சிறப்பாக அதி உச்சமான வெளிப்பாட்டினை வெளிப்படுத்துகின்ற போதும் குறித்த ஒருவரே வெற்றிபெறமுடியும் என்பது போட்டிகளின் சுற்றுநிருபங்களிற்கு ஏற்ப,நடைமுறைச்செயற்பாடாக காணப்படுகின்றது. ஆனால் வெற்றியடைந்தவர்களை கொண்டாடுகின்ற நடத்துனர்கள் தோல்வியடைந்தவர்களது மனநிலையில் இருந்து அவர்களை தரிசனம் கொள்வதில்லை.அத்தகைய சிந்தனைப்போக்கே பல்வேறு தோல்விகளிற்கு களங்களை திறந்து விடுகின்றன. மூடிய மண்டபங்களுக்குள் மட்டும் போட்டிகள் நடத்தி முடிக்க வேண்டும் எனும் மனப்பாங்கில் போட்டிகளை நடாத்தி கலைச்செயற்பாட்டாளர்களது மனங்களையும் மூடிக்கொள்ளப்போகின்றோமா? இல்லையேல் திறந்த மனப்பாங்குடன் நடந்துகொண்டு விரிசிந்தனையை உருவாக்கிக்கொள்ளப்போகின்றோமா என்பது ஒவ்வொருவரும் சிந்தித்துக்கொள்ள வேண்டிய விடயமாகும்.

சனி, நவம்பர் 19, 2022

ஈழத்து நாடக உலகில் தவிர்க முடியாத ஆளுமை!
நெறியாளர், அரங்கு சார்ந்த தனது ஆற்றலினால் கற்றலில் ஈடுபடுகின்றவர்களது திறன்கள் வெளிவருவதற்கு ஆதார புள்ளியானர்கள்! அரங்கினை வலிமை மிக்க சாதனமாக சமூகமாற்றத்திற்கான கருவியாக பயன்படுத்த முடியும் என குறிப்பிடுகின்றவர்! நாம் அரங்கில் செயற்படுவதற்கு அரங்கு தொடர்பாககற்ற காலத்தில் நம்பிக்கை தந்தவர்களில் ஒருவரான கலாநிதி க. சிதம்பரநாதன் சேர் அண்மையில்இடம்பெற்ற செ.விந்தனின் கண்டாவளையான் வயது அறுபது எனும் பணிநயப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுஉரையாற்றிய ஒளிப்பதவு ஆவணம் ஊடகவியலாளரும் அரங்கில் ஊடக பிரிவில் செயற்பட்டவருமான யாழ்.தர்மினி பத்மநாதன்[தர்மினி அக்காவின்] முகநூலினூடாக அவ் ஒளி ஆவணத்தை பார்க்ககூடியதாக இருந்தது. அவ் ஒளி ஆவணத்தில் கலாநிதி க.சிதம்பரநாதன் சேர் குறிப்பிடுகின்ற அரங்கு வலிமையான சாதனம் எனும் கருத்து சிறப்பான கருத்தாகும். ஆயினும் அவர் குறிப்பிடுகின்ற பலர் கருத்துக்கள் கலந்துரையாடல்களிற்கு உரியன. அப்பகைப்புலத்தில்அவ் ஒளி ஆவணத்தை முதல் நிலை தரவாக கொண்டு சில கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன. இவை கருத்துக்களை கருத்துக்களால் முறியடித்து கருத்து சமர் புரிவதற்கான களமாக இல்லாது ஆக்க பூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான களவெளியாக கொள்ளப்படுவதே ஆரோக்கியமாணதாகும். அவரது கருத்துக்களை முன்னிறுத்தி சில கருத்துக்கள் பதியப்படுகின்றன. இவைஎதிர்க்கருத்துக்கள் அல்ல புரிந்து கொள்ள முனைவதற்கான சந்தேகங்களாக கொள்ளமுடியும். நாடகம் சீரழிந்து விட்டது என எதை வைத்து சேர்குறிப்பிடுகின்றார். சீரழிந்து போனது எனின் அதற்கு யார் எல்லாம் பொறுப்பு? என்ன காரணங்களால் சீரழிந்து போனது? சீரழிந்து போகும் வரை தடுக்கமுடியாமல் போனதுக்கான காரணம் என்ன ? ஏன் அதை உங்களால்தடுக்கமுடியாமல் போனது என்பதற்கான நியாமான காரணங்கள் பற்றி கலந் துரையாடுவதே நாடகதுறையின் எழுச்சிக்கான அடிப்படையாகும். அரங்கு வலிமையான சாதனம் அதை ஏற்க நாடக துறை சார்ந்வர்கள் தயாரில்லை என்றால் அந்த நாடக காரர் யார்? நாடக துறை சார்ந்து கற்றவர்கள் தயார் இல்லையா? யார் அந்த நாடககாரர்? நாடக துறை சார்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உங்களது நெறியாழ்கையில் நாடகம் நடித்திருப்பார்கள் அல்லது உங்களது வழிகாட்டலில் அரங்க செயற்பாடு சார்ந்நு ஏதோவெருவிடயத்தில் பங்கெடுத்திருப்பார்கள். நாடகத்தை கற்று வெளியேறியவர்கள் நாடக துறை சார்ந்து செயற்படவில்லையா? அவர்களது செயற்பாடு நாடக துறையின் அழிவிற்கு காரனமா? எது என்பதை தெளிவு படுத்தப்பட வேண்டியது நீண்ட நெடிய நாடக செயற்பாட்டாளர் என்கின்ற வகையில் உங்களது கடமையாகின்றது. "நாடகம் படிக்கிற ஆட்களுக்கு அரங்கின்ர வலிமை தெரியாது." என குறிப்பிட்டால் அந்த வலிமைய உணரும் வகையில் பாடசாலை கலைத்திட்டத்தில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படவில்லையா? அவ்வாறு வடிவமைக்கப்படவில்லை எனில் அப்பாடத்திட்டத்தினை வடிவமைத்தவர்களது தவறாக கொள்ளமுடியுமா? அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர் யார்? பரீட்சை மையமாக வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் பரீட்சை மைய செயற்பாட்டில் இருந்து வெளிவராத வகையில் நீங்கள் குறிப்பிடுகின்ற வலிமையினை எவ்வாறு உணர முடியும்? "நாடக ஆசிரியர்கள்கூடுகிற இடங்களில டிஸ்கசன் நடக்கிறேலை. அவர்களுக்கு இங்கு நடக்கிற மாற்றத்தை படிக்க ஆசை இல்லை." எதை வைச்சுக்கொண்டு நீங்கள் இந்த முடிவுக்கு வந்தீர்கள்? டிஸ்கசன் நடக்கிற இடங்களை தீர்மாணிப்பவர்கள் யார்? யார் நடத்துவதை டிஸ்கசனாக ஏற்றுக்கொள்கின்றீர்கள்? எந்தவகையில் டிஸ்கசன் நடந்தப்படவேண்டும் என நினைக்கின்றீர்கள்? ஏன் இத்தகைய ஓப்பின் போறத்தை உருவாக்க முடியாதா? "நாடகம் சிரழிஞ்சு போச்சுது." எண்டால் அந்த சீரழிவுகளில் இருந்து தப்பிப்பதற்கு வலிமையான சாதனமான அரங்கினை அரங்கிற்கே முதலில் பயன்படுத்தி வெற்றிகொள்வோம். இங்கே டிஸ்கசனங்களை ஏற்படுத்தலாம். நாடக ஆசிரியர்களை உருவாக்கிவர்கள் யார்? சீரழிச்சு போச்சு தெண்டால் அச்சீரழிவிகளுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்? அது சார்ந்த உரையாடல்களுக்கு தயார் நிலையில் எத்தனை பேர் உள்ளனர்? இத்தகைய நிலை க்கு காரணமாணவர்கள் யார்? நாடகம் இருவழி கலை வடிவம் எனில் தோல்விகளுக்கும் வெற்றிகளுக்கும் இரு வழி சார்ந்த வகையில் பொருள் கொள்ளப்படுவதே பொருத்தமான தாக இருக்க வேண்டும். குற்றம் சாட்டுதல்களினால் எதை சாதிக்க முடியும். ஏனைய துறைசார்ந்தவர்களுக்கும் இத்துறை சார்ந்தவர்களுக்கும் இடையிலான வேறு பாடு என்னவாக இருக்கும்? என பல வினாக்கள் எழுவது தவிர்க இயலாது. உரையாடல்களுக்கு நாம் தயார். புத்தாக்க அரங்க இயக்கம் இணையவெளியில் கதையாடப்படுகின்ற கதையாடல்களில் பல விடயங்கள்பேசப்படுகின்றது. வேடதாரியில் எழுதப்படுகின்றன. உரையாடல்கள் நடத்தப்பட்ட போது திறந்த மனநிலையுடன் எத்தனை பேர் பங்கு பற்றினார்கள் என்பதையும் உணர்ந்து செயற்படுதல் அவசியமானதாகும்..
எஸ்.ரி.அருள்குமரன்) நூல் -ஒளவை (நாடகபனுவல்) நாடக ஆசிரியர் இன்குலாப்.
இலக்கியங்கள் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றபோது வேறு பரிணாமம் கொள்ளப்படுகின்றன. புரானிய காலப்படைப்புக்களை தற்காலத்தின் நோக்குநிலையில் மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட வகையில் பல படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. நாடக பனுவல்களில் பல மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட வகையில் எழுதப்பட்டுள்ளன. பிரளயனது உபகதை ஏகலைவனை வேறு கோணத்தில் பதிவு செய்கின்றது. இன்குலாப்பின்ஒளவை நாடகப்பிரதி ஒளவையினை முற்போக்கு ரீதியான பாத்திரமாக படைத்துள் ளார் . சங்ககாலத்தில் இருந்து பல காலங்களில் ஒளவை எனும் பெண் கவிஞர்கள் பாடல்களை யார்த்தபோதும் எல்லோரையும் ஒன்றாக்கி பாடல்களையும் யாரே ஒளவை எழுதிதை யாரோ ஒளவைக்குரியதாக பிற்கால சினிமாக்காரர் ஒன்றாக்கி குழப்பநிலையினை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டும் நாடகஆசிரியர் தனித்துவமாக ஒளவையினை வேறொரு கோணத்தில் பதிவு செய்கின்றார். இவ்விடயம் பற்றி பின்வருமாறு பதிவு செய்கின்றார். 'ஒளவையைப்பற்றித் தமிழ்ச் சிந்தனையில் திணிக்கப்பட்ட பிரமையை உடைக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே நாடகம் எழுதுவது பற்றி சொன்னேன்.வெவ்வேறு கலங்களில் வாழ்ந்ததாக சொல்லப்படும் ஒளவைகளைக்கலவையாக்கி ஒரே ஒளவையாக்கித்தந்தார்கள்.அல்லது வேறுபட்டகாலங்களில் வாழ்ந்த பெண்புலவர்கள் இஒளவைஎன்ற பெயரில் தங்களை அழைத்துக்கொண்டதாகவும் ஆய்வாளர் சுட்டுவர்.இந்தக்கலவையில் சங்ககால ஒளவை தொலைந்து போய்விட்டாள்.ஆடவரின் ஆதிக்கங்களை அறநெறிகளாக ஏற்றுக்கொண்ட பிற்கால ஒளவைகள் முன்னிறுத்தப்பட்டனர். ஒளவை இஒளவையாராக மாற்றப்பட்டாள்.இந்த மாயைகளை உடைத்துத் தொல் ஒளவையை மீட்கப்படவேண்டும் '....... (பக்7) இந்நாடக பனுவலில் உள்ள சில உரையாடல்கள் 1-சிறுமி:உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு ஏனையோர்: உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு 2-சிறுமி : உண்டி சுருங்குதல் ஆண்களுக்கு அழகோ சட்டாம் பிள்ளை:பாடம் படிக்கும் போது கேள்வ எல்லாம் கேட்டக்கூடாது 2-சிறுமி:பெண்களுக்கு ஏன் உண்டி சுருங்கவேனும்? ................................................ சட்டாம்பிள்ளை :எங்களை எதுத்துபேசக்கூடாது.மத்தபடி நாங்கள் சொல்லுறதை திரும்ப சொல்லனும். 2-சிறுமி: கிளிப்பிள்ளை மாதரி (பக்14) ஒளவை : இந்த வீரன் உனக்கு ஒரே மகனா? மூதாட்டி : ஆமாம்...அவன் நான் பெற்ற பிள்ளை...இதோ இவர்கள் அனைவரும் (நடுகற்களை காட்டி) நான்பெறாத பிள்ளைகள்..இவர்களை கருவுற்ற காலத்தில் மண் திண்றோம். இப்பொழுது இவர்களை மண் திண்று கொண்டிருக்கிறது. ஒளவை : அம்மா..உன் ஒரே மகனைக்களப்பலி கொடுத்ததில் உனக்கு வருத்தமில்லையா? மூதாட்டி : மக்களுடைய களச்சாவு எங்களை வருத்தப்படுத்துமோ? (பக் 50) பாணர் 1- என்ன ஒளவை...இந்த வம்பனிடம் என்ன பூசல்? ஒளவை : ஒன்றுமில்லை அதியனைப்பற்றி நான் எப்பொழுதும் பேசுவதால் அதியனை நான் காதலிக்கிறேனாம். பாணர் 1-அப்படி காதலித்தால் தான் என்ன தவறு ஒளவை :காதலிப்பது ஆண் பெண் இயல்புஇஆனால் ஆணிடம் பெண்ணும் இபெண்ணிடம் ஆனும் அன்பு காட்டுவது காதலாகிவிடுமா? (பக் 73) அதியனுக்காய் தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையினது ஆளுமையினை புலப்படுத்துவதாக உள்ளது. ஒளவை :நாடு கவரவேண்டும் என்பது ஒன்று தான் அரசுகளுக்கிடையில் ஏற்படும் பகைக்குக் காரணம் இல்லையா? அதியன் : சரியாகச்சொன்னாய் ஒளவை ! தகடூர் குறித்துத் தொண்டைமானுக்கும் புதுபசி ஏற்பட்டிருக்கிறது ஒளவை போரில் மடிவதை மன்னனாகிய பெருமைக்குரியதாக கருதுகின்றேன்.என் மக்கள் இந்த பொருட்டு சாவது என்னை வருத்துகிறது.தொண்டைமானின் பகையால் என் மக்களுக்கு நேரும் கேடு கூடுவது குறித்து கவலைப்படுகின்றேன்...அத்துடன் தொண்டை நாட்டு மக்களுக்கு நேரிடும் துன்பத்தையும் நினைத்துப்பார்க்கின்றேன்.இதைத்தவிர்க நீதான் உதவ வேண்டும். ஒளவை : நான் என்ன செய்யவேண்டும்? அதியன்: தொண்டைமானும் பாட்டிலும் கூத்திலும் விருப்பமுடையவனாம்.அதிலும் உன் பாடல்களில் அளவற்ற ஈடுபாடு உடையவனாம்.அதனால்..அமைதிக்கான என் பொருட்டு அவனிடம் தூது செல்ல வேண்டும். (பக் 85) ஒளவை : பகைவரை குத்துதால் கங்கும் நுனியும் முறிந்து விட்டன....... (பக்89) பெண்ணிய நோக்கில் நாடக ஆசிரியரால் படைக்கப்பட்ட இப்பனுவல் நல்ல பனுவலாக காணப்படுகின்றது.