என்னைப் பற்றி

வெள்ளி, ஜூலை 10, 2015

                (எஸ்.ரி.அருள்குமரன்)                

                           EDUCATION VALIKAMAM 

 சமூகத்தின் மிகப்பெரிய பொக்கிசங்களிலொன்றாக கருதப்படுவது  செயற்ப்பாடுகளினையும் சாதனைகளினையும் பதிவு செய்தல். இப்பதிவுகளே எதிர்கால தலைமுறையினர் அச்மூகத்தின் அடையாளங்களை  அறிந்துகொள்வதற்கும் அச்சமூகத்தினை புரிந்து கொள்வதற்கும வாய்ப்பாக அமையும்;. இவ்கையில் சாதனைகளின் பதிவாக   EDUCATION VALIKAMAM  எனும் நூல் வலிகமம் வலயத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
வலிகாமம்பிரதேசமானது கலைகளிலும், பண்பாட்டு விழுமியத்திலும், வரலாற்று சிறப்பு மிக்க  இடங்களையும் கொண்டமைந்த பிரதேசமாகும்.
இப்பிரதேசம் போர் காரனமாக பாதிக்கபட்ட பேதிலும் இன்று அம்மக்களது  முயற்ச்சியினால் மீளெழுர்ச்சி  பெற்று வருகின்ற பிரதேசமாகவும் கல்வியிலும்,விளையாட்டிலும் சாதனை படைத்து   வருகின்ற கல்வி வலயமாகவும் இது விளங்குகின்றது.
“தரமான கல்விச்சமூகம் எனும் தூரநோக்கையும்” ,”கல்வியின் தேசிய இலக்கினை அடையும் வகையில் பௌதீக,மனித வளங்களைத்திட்டமிட்டுச்செயறப்படுத்தி, தேசப்பற்று நல்லெழுக்கம் தொழிற்தின் ஆகியவற்றினூடாக பூரன ஆளுமையுடைய சமூகத்தை உருவாக்கல்” எனும்  நோக்கக் கூற்றினையும் வசகமாக கொண்டு தரமான கல்வியினை வழங்கி வருகின்ற வலயமாக விளங்குகின்றது.
 சமூகத்தினை உருவாக்குவதில் பாடசாலைகளது வகிபங்குகள் காத்திரமானவை.பாடசாலைகளினை உயர்நிலைக்கு கொண்டுவருவதில் அதிபர்களது பங்குகள் கனதியானவை.
நல்ல மாணவர்களினை உருவாக்குவதில் ஆசரியர்களது கடமைகள் மிகவும் பொறுப்பு வாய்ந்தவை.
இப்பாடசாலைகள் சிறப்பு நிலையில் இயங்குவதற்கும் நல்லதொரு விளைவினை சமூகத்திற்கு கொடுப்பதற்கு வளப்பங்கீடுகளினை சிறப்பான முறையில் வழங்குவதில் வலயக்கல்விப்பணிப்பாளரது பணி பொறுப்பு வாய்ந்தாகும் இத்தகைய வகையில் பலரது இணைவின் மூலமே ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்க முடியும்
ஊக்குவிப்புககளும் பாராட்டுக்களுமே மனதினை முழுமைப்படுத்துவதுடன் தொடர்ந்து உத்வேகத்துடன் இயங்க வைப்பதற்கான வாய்ப்புக்களினை ஏற்பப்டுத்துகின்றன.
இப்பின்னனியில் வலிகாமம் கல்வி வலயமானது கடந்த ஆண்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அதிபர், ஆசிரியர்களினை கௌரவிக்கும் வகையில் வலயமட்டத்தில் சாதனையாளர்களினை கௌரவித்திருந்தது.
இக்கௌரவிப்புக்களினை வெளிப்படுத்துகின்றவகையிலும் வலயத்தினது செயற்ப்பாடுகளினை ஆவனப்படுத்தும் வகையிலும் EDUCATION VALIKAMAM  எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகானஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வடமாகான கல்விஅமைச்சர்த.குரகுலராஜா , வடமாகான கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் ,வடமாகாண கல்விப்பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன் ஆகியோரது வாழ்த்துரைகள் இடம்பெற்றுள்ளன.அவ்வாழ்த்துரைகள் மூலம் வலிகாமவலயத்தின் செயற்ப்பாடுகள், அவற்றினது சாதனைகள் என்பவற்றினை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
 இந்நூலில் வலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட பயன்மிக்க செயற்ப்பாடுகள், பாடசாலைகளினது அடைவுமட்டம், மாணவர்களது தேசியமட்டம் வரையிலான சாதனைக் குறிப்புக்கள், கல்வியினது அடைவு மட்டத்தினை அதிகரிப்பற்கான எதிர்கால செயற்ப்பாடுகளிற்கான  திட்டங்கள், வலயத்திலுள்ள பணிப்பாளர்களிற்கான பொறுப்புக்கள் ,கடமைகள் கோட்க்கல்விப்பணிப்பாளரது கடமைகள் பொறுப்புக்கள், கணக்காளரது கடமைகள் பொறுப்புக்கள்    போன்றன குறிப்பிடப்பட்டுள்ளது.இக் குறிப்புக்கள் மூலம் அவர்களிடம் இலகுவான முறையில் வேவையினை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும்.
கடந்தகாலத்தில் இவ்வலயத்தின் வளர்ச்சிக்கும் உயர்விற்கும் அர்பணிப்பான சேவையினை ஆற்றிய கல்விப்பணிப்பாளர்களான வீ.ராசையா, திருமதி ஆர்.இருதயநதன், பி. விக்னேஸ்வரன், ஆ.ராஜேந்திரன் ஆகியோரினை கௌரவப்படுத்தும் வகையில் அவரக்களது சேவைக்கால குறிப்புக்கள்  புகைப்படத்துடன் வெளிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இவ்வலயத்தில் உள்ள பாடசாலைகளது பௌதீக வளப்பிரச்சினைகளினை தீர்த்துக்nகுhள்ளும்வகையிலான கட்டங்கள் அமைக்கபட்டமைக்காக பாடசாலைகளிற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் செயற்ப்டுத்தப்ட்ட சேவைகளிற்கான அறிக்கைப்படுத்தல்கள் என்பன காணப்படுகின்றன.
அத்துடன் ஆசிரியர்கள் பலறிற்கு பயன்படக்கூடியவகையிலான கட்டுரைகள் காணப்படுகின்றன. சட்டரீதியானதாகவும், சட்டரீதியாக எவ்வகையில் பிரச்சினைகளினை அனுகுதல் போன்ற வற்றிற்கு பயனுள்ள வகையிலான  கட்டுரைகளாக “பாடசாலைகளில் உடலியல் சார் தண்டனைகள் பற்றிய நோக்கு” “பாடசாலைகளில் கவனமின்மை சார்பான தீங்குகளும் தீங்கியற்சட்டமும்”, “ஆசரியர்களின் விழுமியம் மிக்க செயற்ப்பாடுகள் தொடர்பான ஒழுக்கவிழுமிய முறைமை மற்றும் பொதுச்சட்டத்தொகுப்பு” ஆகிய மூன்று கட்டுரைகளும் மிகவும் பயனுள்ளளவாக காணப்படுகின்றன.
   மாணவர்களிற்கு வழங்கப்படுகின்ற தண்டைனைகள், மாணவர்கள் தவிறிழைப்பதற்கு ஆசிரியர்கள் எவ்வகையில் காரனமாகின்றனர் அவற்றை எவ்கையில் தீர்த்து கொள்ள முடியும் , சுற்றுலாக்களிற்கு மாணவர்களினை அழைத்து செல்லும்போது ஆசிரியர்களிற்கான பொறுப்புக்கள் அங்கு ஏற்ப்படக்கூடிய பிரச்சினைகளினை எவ்வகையில் தீர்த்துக்கொள்ள முடியும் என்பன தொடர்பான அறிவுறுத்தல்களினை பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் உள்ள கட்டுரைகள் பயனுள்ள வகையில் அமைகின்றன.
 வலயக்கல்விப்பணிப்பாளர் சட்டத்துறையினை சேர்ந்தவர் எனும் வகையில் மிகவும் பயனுள்ள வகையில் இக்கட்டுரையினை அமைத்துள்ளார்.
 இவ்விழாவில்  10 சிறந்த பாடசாலைகள், 13 அதிபர்கள், 100 ஆசிரியர்கள் தெரிவு செய்யபப்பட்டு பாராட்டப்பட்டனர் அவர்கள்  பற்றிய குறிப்புக்கள் பதிவு செய்யப்ட்டுள்ளன.
கல்விப்பணிப்பாளரின் குறிப்பில் எதிர்கால செயற்ப்பாட்டிற்கு  சகலரும் செலுத்து வேண்டிய  அக்கறையின் முக்கியத்துவம் ,ஆசிரிய வளத்தினை பங்கீடு செய்தல், அவ்வாறு பங்கீடு செய்கின்றபோது ஏற்ப்படுகின்ற பிரச்சினைகள் அவற்றினை தீர்க்கப்படவேண்டியதன் அவசியம் அவ்வாறு தீர்க்கப்படுகின்றபோது கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றிய குறிப்புக்கள் என்பன பயனுள்ளவையாக காணப்படுகின்றது.
  கடந்த ஆண்டு வலயக்கல்விப்பணிப்பாளாரராக பொறுப்பேற்று  கடமையாற்றுகின்ற எஸ்.சந்திரராஜாவினது ஆளுமையினையும் ,கல்வி வளர்சிக்காக  அவரால் மேற்கொள்ளப்படுகின்ற அர்hப்பணிப்புடன் கூடிய சட்ட அனுகு முறையுடான    செயற்ப்பாடுகள்  என்பவற்றினையும் இந்நூலில் உள்ள குறிப்புக்களின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.

 நன்றி தினக்குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக