என்னைப் பற்றி

வெள்ளி, ஜூலை 10, 2015


  (எஸ்.ரி.அருள்குமரன்)

 நாடக செயற்ப்பாடுகளில்   ஈடுபட்டமை என்னை வளர்த்துக்கொள்ளக்கூடியதாக உள்ளதுடன் என்னிடையே இருந்த பயம்,வெட்கம்,கூச்ச சுபாவம் என்பனநீங்கியதுடன் எதையும் ஏற்று செயற்ப்படக்கூடிய தலைமைத்துவம் ஏற்ப்பட்டுள்ளது என றோயல்கல்லூரியின் தமிழ்நாடகமன்றத்தினரால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட தனிநபர்திநன்கான் போட்டியில் வடமாகானத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசியரீதியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்ட மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்விபயிலும் உதயகுமார்- கரிஸ் தெரிவித்தார்.

இவர் வழங்;கிய நேர்காணல் வருமாறு
உங்களைப்பற்றிய அறிமுகம்?


நான் உதயகுமார்-கரிஸ்  மானிப்பாய் இந்துக்கல்லூரியில் 2015ம் ஆண்டு கலைப்பிரிவில் கல்விபயில்கின்றறேன்எனது ஆரம்ப கல்வியினை விவேகானந்தா முன்னபள்ளியிலும், பின் யாழ்.சென்ரான்ஸ் றோ.க.த.க பாடசாலையிலும் கல்வி கற்றேன்.  தற்போது  புத்தாக்க அரங்க  இயக்கம் எனும் நாடக நிறுவனத்தில் ஆற்றுகை துறை இணைப்பாளராக செயற்பட்டு வருகின்றேன். நாடக துறையில் ஈடுபாடு உள்ளது. அத்துறையில் வளர வேண்டும் எனும் ஆசை உள்ளது.
நாடக துறையின் மீதான ஈடுபாடு?
 முன்பள்;ளியில் கற்றகாலப்பகுதியில் நாடக போட்டியில் யாழ்.மாவட்டம் வரை சென்றேன். ஆயினும் பின்னர் நாடகதுறையில்தொடர்ந்து ஈடுபடமுடியாமல் போனது பின்னர் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தரம் 9ல் கல்வி பயில சென்ற காலப்பகுதியில் இருந்து மீளவும் ஈடுபடுவதற்கான வாய்பப்பு ஏற்பட்டது.
கல்லூரியில் இடம்பெற்று வருகின்ற இல்லங்களுக்கிடையிலான நாடகப்போடட்டியில் ஈடுபட்டு வருகின்றேன். 2011ம் அண்டு இடம்பெற்ற நாடகப்போட்டியில் எஸ்.ரி.அருள்குமரன்,எஸ்.ரிகுமரன் ஆகிய ஆசிரியர்களின் நெறியாழ்கையில் இடம்பெற்ற கற்பூரதீபம் எனும் நாடகம் முதல் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் எமது இல்லம் நீண்டகாலத்தின் பின்பு பெற்ற முதல் வெற்றியாகவும் காணப்பட்டது. இவ்வெற்றி உற்சாகத்தினை ஏற்ப்படுத்தியதுடன் தொடர்ந்து நாடக செயற்ப்பாடுகளில் ஈடுபடுவதற்கான உற்ச்;சகத்தினை ஏற்ப்படுத்தியது.
நீர் பங்குபற்றி வெற்றி பெற்ற போட்டி தொடர்பாக குறிப்பிடுங்கள்?
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது மானவர்களது ஆற்றலினை வெளிக்கொணரும் முகமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஓர் போட்டியாக தனிநடிப்பு போட்டியினை நடத்தி வருகின்றது.இப்போட்டியில் மாவட்டமட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளேன். கடந் 3 ஆண்டுகளாக எமது மாணவர்கள் இப்போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று வருகின்றமை மகிழ்சிக்குரிய விடயமாகும் 2012ம் ஆண்டு மேற்ப்பிரிவில் கு.திலக்ஸன் 3ம் இடத்தினையும் கடந்த ஆண்டு கீழ்பிரிவி; யே.சானுஜன் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
பங்குபற்றிய பிற போட்டிகள் தொடர்பாக குறிப்பிடுங்கள?
றோயல் கல்லூரி நடத்திய நாடகபோட்டியில் கடந்த ஆண்டு மாவட்டமட்டத்தில் 2ம் இடத்தினையும் இம்முறை 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டோம். இப்போட்டிகளில் எமது ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரனது வழிப்படுத்தலில் நாடகத்தினை நெறியாழ்கை செய்திருந்தேன். கடந்த ஆண்டு சிரேஸ்ட பிரிவினருக்கான கணித நாடகப்போட்டியில் வலயமட்டத்தில் முதல் தடவையாக முதல் இடத்தினை பெற்று மாகாணபோட்டியில் கலந்து கொண்டிருந்தோம். அதே போன்று ஸ்கந்தவரோதயாகக்ல்லூரி விஞ்ஞான விழாவினை முன்னிட்டு மாவட்ட ரீதியில் நடத்திவருகின்ற நாடக போட்டியில் கடந்த ஆண்டு 2ம் இடத்தினையம் இம்முறை முதலாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டோம். இம்முறை உளநலநாளினை முன்னிட்டு வடமாகான ரீதியில் நடத்தப்பட்ட விழிப்புனர்வு நாடகத்தில் எமது கல்லூரி நாடகம் கலந்து கொண்ட நடுவர்களினால் பாராட்டப்பட்டது. இந் நாடகங்களிற்கான எழுத்துரு நெறியாழ்கையினை எமது நாடத்துறை ஆசிரியர் எஸ்.ரி அருள்குமரன் மேற்கொண்டுள்ளார்.
ஏனைய நாடகத்துறை நிறுவனங்களுடன் இனைந்த செயற்ப்படு?
புத்தாக்க அரங்க நிறுவனம் எனும் அரங்க நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு நிறுவனங்களிற்க்காக நாடக செயற்ப்பாடுகளினை  மேற்கொண்டுள்ளோம். இந்நிறுவனத்தினர் கடந்த ஆண்டு தெல்லிப்பழை, சங்கானை, கரவெட்டி  பிரதேசசெயலகங்களின் கலாசார பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட கலாசார விழிப்புனர்வு தெருவெளி ஆற்றுகையில்   நடித்திருந்தேன் இது பாடகாலைகளிலும் பொது இடங்களிலும் நிகழ்த்பட்டு பலரது வரவேற்ப்பினை பெற்றுக்கொண்டது.   மேலும் சுன்னானம் பொதுநூலகம், இனுவில்பொதுநூலகம்,  முன்பள்ளிகளில் இடம்பெறுகின்ற விழாக்களில் எமது நிறுவனத்தின் ஊடாக நாடக செயற்பாடுகளினை மேற்க்கொண்டுள்ளோhம்.
அத்துடன் இந்நிறுவனம் மாணவர்களிற்கு மேற்கொள்கின்ற அரங்க களப்பயிற்;சியில் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.குமரன், நிர்வாகபணிப்பாளர்எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் என்னையும் அழைத்து சென்று பயிற்ச்சிபட்டறைகளில் வளவாளராக செயற்ப்படுவதற்கு வாய்ப்புக்களினை ஏற்ப்படுத்தித்தந்துள்ளனர் அந்தவகையில் இச்செயற்பாடுகள் மகிழ்சிக்குரியனவாக உள்ளது.
எதிர்கொண்ட பிரச்சினை?
நாடகத்துiயில் ஈடுபடுவதினால்  கல்வி பாதிப்படையும் என்பதினால் வீட்டில் நாடக நிகழ்ச்சிகளில் ஈடுபடவேண்டாம் எனக்குறிப்பிட்டனர். கல்வியில் பாடசாலையில்  இருந்து இடைவிலக வேண்டியசுழ்நிலை ஏற்ப்பட்டது. அவ்வேளை எமது நாடகத்துறை ஆசிரியர் நாடகத்துறை செயற்ப்பாட்டில்; ஈடுபடுவடுன் கல்வியிலும் சிறப்பு நிலை எயத்த வேண்டும் என அறிவுரை கூறியதுடன் நாடகப்போட்டியில் பங்குபற்றுவதற்காக அழைத்து போட்டியில் பங்குபற்ற வாய்ப்பு எற்றப்படுத்தி தந்திருந்தார் அவ் வாய்ப்பு மூலமே இவ்வெற்றி பெற முடிந்தது. அத்துடன் எனது வகுப்பாசிரியர் திருமதி சிவகுமார் ஆலோசனை வழங்கி என்னை ஊக்குவித்தார்.
 செயற்ப்பாட்டிற்கு ஒத்துழைப்பு தருபவர்கள்?
 தற்போது எனது செயற்ப்பாட்டிற்கு பெற்றோhரினது பூரன ஒத்துழைப்பு காணப்படுகின்றது. கல்லூரியின் முதல்வர் எஸ்.சிவநேஸ்வரன் வெற்றிபெறுகின்றபோது எம்மைபாராட்டி ஒத்துழைப்பு வழங்கிவருகின்றார். மேலும் எமது நாடகத்துறை ஆசிரியர் எஸ்ரி.அருள்குமரன் எம்மை வழிப்படுத்தி எம்மை உற்சாகப்படுத்தி தேவையான உதவிகள் ஆலோசனைகளினையும் வழங்கி  ஊக்குவித்து வருகின்றார். மற்றும்  எமது வகுப்பாசிரியர் திருமதிசிவகுமார் ஆசிரியர் வெற்றி பெறுகின்றபோது  உற்ச்சகப்படுத்துவார்.எமது நாடக குழு நண்பர்களிற்கும் எனது நன்றிகள்

எதிர்கால இலட்சியம்?
 நாடகத்துறையில் மிகச்சிறந்த நடிகனனாக வரவேண்டும் என்பதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக