(எஸ்.ரி.அருள்குமரன்)
கரலாசார விழா
சமூகத்தின் கண்ணாடி கலைகள் எனவும் இக்கலைகளினை படைக்கின்ற கலைஞர்கள் காலத்தால் மதிக்கப்படவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.கலஞர்களுக்கான அங்கீகாரம் அளிக்கப்படுகின்ற போது தான் அச்சமூகம் எழுச்சியான சமூகமாகஅமையும்.
கலைஞர்கள் வாழும் காலத்திலேயே கௌரவிக்க வேண்டும் எனும் நோக்கில் பிரதேச கலாசாரப் பேரவைகள் விழா எடுக்கின்றன. .
இப்பின்னனியில் வலி வடக்கு கலாசரபேரவையினால் அப்பிரதேசத்தில் உள்ள கலைஞர்களினை கௌரவிக்கும் முகமாக கலைச்சுடர் எனும் எனும் விருதினை வழங்கி கௌரவித்து வருகின்றனர்.
வலிவடக்கு தெல்லிப்பழை கலாசர பேரவையினரால் ஒழுங்குபடுத்தப்ட்ட கலாசார விழாவானது மாறுபட்டதாகவும் வித்தியாசமானதாகவும் இடம்பெற்றது.
பிரதேசசெயலரும் கலாசாரபேரவையின் தலைவருமாகிய க.ஸ்ரீமோகனன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் வேலுப்பிள்ளை சிதம்பரநாதன் (இசை நாடகத்துறை) திருமதி மங்கையற்கரசி -வர்ணகுலசிங்கம் (வயலின்)தர்தபூபதி சிதம்பரநாதன் (இசை ) வல்லிபுரம் செல்லத்தரை (இசைத்துறை) திருமதி நேசபூபதி நாகராஜன் ( இசைத்துறை) சிவஞானசேகரம் விஸ்வநாதன் ( பண்ணிசை) மகாராஜஸ்ரீ இரத்தினசபாபதிக்குருக்கள் (சமயம்) திருமதி பார்பதி சிவபாதம்(வாய்ப்பாட்டு) திருநாவுக்கரசு பாலகிருஸ்ணன் (நாதஸ்வரம்) கதிரவன் சரவணமுத்து ( இசை நாடகம்) திருமதி பகீரதி கணேசதுரை (நாடகம் ) குருசாமி ஸ்ரீதர் (மிருதங்கம்) ஆகிய பதினொரு கலைஞர்களுக்கு கலைத்துறைசார்ந்து பணியாற்றியமைக்காக கலைச்சுடர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் வலிவடக்கு பிரதேசத்தின் பண்பாட்டு கூறுகள் வளங்கள் கலைகள் ஊரின் சிறப்புக்களினை உள்ளடக்கிய வகையில் பருத்தித்துறை பிரதேச செயலாளர் கவிஞர் த.ஜெயசீலனின் வரிகளில் கு.அற்புதனின் இசையில் இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறை விரிவுரையாளர் த.றொபேட்டின் குரலில் பிரதேச செயலகத்திற்க்கான கீதம் இறுவெட்டு வடிவில் இசைப்பேழையாக வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் திருமுறைப்பாடல்களின் தொகுப்பு இறுவெட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கவிஞர் சோ..பத்மநாதன் தலைமையில் கவியரங்க நிகழ்வு இடம்பெற்றது “காங்கேயன் மகளுக்கு கலியானம் சீர்கொண்டு தருவாளோ யாழ்தேவி” எனும் பொருளில் கவிஞர் எஸ்.ஜெயசீலன் வே.சிவராசா இ.சர்வேஸ்வரா கை.சரவணன் திருமதி மாலாதேவி மதிவதனன் ஆகியோர் கவிவரிகளினை வழங்கினார்கள்.
றப்பாக கலாசார மத்திய நிலைய மாணவர்களினால் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன. இவை பார்ப்போரை கவாந்த நிகழ்வாக உள்ளது.
சிறப்பு நிகழ்வாக மாருதப்பூரவீகம் எனும் பண்பாட்டு மலர் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்மலரானது பலரது முயற்ச்சியனால் குறுகிய காலத்தினுள் தரமான கட்டுரைகளினை கொண்டமைந்தததுடன் எமது பிரதேசத்தின் புராதன மகிமையினை வெளிப்டுத்துட் வகையில் பெயர் கொண்டமைந்து வெளியிடப்பட்டமை சிறப்பானதாக காணப்படுகின்றது.
சிறப்பானதாகவும் பயனுள்ளவகையிலுமானதாக இவ்விழா இடம்பெற்றமை பாரட்டிற்குரியதாகவும். இவ்விழா மேலும் இனிவரும் காலங்களில் மேலும் சிறப்புடையதாக ஒழுங்கமைத்து நடாத்தப்படுகின்றபோது எமது மண்ணின் கலைகளின் உயிர்பினையும் வளர்சியினையும் அடைந்து கொள்ள முடியும்.
ஒரு இனத்தின் அடையாளமாக உள்ள கலைகள் வளர்க்கபடவேண்டுமாயின் அக்கலைஞர்களிற்கான கொளரவம் அளிக்கப்பட வேண்டியது மிக அவசியமானதாகும். இப்பணியினை பல பிரதேச செயலங்கள் செயற்ப்படுத்தி வருவது பாராட்டிற்கும் வரவேற்ப்பிற்குமுரியவிடயமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக